Showing posts with label இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013). Show all posts
Showing posts with label இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013). Show all posts

Thursday, September 5, 2013

என் முதல் பதிவர் சந்திப்பு

பல தயக்கங்களுக்கு மத்தியில், பதிவர் திருவிழா நடத்தலாம் என்று முடிவாகி, அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. கே.கே. நகர் சிவன் பூங்காவில் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தை என்னால் மறக்க முடியாது.

முதல் காரணம் கணேஷ் சார், சிவா, ஸ்கூல் பையன், அஞ்சா சிங்கம், அரசன், கவியாழி, KRP செந்தில், மதுமதி, புலவர் அய்யா, ஜெய், அரசன் போன்ற பெரும்பாலான பதிவர்களை நான் முதலில்  சந்தித்தது இங்குதான்.

இரண்டாவது காரணம் திருவிழாவிற்கு பிள்ளையார் சுழி போட்டு பணிகள் தொடங்கியதும் இங்குதான்.அதன்  பிறகு பெரும்பாலான ஆலோசனைக் கூடங்கள் நடந்தது டிஸ்கவரி புக் பேலஸில் தான். அழகாக திட்டங்கள் தீட்டப் பட்டு, குழுக்களாக பிரிந்து, விழாப் பணிகள் சிறப்பாக நடந்தன. 

ஆகஸ்ட் 31அன்று அலுவலகத்தில் விடுப்பு எடுத்து விட்டு, பதிவுலக தோழமைகளை காண அன்று அதிகாலையே வடபழனி வந்து விட்டேன். பதிவர்கள் தங்க வைக்கப் பட்ட விடுதிக்கு நான் வந்தவுடன் முதலில் நான் சந்தித்த பதிவர் ராஜபாட்டை என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ராஜா அவர்கள்.

சதீஷ் சங்கவி, உணவுலகம் சங்கரலிங்கம், கற்போம் பிரபு கிருஷ்ணா, இரவின் புன்னகை வெற்றிவேல், பிளாசபி பிரபாகரன் இவர்களின் முதல் அறிமுகம் கிடைத்தது. கோகுல், நக்கீரன், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன், வீடு சுரேஷ் குமார், வெளங்காதவன் ஆகியாரையும் சனியன்றே சந்தித்தேன்.

பின்னர் தன் மனைவி  மகனுடன் வந்த 'தம்பி' சதீஷ் செல்லதுரை அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. தனக்கு  எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத சந்திற்பிக்கு கணவனுக்காக வந்து கலந்து கொண்ட ரேவதி சதீஷ் அக்காவின் காதலும் அன்பும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மாலை தமிழ் வாசி பிரகாஷ், கோவை நேரம் ஜீவா, அகிலா, எழில் மற்றும் கோவை ஆவி ஆகியோரை சந்தித்தேன்.  விழா அன்று காலை அடையாள அட்டை கொடுக்கும் பணியில் இருந்த பொழுது  தந்த அனைத்து பதிவர்களும் என்னைக் கடந்து சென்ற பொழுதும் என்னால் அவர்களுடன் பேசி புகைப் படம் எடுக்க முடியாமல் போனது வருத்தமே. 

நண்பர் ராம் குமார், பாசித், ராஜி அக்கா, ரஞ்சனி அம்மா, வெங்கட் நாகராஜ், சேட்டைக்காரன், கே.ஜி. கௌதமன், உண்மைத்தமிழன், ரமணி அய்யா, என்ற குறிப்பிட்ட சிலருடனே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.( நான் அறிமுகம் செய்து கொண்ட யாரேனும் பெயர் விடு பட்டிருந்தால், இந்தச் சிறுவனின் நியாபகத் திறனை மன்னியுங்கள்).

இந்தப் பதிவில், விழாவில் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி சொல்கிறேன். மேலும் இந்த விழாவை சிறப்புற நடத்த தம் சொந்தப் பணிகளுக்கு மத்தியில் அயராது உழைத்த விழாக் குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பல  வருடங்கள் கழித்து மேடையில், கண்மணி குணசேகரனிடம் இருந்து அந்த நினைவுப் பரிசை வாங்கிய அந்த நொடி மனம் கிங்பிஷர் ப்ளைட் ஏறி வானில் பறந்தது.

எந்த விழாவானாலும் குறைகளும் நிறைகளும் இருக்கத் தான் செய்யும். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்  உலகம் தானே இது. அம்மா செய்த சமையல் சுவையாக இல்லாவிடில் 'அம்மா நல்லா சமைக்கற, உப்பு மட்டும் கொஞ்சம் சேர்த்துக்கோ' என்பது போல் அன்புடன் ஆலோசனைகள் கூறினால் அம்மா அன்புடன் சமைக்க  ருசி கூடும்.

எத்தனையோ விஷயங்கள் மற்றும் அனுபவங்கள் எழுத இருப்பினும், எங்கும் பதிவர் திருவிழா பற்றிய பதிவுகளே இருப்பதால், என் பதிவை சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். எனது பதிவுலக நட்புக்களைக் கூட்டிய இந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா அடுத்த ஆண்டும் சிறப்புடன் பூக்கும் என்ற ஆவலுடன்.                                            

Wednesday, August 28, 2013

T151 உம் பதிவர் திருவிழாவும்

நேரமின்மையால் வலைப் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை. பதிவர் திருவிழா நெருங்கும் சமயத்தில் ஒரு மாநகரப் பேருந்து எனக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே பகிர்கிறேன்.

T151
நான் வசிப்பது கிழக்கு தாம்பரம், என் அலுவலகம் இருப்பது சென்னை சிறுசேரி IT பூங்கா (கேளம்பாக்கம் மிக அருகில்). தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல, மேடவாக்கம் வழியே சோழிங்கநல்லூர் கடந்து தான் செல்ல வேண்டும். சோழிங்கநல்லூர் - மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலையும், ECRஇல் இருந்து வரும் சாலையும், OMRஇல் சங்கமிக்கும் நெரிசல் மிகுந்த இடம். 


என் வீட்டில் இருந்து சிறுசேரியில் உள்ள அலுவலகம் செல்ல இரண்டு வழிகள் உண்டு           

1) நேர் பேருந்து T151 பிடித்து செல்வது 

2) C51 அல்லது T51 பிடித்து  சோழிங்கநல்லூர்  சென்று, அங்கிருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது. 

முதல் வழி சற்று சுலபம், ஏறி அமர்ந்து அலுப்பின்றி செல்லலாம். இரண்டாவது வழி இடையில் இறங்கி, சற்று நடந்து, வெய்யிலில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடிக்க வேண்டும்.       

முதல் வழியில் பேருந்துகள் மிக மிகக் குறைவு, ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான். இரண்டாம் வழியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து. சென்னை வெய்யிலின் குளுமையால், நான் தேர்ந்தெடுப்பது முதல் வழி தான்.

சம்பவம் ஒன்று 

ஒரு நாள் இப்படித் தான், எப்பொழுதும் 12 10க்கு வரும் T151க்காக,  என் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். பல பேருந்துகள் என்னைக் கடந்தாலும், நான் காத்திருந்த பேருந்து சற்று தொலைவில் வருவது தெரிந்தது. என் பேருந்து நிலையம் நெருங்க, ஏற்கனவே ஒரு T51 அங்கு நின்றிருக்க, அந்த T151 வேகமாக நிற்காமல் கடந்து சென்று என் நம்பிக்கையை உடைத்தது.       

சம்பவம் இரண்டு 

மற்றொரு நாள், பல T51கள் என்னைக் கடந்த போதும் மனம் தளராமல் காத்திருந்தேன். 1 30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 12 40 ஆகியும் T151 வாராத காரணத்தால், T51 இல் ஏறி,  சோழிங்கநல்லூரில் இறங்கி, இரண்டாவது பேருந்து பிடிக்க  சாலையை கடக்க , என் பின்னே வந்த T151 என்னைக் கடந்தது. 

வாழ்க்கை பல வினோத வழிகளில் பல அறிய பாடங்களை புகட்டுகிறது என்று அந்த இரண்டு சம்பவமும் எனக்கு உணர்த்தின. என் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அதைக் பகிர எனக்கு ஒரு தளம் இருப்பதும்  அதைத் தவறாமல் படிக்கவும் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்பதும் இந்த வாழ்க்கைக்கு தெரியாதோ?
            
பதிவர் திருவிழா 

இன்னும் சில தினங்களே உள்ளது, நம் பதிவுலக தோழமைகள் சங்கமிக்க. 

சிறப்பு பேச்சாளர் பாமரன் பற்றி மெட்ராஸ் பவன் வெளியிட்ட செய்தி படிக்க இங்கு சொடுக்கவும்.

புத்தகப் பிரியர்களுக்கு,  வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடக்க இடம் தரும் டிஸ்கவரி புக் பேலஸின் விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நிகழும் அரங்கில் பத்து சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் இயங்கவுள்ளது.வேண்டிய புத்தகங்களை மின்னஞ்சல் செய்து முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.    
மின்னஞ்சல் : discoverybookpalace@gmail.com



சேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா ஆகிய பதிவர்களின் புத்தக வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மட்டும் இன்றி நாட்டியம், இசை, நாடகம் என பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன. 

கோவை ஆவி தானே இயற்றி பாட இருக்கும் பதிவர் கீதம் பற்றி படிக்க/கேட்க இங்கு சொடுக்கவும்.

இதுவரை முகம் காட்டாத, சில முகமுடிப் பதிவர்கள் தம் இயற் பெயரில் வலம் வரப் போவாதாக உளவுத் துறை செய்திகள் வந்துள்ளது. பதிவர்களே உஷார்! முகமுடிகளைக் கிழிக்கும் திறமை உங்களுடையது.
    
வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த செப்டம்பர் ஒன்று அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இன்னும் மூன்று நாட்களே..... 

Tuesday, August 20, 2013

இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013) - ஆவலுடன்

முதல் பதிவர் திருவிழா  சிறப்பாக் நடந்த கதைகளை கேள்விபட்டு அந்தப் சமயம் நான் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. இந்த வருடம்  சந்திப்பு நடக்குமா நடக்காத என்ற இழுபறி நிலை இருந்த போது, தமிழ்ப் பதிவுலக தோழமைகள் தந்த உற்சாகத்தில், விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக உருவாகிக் கொண்டுள்ளது .


இடம் மற்றும் தேதி முடிவாகி வந்த அறிவிப்பில் திருவிழா ஏற்பாடுகளில் முக்கால் வாசி கிணறை தாண்டியாயிற்று. மிதம் உள்ள வேளைகளும் உற்சாகமாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

தமிழ் வலைப் பதிவர்களுக்கு என்று ஒரு தளமும் தொடங்கப்பட்டு, பதிவர் திருவிழா பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. 


இருநூறுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் வருதாக எதிர் பார்க்கப் படுகின்றது. எண்ணிக்கை முன்னூறைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை. 

சிறுதுளி பெருவெள்ளமாய், பதிவர்களின் நன்கொடைகள் விழா சிறக்க பெரும் உதவியாய் உள்ளது. மேலும் நான்கோடை கொடுக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே ...இங்கும் சொடுக்கலாம்  ... 

First Name           : Raja (நம்ம அரசனின் இயற்பெயர்)
Last Name           : Sekar
Display Name      : RAJA. S
Account Number : 30694397853
Branch Code        : 006850
CIF No.                : 85462623959
IFS Code             : SBIN0006850
MICR Code         : 600002047
Branch                 : SBI Saligramam Branch
Address               : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact                : 044- 24849775

பணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு: அரசன்(ராஜா)
                                                 கைபேசி எண் - 9952967645

பதிவர் திருவிழாவின் அழைபிதழ் இதோ ...




மேலும் பல புதிய நட்புகள் மலர, செப்டம்பர் ஒன்று வர ஆவலுடன் காத்திருக்கிறேன். 


The Countdown Begins : 11 days to go