Tuesday, March 4, 2014

சா. மு. கா. வே. உலக சினிமா - Old Boy (2003)

**********************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காவேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் எதற்சையாக சில காட்சிகள் பார்த்து, மிகவும் பிடித்து போய், பின் நான் தரவிறக்கி பார்த்த கொரிய மொழி திரைப்படம் தான் இந்த ஓல்ட் பாய்'.



கதையின் நாயகன் மது அருந்திவிட்டு சாலையில் கலாட்டா செய்ய, அவன் காவல் துறையால் கைது செய்யப்படுகிறான். அவனது நண்பன் அவனை விடுதலை செய்துகொண்டு, இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறான். செல்லும் வழியில் நாயகன் தன் நான்கு வயது மகளை பொது தொலைபேசியில் அழைத்து, அவளுக்கு பிறந்தநாள் பரிசுடன் வருவதாக சொல்லி முடிக்க, அவன் நண்பன் தொலைபேசியில் இவன் மனைவியிடம் எல்லா விபரத்தையும் சொல்லி முடித்து பூத்தில் இருந்து வெளியே வரும் பொழுது நாயகன் காணாமல் போகிறான்.        

கண் விழித்துக் பார்க்கும் நாயகன், தான் ஒரு புதிய அறையில் இருப்பதை உணர்கிறான். தொலைக்காட்சி மெத்தையுடன் அந்த அறையில் அவனை சிறை படுத்தி வைத்திருப்பதை எண்ணி வியக்கிறான். யார்? எதற்காக? என்று பல கேள்விகள் அவனுள் தோன்றுகிறது. அறையினுள் மயக்க மருந்து செலுத்தி இவன் மயங்கிய பின் தினமும் அவனுக்கு உணவு கொடுக்கப்படும். அந்த தனிமையில் அவனுக்கு உலகமே அந்தத் தொலைக்காட்சிதான். அந்தத் தொலைக்காட்சியில் ஒரு நாள் அவன் மனைவி கொல்லப்பட்டதாகவும் அதற்குக்காரணம் இவன்தான் என்பது போன்ற தடயங்கள் சிக்கி இருப்பதாகவும் செய்தி வெளியாகிறது. தன்னை சிறை செய்து வைத்திருப்பவர்கள் தான் இதற்குக்காரணம் என்ற முடிவுக்கு வருகிறான். அவன் இது வரை யாருக்கெல்லாம் தீங்கு செய்துள்ளானோ அவர்களின் நீண்ட பட்டியலை தயார் செய்து வெளியில் சென்றவுடன் அவர்களை கண்டறிந்து பழி தீர்க்க எண்ணுகிறான். 


தொலைக்காட்சியை தன் குருவாகக்கொண்டு  தன் உடலை வலிமை படுத்தி தற்காப்புக் கலைகளையும் தானே கற்கிறான்.இப்படியே அந்த அறையின் தனிமையில் 15 வருடங்கள் செல்ல அவன் தன் மனித குணங்களை இழந்து மிருகமாக இருக்கும் நிலையில் ஒரு நாள் விடுதலை செய்யப்படுகிறான். அதன் பின் தன்னை சிறை படுத்தியவர்களை தேடி அவன் பழிவாங்கும் படலமே இந்தப் படம். இதுவரை சொன்ன கதை சுருக்கம் வெறும் பதினைந்து நிமிடம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

'யார்? யார்?' என்ற கேள்வியை நோக்கி தன் தேடலை தொடரும் நாயகன் இறுதியில் தான் தன் கேள்வி தவறு என்பதை உணருகின்றான். அவன் கேட்க வேண்டிய கேள்வி என்ன, யார் அவனை தண்டித்தார்கள் என்பதை அறிய படத்தை பாருங்கள்.        


படத்தில் நான் ரசித்தவை :

தனிமை சிறைச்சாலையில் பதினைந்து ஆண்டுகள் அடைப்பட்டு இருந்து வெளிவரும் மனிதன் எவ்வளவு மிருக குணங்களுடன் செயல்படுவான் என்பதை கதாநாயகன் தத்ரூபமாக நடித்திருப்பார்.


ஒரு காட்சியில் எதிரிகளை அடிக்க நாயகன் சுத்தியை ஓங்க, திரை freeze ஆகி, அந்த சுத்தியின் நுனியில் இருந்து அவர் அடிக்கப் போகும் ஆளின் நெற்றி வரை ஒரு வெள்ளை நிற கொடு வரைவது ரசிக்கும் படி இருந்தது.

இடைவேளைக்கு முன்னமே யார் வில்லன் என்று தெரிந்து விட்டாலும், இரண்டாம் பாதியில் வேறு ஒரு முக்கிய கேள்வியுடன் விறு விறுப்பு குறையாமல் திரைகதை நகர்வது நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடும். 

ஒரு மனிதனை பழிவாங்க இவ்வளவு மோசமான எல்லைக்கு ஒருவனால் செல்ல முடியுமா? என்ற கேள்வி படம் முடியும் பொழுது நம் மனதில் தோன்றும்.




பழிவாங்கும் படலத்தை கருவாக கொண்ட படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஓல்ட் பாய் தான். நீங்களும் தவறாமல் பாருங்கள், கேட்கவேண்டிய சரியான கேள்வியும் அதன் பதிலும் தெரியவேண்டும் அல்லவா. ​

*******************************************************************************************************
ஆண்டு : 2003
மொழி : கொரியா
என் மதிப்பீடு : 4.5/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

2 comments:

  1. கொரியன் திரைப்படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிலசமயங்கள்ல கலெக்ஷனுக்காக ஏழெட்டு வாங்கிப் போட்டுட்டு பின்னால பாக்கலாம்னு நெனச்சதுல பாக்காம விட்டதும் உண்டு. திடீர்னு என்னிக்காவது ஞாபகம் வர்றப்ப எடுத்துப் பாப்பேன். இநுத ஓல்ட் பாய் என்கிட்ட இருக்கான்னு உடனே« தடிப் பாக்கணும் ராசா! அவ்வளவு அழகா ரசிச்சு படத்தை விமர்சனம் பண்ணியிருக்கே!

    ReplyDelete
  2. பதினைந்து நிமிடமே சுவாரஸ்யம்...!

    ReplyDelete