tag:blogger.com,1999:blog-67078079304698480272024-03-13T07:06:16.587+05:30சேம்புலியன் உத்தரவின்றி உள்ளே வா! ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-85598506735253281712017-03-08T21:08:00.000+05:302017-03-08T21:14:34.133+05:30ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
****************************************************************************************************************<br />
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்<br />
<a href="http://www.rubakram.com/2017/02/blog-post.html" target="_blank"><span style="color: blue;"><b>ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்</b></span></a><br />
<span style="color: blue;"><a href="http://www.rubakram.com/2017/03/parunthumpara.html" target="_blank"><b>ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா</b></a></span><br />
<a href="http://www.rubakram.com/2017/03/vagamon.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்</span></b></a><br />
****************************************************************************************************************<br />
<br />
இடுக்கி செல்ல எலப்பாரா-கட்டப்பன்னா வழியை கூகிள் அம்மணி வகுக்க, இடுக்கி பற்றி நான் அறிந்ததை இருவருக்கும் சொல்லிக்கொண்டே வந்தேன். முதலில் எனக்கு இடுக்கி பரிட்சயமானது மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் தான். அந்த படத்தில் வரும் காட்சிகள் முழுக்க முழுக்க இடுக்கியில் நடப்பதாகவும், பெரும்பாலான காட்சிகளின் பின்புறம் இடுக்கி அணை தெரியுமாறு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். எனக்கு இடுக்கி மீது காதல் பிறந்தது, தந்தையின் வசீகரக் குரலை வரமாக வாங்கி வந்த விஜய் யேசுதாஸின் குரலில் 'மலை மேலே திரி வச்சு பெரியாரின் தலையிட்டு' எனத் தொடங்கும் அந்த இடுக்கி பாடல் தான். பாடலின் வரிகளும் அதன் காட்சியமைப்பும் விஜய் யேசுதாஸின் குரலும் யாரையும் ஈர்க்க வல்லது. ஆங்கிலேயர் காலத்தில் குறவன் மற்றும் குறத்தி மலையின் இடையில் பாரபோலா வடிவில் பெரியாரின் குறுக்கே கட்டப் பட்டது தான் இந்த இடுக்கி அணை. நான் சொல்லிய தகவல்கள் இருவருக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று சொல்ல முடியாது, ஆனால் மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளத் தொடங்கியது. அடுத்து வந்த எலப்பாராவில் ஒரு கேரள பிரியாணியை உண்டதன் மயக்கத்தில் என்னை அறியாமல் நானே சற்று இளைப்பாறிவிட்டேன். இந்த பயணத்தில் நான் பகலில் தூங்கிய ஒரே கணம் அதுதான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/MnJ6hbusgfo/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/MnJ6hbusgfo?feature=player_embedded" width="320"></iframe></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்விழித்தால், 'இடுக்கி வந்து விட்டதா?' என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, ஒரு டீ கடை முன் பிகோ ஓரம் ஒதுங்க, ஒரு கட்டனும் சில பழம்பொறிகளையும் கொறித்து விட்டு, மீண்டும் இடுக்கி நோக்கி தொடர்ந்தோம். அப்பொழுதுதான் அலுவலக நண்பர் பிஜூ, இடுக்கி அணை பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை என்று சொல்லியது நினைவிற்கு வந்தது. த்ரிஷா இல்லனா நயன்தாரா என்பது போல், இடுக்கி இல்லாவிட்டால் இரவு அங்கு தங்கிவிட்டு, காலை தளசேரி பக்கம் வண்டியை திருப்பி தளசேரி இட்லியை சுவைத்துவிட்டு பாலக்காடு வழியே தமிழக எல்லையை அடைந்து கோவை வழியாக சென்னை செல்ல மாற்றுத் திட்டத்தையும் வகுத்துக்கொண்டோம். நாங்கள் இடுக்கி நெருங்க நெருங்க அந்த மனிதன் வடித்த பாரபோலா அழகிற்கு பின்னே கதிரவன் மறையத் தொடங்கிக்கொண்டிருந்தான். சாலையின் ஒரு இடத்தில பல வாகனங்கள் நின்றிருக்க, இடுக்கி அணை பின்புறம் தெரியும்படி மக்கள் கூட்டம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில இறங்கி நாங்கள் இடுக்கி அணை செல்ல வழிகெட்க, 'அது மாலை ஐந்து மணியுடன் மூடப்பட்டிருக்கும் இனி நாளை காலை தான் காண முடியும்' என்ற செய்தி ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாத இடுக்கி அணை இந்த விஜயதசமி விடுமுறை தினத்தில் திறக்கப்பட்டிருந்தது எங்களை கவுரவிப்பதற்காகவே போல் இருந்தது. விடுமுறையில் பயணிப்பதால் பல சிக்கல்கள் இருந்தாலும் இதுபோல் சில சந்தோஷங்களும் எதிர்பாராமல் நடப்பதுண்டு.<br />
<br />
மாலை ஐந்து மணியே ஆனாலும், அங்கு பார்ப்பதற்கு வேறு எந்த இடமும் இல்லாததால், விடுதியை தேட தொடங்கினோம். வழியில் சிலர் அந்த வட்டாரத்தில் நல்ல விடுதி என்று சொல்லி அனுப்பிய இடத்தில எங்களுக்கு அறைகள் இல்லாமல் ஏமாற்றம் கிடைத்தாலும் அந்த விடுதி மூலம் வேறு ஒரு இடத்தில இடம் கிடைக்க, அந்த விலாசத்தை தேடி நகர்ந்தோம். அந்த விடுதி மேலாளரின் கைபேசி எண்ணில் அவர் காட்டிய வழியே சென்றாலும் பாரமடா சென்றவுடன் எங்களுக்கு வழி குழம்ப, தொடுபுழா செல்லும் சாலையில் நாங்கள் காத்திருக்க, அவர் எங்களுக்கு வழிகாட்ட ஒருவரை அனுப்புவதாக சொன்னார். இங்கு அனைத்து மலையாள உரையாடல்களின் புகழ் ரெஜித்தையே சாரும். தொடுபுழா செல்லும் வழிப்பலகைகளை கண்டதும் திரிஷ்யம் படம் தான் நினைவிற்கு வந்தது.<br />
<br />
வழிகாட்ட வந்தவர் சில நிமிடங்களில் நடந்தே வந்து எங்களைக் கண்டதும் நாங்கள் அந்த விடுதிக்கு எத்தனை அருகில் வந்த பின் தடுமாறினோம் என்பது புரிந்தது. அவரை பின் தொடர்ந்து அந்த இடத்தை அடைந்த பின் தான் அது விடுதி அல்ல சர்ச்சின் அறைகள் என்றும் அவர் விடுதி மேலாளர் அல்ல சர்ச் பாதர் என்பதையும் உணர்ந்தோம். எனது ஓட்டுநர் உரிமத்தை பணயமாக வைத்து முன்பணத்தை செலுத்தி விட்டு, மூன்றாவது நாளும் குறைந்த கட்டணத்தில் சிறப்பான அறை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தோம். அந்த அறையில் நான்கு கட்டில்கள் மெத்தையுடன் இருக்க, ஏசி மற்றும் மின்விசிறி இல்லாமலேயே இயற்கையின் குளிர் எங்களை சிலுக்கிடச் செய்தது. அந்த குளிருக்கு முக்கிய காரணம் அறைக்கு பின் புறமாக ஓடிய ஒரு கால்வாய் தான் என்பதை மறுநாள் காலை கண்டோம். நாங்கள் கைகால் கழுவிக் கொண்டு இரவு உணவு உண்ண செல்லும் பொழுது மணி ஏழு பத்து தான் என்றாலும், அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. வந்த வழியில் ஒரு உணவகத்தைக் கண்ட நினைவில் பிகோவில் அந்த உணவகத்திற்கு சென்று, அங்கு அடுப்பங்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பூனையை எழுப்பினோம். எங்களுக்காகவே பிரத்தியேகமாக சிக்கனை வறுத்து பரோட்டாவுடன் தந்தனர். சுமாரான சுவை என்றாலும் வேறு வழியின்று உண்டு, சில ஒம்லெட்டுகளுடன் பசியாற்றினோம்.<br />
<br />
ஒரு கட்டனுடன் அங்கு இருந்தவர்களுடன் உரையாடும் பொழுதுதான் இடுக்கியில் சுற்றுலா சரிவர சீர் செய்யாததால் மக்கள் வரத்து குறைந்து இங்கு சுற்றுலாவை நாடி இருக்கும் பலரும் சிரமப்படுவதை அறிந்தோம். இயற்கை எழில் கொஞ்சும் இடுக்கியில் மக்கள் அறியாத பல 'வல்லிய ஸ்தளங்கள்' உண்டு என்று அவர்கள் பெருமிதத்துடன் கூறினர். இரவை குளிரில் போர்வையின்றி கழித்து, காலைப் பனியில் ஐஸ் கட்டி போல் வந்த நீரில் குளித்து விட்டு, வழியில் ஒரு கடையில் புட்டு கிடைக்காவிட்டாலும் பிரபாகருக்கு பரோட்டாவுடன் கடலைக்கறி வாங்கி கொடுத்து, மூன்றாவது பார்க்கிங் வாகனமாக பிகோவை இடுக்கி அணை அருகே நிறுத்தினோம். காலை ஒன்பது மணி தான் என்றபொழுதும் அங்கு வெய்யில் சுளீரென்று தன் பற்களை இளித்துக் கொண்டிருக்க அங்கு இருந்த குடை மற்றும் தொப்பி கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.<br />
<br />
அனுமதி சீட்டு வாங்க ஏற்கனவே ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்த வரிசையில் நாங்களும் சென்று நின்றோம். அணையை நடந்து சுற்றிப்பார்பது அல்லாமல் மின்சார ஊர்தியில் சுற்றிக்காட்டவும் ஒரு கட்டணம் இருந்ததைக் கண்டு, வெய்யிலின் தாக்கத்தை மனதில் கொண்டு, கூடுதல் கட்டணம் கொடுத்து அந்த மின்சார வாகன டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, நுழைவு வாயில் செல்ல வரிசையில் நின்றால் 'கேமெரா மற்றும் கைபேசிகள் உள்ளே அனுமதி இல்லை' என்ற செய்தி வரிசையில் தீ போல பரவ, நானும் பிரபாகரும் பிகோவிற்கு சென்று கைப்பேசிகளை வைத்து விட்டு திரும்புவதற்குள் வரிசை நீண்டிருந்தது. இனி அணையை பார்வையாலேயே மட்டும் தான் புகைப்படம் எடுக்க முடியும் என்ற சோகத்தில், அருகில் நிறுத்தியதனால் ஒரு அலைச்சல் மிச்சமானது என்று மனதை தேற்றிக்கொண்டு செல்ல, கடும் சோதனையை தாண்டி நுழைவு வாயிலினுள் அனுமதிக்கப்பட்டோம்.<br />
<br />
அங்கு இருந்த பல காவலர்களுள் ஒருவர் மட்டும் எங்களை ஒரு இடத்தை சுட்டிக்காட்டி வாகனம் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அணையின் வாயிலில் நின்றதால் அடித்த குளிர்ந்த கற்று எங்களை அணையை சுற்றி பார்க்கும் ஆசையை மேலும் தூண்ட அப்படியே நடக்கத் தொடங்கினோம். நாங்கள் நுழைந்த இடமும் மலை மீது தான், அணை சென்ற பாதையும் ஒரு மலையை நோக்கி இருக்க இது இரண்டும் தான் குறவன் குறத்தி மலை என்று நினைத்துக்கொண்டு நடந்த எஙகளுக்கு அந்த அணையின் முடிவிற்கு வந்த பின் தான் அது தவறு என்று புரிந்தது. நாங்கள் முதலில் கடந்தது அந்த பாரபோலா அணை இல்லை, இப்பொழுது தான் குறத்தி மலையின் தொடக்கத்தை அடைந்துள்ளோம் அடுத்து தான் அணை பின் குறவன் மலை என்பது விளங்கியது. கூட்டமாக சென்ற மக்களின் பின் அந்த தார் சாலையில் அப்படியே பேசிக்கொண்டே நடந்தோம், நடந்தோம், இருபது நிமிடத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தோம்.<br />
<br />
குறத்தி மலையை முழுதும் சுற்றி வரும்போது எங்களைக் கடந்து சென்ற அந்த மின்சார வாகனங்களில் இருந்த மக்களைக் கண்டு பொறாமை பட்டுக்கொண்டே நடந்து ஒரு வழியாக அணையை அடைந்தோம். அத்தனை பெரிய ஆற்றின் குறுக்கே இரு மலைகளுக்கு நடுவில் பாரபோலா வடிவில் அந்த அணையை வடித்திருப்பது மனிதனின் ஆற்றலுக்கு சிறந்த சான்று. நான் இதுவரை கண்ட அணைகள் அனைத்துமே நிலப் பரப்பில் இருந்தவை, ஆனால் இந்த அணையின் இரு பக்கங்களும் மலையில் சொருகப்பட்டிருந்தன. இயற்கையையும் செயற்க்கையையும் இணைத்து ஒரு சொட்டு நீர் கூட கசியாதபடி அந்த அணை வடிவமைந்திருந்ததைக்கண்டு வியந்து கொண்டே அங்கு இருந்த ஒரு குகையின் உள்ளே நுழைந்தோம். அப்பொழுது ரெஜித் 'வைஷாலி, என்று ஒரு படம் இங்கு காட்சி செய்யப்பட்டதால் இங்கு இருக்கும் ஒரு குகைக்கு வைஷாலி குகை என்று பெயர் வந்தது. அது இதுதானா என்று தெரியவில்லை' என்று சொல்லிக் கொண்டு செல்ல அந்த குகையின் மறுமுனைக்கே வந்துவிட்டோம்.<br />
<br />
அந்த முனையில் அணைக்கு கீழே இருந்து வர மற்றொரு பாதை இருந்தது. அந்த முனைக்கு ஒரு மின்சார ஊர்தி வந்து மக்களை இறக்கி விட, மூவருக்குமே நடந்த அயர்ப்பு இருந்ததால் அந்த ஓட்டுநரிடம் சென்று நாங்கள் பயன்படுத்தாத டிக்கெட்டை காட்டி எங்களை கொண்டு செல்லமுடியுமா என்று கேட்க ரெஜித்தை முன்நிறுத்தினோம். ரெஜித்தின் வசீகர வலையில் விழுந்த ஓட்டுநருடன் அதன்பின் மலையாளத்தில் நடந்த உரையாடல்கள் தமிழில்,<br />
<br />
'வண்டில ஏறாமல் காணாமல் போன அந்த மூணு பேரு நீங்கதானா. உங்களுக்காக ரொமப் நேரமா காத்திருந்து வேறு ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தேன்' என்று சோகத்துடன் அவர் கூறினார்.<br />
<br />
'திரும்ப போகும்போது எங்களை கொண்டு செல்ல முடியுமா' என்று ரெஜித் கேட்க, 'அது முடியாது, கொண்டு வந்தவர்களை தான் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். சேரி ஏறுங்க அப்படியே அந்த முனைல விட்டுட்டு வரேன்' என்று எங்களை ஏற்றிக்கொண்டு, எங்களது விபரங்களை மற்றும் நாங்கள் இந்த மூன்று நாட்கள் செய்த சாகசங்களை கேட்டு அறிந்துக்கொண்டார். மேலும் இந்த அணையில் இருக்கும் ஒவ்வொரு அடி நீரினாலும் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகின்றது என்றும் இந்த அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டால் எத்தனைக் கோடி ரூபாய் வருவாயை கேரள அரசு இழக்கும் என்ற அரசியலும் பேசினார். பாரபோலா அணையின் மறுமுனைக்கு வந்தவுடன் அந்த வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, அந்த அணையின் அடியில் இருக்கும் மின்சாரம் உற்பத்தி ஆகும் முறைகளையும் அவர் மின் வாரியத்தில் பணிபுரிந்த பொழுது மின் தூக்கியில் அணைக்கு அடியில் சென்று நீரைக் கண்ட அனுபவங்களையும் சொன்னார்.<br />
<br />
'நீங்கள் இடுக்கி போல் ஒரு இடத்தை எங்கும் காண முடியாது. இங்கு பலரும் அறியாத சில அருமையான ஸ்தளங்கள் இருக்கின்றன' என்று தன் கைபேசியில் இருந்த அவரது பழைய புகைப்படங்களை காட்டினார். உண்மையிலே அந்த புகைப்படத்தில் இருந்த இடங்கள் வெளிநாடுகளில் சினிமா பாடல்கள் காட்சி செய்யும் இடம் போல இருந்தது. குறிப்பாக ஒரு மலை மீது இருந்த படத்தில் மேக கூட்டங்கள் அவர் காலுக்கு அடியில் செல்வது போல் இருந்தது. அடுத்த முறை இடுக்கி மட்டுமே மூன்று நாட்கள் வரவேண்டும் என்று தீர்மானித்தோம், எங்களுக்கு வழிகாட்டியாக அவர் வர சம்மதிக்கும் பொழுது அவர் இறக்கி விட்ட பயணிகள் அணையை சுற்றி பார்த்து விட்டு திரும்பியிருந்தனர். எங்களுக்கு வைஷாலி குகைக்கு செல்லும் சரியான வழியை காட்டிவிட்டு, எங்களை அதுவரை அழைத்து செல்ல அந்த பயணிகளிடம் அனுமதியும் வாங்கினார். அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் நடந்தே செல்ல முடிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து வழி அனுப்பினோம். குறத்தி மலையில் ஒற்றை அடி பாதையில் சென்ற மக்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து பத்து நிமிட பயணத்திற்கு பின் அந்த வைஷாலி குகையின் ஒரு முனையை அடைந்தோம். ஒரு பெரிய கனரக லாரி சிரமம் இன்றி செல்லக் கூடிய அளவிற்கு அகன்று சுரண்டப் பட்டிருந்த அந்த இருள் சூழ்ந்த குகையின் மறுமுனையில் இருந்த வந்த அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தோம். நீருக்கு பல அடிகளுக்கு மேல் மலையில் முடிந்த அந்த முனையில் இருந்து அணையின் நீரைக் கண்ட காட்சி சொர்கத்தை கண்டது போலே மனதிற்கு ஒரு வித அமைதியை தந்தது. <br />
<br />
அந்த இடத்தில் சில நிமிட அமைதி தியானத்திற்குப் பின், பல உள்ளூர் காதல் ராஜா ராணிக்களின் பெயர்கள் அந்த பாறைகளில் அம்புகளுடன் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்த வழியே திரும்பினோம். முதல் அணையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கடையில் சுட சுட சில பழம்பொறிகளையும் ஆளுக்கு ஒரு லெமன் சோடாவையும் உண்ட பின்தான் மூவருக்கும் இளமை திரும்பியது. அணையின் வாயிலுக்கு வரும் பொழுது அவர் தனது பயணிகளை இறக்கி விட்டு அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார், அங்கு கைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை என்பதால் திருட்டுத்தனமாக அவர் ரெஜித் கைபேசிக்கு அழைத்து மிஸ்டு கால் கொடுத்தார். பிகோவை வந்தடையும் பொழுது மணி 12 30. அதன் பின் தான் ரெஜித் தன் கைபேசி உயிரின்றி கிடப்பதையும் அந்த மனிதரின் எண்ணை நாங்கள் தவறவிட்டதையும் எண்ணி சில நொடிகள் வருந்தினோம். அணையில் இருந்து கீழே வந்த பின் அணை பின் தெரியும்படி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQMR-2uA-VuphcDbO5aIB1bzXkjmVhzEP-F5WLzBOKK4UFkhSL3EqojI9paVL1W0ARw_jtuaJazR0MtKIh75Bj-_yl0SwQ63u-UJ1b-R1UL1cgYVLDhbzOv6sjgAemF5i_Qg9mNZ2n30Y/s1600/_DSC0350.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQMR-2uA-VuphcDbO5aIB1bzXkjmVhzEP-F5WLzBOKK4UFkhSL3EqojI9paVL1W0ARw_jtuaJazR0MtKIh75Bj-_yl0SwQ63u-UJ1b-R1UL1cgYVLDhbzOv6sjgAemF5i_Qg9mNZ2n30Y/s320/_DSC0350.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizA84qlD9KW6pV12FpTkw8MUYQWyW9FZWuxUzn3b_jcVtepygLk_zSBBx39x8L-o0n1KkESdrG_PKohdCcAeWtKAJvFdCrruelKdXxBrRtuX81179fUZIhYCy07AQMt5RIXCkSCZS9Y7Y/s1600/_DSC0371.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizA84qlD9KW6pV12FpTkw8MUYQWyW9FZWuxUzn3b_jcVtepygLk_zSBBx39x8L-o0n1KkESdrG_PKohdCcAeWtKAJvFdCrruelKdXxBrRtuX81179fUZIhYCy07AQMt5RIXCkSCZS9Y7Y/s320/_DSC0371.JPG" width="320" /></a></div>
<br />
கம்பம் செல்ல கூகிள் அம்மணியின் துணையை நாடிச் சென்று, தேனி வந்தவுடன் 'கேரளா சிப்ஸ்' கேட்டவர்களுக்கு, பிரபாகர் தேனியில் சிப்ஸ் வாங்கினார் என்பதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். அவருக்கு கேரளா புட்டு கிடைக்க வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் ஒரு நல்ல பயணத்தின் திருப்தி இருந்தது. சிறுசேரியில் இருந்த ரெஜித் வீட்டில் மூவரும் பிரிந்து, நான் ரெஜித் வண்டியில் மேடவாக்கம் வந்தடையும் பொழுது மணி 12 20.<br />
<br />
மூன்று நாட்கள், மூன்று வாலிபர்கள், 1400 கிலோ மீட்டர்கள், சரக்கு இல்லை, பாட்டு இல்லை ஆனால் அடுத்த தலைமுறைக்கு சொல்லும் அளவிற்கு பல நினைவுகளுடன் இந்த பயணத்தை பதிய வேண்டும் என்ற உறுதியுடன் உறங்கச்சென்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-8792114939399963522017-03-05T13:59:00.002+05:302017-03-08T21:15:07.630+05:30ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
****************************************************************************************************************<br />
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்<br />
<a href="http://www.rubakram.com/2017/02/blog-post.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்</span></b></a><br />
<a href="http://www.rubakram.com/2017/03/parunthumpara.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா</span></b></a><br />
****************************************************************************************************************<br />
வாகமானில் குளிர்ந்த இரவை தங்கும் அரை இல்லாமல் எப்படி கழிப்பது என்ற குழப்பத்தில் இருந்த எங்களுக்கு அந்த ரிசார்ட் மேலாளர் அருமையான யோசனையைக் கூறி வழிகாட்டினார். அவர் மலையாளத்தில் என் நண்பர்களிடம், 'இங்கு தங்க ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக கட்டணத்தில் அறை கிடைத்தாலும், அது சுத்தமின்றி குப்பை போலத்தான் இருக்கும். இங்கிருந்து ஒரு இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் சிரமம் பாராமல் பயணித்து இரெட்டுபேட்டா சென்றால், இங்கு செலவிடும் காசிற்கு அங்கு குறைந்த கட்டணத்தில் சுத்தமான அறையுடன் சிறப்பான உணவையும் அனுபவித்து விட்டு டீசல் செலவும் அதற்குள் அடங்க சுகமாக காலை திரும்பலாம்' என்று கூறி அனுப்பினார். நாள் முழுக்க மலைப் பாதையில் பிகோவை செலுத்தி பிரபாகர் அயர்ந்திருக்க, அங்கு ஓட்டுநர் பொறுப்பை நான் ஏற்று, அந்த கும் இருட்டில் பிகோவின் சோடியம் துணை கொண்டு இரெட்டுபேட்டா நோக்கி, வழியில் சாலை நடுவே இருந்த பல குழிகளில் பிகோவை செலுத்தி ஒரு வழியாக இலக்கில் கொண்டுசேர்த்தேன். இரெட்டுபேட்டா அந்த கணம், மக்கள் மற்றும் வாகன ஓட்டம் அதிகம் இல்லாத அமைதியான டௌனாக எங்களுக்கு தோன்றியது. <br />
<br /></div>
<div style="text-align: justify;">
நான் பிகோவில், பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ரௌண்டானாவின் அருகில் நிற்க, அவர்கள் இருவரும் அருகில் இருந்த சந்துகளில் ஏதேனும் விடுதிகள் உண்டா என விசாரிக்கச் சென்றனர். நான்கு சக்கர வாகனங்களின் மற்றொரு பிரதிகூலம் இது. எல்லா சந்துகளிலும் யோசிக்காமல் நுழைந்து விட்டால் பின் திரும்பிவர மிகவும் சிரமப்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தான் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் மேல் ஓங்கி நிற்கின்றன. இருவரும் பார்க்கிங் வசதியுடன் கொண்ட ஒரு விடுதியை கண்டு வர, பிகோவை அந்த விடுதி நோக்கி செலுத்தி, அதன் வாயிலில் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவு இருந்த இடத்தின் நடுவே பிகோவை நிறுத்தி விட்டு, மேலே சென்றோம். சுண்ணாம்பின் வாசம் கூட குறையாமல் புதிதாய் நிறுவப்பட்டிருந்த அந்த விடுதியில், தேனியில் தங்கியதை விட குறைந்த கட்டணத்தில், புத்தம் புதியதாய் ஒரு அறை கிட்டும் என்று அந்த குளிரில் நடுங்கியபோது நாங்கள் எண்ணவே இல்லை. நல்லதொரு உறக்கம் தந்த உற்சாகத்துடன், காலை ஆப்பம், நூலாப்பம், பரோட்டா, பக்ரி, முட்டை கரி, என சகலமும் சுவைத்த பின்பு, கட்டணம் எவ்வளவு என்று நினைக்கறீர்கள்? ஹ்ம்ம், இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கு கூட அங்கு அவசியமில்லாமல் போனது. அனைத்திற்கும் எங்களுக்கு வழிகாட்டிய அந்த பெயர் தெரியாத நல்ல உள்ளத்திற்கு நான் நன்றி சொல்லியபோதும், பிரபாகருக்கு ஒரு மிகப் பெரிய குறை இருந்துகொண்டே இருந்தது. புட்டும் கடலைக்கறியும் கிடைக்காத குறை தான் அது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் வாகமான் நோக்கி எங்கள் பயணம் தொடர, இரவு இருட்டில் நான் கடந்து வந்தப் பாதையின் ஆபத்தை கதிரவன் தெள்ளந்தெளிவாக ஒருபுறமும் இருந்த மிகப் பெரும் பள்ளத்தாக்கை எங்களுக்கு காட்டியது. மேலும் இங்கு எல்லாப் பாதையுமே குறுகிய ஒற்றை வழிப் பாதைகள் தான், கவனம் தப்பினால் மரணம். வாகமான் செல்லும் வழியில் முதலில் வந்த இடமான கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் பிகோவை ஓரமாக நிறுத்திவிட்டு, பிரபாகரின் dslr காமிராவிற்கு வேலை கொடுத்தோம்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibPbQzHJbDzjaVWKb9JGWXHd5umcCqW0ylXA96Hpf30FtezlkYpdMIu-B35zVp6r1Lh2jjpUzhQ8YEJKMQfB6FKn_FzeqenLwynnK3aEv8rnSn6mGLqXCws90gPZfeGUUTRZhaRXVgTSI/s1600/_DSC0308.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibPbQzHJbDzjaVWKb9JGWXHd5umcCqW0ylXA96Hpf30FtezlkYpdMIu-B35zVp6r1Lh2jjpUzhQ8YEJKMQfB6FKn_FzeqenLwynnK3aEv8rnSn6mGLqXCws90gPZfeGUUTRZhaRXVgTSI/s320/_DSC0308.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="font-size: 12.8px;">கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் நான் கிளுக்கியது</td></tr>
</tbody></table>
சில புகைப்படங்களை கிளிக்கி விட்டு கிளம்பும் முன் அங்கு சாலையோரம் இருந்த ஒரு கடையில் லெமன் சோடா இருப்பைதைக் கண்டவுடன் ப்ரேமம் பட 'கஸ்கஸ்' நினைவிற்கு வந்த பின் லெமன் சோடா குடிக்காமல் செல்ல முடியுமா (லெமன் vs லைம் என்று ஆவி அவர்கள் வாதத்திற்கு வர நினைத்தால் இந்தச் சிறுவனின் பிழையை மன்னிக்கவும்). இருவரும் பெரிதும் நாட்டம் காட்டாததால் எனக்கு மட்டும் ஒன்று சொன்னேன். கார் டிக்கியில் ('ட்ரங்க்' என்று குறிப்பிடாததிற்கு மீண்டும் ஆவீ அவர்கள் மன்னிக்கவும்) தேவையான பொருட்களை வைத்துக்கொண்டு, சாலை மேல் ஒரு சிறு மேசையை விரித்து வைத்துக்கொண்டு, அதேன் மேல் பல விதமான ஊறவைத்த காய் மற்றும் கனிகளை அந்த இளைஞன் விற்பனை செய்துகொண்டு இருந்தான். வெள்ளைக் கண்ணாடி டம்ளரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, சர்க்கரை பாகு நீரை லேசாக கலந்து, அரைத்த பச்சை மிளகாய் இஞ்சு பூண்டு ஆகியவற்றையும் சிறிதளவு கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, ஒரு சோடா பாட்டிலை உடைந்து, நுரை பொங்க விடமால் அந்த சோடாவை கலந்து, ஒரு தேக்கரண்டி கஸ்கஸ் சேர்த்து, பின் ஒரு வெள்ளி டம்பளரை அந்த கண்ணாடி டம்ளர் மீது மூடி, பார்டெண்டரிடம் ஜேம்ஸ் பாண்ட் 'shaken and not stirred' என்று கூறுதுஎன் நினைவிற்கு வருமளவுக்கு தேர்ந்த பார்டெண்டர் போல் அதை நன்கு குலுக்கி கொடுத்தான். இதன் மேல் அதன் சுவை பற்றி சொல்லவா வேண்டும், இப்பொழுது அதை நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் சுரந்து சாப்பாட்டு ராமனை தட்டி எழுப்புகின்றது. பிறகு இரு நண்பர்களும் ஆளுக்கு ஒன்று வாங்கி சுவைத்துவிட்டு, ஒரு நல்ல மாக்டைல் குடித்த திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhySmbgPDYVtO0zo1o9QOMZlcAlFD2pQaRphCJMF6ZHH9vUp0BOaonAIvk2Q3rwj1-bWw6F4b2XXLpFET7MBZcRXnSe9mEDrslhTGycOoleIt9Y79okNeJsBZ2BkIz7SLl44Wvm4kJIGSM/s1600/20161009_101540.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhySmbgPDYVtO0zo1o9QOMZlcAlFD2pQaRphCJMF6ZHH9vUp0BOaonAIvk2Q3rwj1-bWw6F4b2XXLpFET7MBZcRXnSe9mEDrslhTGycOoleIt9Y79okNeJsBZ2BkIz7SLl44Wvm4kJIGSM/s320/20161009_101540.jpg" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அந்த எலுமிச்சை ரச சோடா </td></tr>
</tbody></table>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVC8UAleI-cD2ZpD6SZ1hSawWzeesxQ9dzsrKAjVr3UtVoMH04TnITi6XXnYBCJJNNwdaakMcaOa2swp-5FO_D5f0XG67rOT-VJNdte7s1cGFBdgUNPiDXj82D6XZUYsWFV9z-rA4rlA/s1600/20161009_102839.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVC8UAleI-cD2ZpD6SZ1hSawWzeesxQ9dzsrKAjVr3UtVoMH04TnITi6XXnYBCJJNNwdaakMcaOa2swp-5FO_D5f0XG67rOT-VJNdte7s1cGFBdgUNPiDXj82D6XZUYsWFV9z-rA4rlA/s320/20161009_102839.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எங்களது வழிகாட்டி </td></tr>
</tbody></table>
அங்கு இருந்த சுற்றுலாத் தளங்களிற்கு என்று அமைக்கப்பட்டிருந்த வரைபடத்தின் உதவி கொண்டு வாகமானை சுற்றத் தொடங்கினோம். முதலில் சென்றது அதில் இருக்கும் 'டீ லேக்', எதோ வித்தியாசமாக இருக்கும் என்று சென்றால், தேநீர் பயிர் செய்யப்பட்டிருந்த இரு குன்றுகளுக்கு நடுவில் இருந்தது அந்த ஏரி. அங்கு சில பெடல் போட்டுகள் மற்றும் சிறுவர்களுக்கான zorbing பலூன் இருந்தது. மூவருக்குமே அந்த இடம் பெரிதும் ஈர்ப்பு தராததால் வீணாக கொடுத்த பார்க்கிங் கட்டணத்தை காந்தி கணக்கில் போட்டுவிட்டு அடுத்த இடத்தை, அந்த வரைபடத்தில் இருந்த அருவியை தேர்வு செய்து விட்டு, அதன் பாதையில் சென்றோம்.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg3iUb7ZPYAiC15ZbOKcM8P3of6N8LfIrkr_Vs2mi66nZTYZitw1OCL7jvWuTpvxOJ19wADw_SorVUjtCDa-cPKqaums3kuyFyA86sle_mBaZa-ECSAMojibjTA66grN74jXlxN3fJySE/s1600/20161009_104510.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg3iUb7ZPYAiC15ZbOKcM8P3of6N8LfIrkr_Vs2mi66nZTYZitw1OCL7jvWuTpvxOJ19wADw_SorVUjtCDa-cPKqaums3kuyFyA86sle_mBaZa-ECSAMojibjTA66grN74jXlxN3fJySE/s320/20161009_104510.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">டீ லேக் </td></tr>
</tbody></table>
<br />
<br />
நமக்கும் நீருக்கும் பத்து பொருத்தமும் உண்டு, மலை அருவி நீரில் தொடங்கி குளம், குட்டை, ஏரி, ஆறு, கடல், மழை ஏன் மோட்டார் பம்ப் நீரைக் கூட விடுவது இல்லை. இருமலைகளுக்கு நடுவில் குடைந்து சென்ற அந்த சாலை சினிமா பட கார் சேஸ் லொகேஷன்களை நினைவுபடுத்த, ஒரு தூரத்தில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, சற்று நேரத்தில் மலை மீது இருந்து ஓடும் அந்த அருவியும் கண்ணில் பட்டது. பெயரைப் போலவே அது பாலொழுகும் அருவியாகத்தான் காட்சியளித்தது. அந்த அருவிக்கு செல்ல சாலை அந்த இடத்துடன் முடிய, 'இந்த அருவியில் குளிக்க அனுமதி இல்லை' என்று ஒரு எச்சரிக்கை பலகையும் இருந்தது. ஆனால் நால்வர் அந்த அருவியின் அடிவாரத்தில் குளிப்பதைக் கண்டவுடன் எங்களுக்கும் நீர் அரிப்பு ஏற்பட, அந்த மலை வழியில் தண்ணீரை நோக்கி இல்லாத பாதையை தேடி நடந்து, ஒரு வீட்டின் முன் சென்றோம். அந்த வீட்டில் இருந்தவர்கள் 'அருவிக்கு போக வழியில்லை இது தனியார் இடம்' என்று எங்களை விரட்ட, ஏமாற்றத்துடன் மீண்டும் பிகோவை நோக்கி மலையேறினோம். அப்பொழுது எங்களுக்கு எதிரில் வந்த தமிழர்கள் எங்கள் எச்சரிக்கையையை நம்பாமல் அந்த அருவியை தேடி நடக்க, சில நிமிடங்களில் நாய்கள் குறைக்கும் சத்தம் எங்களுள் ஒரு நைய்யாண்டியை தூண்டியது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPymZZH1GP_dh37qh-zyWu4pEawunemcio7RsrvsPThdFT5Fn8MO0ZD2Rwbl1XJhyPUK51He78v1rvQ6SGkt7qdh3jCa6T3W7Pt6rVYKF44BCjio3CP6dFE38wuYI_eMtfGMGcGgPew7k/s1600/_DSC0330.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPymZZH1GP_dh37qh-zyWu4pEawunemcio7RsrvsPThdFT5Fn8MO0ZD2Rwbl1XJhyPUK51He78v1rvQ6SGkt7qdh3jCa6T3W7Pt6rVYKF44BCjio3CP6dFE38wuYI_eMtfGMGcGgPew7k/s320/_DSC0330.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பாலொழுகும் அருவி </td></tr>
</tbody></table>
<br />
அருவியில் இருந்து திரும்பும் வழியில் இருந்தது 'மொட்டக்குன்னு', நம் ஊரில் சொல்லும் மொட்டை மலை போல் ஒரு மரம் கூட இல்லாமல் மொத்தம் புல்வெளி படர்ந்து இருந்தது. அந்த இடத்தில மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்க, பிகோவை நிறுத்த இடம் கிடைக்காது என்பது உறுதியாக எங்களுக்கு பட்டது. பல சினிமா பாடல்களில் கண்ட இடம் என்பதால் பெரிதும் வருத்தம் இல்லாமல், அடுத்து பைன் பாரஸ்ட் சென்றோம். கொடைக்கானலில் இருப்பதைப் போல் ஒரு அடர்ந்த பைன் மறக்காடு.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNyDLFwWLc6CQEtZsAcd37UeLSRuy_EikuF7Cz6Q0I4csBzyGkfH41ZQf9X9MYlicGrPP1WzOmC8zIpE-dbtMhKQNf0_7rLKzIyofaa_d6coRpPVqSEOZk3fY01SnyOfL9aeOyj_WDeCg/s1600/20161009_125904.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNyDLFwWLc6CQEtZsAcd37UeLSRuy_EikuF7Cz6Q0I4csBzyGkfH41ZQf9X9MYlicGrPP1WzOmC8zIpE-dbtMhKQNf0_7rLKzIyofaa_d6coRpPVqSEOZk3fY01SnyOfL9aeOyj_WDeCg/s320/20161009_125904.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வெற்றிக் கூட்டணி </td></tr>
</tbody></table>
<br />
நம் நாட்டில் எங்கும் இல்லாத ஒரு வகை மரத்தை, ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டில் இருந்து வரவழைத்து குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் அவற்றை வளர்த்து, ரயில் தடங்கள் அமைக்க பயன்படுத்திய அந்தப் பைன் மரங்கள் தற்காலத்தில் சுற்றுலா காட்சிப் பொருளாக உள்ளது. வந்ததிற்கு சில பழம்பொறிகளை உண்டுவிட்டு அடுத்து சூசைட் பாயிண்ட் நோக்கி நகர, அங்கு பாரா கிளைடிங் இருப்பதாக சில விளம்பரங்களைக் கண்டு ஆர்வத்துடன் சென்றோம். பிகோவை நிறுத்திவிட்டு, பாராச்சூட் தெரிந்த அந்த மலைக் குன்றின் மேல் வேகமாக ஏறினோம். மேலே ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெறிச்சோடி இருக்க, ஏறிய களைப்பில் பேசமுடியாமல் மூவரும் அப்படியே சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். நீரும் காரிலே இருக்க, வந்த வழியே திரும்பலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கோம் போது, கண்ணில் தென்பட்ட மூன்று வாலிபர்களிடம் நாங்கள் பாரா கிளைடிங் பற்றி விசாரிக்க அவர்கள் அடுத்து இருக்கும் மலையில் தான் அது இருப்பதை எங்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலும் இந்தப் பயணத்தில் எங்கள் மூவருக்கும் சேர்த்து ஆகும் செலவின் அளவிற்கு அதில் ஒருவரின் கட்டணம் என்று அவர்கள் சொல்லிய பின் அந்த திசை நோக்கி செல்வோமா என்ன.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
வாகமானில் அடுத்து எங்கு செல்வதென்று அந்த வரைபடத்தை ஆராய்ந்து வேறு இடங்கள் இல்லாமல் நாங்கள் விழிக்கும் பொழுது மணி ஒன்று. அடுத்து மதிய உணவுதானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மீண்டும் சில பழம்பொறிகளை வாங்கிச் சுவைக்கும் பொழுதுதான் அந்த வரைபடத்தில் 'வாகமான் இடுக்கி மாவட்டம்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வர, 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் வரும் 'இடுக்கி' பாட்டு எனது மண்டையில் ஒலிக்க 'நாம் ஏன் இடுக்கி செல்லக்கூடாது' என்று நான் கேட்க, பிரபாகர் 'எனக்கு புட்டும் கடலைக்கறியும் கிடைத்தால் போதும் எங்கு வேண்டுமானலும் செல்லலாம்', ரெஜித் 'எனக்கு எங்கனாலும் ஒகே', என்று அவர்கள் இருவரும் உடனே சம்மதிக்க, இடுக்கி நோக்கி பிகோவை செலுத்தினோம். அந்த வினாடி நாங்கள் எடுத்த அந்த முடிவு தான் இந்த பயணத்தை எங்கள் மூவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பயணமாக மாற்றும் என்பது அந்த நொடி எங்கள் யாருக்கும் தெரியவில்லை.<br />
<br />
- பயணம் தொடரும்!<br />
<br />
****************************************************************************************************************<br />
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்<br />
<a href="http://www.rubakram.com/2017/03/idukki.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி </span></b></a><br />
****************************************************************************************************************</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-41532151982634546892017-03-03T22:01:00.007+05:302017-03-08T21:15:27.833+05:30ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
****************************************************************************************************************<br />
முந்தைய பகுதி படிக்க இங்கு செல்லவும்<br />
<a href="http://www.rubakram.com/2017/02/blog-post.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்</span></b></a><br />
****************************************************************************************************************<br />
காரில் பயணம் செல்லும் பொழுது பலவித அனுகூலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பிரதிகூலமான பார்க்கிங் பிரச்சனை உண்டு. ஆடவருடன் தங்கும்பொழுது விடுதியின் தரம் பெரிதும் இல்லாவிட்டாலும் பிகோவை பாதுகாப்பாக இரவு நிறுத்த இடவசதி கொண்ட விடுதியை தேனீ டௌனை நெருங்கியதுமே தேடத்தொடங்கினோம். மூவருக்குமே பரிட்சயம் இல்லாத நகரம், ஒரு விடுதியின் விளம்பரத்தை பின் தொடர்ந்து ஒரு குறுகிய சந்தினுள் பிகோ நுழைந்தது. அந்த விடுதி சற்று சிறியதாக தோன்றவே பார்க்கிங் வசதியை அலச நான் முதலில் சென்று பார்க்க, உளளே பத்து லாரிகளை நிற்கும் அளவு வசதி இருந்தது. எட்டு மணிநேர பயணத்திற்கு பின்பு பிகோவிற்கு மட்டும் அந்த ஒய்வு மிக அவசியமானதன்று வண்டியை பத்திரமாக கொண்டு வந்த ஓட்டுநர்களுக்கும் தான். கூகுள் மற்றும் OYO துணையின்றி ஒரு விடுதியில் தங்குவது இதுவே முதல் முறை என்றபொழுதும் சுத்தமான அறை மற்றும் சிக்கனமான கட்டணத்துடன் அன்றைய இரவு இனிதே முடிந்தது.<br />
<br />
சூரியோதயத்துடன் விழித்து மூவரும், தேனீ கடந்து வழியில் ஒரு பேக்கரியில் காலை உணவை முடித்து கொண்டு கம்பம் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோவை சென்றபொழுது கண்டது போலே இங்கும் பேக்கரியில் தேநீர் முதல் உணவு வரை சகலமும் கிடைத்தது. வட தமிழகத்தில் வளர்ந்த எனக்கு பேக்கரி என்றாலே கேக் மற்றும் பப்ஸ் கிடைக்கும் கடை என்றுதான் பரிட்சயம். கம்பத்தை கடந்து கேரள எல்லையை அடையத் தொடங்கியதுமே பசுமை கண்ணை ஈர்த்தது. லோயர் கேம்ப் கடந்ததுமே, தரை வழிப் பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தத மலைப்பாதை, எங்கள் முன் வளைந்து உயர்ந்து இருந்தது. மலை ஏறும் வழியில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பெரியார் நிலையத்தை கடந்து செல்ல குமுளி வந்த தமிழ்நாட்டுப் பேருந்துகள் வரிசையாக நிற்க, அங்கு இருந்த ஒரு சோதனைச் சாவடியை கடந்தவுடன் குமுளி எங்களை அன்புடன் வரவேற்றது. தமிழகத்தையும் கேரளாவையும் பிரிப்பது அந்த சாவடியின் சிறு கம்பம் தான். பறந்து விரிந்து இயற்கை எழில் கொஞ்சும் உலகில் மனிதன் செய்த அக்மகிரமங்களில் இந்த எல்லைப் பிரிவுகளும் ஒன்று.<br />
<br />
கேரளா வந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கட்டனும் பழம்பொறியும் சுவைக்க வேண்டும். கட்டன் பால் இல்லாத தேநீர், பழம்பொறி பதமாக தேர்வு செய்யப்பட்ட நேந்திர வாழைப்பழத்தில் செய்யப்படும் பஜ்ஜி. அங்கு பழம்பொறி சற்று சுமாராகவே இருக்க அடுத்து எங்கு செல்வது என்று கட்டன் குடித்துக்கொண்டே அலசினோம். எத்தனை முறை அடி வாங்கினாலும் கவுண்டமணியிடமே திரும்பி செல்லும் செந்தில் போலவே மீண்டும் கூகிளிடம் சென்றால், அது 'அடேய் முட்டாள் உன் அருகிலேயே தேக்கடி இருக்கின்றது' என்று நகைத்தது. குமுளியில் இருந்து பத்து நிமிட பயணத்தில் தேக்கடியை அடைந்தோம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfy8REgu1fcS9HSYI65903ma82oAN5a7s23mUNKZ0g-CMaQFHre2v2gmvx-JCL2M_MUR11ZfptaSXD3HDEPg7JrW2iu9Gtiw8hB3zaUrE4CiLk9Mq79Eb7XjRcdicOt5WO6fFbQZBsxWA/s1600/_DSC0175.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfy8REgu1fcS9HSYI65903ma82oAN5a7s23mUNKZ0g-CMaQFHre2v2gmvx-JCL2M_MUR11ZfptaSXD3HDEPg7JrW2iu9Gtiw8hB3zaUrE4CiLk9Mq79Eb7XjRcdicOt5WO6fFbQZBsxWA/s320/_DSC0175.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தேக்கடி </td></tr>
</tbody></table>
<br />
<br />
அரசு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சுற்றுலா தளத்திற்குச் சென்றாலும் மக்கள் கூட்டம் பொங்கி வழிந்து அந்த இடத்தின் அமைதியை கலைக்கும் வழக்கம் தெரிந்தாலும், சொந்த கல்யாணத்திற்கே நாட்களை எண்ணி விடுமுறை கொடுக்கும் இந்த அலுவலக சூழலில், அரசாங்க விடுமுறைகளில் வேறு வழியின்றி பயணிக்கும் கட்டாயம் எங்களையும் தொடர்ந்தது. அங்கும் மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டிருக்க பிகோவை நிறுத்த இடம் கிடைக்க சற்று நேரமானது. படகுத் துறையை அடைந்த பொழுது ஏற்கனேவே ஒரு படகு சென்று விட்டதும் அடுத்த படகு வர இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பது சற்று ஏமாற்றம் தந்தாலும், 'ச்சீ இந்த ஏரில தண்ணியே இல்ல, போன வருஷம் சென்னைல வந்த வெள்ளமே அதிகம்' என்று பிகோவை நோக்கி நடந்தோம். வழியில் சில பயண முகவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு, 'உங்கள் கார்களாலும் செல்ல முடியாத இடங்களுக்கு ஜீப்பில் கொண்டு சென்று வன விலங்குகளைக் காட்டுகிறோம்' என்று எப்பொழுதோ டிஸ்கவேரி சானலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி எங்களை அழைத்துச் செல்ல விலை பேசத் தொடங்கினர். சொந்த வாகனம் இருக்கும் போது வேறு வாகனத்தில் செல்ல எங்களுக்கு பெரியதொரு ஈர்ப்பு தோன்றவில்லை. எங்கள் ரெஜித்தின் வசீகர பேச்சில் சிக்கிய அந்த முகவர்கள் சில நிமிடங்களிலேயே உண்மைகளை கக்க, ஜீப் பயணம் தேவையற்றது என்று அவர்களே சொல்லிவிட்டனர்.<br />
<br />
அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு எங்களது அடுத்த இலக்கு 'பருந்தும்பாறா'வாக நிர்ணயமானது. முழுவதுமே மலைப்பாதை, வழி கேட்க ஒரு ஆத்மா கூட இல்லாத பாதை என்பதால் அந்த கூகிள் அம்மணி காட்டிய வழியில் சென்றோம். வழியில் ஒரு பாலத்தை கடந்து பொழுது அங்கு பெருகி ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீரைக் கண்டதும் பிகோவை ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, மூவரும் நீரை நோக்கி துள்ளி ஓடினோம். ஆடவராகப் பிறக்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று அகமகிழ்த்தபடியே அங்கு ஒரு ஆனந்தக் குளியல் அரங்கேறியது. தமிழகத்திற்கு வர மறுக்கும் முல்லைப் பெரியாரின் ஓர் கிளையில் கொண்ட குளியல் தந்த உற்சாகத்துடன் எங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieBBta4A8Sa4eBzGrEBWMoVPA77RlqjmIm1wgOUUS6hbhBt2ObIX3xgNALnO-4EdrLLpWrpH3sBZCgEf3Wq52cAjJR68YHjrYi2yjMtovqsOaCi23F_rAfsbhDLKgeICN19sCEUVKrCU0/s1600/20161008_135221.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieBBta4A8Sa4eBzGrEBWMoVPA77RlqjmIm1wgOUUS6hbhBt2ObIX3xgNALnO-4EdrLLpWrpH3sBZCgEf3Wq52cAjJR68YHjrYi2yjMtovqsOaCi23F_rAfsbhDLKgeICN19sCEUVKrCU0/s320/20161008_135221.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஆனந்தக் குளியல் அரங்கேறியது இங்கு தான் </td></tr>
</tbody></table>
வழி நெடுவிலும், இருபுறமும் மனிதனின் ஊடுருவல் பெரிதும் இல்லாத அந்த இடங்களின் பசுமையான இயற்கை அழகு தந்த மயக்கத்தில் கூகிள் அம்மணியின் மேப் வழியே அந்த சாலையின் முடிவிற்கே வந்துவிட்டோம். ஆனாலும் அந்த அம்மணி எங்களை இடது புறம் திரும்பி எங்கள் பயணத்தை தொடர சொன்னது. இடதுபுறம் ஒரு வீடு மட்டும் தான் இருந்தது. அந்த அம்மணி பின் சென்று கெடுவது இது ஒன்றும் முதல் முறை அன்று. மீண்டும் வந்த வழியே சென்று அந்த அம்மணி காட்டிய மாற்றுப் பாதையில் செல்ல, சில அடிகளிலேயே அந்தப் பாதை கூழாங்கற்கள் சாலையாக மாறியது. ஒரு வாகனம் மட்டுமே செல்லக் கூடிய அந்த குறுகிய பாதையில், நாங்கள் போவது சரியான பாதைதானா என்ற அச்சத்துடனே பயணித்தோம். சில நிமிடங்களுக்கு பின் எங்களை ஒரு ஜீப் பின் தொடர சற்றே நிம்மதி கொண்டோம். அந்தப் பாதையின் வழியே ஒரு அழகியே குளம் எங்களுக்காகவே வடித்தது போல் தன்னந்தனியே அமைதியாக ஈர்த்தது. பிகோவை நிறுத்திவிட்டு அங்கு சில படங்கள் எடுத்திக்கொண்டிருக்க, ஜீப் மட்டுமே செல்லக் கூடிய பாதையில் பிகோ ஓட்டிவந்த சாகச வீரரர்களைக் காண அந்த ஜீப் ஓட்டுநரும் அங்கு நின்று, எங்களுக்கு பருந்தும்பாறா செல்ல வழியும் தானும் அங்கு தான் செல்வதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicc1EIn_L5wrrfXujOH6ZUR4ZajBnCJ70QSkdG6ziEepUvePbwUfxaLmsPmsajVW8e7qXTtcQdlAA9__6fAhphfTkdC50HvtLFZ1YPEQclp5IZ0cqlmcA_Qn5Hbr90s95O_dHoIxhvucw/s1600/_DSC0208.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicc1EIn_L5wrrfXujOH6ZUR4ZajBnCJ70QSkdG6ziEepUvePbwUfxaLmsPmsajVW8e7qXTtcQdlAA9__6fAhphfTkdC50HvtLFZ1YPEQclp5IZ0cqlmcA_Qn5Hbr90s95O_dHoIxhvucw/s320/_DSC0208.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அந்தக் குளம் </td></tr>
</tbody></table>
இந்த இடத்தில இருந்து நாங்கள் ,மூன்று மணியளவில் புறப்பட, மதிய உணவு உண்ணாத பசியில் காரில் இருந்த கனிகளை புசித்துக் கொண்டே எங்கள் பயணத்தை தொடர்ந்து பருந்தும்பாறாவை அடைந்தோம். எங்களைக் கண்டதுமே, எங்களுக்கு வழிகாட்டிய அந்த ஜீப் ஓட்டுநர் மிகவும் ஆனந்தப்பட்டார். பருந்தின் தலைபோல் ஒரு பாறை மட்டும் மலையின் உச்சியில் தனியே நீண்டு இருக்க இந்த இடத்திற்கு பருந்தும்பாறா என்ற பெயர் வந்ததோ? நமக்கு சாகசங்கள் என்றால் தான் மிக பிடிக்குமே, அந்த பருந்தின் தலைக்கு சென்று அங்கு சில செல்பிக்களை எடுத்க்கொண்டு, உயரத்தை கண்டு பருந்தின் தலைக்கு வர பின் வாங்கிய ரெஜித் எடுத்த புகைப்படங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு, பருந்தின் தலையில் இருந்து மீண்டும் மேல் ஏறும் பொது தான் உணவு உண்ணாததான் விளைவு நன்றாகவே தெரியத்தொடங்கியது. நேராக அங்கு இருந்த கடைகளை நோக்கி செல்ல, அந்த மாலை நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது வேகவைத்த வள்ளிக்கிழங்கும் மீன் குழம்பும் தான். குளிர்ந்த வானிலையில் லேசான மழை சாரல் அடிக்க அந்த மீன் குழம்பும் கிழங்கும் அமிர்தம் போலவே எங்கள் பசியை ஆற்றியது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-2iKWeNWOV_uoZrl9m_PUuDpy_pu9JpOOEnUYPhSODulwfWO9iOb8fKyiFDyakw8RKALNQujOuHVZnp6Q0GZlcdhxCSeDCJGjv8Roq1a7MI5KLgARLZQq1ojVg3M8EoaIqk2EQlaLPZI/s1600/_DSC0245.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-2iKWeNWOV_uoZrl9m_PUuDpy_pu9JpOOEnUYPhSODulwfWO9iOb8fKyiFDyakw8RKALNQujOuHVZnp6Q0GZlcdhxCSeDCJGjv8Roq1a7MI5KLgARLZQq1ojVg3M8EoaIqk2EQlaLPZI/s320/_DSC0245.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பருந்தும்பாரா </td></tr>
</tbody></table>
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW5ZYEuVv4ofwr2Sj2CRWyaKkmaDgFSEi798aNjd5Q4SmwnJZvzmS485tLJN9-dvqaMlpyMWXCFKFHteW4BSlv_UqboJYz27W9dotDj68GXG7pz6vOXjaOr_G1MwYHxownsCRqJ73JAgs/s1600/_DSC0250.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW5ZYEuVv4ofwr2Sj2CRWyaKkmaDgFSEi798aNjd5Q4SmwnJZvzmS485tLJN9-dvqaMlpyMWXCFKFHteW4BSlv_UqboJYz27W9dotDj68GXG7pz6vOXjaOr_G1MwYHxownsCRqJ73JAgs/s320/_DSC0250.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பிரபாகரின் கைவண்ணம் </td></tr>
</tbody></table>
<br />
பருந்தும்பாறாவில் இருந்து வாகமான் சென்று இரவு தங்கி மறுநாள் வாகமன் சுற்றி பார்ப்பது என்று முடிவு செய்தோம். கதிரவன் மறைந்தபின் அந்த இருண்ட மலைவழிப் பாதை சற்று திகில் உணர்வையே கொடுக்கத்தொடங்கியது. வாகமான் வந்ததுமே இரவு தங்க எந்த விடுதிக்குச் சென்றாலும் 'அறைகள் இல்லை' என்றதே பதிலாக இருக்க, அரசாங்க விடுமுறை தினத்தில் மக்கள் படையெடுப்பால், அந்த குளிரில் எங்கள் இரவின் நிலை கேள்விக்குறியானது. குளிர் அதிகரித்துக் கொண்டிருக்க இறுதியாக ஒரு ரிசார்ட்இல் விசாரிக்க அவர்கள் இருவரும் செல்ல நான் பிகோவில் காத்திருந்தேன். இங்கும் அறை கிடைக்கவில்லை என்றால் அந்த இரவு பிகோவில் அந்தக் குளிரில் தான் என்று நான் எண்ணிக்கொண்டிருக்க, தோல்வியுடனே அவர்கள் இருவரும் வந்தாலும், அவர்களிடம் இருந்த தீர்வு தந்த நம்பிக்கையில், அந்த இரவின் எங்கள் நிலை தெரிய பிகோவின் ஓட்டம் மலையின் இருளில் தொடர்ந்தது.<br />
- பயணம் தொடரும்!<br />
<br />
****************************************************************************************************************<br />
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்<br />
<a href="http://www.rubakram.com/2017/03/vagamon.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்</span></b></a><br />
****************************************************************************************************************</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-25482422532514954902017-02-26T19:43:00.000+05:302017-03-08T21:15:45.870+05:30ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
பல நாட்களாக பிரபாகர், 'எங்காவது ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருக்க, ஆயுத பூஜை திங்கட் கிழமையில் அமைய, அந்த மூன்று நாட்கள் எங்காவது செல்வது என்று புதன் அன்று முடிவு செய்தோம். காரில் செல்வதால், மேலும் இருவர் வந்தால் செலவுச் சுமை சற்று குறையும் என்று நெருங்கிய நட்பு வட்டத்தில் ஆள் தேடினோம். பொறுப்பான குடும்பஸ்தர்கள் அழைப்பை மறுத்து விட, பிரபாகர் அவரது தம்பியும், எங்கள் அலுவலக நண்பரான ரெஜித்தும் வருவதாக சொன்னார். நன்கு பரிட்சயம் ஆகாதவர்களுடன் பயணம் செய்து ஏற்பட்ட சில கசப்பு அனுபவங்களை அவரிடம் சொல்லி சற்று தயக்கம் காட்டினேன். பிரபாகர் எனக்கு அளித்த உறுதியில் தயக்கத்துடனே சம்மதித்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயணத்தின் மிக முக்கிய கேள்வி, எங்கு செல்வது? காவிரி பிரச்னை உச்சக்கட்டத்தில் இருக்க, கர்நாடகம் தமிழர் புக முடியாத அந்நிய பூமியாக இருந்த சமயம் அது. ஆந்திரா செல்ல இருவருக்குமே பெரிய நாட்டம் இல்லை. நீங்கள் பதிவின் தலைப்பைக் கொண்டே இந்நேரம் இடத்தை யூகித்து இருப்பீர். ஆம், கேரளம் தான் நாங்கள் தேர்வு செய்த இலக்கு. சாலை மார்கமாக வெள்ளி மாலை சென்னையில் இருந்து தொடங்கி கேரளம் சென்று திங்கள் இரவு சென்னை திரும்பவேண்டும் என்பதை மட்டும் தான் தீர்மானித்தோம். அங்கு எங்கு செல்வது, எங்கு தங்குவது என்ற எந்த விதமான திட்டமும் வகுக்காமல் கார் போன போக்கில் முடிவு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். எந்த வித திட்டமும் வகுக்காமல் நான் சென்ற முதல் பயணம் இது என்பதனாலேயே இதை பதிவு செய்வதும் எனக்கு மிக அவசியமாக தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாப் பயணங்களிலும் கணக்கு பார்த்து செலவு செய்யும் பொறுப்பு எனது என்பதால், நான் கண்ட மிகப் பெரும் செலவு குடி நீராக இருந்தது. முந்தைய ஒரு பயணத்தில் 25 லிட்டர் குவளை தண்ணீர் சென்னையிலேயே வாங்கிச் சென்றதால் தண்ணீர் செலவு பெருமளவில் மிச்சமானது. இம்முறை சொந்தமாகவே ஒரு பத்து லிட்டர் மில்டன் குவளை ஒன்றை வாங்கிக் கொண்டேன். வெள்ளி மாலை அலுவலகத்தில் இருந்தே புறப்பட தீர்மானித்தோம். எந்த ஒரு பயணமானாலும் எவரேனும் கடைசி நிமிடத்தில் சுதப்பும் வழக்கம் இம்முறையும் நடந்தது. நால்வர் பயணம் மூவர் (நான், பிரபாகர் மற்றும் ரெஜித்) பயணமாக மாறியது. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில், புதிய பத்து லிட்டர் குவளையில் அலுவலக குளிர்ந்த நீரை நிரப்பிக் கொண்டு, பலவித கனிகள் மற்றும் நொறுக்குத் தீணிகளுடன், சிறுசேரியில் இருந்து கேரள தேசம் நோக்கி பிரபாகரின் பிகோ வில் எங்கள் பயணம் தொடங்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு மூவருமே கார் ஒட்டத் தெரிந்தவர்கள் (நானும் டிரைவர் தான் :)) என்பதால் மாறிமாறி ஓட்டும் பொறுப்பை ஏற்று பயண அலுப்பை குறைக்க திட்டமிட்டுக்கொண்டு, GST சாலையை செங்கல்பட்டு சுங்கச் சாவடி தாண்டி பிடிக்க, திருப்போரூர் வழியே சென்று, நெடுஞ்சாலையை அடைந்த பின் எங்கள் காரின் ஓட்டம் ஒரே சீராக அமைந்தது. சில பல குடும்ப சிக்கல்கள் காரணமாக இங்கு வண்டி சென்ற வேகத்தின் அளவு பதிவு செய்யப்பட மாட்டாது. திருச்சி, திண்டுக்கல், தேனீ வழியாக கம்பம் சென்று, கம்பத்தில் இரவு தங்கி மறுநாள் காலை கேரளா எல்லையை கடப்பது எங்கள் திட்டமாக இருந்தது. காரில் எறியதுமே பாட்டு போட்டுக்கொண்டு ,பாட்டுகளை மாற்றிக் கொண்டு போகும் வழக்கமான சாலை பயணமாக எங்களது பயணம் அமைய வில்லை. அலுவலக விஷயங்களில் பேசத் தொடங்கி அரசியல், சினிமா, விளையாட்டு, காதல் என பல கோணங்களில் எங்கள் உரையாடல் சுவாரசியமாக செல்ல, அந்த பாட்டுப் பெட்டியை சென்னை திரும்பும் வரை மூன்று நாட்களும் நாங்கள் பயன்படுத்தவே இல்லை என்பது எனக்கு இன்று நினைக்கும் பொழுது கூட ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்ல கூகுள் அம்மணியின் துணையை நாடினோம். திருச்சியில் ஓட்டுநர் பொறுப்பு என்னிடம் மாற, அந்த அம்மணி காட்டிய குறுக்கு வழி, காமராஜர் ஆட்சியில் போடப் பட்டு அதன் பிறகு காணாமல் போன அந்த சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையை பிடிப்பதற்குள் பெரும்பாடானது. 'பெண்பிள்ளைப் பின் செல்லாதே' என்று பெரியவர்கள் சொல்லியது எங்களுக்கு அங்கே உரைத்திருந்தால், மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கி இருக்கமாட்டோம். திண்டுக்கல் புறவழிக் சாலையை அடையும் பொழுது மணி பத்து. வழியில் இருந்த திண்டுக்கல் தலப்பாகட்டியில் இரவு உணவை முடித்து, மீண்டும் பிரபாகர் ஓட்டுநர் பொறுப்பேற்க, தேனீ நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இரவு வேளை மற்றும் பரிட்சயம் ஆகாத சாலை என்பதால் கூகுள் அம்மணியின் துணையை மீண்டும் நாட, சாலை நேரே விசாலமாக இருக்க, அவள் எங்களை மாற்றுப் பாதையில் திசை திருப்பி, தலையை சுற்றி மீண்டும் தேனீ சாலையில் எங்களைச் சேர்த்தாள். நடுச்சாமம் நெருங்கிக்கொண்டிருக்க, அன்று இரவு தேனீயிலேயே ஒய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் காலை கம்பம் நோக்கி தொடரலாம் என்று முடிவு செய்துகொண்டிருக்க, எதிரில் ஒரு பேருந்து சற்று வேகம் குறைக்க, எங்கள் பிகோவும் அதன் பின் நிற்க, அந்த காவல் சோதனைச் சாவடியில் இருந்த காவலர் எங்கள் வண்டியை ஓரம் நிறுத்த சைகை செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்களிடம் முறுக்கு மட்டுமே இருக்க, பயமின்றி காரை நிறுத்தினோம். அந்த அதிகாரி ஆவணங்களை கேட்க, எங்கள் முதல் சோதனை தொடங்கியது. வழக்கமாக இருக்கும் RC போல் இல்லாமல் தன்னிடம் ஸ்மார்ட் கார்ட் இருப்பதாக என்னிடம் பிரபாகர் முன் சொல்லிய நியாபகம், ஆனால் நான் அதைப் பார்த்தது இல்லை. டேஷ் போர்ட், அட்சய பாத்திரம் போல், கார் வாங்கிய முதல் மாதத்தில் இருந்து பல ரசீதுகளை எடுக்க எடுக்க சுரந்துக் கொண்டே இருந்தது. இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து ரசீதுகளையும் அலசிக் கொண்டு அந்த RC கார்டைத் தேட அந்த காவலர் சற்று பொறுமை இழக்கத் தொடங்கினார். பிரபாகர் எப்பொழுதும் காவலரிடம் எதற்கும் மாற்றுவதில்லை, இதுநாள் வரை அவர் அரசியல் பிரமுகர்கள் போல் கறுப்புத் திரையுடன் தான் தன் பிகோவை ஒட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது பொறாமைக்குரியது. நேரம் கடக்க கடக்க ரசீதுகள் குறைந்த பாடில்லாததால், எனக்கு அந்த கார்ட் காரில் இருக்கும் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கி, காவலரை எப்படி சமாளிப்பது என்ற எண்ண அலைகள் ஒடத் தொடங்கிய பொழுது, 'வெற்றி வெற்றி' என்று ஒரு வழியாக அந்தக் கார்டை அவர் கண்டெடுக்க, இருவரும் காரை விட்டு இறங்க, ரெஜித் காரில் இருந்த ஆரஞ்சு பழத் தோலை வெளியே எறிந்தபடி இறங்கினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்மார்ட் கார்டுக்கு கேள்வி எழும் என்று நான் நினைத்தேன், ஆனால் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு 'வண்டில சரக்கு இருக்கு தன' என்று வினவினார் அந்த சோதனைச் சாவடியின் உயர் காவல் அதிகாரி. மூவரும் உடனே மறுத்தோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நீங்களா சொல்லிட்டா நல்லது, நாங்க எடுத்தா பிரெச்சனை. உண்மையா சொல்லுங்க' என்று சற்று அதிகாரத்துடன் வினவினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'எங்க யாருக்கும் அந்த பழக்கமே இல்ல. நீங்க தாராளமா செக் பண்ணுங்க' என்றதும் ஒரு காவலர் கையில் டார்ச் உடன் காரை நோக்கி விரைந்தார். கதவை திறந்தவுடன் வந்த வாசனை அவர் மூளைக்கு தீணி போட, 'நல்லா வாசனை வருது, உண்மையா சொல்லிடுங்க, வண்டிய ஸ்டேஷன்கு கொண்டுபோன நீங்க தான் மாட்டுவீங்க' என்று கடுகடுத்த முகத்துடன் கூறினார் அந்தக் காவலர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் மடியில் கனமில்லை அதனால் பயமுமில்லை, சிரித்துக் கொண்டே ' அது ஆரஞ்சு பழம் வாசனை' என்றேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் அதை நம்பும் மனநிலையில் இல்லாததால் தன் சோதனையை தொடர்ந்தார். மூளை முடுக்குகள், சீட் அடி என எல்லா இடத்திலும் அலசியும் எதுவும் சிக்காத கோவத்தில், எங்கள் தண்ணீர் குவளையையும் திறந்து குடித்து பார்த்தார். மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த அவர், 'இந்த ஆளு இறங்கறப்பவே பாட்டிலை வெளியே போட்டார் சார்' என்று ரெஜித் மீது குற்றம் சாற்றி விட்டு, சாலையின் ஓரம் இருந்த குப்பைகளை டார்ச் அடித்து ஆராய்ந்தார். நாங்கள் உயர் அதிகாரியிடம் அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று விளக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அந்த போலீஸ்க்கார் வேறு எதாவது பாட்டிலை கொண்டுவந்து எங்கள் மீது திணிப்பாரோ என்ற பயமும் உறுத்திக்கொண்டே இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாலையில் எதுவும் சிக்காமல் மீண்டும் கார் டிக்கியை நோக்கி வந்து, எங்கள் துணிப்பையினுள் கையை விட்டு துராவிய அவருக்கு எங்கள் உள்ளாடைகள் தான் சிக்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வண்டியை ஸ்டேஷன் கொண்டு போயிடலாம் சார்' என்று கோவமாக சொல்லிவிட்டு அடுத்த காரை மடக்கச் சென்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுது அந்த உயர் அதிகாரி எங்களை விசாரிக்கக் தொடங்கினார். 'கார் யாருடையது ?' , 'எங்க வேலை பார்க்கறீங்க ?' ' எங்க இருந்து வரீங்க' 'எங்க போறீங்க', இப்படியே 'இன்சூரன்ஸ், RC , லைசென்ஸ்' என்று அவர் கேட்டது எல்லாம் நாங்கள் சரியாக கொடுக்க மண்டைடை சற்று சொறிந்துவிட்டு, அவர் 'பொல்லுஷன் ' என்றவுடன் நாங்கள் 'ழே' என முழித்ததைக் கண்டு அவர் முகம் பிரகாசமானது. சாமி படத்தில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சி தான் நினைவிற்கு வந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இதற்குத் தானே ஆசை பட்டிங்க போலீஸ்க்கார் ' என்று என்னுள் எண்ணிப் புன்னைகைத்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வெய்யில் பணில வேல பார்க்குறோம் நைட் டியூட்டி வேற, சுற்றுலா போறீங்க , ஏதாவது கொடுத்துட்டு போங்க' என்று இளகிய குரலில், 'டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் சார், ஏதாச்சு பார்த்து கொடுங்க' என்ற உள்ளதை அள்ளித்தா படத்தின் வசனம் தோனியில் கேட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகில் நான் கண்ட பல விசித்திர மனிதர்களுள் ஒருவர் தான் ரெஜித். இவரிடம் ஒரு நிமிடத்திற்கு மேல் யார் பேசினாலும் , அவர்களை தன் புன்னகை கலந்த சர்க்கரை பேச்சில் வசீகரித்து, நட்பு வலையில் சிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர். எங்கள் பயணத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக, ஒரு மலையாளம் அறிந்த லோக்கல் கையாக அவர் செய்த செயல்கள் அடுத்த பதிவுகளில் ஏறாளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் மூவரில் மூத்தவராக அவர் விளங்க, அந்த உயர் அதிகாரியிடம் கை கொடுப்பது போல் சில காந்தி நோட்டுகளை கை மாற்றினார். ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொண்டு காரை நோக்கி வந்த பொழுது, தாண்ணீர் குவளையின் குழாய் சரியாக மூடாததால் தண்ணீர் பின் சீட் முழுவதும் சிந்தி இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் பயணம் சிறப்பாக அமைய காவல் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்தி விட்டு, தேனீயை நோக்கி நாங்கள் தொடரும் பொழுது மணி 12:45. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: right;">
பயணம் தொடரும்! </div>
<div style="text-align: justify;">
<br />
******************************************************************************************************************<br />
அடுத்த தொடர் பகுதியை படிக்க இங்கு செல்லவும்<br />
<a href="http://www.rubakram.com/2017/03/parunthumpara.html" target="_blank"><b><span style="color: blue;">ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா</span></b></a><br />
<br />
******************************************************************************************************************</div>
<div style="text-align: justify;">
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-29430975038376037652015-11-16T00:00:00.000+05:302015-11-16T00:00:19.400+05:30வலி (சிறுகதை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த அரியாபாக்கியம் என்றோ அல்லது துரதிஷ்டம் என்றோ சொல்ல முடியாத ஒரு நிகழ்வு எனக்கு நேர்ந்தது. அந்தச் செய்தியை கேட்டு, நள்ளிரவில் தனியாக காட்டு வழியில் செல்லும் வண்டியின் இரு சக்கரத்திலும் காற்று போனது போல், எனது வாழ்க்கை அந்த நொடி ஸ்தம்பித்துப் போனது. பலரும் தவமாய் தவமிருந்து பெரும் அந்த வரம் எனக்கு சாபமாகவே வந்தது. எனது பெற்றோர், கணவர் உற்றார் உறவினர் அனைவரின் முன்பு என் இதழ்கள் போலியாக புன்னகை செய்ய உள்ளம் என் நிலையைக் கண்டு குமுற, 'நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன். இப்போது நீங்களே அதை யூகித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். நான் கருத்தரித்துள்ளேன். என்னை நீங்கள் திமிரு பிடித்தவள் என்று எண்ணியிருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை. உங்கள் கோணம் அது, என் கோணம் வேறு. <br />
<br />
பெண்களை படிதாண்ட விடாத ஒரு சமூகத்தில் பிறந்தாலும், பெற்றோரின் துணையுடன், பள்ளி கல்வியில் எங்கள் ஊர் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். நான் பெற்ற மதிப்பெண்களுக்கு சென்னையில் முன்னிலை கல்லூரிகளில் நுழைய வாய்ப்பு கிட்டியபோதும், எனது சமூகத்தை எதிர்த்து என்னால் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் கல்லூரி வரை தான் செல்ல முடிந்தது. நான் பேருந்து ஏறி தினமும் கல்லூரி செல்வதைக் கண்டு பொறுக்க முடியாத என் உறவெனக் கூறிக் கொள்ளும் பலர் எனது படிப்பை நிறுத்தும்படி என் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். என் பிடிவாதத்தால் மட்டுமே, நான்கு ஆண்டுகள் நீடித்தது என் கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் பொழுதே ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியும் கிட்டியது. பணியிடம் சென்னை. வீட்டில் ஒரு பிரளயம் வெடித்தது.<br />
<br />
சினந்தேன், சினுங்கினேன், உருகினேன், அழுதேன், கெஞ்சினேன், கதறினேன். எது பலித்தது என்று தெரியாது, என் அன்னை எனக்கு துணை நிற்க பெரிய கனவுக் கோட்டைகளுடன் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னை என்னை ஏமாற்றவில்லை. என் ஏக்கங்களை தீர்த்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்தேன், பல கதைகளை கேட்டேன், நான் இழந்த பருவங்களை எண்ணி வருந்தினேன். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் சகல சந்தோஷங்களுக்கு வாயில் கதவு திறந்தே இருந்தபோதும் ஒரு கணமும் என் நிதானத்தை இழக்கவில்லை நான். அயாரது உழைத்தாலும், பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் என்று முகத்தில் அறையாத குறையுடன் அந்த கார்ப்பரேட் சமூகம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.<br />
<br />
பல அடிகள் பட்டு, ஒருவழியாக பணியில் முன்னேறும் தருணம் வந்தபொழுது, வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சென்னையின் எனது சுதந்திர வாழ்க்கைக்கு முடிவு கட்ட. சில விஷயங்களில் என்னைப் போல் அதிஷ்டக்காரி யாரும் இல்லை. ஏன் தெரியுமா?. சொல்கிறேன். பல மாதங்கள் பல ஆண்டுகளா மாப்பிள்ளைத் தேடியும் வரன் அமையாமல் பலர் தவிக்க, எனக்கு மட்டும் முதல் வரனே கைகூடியது உங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் தானே.<br />
<br />
திருமணத்திற்கு முன்னரே வேலை விட வேண்டி எனது புகுப்போகும் வீட்டார் கட்டளையிட எனது தந்தை அடிபணிந்தார். இது நான் எதிர்பார்த்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. இருப்பினும் ஒரே ஆறுதல் தந்த விசயம் என்னை மணக்கப் போகும் அவர் பணிபுரியும் அயல் நாட்டிற்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தது தான். கல்யாணம் மற்றும் எல்லாச் சடங்குகளும் என் மாமியாருக்கு பல குறைகளுடன் முடிய, திருமணமாகி இரண்டாம் வாரம் என்னைப் பின் வரச்சொல்லி விட்டு என் கணவர் பறந்து சென்றார்.<br />
<br />
சென்னையில் எனக்கு கிடைத்த நடப்புகளைக் கொண்டு எனது வீசா ஏற்பாடுகளை விரைந்து செய்தேன். வீசா நேர்காணலையும் சிக்கலற்று முடித்துவிட்ட மகிழ்ச்சியுடன் மருத்துவ சோதனைக்கு சென்ற பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு கிடைத்தது. கருவுடன் விமானம் ஏற மருத்துவம் பச்சை கொடி காட்டினாலும், வீசா தர அந்த நாடு மறுத்தது. என்னை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், 'கல்யாணம், குழந்தை என்ன வாழ்க்கை இது' என்ற எனது வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றியது. </div>
<div style="text-align: justify;">
<br />
கருவுற்று கணவனைப் பிரிந்து தனிமையில் போராடுவதன் வலி எனக்கு புரிந்தது அந்த ஆரம்ப காலங்களில் தான். நீங்கள் மாமியார் கொடுமைகள் பற்றி பல கதைகள் படித்திருபீர், பல தொடர்கள் பார்த்திருப்பீர் ஆனால் அவற்றில் ஒன்றிலும் ஒவ்வாத சம்பவங்கள் தான் எனக்கு அவர் வீட்டில் நடந்தது. எனக்கு பிறக்கப் போவது நிச்சயம் பெயரன் தான் என்று எதோ ஒரு நிமித்தக்காரன் மூலம் முடிவு செய்து கொண்ட என் மாமியார், என்னைக் கையில் வைத்து தாங்கத் தொடங்கினார். இதைப்போய் கொடுமை என்று சொல்லுகிறாயே உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று தானே நினைக்கின்றீர். அளவுக்கு மீறும் போது அன்பும் கொடுமையாகத் தான் மாறியது எனது விஷயத்தில். என்ன புரியலையா?. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம் தெரியுமா?. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னால் இதேக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் 'எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் தான் தெரியும்' என்று சொல்லியிருப்பேன்.<br />
<br />
முட்டை வாசனை என்றாலே பக்கத்து தெரு வரை ஓடும் எனக்கு, பெயரன் வளமுடன் பிறக்க வேண்டும் என்று சகல உயிரினங்கள் மற்றும் தாவரங்களை சமைத்து தினமும் விருந்தளித்தார் என் மாமியார். அந்த அப்பாவி ஆட்டின் எந்த பகுதியையும் உண்ணாமல் விடுவதில்லையா நீங்கள்?. முதல் முறை அந்த மார்கண்டத்தை பற்றி உண்ட பின் தான் அறிந்தேன், உடனே வாந்தியும் எடுத்தேன். பேறு கால வாந்தி என்று அவரே முடிவு செய்து மீண்டும் அதை என் வாயில் திணித்தார் என் கணவரின் அன்பு அன்னை. என் நடையில் தப்பு, அமர்வதில் திருத்தம், படுப்பதில் கவனம் என்று ஒன்றல்ல ரெண்டல்ல அடுக்கிக்கொண்டே போகலாம் அவர் தன் பெயரன் பால் செய்த அன்புத் தொல்லைகளை. <br />
<br />
உனக்கு எதிலும் குறைகள் தானா சந்தோஷம் என்பதே கிடையாதா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ண அலைகளை என்னால் உணரமுடிகின்றது. என் வயற்றில் இருந்த குழந்தையை, கருப்பு வெள்ளை படமாக கணினி திரையில் மெல்ல அசையக் கண்ட போது எனக்கு கிட்டிய இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. பத்து நாள் தவிர்த்து, கைபேசியில் மட்டுமே கண்ட கணவன், கணவன் இல்லாது மாமியார் வீட்டில் சிறை, என சிதைந்து போன எனது கனவுக் கோட்டைகளை எண்ணி கண்ணீர் பெருகிய பொழுது, 'உனக்கு நான் இருக்கிறேன்' என்பது போல, என் செல்வம் என்னை முதன்முறை வயிற்றில் உதைத்து சைகையால் உணர்த்தினான். அதன்பின் எப்பொழுதெல்லாம் என் மனம் கணக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் உதைத்தான். இப்படியே இன்பமும் துன்பமும் ஒரு சேர கலந்தோடி ஏழு மாதங்கள் கடந்து, யாரும் எதிர் பாராத ஒரு சிக்கல் உருவானது. <br />
<br />
தலை பிரசவத்திற்கு என்னைத் தாய் வீடு அழைத்துச் செல்ல வந்த என் பெற்றோரை, 'அனுப்ப முடியாது' என்று விரட்டி அடித்தார் என் மாமியார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். அவரது பெயரன் நலமுடன் உலகில் அடியெடுக்கும் வரை என்னை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இரு தரப்பினருக்கும் சண்டை வலுத்து, ஊர் பஞ்சாயத்து வரை சென்று, இறுதியில் நான் பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. இதில் வேடிக்கை என்னவென்றால், என் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளிலும் கடைசி வரை யாருமே என் விருப்பத்தை கேட்டதில்லை. என் மாமியாரின் அன்புதொல்லைக்கும் என் பெற்றோரின் சுய மரியாதைப் போருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானவள் நான். <br />
<br />
தாய் வீட்டில் சுகந்திரத்துடன் இருந்தாலும், கர்ப காலத்தின் இறுதி சில வாரங்களில் உடல் எடை கூடி உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல், மிக மெதுவாக நாட்கள் சென்று ஒரு வழியாக மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கியது. பொதுவாக அனைவருக்கும் குறித்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வலி வரும் என்பர், எனக்கு என் மாமியார் உருவில் சுனாமியே வந்தது. அவர் என் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி, வீட்டில் யாரும் யாருடனும் பேசாமல் இருந்த அந்த இரண்டு நாட்கள் நரகம். என் அம்மா ஒன்று சொன்னால் வீம்பிற்கு என்றே இவர் அதற்கு முரணாக ஒன்று சொல்வார். இவர்கள் சண்டையில் எனக்கு மனவேதனை வந்ததே ஒழிய, வரவேண்டிய வலி வரவில்லை. குறித்த தேதி இன்று, மாலை வரை வலி வராததால் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். மருத்துவர் வலி வர சற்று நேரம் காத்திருக்க வைத்த நேரத்தில், 'என்னிடமே இருந்திருந்தால் இந்நேரம் என் பெயரன் அழும் சத்தம் கேட்டிருக்கும்' என்று என் மாமியார் தொடங்கிய வாசகம், என் அன்னைக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதத்தை கிளறியது. என்ன கொடுமை இது இறைவா! என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா?. இல்லை, வேண்டாம். இந்த வாசகங்கள் கேட்காதபடி உன் கருணையால் என்னைச் சில நாட்கள் செவிடாக்கி விடு. </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-69687054635955941312015-11-14T12:47:00.003+05:302015-11-14T12:47:52.501+05:30அவன் (சிறுகதை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் எப்பொழுது வட சென்னை சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல் தென் சென்னையில் இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை. ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பர்மா பஜாருக்கு அருகில் அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல் பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா?' என்று தொடுத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் 'ஆம்' என்றேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'எந்த தெரு' என்று கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ?' என்று வினவினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்?' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்? என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள் கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
மறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே', </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் 'ஹும்ம்', </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் 'வீடு எதாவது இருக்கா?' </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா? என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-18559596196102996472015-03-27T18:36:00.001+05:302015-03-27T18:40:13.740+05:30தேன் மிட்டாய் - மார்ச் 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<strong><span style="color: red;">விளம்பரப் பலகைகள் </span></strong></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<span style="color: black;">மார்ச் மாதம் சில பரபலங்களின் அவதாரத் திருநாள் கொண்டாட்டங்களால் சென்னையின் சிங்காரம், பல அரசியல் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகளால் மெருகேறியிருந்தது. முக்கிய சாலைகளில் தொடங்கி, அந்தத் தெருவில் வசிக்கும் மக்கள் தவிர்த்து மற்றவர்கள் செல்லாத முட்டுச் சந்துகள் வரை விளம்பரப் பலகைகள் நிரம்பி வழிந்தன. தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டி மக்கள் முன்னேற்றத்தில் அன்றி விளம்பரப் பலகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவில் காணப்பட்டது. சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் சுமார் இருநூறு மீட்டர் தூரத்திற்கு நீண்ட விளம்பரப் பலகை ஒன்று என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இவற்றை அகற்ற டிராபிக் ராமசாமி என்று ஒரு முதியவர் போராடி, சிறை சென்று திரும்பியது எத்தனை பேருக்கு தெரியும் ? </span></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<span style="color: black;"><br /></span></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px;">
<div style="text-align: justify;">
<strong><span style="color: red;">இலவசப் பயணம் </span></strong></div>
<div style="color: #3366ff; text-align: justify;">
<br style="color: black;" /></div>
<div style="color: #3366ff; text-align: justify;">
<span style="color: black;">ஒரு சனிக்கிழமை, அலுவலகம் முடித்து விட்டு, என் கிராமத்திற்குச் செல்ல, அலுவலக வாசலில் பேருந்து வரக் காத்திருந்தேன். பங்குனி வெய்யிலில் இனி தாங்காது என்று, இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்க தொடங்கினேன். யமஹா fz இல், ஆஜானுபாகமான உடலுடன் ஒருத்தன் என் விண்ணப்ப சைகைக்கு இசைந்து வண்டியை நிறுத்த நானும் அவன் வண்டியில் ஏறிக் கொண்டேன். OMR சாலையை அடைந்தவுடன் நான் செல்லுமிடம் சோழிங்கநல்லூர் என்று அறிந்தவுடன் அங்கேயே என்னை விடுவதாக அவன் கூற, பேருந்தை முந்தி விரைவாக சென்று விடலாம் என்று நானும் அவனுடனே பயணித்தேன். </span></div>
<div style="color: #3366ff; text-align: justify;">
<br style="color: black;" /></div>
<div style="color: #3366ff; text-align: justify;">
<span style="color: black;">ஐந்து நிமிட பயணத்திற்கு பின் அவன் கைபேசி ஒலிக்க, தன் இடக் கையால் அதை எடுத்து பேச முயன்றான். சரியாக கேட்காததால் அழைப்பை துண்டித்தான். மீண்டும் ஒலிக்க, இடக்கையில் கைபேசியை காதின் மேல் சாய்த்துக் கொண்டு, ஒற்றைக் கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே பேசினான். சீருந்தில் ஓட்டுனர் கைபேசி பயன்படுத்தினாலே ஆபத்து, இவனோ இரு சக்கர வண்டியில் ஒற்றைக் கையில் மிகவும் சாதரணமாக கைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை செலுத்த என்னுள் திகில் கிளம்பியது. 'வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்க' என்று நான் சொல்லிய பொழுது அவன் யானைக் கண்கள் வீசிய அனல் பார்வை அவன் தோற்றத்தை மேலும் கொடூரமாக்கியது. சோழிங்கநல்லூர் வந்தவுடன் வேகமாக இறங்கி சாலையைக் கடந்து ECR நோக்கி நடந்தேன், இல்லை ஓடினேன் என்றே சொல்லலாம். </span></div>
<span style="color: black;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="color: black;"><span style="font-size: 13.3333330154419px;"> </span></span></div>
<span style="color: black;">
</span></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<strong><span style="color: red;">மகளிர் மட்டும் </span></strong></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br style="color: black;" /></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<span style="color: black;">ஐந்து நிமிடம் தான் ECR சாலையில் காத்திருந்தேன் என்றாலும், சோழிங்கநல்லூர் சந்திப்பில் அக்கரைபேருந்து நிறுத்தத்தில் நிழழ்குடை இல்லாததாலும் நிழல் தர ஒரு மரமும் இல்லா</span><span style="color: black; font-size: 13.3333330154419px;">ததாலு</span><span style="color: black; font-size: 13.3333330154419px;">ம், சில வினாடிகளில் சூரியக் கதிர்கள் என் உடலில் ஊடுருவி என்னை வியர்வையில் குளிக்கச் செய்தன. பேருந்து வந்தவுடன் அடித்து பிடித்து முதல் ஆளாக ஏறி, கண்ணில் முதலில் பட்ட ஒரு காலி இருக்கையை நோக்கிச் சென்று, என் மூட்டை முடிச்சிகளை மேலே வைத்து விட்டு அந்த இடத்தில அமர ஆயத்தமானேன். அந்த காலி இருக்கை சாளரத்தின் அருகில் இருக்கவே, அதற்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சற்று நகர்ந்து வழி விடச் சொன்னேன். ஆனால் அவரோ, சிறிதும் அசையாமல் 'லேடீஸ் வராங்க அவங்க ஒட்காருவாங்க' என்றார் . கோபம் என் தலைக்கேறி 'இங்க லேடீஸ் சீட்னு எங்கயும் எழுதி இல்லையே' என்று கடிந்தேன். சற்றும் தன் நிலையில் இருந்து மாறாமல் 'லேடீஸ் இருந்தா லேடீஸ் தான் பக்கத்துல உட்காருவாங்க' என்றார். சூரியக் கதிர்களின் உஷ்னத்தை விட பல மடங்கு எனக்குள் கோப ஜுவாலை எரிந்தாலும், சண்டைப் பிடித்து அந்தப் பெண் அருகில் அமர்ந்து எனது பயணத்தை சங்கடத்துடன் தொடர உடன்பாடு இன்றி, அமைதியாக பின்னே வந்த பெண்மணிக்கு வழி விட்டு நகர்ந்தேன். </span><span style="color: black; font-size: 10pt;">இந்த சம்பாஷனைகள் நடந்து முடிவதற்குள் மீதம் இருந்த காலி இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்துவிட, டிக்கெட் கொடுக்கும் பொழுது நடத்துனர் என்னிடம் மாமல்லபுரத்தில் இடம் காலியாகும் என்று ஆறுதல் அளித்தார். </span></div>
<div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br style="color: black;" /></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<span style="color: black;">அந்த பெண்மணியின் வயது எப்படியும் அறுபதிற்கு அருகில் இருக்கும். அவரது பெயரன் போல் இருக்கும் என்னை அவர் அருகில் அமர விடாமல் தடுத்தது எது. பெண்களுக்கே உண்டான பண்புகளா அல்லது இந்த சமுதாயமா? இந்த ஒன்று மட்டும் எப்பொழுதும் எனக்கு விளங்குவது இல்லை. மாநகரப் பேருந்தில் பெண்கள் எந்த இருக்கையில் அமர்ந்தாலும் அமைதியாகப் போகும் ஆண்கள் ஒரு புறம் இருக்க. பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடது புற வரிசையில் எப்பொழுதும் பெண்களே அமர்ந்தாலும், பேருந்தின் பின் புறம் இருக்கும் ஒற்றை வரிசையில் ஒரு ஆண் மகன் உட்கார்ந்தாலே சண்டை பிடிக்கும் சில பெண்களும் உண்டு. அப்படி அவர்கள் சண்டை பிடிக்கும் அதே நேரத்தில் ஆண்கள் வரிசையில் சில பெண்களும் அமர்ந்திருப்பதை ஒரு பொருட்டாக மதியாதது தான் விந்தையிலும் விந்தை. அதை என்றுமே எந்த ஆணும் சட்டை செய்வதில்லை. ஆண்கள் இந்த விஷயத்தில் நிச்சயம் தியாகச் செம்மல்கள் தான். </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px;"><br /></span></div>
</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<strong><span style="color: red;">பொதுக்கூட்டம் </span></strong></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br style="color: black;" /></div>
<div style="color: #3366ff; font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<span style="color: black;">கிராமத்திற்கு போகும்போது தான் இப்படி ஒரு கசப்பான அனுபவம் என்றால், சென்னை திரும்புகையில் அதுக்கும் மேல் ஒரு அனுபவம் கிடைத்தது. பொதுவாக, சோழிங்கநல்லூர் ECR இல் இறங்கி, பழைய எண் 'C 51'/ புதிய எண் '99' கொண்ட வழித்தடப் பேருந்தில் பயணம் செய்தால் நாற்பது நிமிடங்களில் தாம்பரம் சென்றடையலாம். க்ளோபல் ஹாஸ்பிடல் வரை தடையின்றி வந்தப் பேருந்து அதன் பின் ஆமை வேகத்தில் சாலையில் ஊரத் தொடங்கியது. எந்த நேரத்திலும் போக்குவரத்து பெரிதும் தடைப்படாமல், வாகனங்கள் ஒரே சீராக செல்லும் இந்தச் சாலையில், இந்த எதிர்பாரத நெரிசலின் காரணம், மேடவாக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு அரசியல் கூட்டம் என்ற செய்தி காற்றில் வேகமாக பரவியது. பத்து நிமிடங்களில் கடக்க வேண்டிய மேடவாக்கத்தை கடக்க அன்று எழுபத்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகின. பேருந்தில் அமர இடமும் இன்றி, ஜன சமுத்திரத்தில் பலரின் வியர்வையில் முக்க, அது ஒரு துக்க அனுபவமாகவே மாறியது. அந்த அரசியல் கட்சியின் மீது இங்கு எழுத முடியாத பல தகாத வார்த்தை அம்புகளை எய்தும் என் கோபம் தணியவில்லை. </span><br />
<span style="color: black;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji7xqr-2Z7Bgu_90rmvUBqeugREK8_qM26pGVXg0Ig6Mim43k9qVKr4zQdgBOUiMQoe_AgcmINQaK13VqTEK4eN-CFD7GqHg1tV127P6HENl9kf-U1PtApWc9DSzhyphenhyphenlEjd159MzAAs5Dg/s1600/20150309_201918.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji7xqr-2Z7Bgu_90rmvUBqeugREK8_qM26pGVXg0Ig6Mim43k9qVKr4zQdgBOUiMQoe_AgcmINQaK13VqTEK4eN-CFD7GqHg1tV127P6HENl9kf-U1PtApWc9DSzhyphenhyphenlEjd159MzAAs5Dg/s1600/20150309_201918.jpg" height="480" width="640" /></a></div>
<span style="color: black;"><br /></span>
<span style="color: black;"><br /></span>
<span style="color: black;">பேருந்து சாலையில் அந்தப் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை கடந்த பொழுது, அந்த மேடையில் ஏறி 'கூட்டம் போட பல காலி இடங்கள் இருக்க, இப்படி நடு ரோட்ல....' என்று அவர்கள் சட்டையை பிடித்து பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அப்படி கேட்டால் ஏற்படும் பின் விளைவுகளை உன்னால் சம்மாளிக்க முடியுமா என்று என் மூளை என்னைக் கேட்க, ஆத்திரத்தை அடிமைத் தனம் வென்றது. பணம் கொடுத்து கூட்டம் கூட்டி பேசினாலும், அன்று அந்த போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் மட்டும் தான் சம்பாதித்தோம் என்பதை அந்தக் கட்சி உணருவதெப்போது? </span> </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-32229096240789268452015-03-21T04:53:00.001+05:302015-03-21T05:40:11.885+05:30Sunrise at Broken Bridge, Besant nagar <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
பல நாட்களுக்கு முன், <span style="color: #351c75;"><b>'<a href="http://www.listchallenges.com/100-things-to-do-in-chennai" target="_blank">சென்னையில் செய்ய வேண்டிய நூறு விஷயங்கள்</a>'</b></span> என்று இணைப்பில் வந்த ஒரு பட்டியல், நான் செய்த பலவற்றின் நினைவுகளைத் தூண்டினாலும், செய்யாத சில வற்றின் மீது என் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பட்டியலில் நான் செய்யாதவற்றில் ஒன்றான, பெசன்ட் நகரில் இருக்கும் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் சூரியோதயத்தை ரசிப்பது. இந்த எண்ணம் பல நாட்களாக ஆழ் மனதில் பதிந்துகிடக்க, மிக சமீபத்தில் அரங்கேறியது.</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
ஒரு நாள் நடுநிசியில் அலுவல் முடிந்து வீடு திரும்பும் பொழுது, மறுநாள் விடியல் ப்ரோக்கன் ப்ரிட்ஜில் என்ற தீர்மானத்துடன் நித்ரா தேவியை அடைந்தேன். வேலை நேர ஒழுங்கற்ற IT துறையில், தாமதமாக படுத்து அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கவே, அடுத்த நாள் ஐந்து மணிக்கெல்லாம் என் ஸ்ப்ளென்டரில் பெசன்ட் நகர் நோக்கிய பயணத்தை தொடங்கினேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் நண்பன், கன்யா குமரியில் நடுக்கடலில் இருந்து சூரியன் உதிக்கும் இயற்கையின் விந்தையைக் காண ஆவலுடன் அழைத்துச் சென்றதும், மேகக் கூட்டங்கள் வில்லன் போல் வந்து, நடுவானம் வரும் வரை சூரியனை மறைத்து வைத்து எங்களுடன் விளையாடிய கண்ணாம் பூச்சி ஆட்டத்தின் நினைவுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே, பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையை அடைந்தேன். </div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
கடற்கரை மணலை அடைந்தும், மேலும் செல்லுமாறு கூகுள் அம்மணி வழி காட்ட, அங்கு மணல் தவிர சாலை ஏதும் கண்ணில் படாததால், அருகில் தன் வழக்கமான அதிகாலை நடை பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடையவரை வழி கேட்டேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு கூகுள் அம்மணி காட்டிய வழியை நோக்கி நடக்க, 'இவரும் என்னுடன் வருவாரோ?' என்ற எனது சந்தேகம் அடுத்த வினாடி அவர் செல்லும் பாதையை சுட்டி காட்டி விட்டு, தன் நடை பயிற்சியை தொடர திரும்பிய பொழுது தீர்ந்தது. மேலும் அங்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் தன் பெயரை சொல்லும்படி கூறிவிட்டு, பெருமிதத்துடன் விடைபெற்றார். 'என்ன பிரச்சனை வந்து விடும்' என்று எண்ணிக் கொண்டே அவர் சொல்லிய அந்தப் பாதையை தொடர்ந்தேன். தெருவிளக்குகள் இல்லாத ஒரு மணல் சாலையில் எனது ஸ்ப்ளென்டரின் மங்கிய ஒளி வழிகாட்ட, சாலையின் நடுவே கடலை நோக்கி ஓடிய கழிவு நீர் கால்வாய்களை பற்றி அந்த வழி காட்டியவர் எச்சரித்தால், கழிவு நீர் மேலே அடிக்காமல் நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டு இலக்கை நோக்கிச் சென்றேன். </div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
அந்த கும் இருட்டில் இரு புறமும் புதர்கள் இருக்க, எதிரே ஒரு சின்ன கான்க்ரீட் பாலம் தென்பட, நான் வண்டியை நிறுத்தவும் கூகுள் அம்மணி 'You have reached your destination' என்று உறைக்கவும் சரியாக இருந்தது. வண்டியை பூட்டி விட்டு, மணலில் இருந்து இரண்டு அடி மேலே இருந்த அந்த பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினேன். மை இருட்டு நிலவிய அந்த அதிகாலை வேளையில், என்னைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதது, எனக்குள் கிலியை கிளப்பினாலும், மன உறுதியுடன் நடந்தேன். இரண்டு நிமிட நடையில் அந்த பாலம் உடைந்து கிடந்த இடத்தை அடைந்தேன். இயற்கையாகவே, சில நிமிடங்கள் இருட்டில் இருந்தால் பார்க்கும் சக்தி பெரும் மனிதக் கண்களுக்கு, அங்கு இருந்த நிலவொளியும் உதவ, அடுத்த முனைக்கும் இந்த முனைக்கும் இடையில் தண்ணீர் ஓடுவதை காண முடிந்தது. அப்பொழுது மணி 5 35. அருகில் இருந்த அடுக்கு மாடிகளின் பிம்பத்தை சந்திரன் அடையாறு நதியில் பிரதிபலித்த அந்த அற்புதக் காட்சியை அந்த வீடுகளில் உறங்கிக் கொண்டிருப்பவர் அறிவரோ? <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0b3UlO_h5YgKtl5cijXFhhnshCUrZF5qa4VONP48j_lUScp3EUy4DPMz1WEeXz7-NcRp9sYIl0mUFfuK_wGRl00urLjDlLSuOKdIaug-slodEZ4swuoQXNs81FoJ70GTU9KY8JnKcdcg/s1600/20150306_060652.jpg" imageanchor="1" style="font-size: 13.3333330154419px; margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0b3UlO_h5YgKtl5cijXFhhnshCUrZF5qa4VONP48j_lUScp3EUy4DPMz1WEeXz7-NcRp9sYIl0mUFfuK_wGRl00urLjDlLSuOKdIaug-slodEZ4swuoQXNs81FoJ70GTU9KY8JnKcdcg/s1600/20150306_060652.jpg" height="240" width="320" /></a></div>
</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
நேரம் கடந்தபோதும் சூரியன் உதயமாவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால், அன்று கதிரவன் உதயமாகும் நேரத்தை கைபேசியில் இணையத்தின் <span style="font-size: 13.3333330154419px;">உதவியுடன் </span> ஆராய்ந்த சமயம் இந்த <span style="font-size: 13.3333330154419px;">ப்ரோக்கன் </span>ப்ரிட்ஜின் வரலாற்றையும் ஆராயத் தொடங்கினேன். அச்சமயம் எனக்கு கிடைத்த சில தகவல்கள் தனிமையில் இருளில் இருந்த எனக்கு மேலும் பீதியை கிளப்பியது. 1960களில், எலியட்ஸ் கடற்கரை முதல் சாந்தோம் வரை செல்லும் மீனவர்கள் போக்குவரத்திற்கு அனுகூலமாக, அடையாறு முகத்துவாரத்தின் மேல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி 1977 இல் அடையாறு நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சேதமடைந்து, பழுது பார்க்கப்படமால் போகவே இந்த '<span style="font-size: 13.3333330154419px;">ப்ரோக்கன்</span> பிரிட்ஜ்' உருவானது. காலப்போக்கில், ஆதவனின் பார்வை இருக்கும் போதும் சினிமா படம் பிடிக்கும் இடமாகவும், அவன் பார்வை மறைந்த பின் பல சட்டத்துக்குமாறான செயல்களின் மையமாகவும் செயல்படுவதான தகவல்கள் இருந்தன. வழிகாட்டியின் எச்சரிக்கைக்கான காரணம் விளங்கும் வேளையில், அந்த இடத்தில அமானுஷ்ய சக்திகள் இயங்குவாதாக அந்த வட்டார மக்கள் சொல்வதுண்டு என்ற செய்தி என்னுள் திகில் உண்டாக்க, இப்படிப்பட்ட இடத்தில் எனது ஸ்பளென்டர் நிறுத்திய இடத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுந்தது. <br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp7iSvyrol0Rh1gEXLPOsvvKbd_WNFaNHnKdW_YI-LhM3CSW-pEXph0y2vrqzLn-lA6-kKZmJC-zDFfbfMfjQaz-S2ckTcFEFm5OLtk4eM15lpte-AAs35iGvC3WNXt8zk8_DLF4KIb0U/s1600/20150306_060825.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp7iSvyrol0Rh1gEXLPOsvvKbd_WNFaNHnKdW_YI-LhM3CSW-pEXph0y2vrqzLn-lA6-kKZmJC-zDFfbfMfjQaz-S2ckTcFEFm5OLtk4eM15lpte-AAs35iGvC3WNXt8zk8_DLF4KIb0U/s1600/20150306_060825.jpg" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: 13.3333330154419px; text-align: justify;">ப்ரோக்கன்</span><span style="font-size: 13.3333330154419px; text-align: justify;"> பிரிட்ஜ்</span></td></tr>
</tbody></table>
</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
பாலம் உடைந்த இடத்தில இருந்த நான், பாலத்தின் தொடக்கத்தை நோக்கி அந்த இருளில் விரைந்தேன். பாலத்தை நோக்கி வந்த ஒரு இருசக்கர வண்டி, சட்டென்று கடற்கரை பக்கம் திரும்ப எனது பயம் அதிகரித்தது. சந்திர ஒளியில் என் வண்டியின் கண்ணாடி மின்ன நிம்மதிப் பெருமூச்சு விட்டு, இவ்வளவு தூரம் வந்ததிற்கு சூரியோதயம் காணமல் திரும்புவதில்லை என்று மனதை உறுதி படுத்திக்கொண்டு, வண்டி என் கண்பார்வையில் இருக்கும் இடத்தில பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு கிழக்கு வானத்தை நோக்கினேன்.</div>
<div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; text-align: justify;">
<span style="font-size: 13.3333330154419px;"> </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyy0kQcXJajb0pXozO48rzLTHQpcujoM9eQW7XtqAmuMUjhR63ydmq39owS1hwXLO21d6hjJDAGR-xPcSue9VFqFBlUVb-sUy1IwZFAmFCI3oSwPwfrTxbfS4aRZWElSTlNUYnL_c7_qw/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyy0kQcXJajb0pXozO48rzLTHQpcujoM9eQW7XtqAmuMUjhR63ydmq39owS1hwXLO21d6hjJDAGR-xPcSue9VFqFBlUVb-sUy1IwZFAmFCI3oSwPwfrTxbfS4aRZWElSTlNUYnL_c7_qw/s1600/1.jpg" height="240" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="font-size: 13.3333330154419px;">முதலில் இருளாக இருந்த வானில், ஒரு கருப்பு அட்டையின் நுனியில் காவியை சிறு கோடுகளாக தடவியது போல், கதிரவனின் கதிர்கள் மெல்ல படறத் தொடங்கின. நேரம் செல்லச் செல்ல என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் தோண்றியபொழுதும், வானில் செந்நிறக் கதிர்களை அன்றி கதிரவனை காண முடியவில்லை. கன்னியாகுமரியில் நடந்த ஏமாற்றம் இங்கும் ஏற்படுமோ என்று நான் நம்பிக்கை இழக்கும் தருவாயில், அசத்தலாக திரையில் முதல் காட்சியில் தோன்றும் ஒரு மாஸ் நாயகன் போல, கடல் நீர் பரப்புக்கு அருகில் தோன்றிய ஒரு மேக கூட்டத்தைப் பிளந்து கொண்டு எழுந்த ஆதவன் தன் மென்மையான காலைக் கதிர்களை வீசி, நீல நிறக் கடல் நீரை செந்நிறமாக காட்சியளிக்கச் செய்தான். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQEiD26bHqze51SQ3Zk2F377rrRmDPp1Y4brosF1SDL6PFh6hqBaE_w8rmDZIzIkt5ifZ8hU92gdY80pWzDy4qn1Ejat-vNJFIyoHs7M-gLgPUImPhisT5-dv2g9dvZgC0vU-GWT3YUiE/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQEiD26bHqze51SQ3Zk2F377rrRmDPp1Y4brosF1SDL6PFh6hqBaE_w8rmDZIzIkt5ifZ8hU92gdY80pWzDy4qn1Ejat-vNJFIyoHs7M-gLgPUImPhisT5-dv2g9dvZgC0vU-GWT3YUiE/s1600/2.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAkvBYGkD7r6byN4DMq6eHHmxTN1Z4nUA8FDSOfj5DqrXb9H4iQC2-RqyiOOxAj9NfXkYLOJwddjuUgRFuoZgTBz7vmB7JfcQWfGN1wGxjK55kQak25tr6jcYDGeQ3GK_y_QTezG9lUNo/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAkvBYGkD7r6byN4DMq6eHHmxTN1Z4nUA8FDSOfj5DqrXb9H4iQC2-RqyiOOxAj9NfXkYLOJwddjuUgRFuoZgTBz7vmB7JfcQWfGN1wGxjK55kQak25tr6jcYDGeQ3GK_y_QTezG9lUNo/s1600/3.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEzV6fpcVmipLOZQ9KS2BaXjlfIpZWCearwH1qIgUPbxc7HKTfj7q8sl2XB4zrghpM77G5S8yIWL_Mm8KLDdBMies4BPqz_B7vWVrRP2yPp-ov9YuX-NQp-YtNlouInCe0s9FcfTuDa64/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEzV6fpcVmipLOZQ9KS2BaXjlfIpZWCearwH1qIgUPbxc7HKTfj7q8sl2XB4zrghpM77G5S8yIWL_Mm8KLDdBMies4BPqz_B7vWVrRP2yPp-ov9YuX-NQp-YtNlouInCe0s9FcfTuDa64/s1600/4.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNxwKGbuJkO2mBGJWUVQhHjc9q2hxKITB0p71weyPSKfdrdAKNEQCkcnTya5aMGIVp7a8yi4TzGX8mfxHZI-DX_DJu2ooRYg1UzlHThd7mDLAFXbCueI5nbFt-Lw85o4h-JwXN4xiXeTw/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNxwKGbuJkO2mBGJWUVQhHjc9q2hxKITB0p71weyPSKfdrdAKNEQCkcnTya5aMGIVp7a8yi4TzGX8mfxHZI-DX_DJu2ooRYg1UzlHThd7mDLAFXbCueI5nbFt-Lw85o4h-JwXN4xiXeTw/s1600/5.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV8U3KEbbzfdf_K0wFnHpH19EU4m_wD1byKAfnzivmdNnfoKYsUcX-Vln5aUB00mMMnmI-_KC9UREqpmdwpXZCLB3VuwKmEeo9JreTDeBABYqw3dyBYgyjv9oyrpqRM70uwM2_b3vX8Xw/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV8U3KEbbzfdf_K0wFnHpH19EU4m_wD1byKAfnzivmdNnfoKYsUcX-Vln5aUB00mMMnmI-_KC9UREqpmdwpXZCLB3VuwKmEeo9JreTDeBABYqw3dyBYgyjv9oyrpqRM70uwM2_b3vX8Xw/s1600/6.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbPNVhHzsFSMzfWIn5Ie8lr6E9FzdXMsxc7BWr6O8Shhu9QpsfHrjxzvFCd2GlwbDlK4rb9R01r4YeRy62pN4OYVuS_exsPUdzII4AA8JTRuByRKZXlvKseSJT0u5GySBR7nttsIN0yDQ/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbPNVhHzsFSMzfWIn5Ie8lr6E9FzdXMsxc7BWr6O8Shhu9QpsfHrjxzvFCd2GlwbDlK4rb9R01r4YeRy62pN4OYVuS_exsPUdzII4AA8JTRuByRKZXlvKseSJT0u5GySBR7nttsIN0yDQ/s1600/7.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqBX64CZLpLHr6-3_DB_Ir0m4aUC5kP6eh6e5k2RL04PnUwipNWOYzTQSbMgKG9FbmR1QAkzV__IBkPLlQO5bGZIKDhCXRM8EsoErpXeXaaDeB_7RtPg-HYv3FiIjY0sGPT3qPap80nu0/s1600/8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqBX64CZLpLHr6-3_DB_Ir0m4aUC5kP6eh6e5k2RL04PnUwipNWOYzTQSbMgKG9FbmR1QAkzV__IBkPLlQO5bGZIKDhCXRM8EsoErpXeXaaDeB_7RtPg-HYv3FiIjY0sGPT3qPap80nu0/s1600/8.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3O6kgYZwGuNldtf8de9J6idRg1MPPBEHLE0lm_utpiqKE5tRuNTtAcdyvuagtFvYPB8OtJ2N3msrPSHqPhC0aAtnC9iNp_leg5I_kLzFiELAkydSUr2LPSFKt8njpG9qrbsMCkhwkj4U/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3O6kgYZwGuNldtf8de9J6idRg1MPPBEHLE0lm_utpiqKE5tRuNTtAcdyvuagtFvYPB8OtJ2N3msrPSHqPhC0aAtnC9iNp_leg5I_kLzFiELAkydSUr2LPSFKt8njpG9qrbsMCkhwkj4U/s1600/9.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrTfAojW6PKh5B61Bglf2GPpfi6_lOb0EEU3U10AG6l-2Rzr26c_gHbF5nadREMI0CG5bWIrfMvHiTpzvEMxCgQdufUiEIbMqR24NE9uMx3NPt-g0g9ru4_b_RzIQo7PIb4CTxoKIlWOc/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrTfAojW6PKh5B61Bglf2GPpfi6_lOb0EEU3U10AG6l-2Rzr26c_gHbF5nadREMI0CG5bWIrfMvHiTpzvEMxCgQdufUiEIbMqR24NE9uMx3NPt-g0g9ru4_b_RzIQo7PIb4CTxoKIlWOc/s1600/10.jpg" height="240" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="font-size: 13.3333330154419px;">சூரியன் முழுமையாக உதயமான பின்பு, அடையாறு வங்கக் கடலில் சங்கமமாகும் இடத்தில தான் அந்த பாலம் உடைந்திருப்பதை கண்டேன். ஆற்றின் நீர் கடலில் சென்று கலக்கும் பொழுதும், கடல் நீர் தன் எல்லையத் தாண்டாமல் நிற்பது இயற்கையின் விந்தை தான். ஒரு புறம் வேகமாக ஓடி வரும் அடையாறு நீர், மறு புறம் அலைகளுடன் சீறிக் கொண்டிருக்கும் வங்கக் கடல் நீர், இவை இரண்டும் சங்கமமாகும் இடத்தில நிலவும் ஒரு வகை அமைதி. இவற்றைக் கண்டவுடன், பாலத்தின் நுனியில் இருந்து அருகில் இருந்த மணற்பரப்பின் மேல் தாவி குதித்து, கடற்கரையை நோக்கிச் சென்றேன். அங்கு எனக்கு கிடைத்த பேரமைதியை ரசித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு நடைப் பயிற்சி செய்து கொண்டு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் 'தம்பி இந்த இடத்துல தனியா எல்லாம் இருக்கக் கூடாது. ஆள் நடமாட்டம் இருக்கற இடத்துக்கு போய்டு' என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறினார். மை இருட்டில் அந்தப் பாலத்தின் மேல் தனியாக நான் அமர்ந்திருந்ததை பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோ என்று என் மனதினுள் நினைக்க, இதழில் தோன்றிய புன்முறுவலுடன் அந்த இடத்தை விட்டு நகர தொடங்கினேன். </span></div>
<div style="text-align: justify;">
<div>
<span style="font-family: Tahoma, Geneva, sans-serif;"><span style="font-size: 13.3333330154419px;"><br /></span></span>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu0tEfLhWPjTbZmBjPDzmMQ_8aZp5jZ-GLqeDkN4qFWk3rZ2X7j_i_WtdA0at1jMaDq0le8o6hS0gQEi3s2sdUj0-dRbfNEd6TDBoXih9ll1HVEmH3p2xjMas2vfTEXtptzxYuOlRsi3s/s1600/20150306_064500.jpg" imageanchor="1" style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu0tEfLhWPjTbZmBjPDzmMQ_8aZp5jZ-GLqeDkN4qFWk3rZ2X7j_i_WtdA0at1jMaDq0le8o6hS0gQEi3s2sdUj0-dRbfNEd6TDBoXih9ll1HVEmH3p2xjMas2vfTEXtptzxYuOlRsi3s/s1600/20150306_064500.jpg" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஆறும் கடலும் கூடும் இடம் </td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie1hiLMadA-NuCoDANVF4NPkMG116LfSU2rDVDralJ5o4OexTymFTw99_EouQ3wPyhCRbV8Bnd6RZCBnaDrrrsN50SUeTzf3fYnyDu4oGa4ROy2nNLl7nUHuwaTj3Z5OMrDlteN2HYwxI/s1600/20150306_065007.jpg" imageanchor="1" style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie1hiLMadA-NuCoDANVF4NPkMG116LfSU2rDVDralJ5o4OexTymFTw99_EouQ3wPyhCRbV8Bnd6RZCBnaDrrrsN50SUeTzf3fYnyDu4oGa4ROy2nNLl7nUHuwaTj3Z5OMrDlteN2HYwxI/s1600/20150306_065007.jpg" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சங்கமத்திற்கு அருகில் நான் </td></tr>
</tbody></table>
</div>
<div>
<span style="font-family: Tahoma, Geneva, sans-serif;"><span style="font-size: 13.3333330154419px;">கடற்கரையை விட்டு விலகும் முன், அந்த உடைந்த பாலத்தை ஒரு முறை பார்த்தேன். ஏழு எட்டு பேர் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம், சூரியோதயத்துடன் தமது காலை டாஸ்மாக் பஜனையையும் தொடங்கியிருந்தனர். பெண்களோ அல்லது தனியாகவோ செல்ல முடியாத இந்த இடத்தில, வாழ்க்கையில் கிடைக்கும் மாபெரும் சந்தோஷங்கள் அனைத்தும் இலவசம் தான் என்பதை செயற்கையாக தோன்றியுள்ள இந்த இயற்கை உணர்த்தியது. </span></span><br />
<span style="font-family: Tahoma, Geneva, sans-serif;"><span style="font-size: 13.3333330154419px;"><br /></span></span>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKPUUZ_tfkk-iP_1nvBupxRz-1-V1jFmyaf2htjk7GX66cX5VgdHIT8iO771r_Ch1PPnzDnAG94LWYXfsimoyQIfUvd3vd3dqSu7KfkixymEK8juOH4cKGldmLjdozmdMtfnnFf4pNdlw/s1600/20150306_063724.jpg" imageanchor="1" style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13.3333330154419px; margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKPUUZ_tfkk-iP_1nvBupxRz-1-V1jFmyaf2htjk7GX66cX5VgdHIT8iO771r_Ch1PPnzDnAG94LWYXfsimoyQIfUvd3vd3dqSu7KfkixymEK8juOH4cKGldmLjdozmdMtfnnFf4pNdlw/s1600/20150306_063724.jpg" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கடற்கரையில் இருந்து தெரியும் பாலத்தின் காட்சி </td></tr>
</tbody></table>
</div>
</div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-91190107697526705002015-03-12T00:00:00.000+05:302015-03-12T00:00:01.527+05:30சாப்பாட்டு ராமன் - சீனா பாய் டிபன் சென்டர் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஹோலி பண்டிகை கொண்டாட ஆசைப் பட்ட ரூபக், சரியான துணை மற்றும் இடம் கிட்டாத காரணத்தால், சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் புழங்கும் சௌகார்பேட்டைக்கு ஹோலி அன்று மாலை சென்றான். யாரேனும் ஒருவராவது தன் மீது வண்ணம் அடிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் மின்ட் ஸ்ட்ரீட்டினுள் நுழையும் போதே, காவல் துறை போக்குவரத்தை தடுத்து, நடந்து செல்பவர்களை மட்டும் அந்த தெருவினுள் அனுமதிப்பதைக் கண்டு, தன் எண்ணம் ஈடேறும் என்று ரூபக்கிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி.</div>
<div style="text-align: justify;">
<br />
அந்தச் சாலையில் என்றும் இயங்கும் கடைகள் அன்று அடைக்கப்படிருந்தன. ஹோலி விளையாடியதற்கு சாட்சியாக, கரும்பலகையில் பல வண்ணங்கள் கொண்டு வரைந்தது போல், அந்த தார் சாலை தனது சுய நிறத்தை இழந்து வானவில்லாக ஜொலித்தது. அந்த சாலையில் சற்று தூரம் சென்றவுடன் எதிரில் வந்த புலியாட்டம், தாரை, தப்பட்டை, மற்றும் ஆண்டாள் ஊர்வலம் ஆகியவற்றைக் கண்டவுடன் தான் ரூபக்கிற்கு போக்குவரத்து மாறுதலுக்கான உண்மை காரணம் புரிந்தது. ஹோலி அன்று வடக்கர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆண்டாள் எந்த வித இடையூறும் இன்றி ஊர்வலம் வருவது நம் நாட்டின் ஒற்றுமையை ஓங்கச் செய்தாலும், ஹோலி கொண்டாட முடியாமல் போனது ரூபக்கிற்கு பெரும் ஏமாற்றமே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரூபக் ஏமாந்தாலும், ராமனையாவது குஷிப்படுத்தலாம் என்று பர்மா வகை உணவுகள் கிடைக்கும் பீச் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தோம். சமீப காலத்தில் அவதாரம் எடுக்காமல் அடங்கியே வாழும் ராமனை அந்த வழியில் கண்ட ஒரு கடை விலாசத்தில் இருந்த 'George Town' என்ற வார்த்தை தட்டி எழுப்பியது. சுமார் ஓர் ஆண்டுக்காலமாக George Town பகுதியில் இருக்கும் சீனா பாய் டிபன் சென்டரில் ஊத்தாப்பம் உண்ணவேண்டும் என்பது அவன் ஆழ் மனதில் பதிந்து இன்றுவரை நிறைவேறாத எண்ணம். உடனே கூகுள் மேப் துணையுடன் அந்தக் கடை இருக்கும் இடம் அருகில் தான் என்பதை அறிந்து, கூகுள் அம்மணி வழி காட்ட தன் இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்த வழி தான் பயணம் தொடங்கிய மின்ட் ஸ்ட்ரீட்டின் தொடக்கத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. சதுரமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து தொடங்கிய இடத்தை கடந்து தன் இலக்கை நோக்கி நடந்தான். உணவு என்று வந்துவிட்டால் ராமனுக்கு தூரம் ஒரு பெரிய விஷயம் அன்று என்பதை வாசகர்கள் நன்கு அறிந்திருப்பீர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலக்கை நோக்கி செல்லும் போது, இடதுபுறம் ஒரு சீனா பாய் டிபன் சென்டர் வந்தபோதும், கூகுள் அம்மணி இலக்கை அடைய இன்னும் முன்னூறு மீட்டர் என்று சொல்ல, நம் ஊரில் தான் ஒரு பிரபலமான கடையின் பெயரிலேயே பல போலிக்கள் உருவாகுவது வழக்கமாயிற்றே என்று தொடர்ந்து நடந்தான் ராமன். முன்பு கண்ட ஆண்டாள் ஊர்வலம், அந்த கோவிலை நோக்கி சென்று கொண்டிருக்க, அந்த கூட்ட நெரிசலை பிளந்துகொண்டு ராமன் முந்தி சென்று பார்த்தால், கூகுள் அம்மணி காட்டிய இலக்கு 'சீனா பாய் ஜூஸ் கடை'. எப்பொழுதும் அந்த அம்மணியை முழுதாய் நம்பவே கூடாது என்று சபதம் கொண்டு, மீண்டும் அந்த ஊர்வலத்தை கடந்து முன்னமே கண்ட சரியான கடைக்கு ராமன் விஜயம் செய்தான்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihJqkAshILOu7_GfzF39GHQbbeDbmnxBe8J7YzzxRN91atrW62A99qa_F2bnRIHglver_fhs4Ym9m_Gk6N_6g0p89dqLOsgIY5XXSNVaeHQ2ydFJSUgetNWnRM0aqsDfyT7hbOGVOTidQ/s1600/20150306_192242.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihJqkAshILOu7_GfzF39GHQbbeDbmnxBe8J7YzzxRN91atrW62A99qa_F2bnRIHglver_fhs4Ym9m_Gk6N_6g0p89dqLOsgIY5XXSNVaeHQ2ydFJSUgetNWnRM0aqsDfyT7hbOGVOTidQ/s1600/20150306_192242.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கடையின் முன்புறம்</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
சீனா பாய் டிபன் சென்டர் பொடி வெங்காய ஊத்தாப்பத்திற்கு மிகவும் பெயர் போன கையேந்தி பவன். இரண்டாம் தலைமுறையாக தொடர்ந்து இயங்கி வரும் அந்தக் கடையில் ஊத்தாப்பம் மற்றும் நெய் பொடி இட்லி ஆகிய இரண்டு உணவு வகைகள் தான் உண்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே கல்லில், இருபத்து நான்கு தோசைகளை முறுக செய்து கொண்டே, பல மொழிகளில்(நான் இருந்தவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி) சரளமாக புன்முறுவலுடன் வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களுக்கு காத்திருக்கும் அலுப்பு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் உரிமையாளர் சந்தானம். உதவிக்கு மூன்று வடக்கு வாலிபர்கள் இருந்தாலும், ஊத்தாப்பம் இவர் கைவண்ணம் தான். 'வீட்டில் ஏதேனும் விழா நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் கடை 6 30 மணி முதல் இரவு 11 30 வரை இயங்கும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சந்தானம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF41WEqb0aVevyWsHx_D5_IRJSyV2_AjmuQjj0qDMvnlcCShZHBjFmy3ON75gEHc-Z-UKCvzoEWUNtP5EIF6kjcTl0WSiX99JpBeSI5nsriBxujTjnvOaZQ2IHTm3zwN46_LziEIl0QmY/s1600/20150306_192329.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF41WEqb0aVevyWsHx_D5_IRJSyV2_AjmuQjj0qDMvnlcCShZHBjFmy3ON75gEHc-Z-UKCvzoEWUNtP5EIF6kjcTl0WSiX99JpBeSI5nsriBxujTjnvOaZQ2IHTm3zwN46_LziEIl0QmY/s1600/20150306_192329.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தோசைகளை தயார் செய்யும் சந்தானம்</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருபத்து நான்கு தோசைகளுக்கு கல்லில் ஒட்டி ஒட்டி மாவு ஊற்றி, அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை தூவி, இட்லி பொடியை அள்ளி வீசி, தோசை நனையும் அளவு எண்ணெய் ஊற்றி, பின் ஒட்டி இருக்கும் தோசைகளை ஜோடி ஜோடியாக வெட்டி, அவற்றை திருப்பி போட்டு, அவர் தாயார் செய்யும் அந்த இருபத்து நான்கு ஊத்தாப்பங்களும், கல்லில் இருந்து எடுக்கப் பட்ட அடுத்த பத்து நொடிகளில் காணாமல் போய் விடுகின்றன.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL1eNYOZNequ_UQ4cx1y5Ce68tLYsUrm_RthEbmceIkgZx0rqx4QSCQ_7PIiYjwibF4otaePE-76Q1RRLrAAbXlISt7iCXcKl2XvXeHpZunxk_xeT5u3akT-D7snbVFbOnmTekluyVWpU/s1600/20150306_192220.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL1eNYOZNequ_UQ4cx1y5Ce68tLYsUrm_RthEbmceIkgZx0rqx4QSCQ_7PIiYjwibF4otaePE-76Q1RRLrAAbXlISt7iCXcKl2XvXeHpZunxk_xeT5u3akT-D7snbVFbOnmTekluyVWpU/s1600/20150306_192220.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
தக்காளி , புதினா என இரண்டு வகை சட்னிகளுடன், பிளாஸ்டிக் தட்டில் வாழை இலை மேல் ராமனின் கைக்கு வந்த இரண்டு ஊத்தாப்பங்கள் நல்ல மொறுகளாக, சுவையுடன் இருந்தன. தரமும் சுவையும் சேர்ந்து கிடைக்கும் இந்த பொடி ஊத்தாப்பம் ஒன்றின் விலை ரூபாய் இருபது தான். சிலர் இந்த ஊத்தாப்பத்தின் மேல் உளுந்த வடையை உடைத்து தூவியும் உண்கின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZoVnXNKngQz-nyk2OCnJj_5FRVWuwb92939Zx57gmlqKoU7aLooFdFp3qh3iNsyRRXqVNGKrJ1MIWbEbdkYJT5KNkvKaRlSK0kIzsz9WQsGtFn1QsNUaeZIFgnO3RFBjjFMRMXSjO4us/s1600/20150306_192550.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZoVnXNKngQz-nyk2OCnJj_5FRVWuwb92939Zx57gmlqKoU7aLooFdFp3qh3iNsyRRXqVNGKrJ1MIWbEbdkYJT5KNkvKaRlSK0kIzsz9WQsGtFn1QsNUaeZIFgnO3RFBjjFMRMXSjO4us/s1600/20150306_192550.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஊத்தாப்பத்தின் பின்புறம்</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
சரவண பவன் மினி இட்லி அளவில் இருக்கும் இட்லிக்களில், பத்து நெய்யில் குளிப்பாட்டப்பட்டு அவற்றின் மீது மழை சாரல்கள் போல் பொடி தூவப்பட்டு, சூடாக அதே போல் வாழை இலையில் பரிமாறப் படுகின்றன. இந்த இட்லியுடனும் சிலர் உளுந்த வடையை தூள் செய்து கலந்து உண்கின்றனர். இந்த பொடி இட்லியின் விலை ஐம்பது ரூபாய்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXY5owjbJxLz-b0XeRvabebOB6888f1rfGdb3LgVpOMHfJnh_sgGyhnXTexN1zN8m85NJkTDNFYp6w4dVoePy60RGRkaLOYnPQZqvzrO11GESotImjUGWrB9-z6ZBtjjdDBxNdauAYf1k/s1600/20150306_194931.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXY5owjbJxLz-b0XeRvabebOB6888f1rfGdb3LgVpOMHfJnh_sgGyhnXTexN1zN8m85NJkTDNFYp6w4dVoePy60RGRkaLOYnPQZqvzrO11GESotImjUGWrB9-z6ZBtjjdDBxNdauAYf1k/s1600/20150306_194931.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">உளுந்த வடையுடன் நெய் போடி இட்லி</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்றுமே கையேந்தி பவனில் தான் அசல் சுவை உண்டு என்ற ராமனின் கூற்றை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தது சீனா பாய் டிபன் சென்டர். ப்ராட்வே பேருந்து நிலையித்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், பூக்கடை காவல் நிலையத்தை கடந்து, N.S.C. போஸ் சாலையில் கிடைக்கும் இந்த சுவை மிகுந்த ஊத்தாப்பங்களை அனைவரும் ராமனைப் போல் சுவைத்து மகிழுங்கள். </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-16339971667105769602014-12-17T00:08:00.001+05:302014-12-17T16:20:11.858+05:30The Virgin Husband (சிறுகதை 21+ )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால் ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது. இந்த நொடி என் வாழ்க்கை மாறுவதற்கான வினைகள் நியூட்டனின் விதிப்படி மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் ஒருவனை சந்தித்த பொழுதே தொடங்கிவிட்டது. </div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
அது ஒரு ஞாயிற்று கிழமையின் மதிய வேளை, சென்னையின் சமீபத்திய அடையாளங்களான மால்களில் ஒன்றான பினிக்ஸ் மாலில் என் நண்பன் மதனை சந்திக்க காத்திருந்தேன். மதன் கல்லூரியில் எனக்கு அறிமுகமாகி, குறைந்த காலத்தில் மிகவும் நெருங்கியவன். கல்லூரி முடிந்த பின் அவன் பெங்களூரு சென்றுவிட, கிட்ட தட்ட ஆறு வருடங்களுக்கு பின் அவனை சந்திக்கப் போகும் மனவெழுச்சியுடன் காத்திருந்தேன். </div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
வாழ்வில் மிக சில மனிதர்களை எத்தனை காலம் கடந்து சந்தித்தாலும், எந்தவித இடைவெளியுமின்றி விட்ட இடத்தில் இருந்து உறவை மீண்டும் அதே பொலிவுடன் தொடரமுடியும். மதனும் எனக்கு அப்படிப் பட்ட ஒரு சூழலை ஏற்படுத்த எங்கள் உரையாடல் பொழுதுபோக்கு, தொழில், அரசியல், சமூகம் என்று தொடங்கி பல அந்தரங்களையும் வெளிக்கொணர்ந்தது.</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
'என்னடா சொல்ற!! கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் உன் பொண்டாட்டி உன்ன நெருங்க விடலையா?' என்று அதிர்ந்து போனான் மதன்.</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
'அவளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து, எங்க எப்ப போகவும் முழு சுகந்திரம் கொடுத்து, மொத்த அன்பையும் செலுத்தியும், நான் அவள நெருங்கினா, 'நீங்க தாலி கட்டனதுனால உங்க கூட படுக்கணுமா விபச்சாரியா?' அப்படின்னு ஒரு கேள்வி கேட்பா பாரு, அந்த நிமிஷம் ஊசி வச்சி கூத்தன பலூன் மாதிரி என் நெஞ்சு போசுங்கிடும்' என்று சொல்லும் போதே என் கண்ணில் இருந்து வர யோசித்த நீரை விரலால் துடைத்துக்கொண்டேன். </div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
'ஒரு முறை நீயே அவல போர்ஸ் ' என்று மதன் முடிபதற்குள் 'பாலியல் வல்லுறவுல எனக்கு உடன்பாடு இல்ல. அது ஒரு மென்மையான உணர்வு, ரெண்டு பேருக்கும் அது ஒரு சுகானுபவமா இருக்கணும்னு விரும்பறேன்' என்று கூறி அவனை மேலும் பேச விடாமல் தடுத்தேன். </div>
<div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px;">
</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
அடுத்த ஐந்து நிமிடம் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. மதனும் ஆழ்ந்த சிந்தனைக்குள் இருப்பவன் போல் தென்பட, எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன்.</div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Tahoma, Geneva, sans-serif; font-size: 13px; text-align: justify;">
'என்னதான் இப்படி நல்லவன் போல பேசினாலும். எனக்குள் இருக்கற காம மிருகத்த இப்பயெல்லாம் கட்டுப்படுத்த முடியல. எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும் எனக்குள்ள ஒரு இச்சை உணர்வு ஊருது. ஒரு முறை ஆசை தீர உடலுறவு கொண்டா தான் இந்த நரக வேதனையில் இருந்து என்னால வெளியவரமுடியும்னு தோணுது. காசுகொடுத்து போகலாம்னா எதாவது நோய் வந்துடுமோன்னு பயமா இருக்குடா' என்று என் மனதில் உள்ளதை உள்ளபடி அவனிடம் உடைத்தேன். <br />
<br />
மதனோ சற்றும் தயங்காமல் 'நீ நினைக்கற மாதிரி ஒரு முறைன்னு தான் நான் காமத்தின் உள்ள போனேன், ரெண்டு வருஷங்கள் முடிந்தும் வெளிய வர முடியல. வாரத்துல நாலு நாலாவது காமம் கழிக்கலனா தூக்கம் வராது. அது ஒரு வகையான இன்பம் தரும் இம்சை. அடக்க முடியா அவஸ்தை. என்னால உனக்கு ஒரு வழி செய்ய முடியும். ஆனா இந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி, காமம் உன்னை ஒரு மோக அடிமையா மாத்திடும்ங்கரத மனசுல நிறுத்திக்கோ' என்று என் பதில் வர காத்திருந்தான்.<br />
<br />
அந்த நொடி எனது காம அவஸ்தையை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் இருந்தது, எதுவானாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று, 'என்ன வழி அது சொல்லு' என்றேன். அதற்கு பின் என்னை அவன் சீருந்தில் அழைத்துக்கொண்டு, ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத முட்டு சந்திற்கு அழைத்துச்சென்று, அந்த தகவல்களை கூறினான். முதலில் ஆச்சரியமாகவும் நம்ப முடியாதபடி இருந்தாலும் அவனது சொந்த அனுபவங்கள் என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை. எல்லா விதிமுறைகளை சொல்லி அவன் 'சம்மதமா?' என்று கேட்க, நானும் சம்மதித்து விட்டு, முன்பணமும் செலுத்திவிட்டேன்.<br />
<br />
அன்று இரவு வழக்கம் போல் என் மனைவி அவள் தாய் இல்லத்திலேயே தங்கி விட்டாள். ஒரு மாதத்தில் சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் அவள் என்னுடன் தங்கினாலே அதிசயம். தனிமையில், மதன் சொல்லிய தகவல்களை என் மனம் அசைபோடத் தொடங்கியது. அந்த அமைப்பின் பெயர் 'ஆனந்த பரவசம்'. அவர்களுக்கு முகம் முகவரி இரண்டுமே கிடையாது. திருமணமாகி கணவனால் இன்பம் கிடைக்காத பெண்களையும், மனைவியால் இன்பம் கிடைக்காத ஆண்களையும் காம இச்சைக்காக இணைப்பது தான் அந்த அமைப்பின் செயல்பாடு. மிகவும் அந்தரங்கமாக, நம்பகமான சில பணம் கொழுத்த உறுபினர்களை மட்டுமே வைத்து அவர்கள் செயல்படுகின்றனர். அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் ரகிசயமாக பாதுகாக்கப்படுவது தான் அந்த அமைப்பின் வெற்றி. அதில் உறுப்பினராக, ஏற்கனவே இருக்கும் ஒரு உறுப்பினரின் சிபாரிசுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் தேவை.<br />
<br />
மேலும் புதிதாய் சேருபவரின் பூர்வீகம் வரை அனைத்தையும் ஆராய்ந்தே அவரை சேர்த்துக்கொள்கின்றனர். உறுபினர்களாக ஏற்றுக்கொண்டவுடன், போலி ஆவணங்களுடன் வாங்கிய சிம் கார்டுடன் ஒரு ப்ளாக்பெர்ரி கைபேசி கொடுக்கப்படும். எல்லா உறுபினர்களுக்கும் மாதாந்திர மருத்துவ சோதனையும் நடத்தப்படும், ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அந்த நபரை அமைப்பில் இருந்து நீக்கி விடுவர். ஒவ்வொரு வேளைக்கும் இரு பாலாரிடமும் இருந்து தலா ஐயாயிரம் ரூபாய் வாசூலிக்கப் படும். பெரிய ஸ்டார் விடுதிகளில் ரூம் புக் செய்யப்பட்டு, அதற்கான தகவல்கள் இரண்டு மணி நேரம் முன்பு குறுந்தகவலாக வரும். பணம் காசோலையாக எந்த இடத்தில செலுத்த வேண்டும் என்ற தகவலும் குறுந்தகவலில் தான். இந்த அமைப்பின் பின் யார் செயல்படுகிறார்கள் என்றும், சக உறுப்பினர் யார் என்ற அடையாளமும் எந்த ஒரு உறுப்பினருக்கும் தெரியாதபடி ரகசியமாக இன்றுவரை உள்ளது. காசு கொடுத்து, மிருகங்கள் போல் காமம் கழித்து வாழ்வதே இவர்களின் அந்தரங்க வாழ்க்கை.<br />
<br />
பணம் செலுத்தி, மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு பின் எனக்கு முதல் குறுந்தகவல் வந்தது. சென்னையின் பிரபல ஸ்டார் விடுதியில் அன்று இரவு எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்பொழுதும் போல் அன்றும் என் மனைவி அவள் தாய் வீட்டில் இருக்க, எனக்கு செல்வது எளிமையாகிப் போனது. இருந்தும் மனைவிக்கு துரோகம் செய்யும் குற்ற உணர்ச்சி என்னை அரிக்க வந்த பொழுது, என்னுள் இருக்கும் காம மிருகம் அதைக் கொன்றுவிட்டது. ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால் ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது.<br />
<br />
'இதையும் ஒருமுறை' என்று அறையினுள் நுழைந்தவுடன், எனக்கு முன்னமே அந்தப் பெண் வந்து காத்திருந்ததை உணர்ந்தேன். படுக்கைக்கு அருகில் இருந்த மேசை விளக்கின் மங்கிய ஒளியில் அந்தப் பெண்ணின் உருவம் மட்டும் தெரிந்தது. மதன் சொன்ன, 'அறிமுகம் எதுவும் வேண்டாம். பேசாமல் இருப்பது நலம்' என்ற எச்சரிக்கைகளை எண்ணிக்கொண்டே படுக்கைக்கு அருகில் நகர்ந்தேன். அவளை நெருங்கியவுடன் என்னை கட்டி படுக்கையில் இழுத்தாள், விளக்கின் ஒளி அவள் மேல் பட்ட நிமிடம் எனது உச்சச்ந்தலையில் ஆணி வைத்து அடித்தது போல் இருந்தது.<br />
<br />
இரண்டு ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தாமல் எனக்கு மனைவியாக வாழும் அந்த சனியனின் முகம். என்னை சற்றும் எதிர் பாராத அவள் அதிர்ச்சியில் அசைவின்றி உறைந்துபோனாள். ஒரு ஆணுக்கே உரிய எனது கர்வம் அந்த நிலையில் ஏமாற்றப்பட்டதன் வலி, ஆத்திரமாக உருமாறி, வெறியாக தலைக்கு ஏறி, அருகில் இருந்த விளக்கை எடுத்து அவள் முகத்தை நோக்கி அடித்தேன். அந்த விளக்கு அவள் கழுத்தை கிழித்ததில், ரத்தம் வேகமாக வடிய, அவள் உயிரற்ற சடலமானாள். ரத்தம் முழுவதும் வடியும் வரை அந்த அறையிலேயே காத்திருந்தேன். ஏமாற்றியது அவள் தவறா இல்லை ஏமார்ந்து போனது என் தவறா? <br />
<br />
கொட்டும் அடை மழையில், சாலையின் விதிகளை புறக்கணித்து, சீருந்தின் வேகத்தை கூட்டி, ஆத்திரம் என் அறிவை மறைக்க, என்னுள் இருக்கும் மிருகம் அந்த உயிரை, என் வாழ்க்கையை நாசம் செய்த அந்த சனியனை, வதைத்தும் அடங்காமல் என்னை செலுத்திக்கொண்டிருக்க, பயங்கர சத்தத்துடன் கண்ணைக் கூசும் சோடியம் வெளிச்சம் என் எதிரில்......<br />
<br /></div>
</div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-53280988567411793672014-12-08T23:57:00.003+05:302014-12-14T19:54:15.766+05:30சாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">நாயர் மெஸ் (சேப்பாக்கம்)</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயிரின்றி இருபத்து ஏழு நாட்கள் செயல்படமால் இருந்த எனது கணினியை, உயிர்பிக்கும் பொருட்டு சில சாதனங்கள் வாங்க என் நண்பனுடன் ரிட்சி ஸ்ட்ரீட் சென்றிருந்தேன். அன்று தான் என் நண்பன், பல மாதங்கள் செயல்படாமல் இருந்த ராமனை மீண்டும் அவதரிக்கச் செய்தான். 'இங்க நாயர் மெஸ்னு ஒரு கடை இருக்காம், அங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அங்க போய் சாப்பிடுவோமா?' என்று கேட்டவுடன், பல நாள் சுவை மறந்திருந்த நாக்கு துடிக்க, உடனே ராமனும் வழிமொழிந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாலாஜா சாலை வரை சென்று, சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கிற்கு முன், வலது புறம் இருந்த முஹம்மத் அப்துல்லா சாலையில் திரும்பினோம். என் நண்பன் அந்தக் கடைக்கு சென்றதும் கிடையாது, அது எங்கிருக்கும் என்றும் தெரியாது. அவனுக்கு தெரிந்த வாய் வழி ஞானம் அந்தச் சாலை வரை தான். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் வழி கேட்க, ஒரு கார் சென்றால் வேறு வாகனங்கள் செல்ல கூட வழியில்லாத ஒரு சின்ன முட்டுச் சந்தை எங்களுக்கு காட்டினர். சில அடிகள் அந்த சந்தினுள் சென்றவுடனே எங்கள் இரு சக்கர வண்டியை, ஏற்கனவே ஓரமாக நிறுத்தப் பட்டிருந்த வண்டிகளுடன் நிறுத்திவிட்டு மெல்ல நடந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த சந்தின் இறுதிக்கு வந்த போது, ஒரு சிறிய உணவகம் தென்பட்டடது, அங்கு எந்த ஒரு விளம்பரப் பலகையும் இல்லாததால் சற்று தயங்கி, எதிரில் வந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் உடனே 'இதுதாங்க நாயர் மெஸ்' என்று சிரித்தார். கீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருக்க, மேலே குளிர் சாதன அறைக்கு சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் பல அரசு அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வு தானாகவே வந்து விட்டது. காரணம், இஸ்த்ரி போட்டு இன் செய்யப்பட்ட சட்டைகளுடன், நரைக்க தொடங்கியும், நரைத்து விட்ட முடிகளுடனும் அங்கு நிறைந்திருந்த அதிகாரிகள். 'வழக்கமாக அரசு அதிகாரிகளை மதிய உணவு வேளைகளில் அங்கு காண முடியுமாம். பல பெரிய தலைகளும் இங்குதான் உணவு வாங்குவார்கள்' என்ற தனது செவி வழி ஞானத்தை என் நண்பன் என்னுடன் பகிர்ந்து கொண்டான்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5A8EAwniSXzpLl_vvebNTaY0B6hOVJnjEqIz2GWKwAJp1lR60eGLfVoC4BfoaQaItrNAFGvG_omZWe8D3iuAQsSytKi9WKGCsglhEErytccIEZDB5UzqyzMrSQZYIVDvEJpBB0fnz4DQ/s1600/naayar+mess.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5A8EAwniSXzpLl_vvebNTaY0B6hOVJnjEqIz2GWKwAJp1lR60eGLfVoC4BfoaQaItrNAFGvG_omZWe8D3iuAQsSytKi9WKGCsglhEErytccIEZDB5UzqyzMrSQZYIVDvEJpBB0fnz4DQ/s1600/naayar+mess.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Image courtesy - Google</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேசைப் பணியாளர், தலை வாழை இலையை மேசை மேல் விரித்தவுடனே எனக்கு அந்த இடத்தின் மீது ஒரு மதிப்பு தோன்றியது. பொதுவாக சென்னையில் வாழை இலையில் உணவு பரிமாறும் இடங்கள் மிகக் குறைவு. மிகப் பெரிய சைவ உணவகங்கள் கூட தட்டில் இலையை வெட்டி வைத்து தான் உணவு பரிமாறுகின்றனர். என் நண்பன் தனக்கு ஒரு அசைவ சாப்பாடு சொல்ல, நான் எனக்கு ஒரு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். மெனு கார்ட் என்று ஒன்று அங்கு இல்லாதது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjszoN0aOJ4JYVM8fd673Hl9lyFT3veHEPSlNzIhdMllPcVkIof3h6kFz9KqycJNBDzpvzUg_0MlZIQKc-v144vdPNWNxcw7HYzmEOgwD-iOsvBhwxIdk6u6SCV9W8a9f6uzknzHZHDawo/s1600/naayar+mess+2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjszoN0aOJ4JYVM8fd673Hl9lyFT3veHEPSlNzIhdMllPcVkIof3h6kFz9KqycJNBDzpvzUg_0MlZIQKc-v144vdPNWNxcw7HYzmEOgwD-iOsvBhwxIdk6u6SCV9W8a9f6uzknzHZHDawo/s1600/naayar+mess+2.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Image courtesy - Google</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பொரியல், கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், மோர் என்று வழக்கமான வகைகளுடன், மீன் குழம்பு அல்லது கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு தேர்வு செய்து கொள்ளலாம். இவைகளுடன் அளவில்லா சாப்பாடு. என் நண்பன் தனக்கு ஒரு வஞ்சரம் மீன் ப்ரை ஆர்டர் செய்திருந்தான். வீட்டு சாப்பாடு போல் அனைத்தும் சுவையாக இருந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxfimhHMxktNbXxAuqgSTf0U4lXZ7fe0_VwbGwHbVP3JWWA7OqPAlZ_9OCFkY4NyHVFpMyocSIt7ukti3cj3dYACMTLxUOd1S3sgvD7LFfY2J9sry4XZIfdf0vFXKDz5OU9ztaARxto4U/s1600/20141117_134603.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxfimhHMxktNbXxAuqgSTf0U4lXZ7fe0_VwbGwHbVP3JWWA7OqPAlZ_9OCFkY4NyHVFpMyocSIt7ukti3cj3dYACMTLxUOd1S3sgvD7LFfY2J9sry4XZIfdf0vFXKDz5OU9ztaARxto4U/s1600/20141117_134603.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வஞ்சர மீனுடன் சாப்பாடு</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
நாயர் மெஸ் என்பதால் கேரளா வகை பிரியாணி வந்து விடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் காத்திருந்த பொழுது, தமிழக மட்டன் பிரியாணியாக உள்ளே ஒரு முட்டையுடன் வந்தது. மட்டன் பிரியாணிக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாதபோதும், பல கடைகளில் காரணம் தெரியாத இந்த வழக்கம் தொத்திக்கொண்டு விட்டது. பிரியாணி சுவையும் நன்றாகவே இருந்தது. இங்கு என்னை ஆச்சரியப் படுத்திய விசயம் அந்த பிரியாணியுடன் வந்த ஒரு லெக் பீஸ் தந்தூரி சிக்கன். அங்கு இருந்த கூட்டத்தில் சற்றும் ஒட்டாத இரு வாலிபர்களாக, தந்தூரி சிக்கனைக் கண்டு நான் 'ழே' என்று முழிக்க, 'அது பிரியாணியுடன் வரும் காம்போ' என்று அந்த மேசைப் பணியாளர் விளக்கினர். <br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_e3I6-8QPSONGkf22WcMAEw8pU6RkgRDVQgVrv03fAO_c5pqEHcKRDee6hDRPCQpfM2Dg65jhoq1wR3qI22VYEEdR4uTyC24Q-m__qifbpRFLhN2qzzM7QMKtZ0TquAWG2Pd3lCuweVg/s1600/20141117_134611.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_e3I6-8QPSONGkf22WcMAEw8pU6RkgRDVQgVrv03fAO_c5pqEHcKRDee6hDRPCQpfM2Dg65jhoq1wR3qI22VYEEdR4uTyC24Q-m__qifbpRFLhN2qzzM7QMKtZ0TquAWG2Pd3lCuweVg/s1600/20141117_134611.jpg" height="320" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சிக்கன் தந்தூரியுடன் பிரியாணி </td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுவையான தரமான உணவை உண்ட ஒரு திருப்தி இருந்தபொழுதும், அந்த கம்போ தந்தூரியால் பில் எவ்வளவு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பில் வந்தவுடன் எனக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மட்டன் பிரியாணியின் காம்போ விலை வெறும் நூற்று அறுபது ரூபாய். பொதுவாக எல்லா உணவகங்களிலும் இருக்கும் மட்டன் பிரியாணியின் விலை தான் என்பதால் எனக்கு அந்த தந்தூரி சிக்கென் இலவசமாக வந்தது போல் தோன்றியது. நண்பன் உண்ட அசைவ சாப்பாடு எழுபது ரூபாய். வஞ்சரம் ப்ரை நூற்று என்பது ரூபாய். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பில் செலுத்தியபோழுது அனைவருக்கும் போல் எங்களுக்கும் ஒரு மலை வாழைப்பழமும் ஒரு பீடாவும் இலவசமாக வழங்கினர். சாப்பாடு மற்றும் பிரியாணி பிரியர்களுக்கு சுவையுடன் கூடிய தரமான மலிவு விலை உணவு இங்கு உண்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>சோழிங்கநல்லூர் பானி பூரி </b></span></div>
<div style="text-align: justify;">
பொதுவாக தமிழகத்தில் கிடைக்கும் பானி பூரியில் அசல் வடக்கு சுவை இருப்பது இல்லை என்று பல நாள் குறை பட்டிருந்த ராமனுக்கு, அந்தக் குறையை தீர்க்கும் விதத்தில் பானி பூரி கிடைக்கின்றது என்றால், ராமன் செல்ல மறுப்பானா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோழிங்கநல்லூர் சந்திப்பின் அருகில் கரூர் வைஸ்யா வங்கி செல்லும் சர்விஸ் சாலையில் ஒரு பானி பூரி கூடையுடன் இன் செய்த சட்டையுடன் ஒரு ஆபிசர் போல கம்பிரமாக காட்சி தந்தார் அந்த வடக்கு நண்பர். கடை தொடக்க நேரத்திலேயே நாங்கள் சென்றதால், அவர் தயார் செய்துகொண்டிருந்த பொழுது ஹிந்தியில் பேசியதை என் நண்பர் மொழி பெயர்த்தது: </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையில் அசல் பானி பூரி சுவையுடன் தினமும் மாலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை வியாபாரம் செய்துவருகிறேன். சாலையின் மறுப்பக்கம் accenture கம்பெனி வாசலில் இவருக்கும் அந்தக் கடையும் என்னுடையது தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS48iORvK8ygxNfIR95xTMLmoV40kjL29c53CdduA35tcQIPUvhIBTIm9uHkv5Xx_z0e0YW9-ei05ofZswNjOlYHmTIBRUOzvxNUxPWMDIqqdx3Wecmdypnt4AZZ3qQpJzEwwbavFjuv4/s1600/20141204_163000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS48iORvK8ygxNfIR95xTMLmoV40kjL29c53CdduA35tcQIPUvhIBTIm9uHkv5Xx_z0e0YW9-ei05ofZswNjOlYHmTIBRUOzvxNUxPWMDIqqdx3Wecmdypnt4AZZ3qQpJzEwwbavFjuv4/s1600/20141204_163000.jpg" height="400" width="300" /></a></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே இடத்தில இரண்டு கடைகள் இருக்கும் பொதும், இவர் கடையில் பானி பூரி வாங்க மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று பெருமையுடன் கூறினார். அவரது அந்த பாணி, மிகவும் காரமாக அசல் வடக்கு சுவையுடன் இருப்பது தான் அவரது கைவண்ணம். பத்து ரூபாய்க்கு ஆறு பூரிகள். ராமனால் ஒரு ரவுண்டுடன் நிறுத்த முடியவில்லை. மற்றுமொரு ரவுண்டு சென்றான்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheTtEkIMg0O1SFOnH_bXi8jfPx-DtZXocLtx_MJf66UHseq_IS6l7P0gcoCyRXzShJbU-BGPWVBSbJdvAuiUGXGkJDPHEpA6G88h0-pn5MLdMqDBcwlD9hsCoF6YOZ4lf3995RKkFBu1s/s1600/20141204_162828.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheTtEkIMg0O1SFOnH_bXi8jfPx-DtZXocLtx_MJf66UHseq_IS6l7P0gcoCyRXzShJbU-BGPWVBSbJdvAuiUGXGkJDPHEpA6G88h0-pn5MLdMqDBcwlD9hsCoF6YOZ4lf3995RKkFBu1s/s1600/20141204_162828.jpg" height="320" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சுக்கா பூரி தயார் நிலையில் </td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
வடக்கு ஸ்பெஷல் பானி பூரி என்றாலே கடைசியாக கொடுக்கப் படும் சுக்கா பூரி தான். சுக்கா பூரி என்பது தண்ணி இல்லாமல் வெறும் பூரியின் உள் உருளை மசாலா கலப்பு சேர்ந்து தரப்படுவது. இவர் அந்த சுக்கா பூரியில் உருளை மசாலாவுடன், மேலும் சில மசாலா வகைகளை இணைத்து பினிஷிங் டச்சாக எலுமிச்சை சாரை பிழிந்து தந்து ராமனை தன் வசப்படுத்திவிட்டார். </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-30938258564459144912014-10-04T00:01:00.000+05:302014-10-04T00:01:28.676+05:30தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2014 ( தி.நகர் - ஆடி ஸ்பெஷல்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எனக்கு நினைவு தெரிந்து, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இருந்தே ஆடித் தள்ளுபடி விற்பனை ஆண்டு தோறும் தமிழகமெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வேலூரில் இருந்த பொழுது ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இந்த ஆடி விற்பனையின் போது தான் அப்பா 'சர்க்கார் ரெடிமேட்ஸ்' என்ற கடைக்கு அழைத்துச் சென்று புதுத் துணிகள் வாங்கித் தருவார். ஆடி மாதம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த காலம் அது. உடலும் பகுத்தறிவும் வளர, இந்த ஆடி மோகம் என்னை விட்டுச் சென்றது. சென்னையில் கல்லூரி சேர வந்த பொழுது சென்னையின் ஆடைகள் தலைநகரான தியாகராய நகருக்கு செல்லாமல், அண்ணா நகரிலேயே புதுத் துணிகள் வாங்கினோம். கூட்டமாக இருக்கும் கடைக்கு சென்று, அங்கு நசுங்கி கசங்கி துணிகள் வாங்குவதில் எனக்கு என்றுமே ஈடுபாடு கிடையாது என்பதால் எல்லா ஆண்டும் ஆடி விற்பனை என்பது எனக்கு ஒரு கடந்து செல்லும் மேகமாகவே இருந்து விட்டது. இந்த ஆண்டு, சில தவிற்க முடியாத கட்டாயத்தினால், ஆடி மாதத்தில் பல முறை தி.நகர் செல்ல நேர்ந்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவங்கள் இந்த பதிவிற்கு வித்திட்டன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாம்பரத்தில் இருந்து தி.நகர் செல்ல ரயில் மற்றும் பேருந்து இரண்டுமே இருந்தாலும், நான் எப்பொழுதும் விரும்புவது ரயில் பயணம் தான். இரு சக்கர வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ரயில் ஏறுவது தான் வழக்கம். தாம்பரம் சானடோரியம் டு தி.நகர் - இருபது நிமிட ரயில் பயணம் அது. நமது வாழ்க்கையில் நாம் தினமும் சராசரியாக செய்து கொண்டிருக்கும் ஒரு விசயம் கூட, நாம் சிறிது காலம் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் அதன் பக்கம் சென்றால் மாறிவிடுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது அம்மை தான். மூன்று வாரங்கள் இயல்பு வாழ்கையை விட்டு ஒதுங்கி, மீண்டும் என் வாழ்க்கைக்கு திரும்பிய பொழுது எத்தனை மாற்றங்கள். அந்த மாற்றங்களில் ஒன்று தான் இந்த பைக் பார்க்கிங் கட்டணம், பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக உயர்ந்து இருந்தது. தி.நகர் சென்று வர ரிடர்ன் டிக்கெட்டே பத்து ரூபாய் தான் :). இதைவிட கொடுமை என்னவென்றால் என் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஆட்டோவில் வந்தால் நாற்பது ரூபாய். எங்கள் ஏரியா ஆட்டோக்களில் மீட்டர் ஓடியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. </div>
<div style="text-align: justify;">
<br />
<b><span style="color: red;">ரங்கநாதன் தெரு </span></b><br />
<br /></div>
<div style="text-align: justify;">
ஆடி மாதத்தில் மொத்த ரயில் பயணிகளும் இறங்குவது மாம்பலம் ரயில் நிலையத்தில் தான். ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றவுடன், அந்த கூட்டத்தின் மத்தியில் உங்களை நீங்கள் பொருத்திக்கொண்டால் மட்டும் போதும், அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் ரங்கநாதன் தெருவில் இருப்பீர்கள். பீச் பக்கம் இருந்து வரும் மக்கள் கூட்டமும் தாம்பரம் பக்கம் இருந்து வரும் கூட்டமும் சங்கமமாகுவது ரங்கநாதன் தெருவில். 'அங்காடித் தெரு' படத்தில் வருவது போல் மக்கள் கூட்டத்தின் நடுவில் பல சில்லறை வியாபாரிகள் தத்தம் பொருளை வியாபாரம் செய்யக் கூவிக் கொண்டிருப்பர். இரண்டு பக்கமும் இருக்கும் சிறு கடை வியாபாரிகள் மக்களை உள்ளே இழுக்க அவர்களது வியாபாரக் கூவலை ஒரு பக்கம் இசைத்துக் கொண்டிருப்பர். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து உஸ்மான் வீதியில் வந்து சேரும் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் உள்ள ரங்கநாதன் தெருவில் ஒரு கடையை மட்டும் பெயர் பலகையில் சில மாற்றங்களுடன் திரும்பத்திரும்ப காண முடியும். இம்முறை அந்தக் கடைகளை மட்டும் நான் விரல் விட்டு எண்ணிய பொழுது 'ரங்கநாதன் தெரு' என்ற பெயரை 'சரவணா வீதி' என்று மாற்றுவது தான் உசிதம் என்றுத் தோன்றியது. <br />
<br />
<b><span style="color: red;">உஸ்மான் சாலை </span></b><br />
<br />
ரங்கநாதன் தெருவில் இருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு உஸ்மான் சாலையை அடைந்து, மேம்பாலத்தின் அடியில் போத்தீஸ் நோக்கி நடந்தேன். இந்த மேம்பாலம் கட்டும் முன் இந்த சாலையில் தானே மொத்த வாகன போக்குவரத்தும் நடந்திருக்கும், ஆனால் இப்போது மக்கள் நடப்பதற்கு கூட இங்கு இடம் இல்லை. உஸ்மான் வீதியில் நடக்கும் போது, ஒவ்வொரு பிரம்மாண்டமான கடையை கடக்கும் பொழுதும், உங்கள் வீட்டு ப்ரிட்சை திறக்கும் போது கிடைக்கும் அந்த குளிர்ந்த காற்றின் சுகத்தை உணர முடியும். அழகு சேர்க்கும் வண்ண விளக்குகளும் தேவைக்கு அதிகமாக இயங்கும் குளிர் சாதனங்களும் இங்கு இருக்க, தமிழகத்தில் பல வீடுகளும் தொழிற்சாலைகளும் இருளில் மூழ்கி தவிக்கின்றன. இந்த வீதியில் பைக் பார்க்கிங் செய்வதே கடினம், பண்டிகை வேளையில் சீருந்தில் வந்துவிட்டால் நீங்கள் பார்க்கிங் தேடி கண்டுபிடிப்பதற்குள் உங்கள் குடும்பம் ஷாப்பிங் செய்து முடித்து விடும். ஏதோ ஒரு கடையின் பார்க்கிங் இடத்தில இடம் இருந்து நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்தி விட்டாலும், திரும்பி எடுக்கும் பொழுது அந்தக் கடையின் பொருள் வாங்கிய ரசீது இல்லை என்றால் உங்களிடம் இருந்து ஒரு தொகையை (பெரும்பாலும் நூறு ரூபாய்) அபராதமாக வாங்கிவிடுவர். போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, இந்த இடத்தில் இருக்கும் கட்டிடங்கள் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கட்டப்படாததுதான் காரணம். <br />
<br />
<b><span style="color: red;">போத்தீஸ்</span></b><br />
<br />
போத்தீஸ் கடையின் பார்க்கிங் இடத்தில், குறைந்த இடத்தில நிறைய சீருந்துகளை நிறுத்த, சமீபத்தில் நவீன முறையில் வடிவமைத்து உள்ளனர். போத்தீஸ் கடையின் வாசலை அடைந்த பொழுது, டாட்டா ace வெள்ளை நிற ஷேர் ஆட்டோ வகைகள் 'போத்தீஸ் டு போத்தீஸ்' என்ற எழுத்துக்களுடன் இருந்தன. இது உஸ்மான் சாலையில் இருக்கும் போத்தீஸில் இருந்து GN. Chetty சாலையில் இருக்கும் போத்தீஸ் boutique வரை செல்ல வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இயக்கும் இலவச சேவை. போத்தீஸ் உள்ளே சென்றால் பெண்கள் கூட்டம் ஏக்க செக்கம். அங்கு இருக்கும் பத்து சதவீத ஆண்கள் பில் செலுத்தவும், துணிகளை தூக்கவும், குழந்தைகளை கண்காணிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் பட்ட வேதனை தரும் காட்சிகள் கண்டு என் மனம் எதிர்காலத்தை நினைத்து கனத்தது. இங்கு ஐந்து முதல் ஐம்பது சதவீதம் வரை நீங்கள் வாங்கும் துணியின் MRP விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படுகிறது. <br />
<br />
<b><span style="color: red;">பாண்டி பஜார்</span></b><br />
<br />
தி.நகர் என்றாலே ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைக்கு பிறகு ஒரு முக்கிய அங்கம் வகிப்பது பாண்டி பஜார் தான். (இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று அறிந்தவர்கள் சொல்லவும்). பாண்டி பஜாரில் மிகவும் பிரபலமானது நடைபாதையில் இருக்கும் கடைகளும் அங்கு கிடைக்கும் மலிவு விலை பொருள்களும். இதிலும் இருபது கடைகளில் ஒரு கடை மட்டும் தான் ஆண்கள் சம்மந்தமானா பொருட்கள் இருக்கும். அனைத்து கடைகளிலும் பெண்களுக்கு தேவையான உடைகள், காதணிகள், காலணிகள், என குவிந்து கிடக்கும். பனகல் பார்க்கில் நடக்கத் தொடங்கினால் கடைகளை பார்த்துக்கொண்டும் சில அழகுப் பொம்மைகளை ரசித்துக்கொண்டும் சென்றால் நடப்பதின் அலுப்பே தெரியாது. ஆனால் சமீபத்தில் அரசாங்கம் இந்த நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, அங்கு இருந்த வியாபாரிகளுக்கு பாண்டி பஜார் பேருந்து நிலையம் அருகில் ஒரு புதிய வணிக வளாகம் கட்டிக்கொடுத்தது. வசந்த காலம் வீசிய பாண்டி பஜார் வீதியை இன்று வெறிச்சோடி காண்பதில் மனம் வலிக்கின்றது. <br />
<br />
<b><span style="color: red;">சென்னை சில்க்ஸ்</span></b><br />
<br />
அடுத்து சென்னை சில்க்ஸ் உள்ளே சென்றவுடன் நுழைவு வாயிலில் இருந்த பணியாளர் வரவேற்று 'சார் இங்க புதுசா ஜெவல் செக்ஷன் துறந்திருக்கோம். வந்து பார்கரின்களா' என்று அழைக்க, நான் 'ழே' என்று விழித்ததை கண்ட அவர் 'நீங்க சும்மா பார்த்தா மட்டும் போதும். எதுவும் வாங்கத் தேவையில்லை' என்று புன்னகைத்தார். அவர், அவரது மேற்பார்வையாளர் காணும் வகையில் அங்கு இருந்த புதிய வகை நகைகளை எனக்கு விளக்க, நான் அவரை பின் தொடர்ந்தேன். ஒரு இடத்தில இருந்த ஒரு தங்க சங்கிலியும் டாலரும் என்னை நகர விடமால் தடுத்து. எங்கள் வீட்டு நாயை கட்டி வைத்திருக்கும் சங்கிலியை விட அது கனமாக இருந்தது. அந்த டாலரும், ஒரு மூன்று சென்டி மீட்டர் வட்டளவில் தங்கத்தில், நடுவில் ஒரு ஒட்டப்பட்ட படத்துடன் இருந்தது. அந்த படத்திற்கு உரியவர் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அன்று 'இவ்வளோ காசு கொடுத்து இதயெல்லாம் யாருடா வங்கப் போறாங்க' என்று எண்ணினேன். ஆனால் இன்று மேடையேறிய சில ஒத்திகை பார்க்காத நாடகங்கள் மூலம் இதை வாங்க இங்கு நிறைய கைகள் உண்டு என்பதை உணர்ந்தேன். <br />
<br />
சென்னை சில்க்ஸில் நடக்கும் தள்ளுபடி சற்று வித்தியாசமாக இருந்தது. உதாரணத்திற்கு இங்கு 15% தள்ளுபடி கொண்ட ஒரு 800 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கினால், உங்களுக்கு 120 ரூபாய் ( 15% of 800) மதிப்புள்ள மூன்று மாத வேலிடிட்டி கொண்ட ஒரு வௌச்சர் கொடுப்பார்கள். அதைக் கொண்டு நீங்கள் அடுத்து சென்னை சில்க்ஸில் வாங்கும் பில்லில் 120 ரூபாயை தள்ளுபடி செய்துகொள்ளலாம்.<br />
<br />
<b><span style="color: red;">புத்தகமும் சிறுமியும்</span></b><br />
<br />
சென்னை சில்க்சை விட்டு வெளியில் வந்தவுடன், அழுக்கான சட்டையும், அரை பாவடையும், பல நாள் குளிக்காத தலையுடனும் ஒரு எட்டு வயது சிறுமி தன் கையில் இருந்த கலர் அடிக்கும் புத்தகம் ஒன்றை நீட்டி 'அண்ணா. பத்து ரூபாய் தான். ஒன்னு வாங்கிக்கோங்க' என்றாள். எனது வீட்டில் சிறுவர்கள் குழந்தைகள் யாரும் கிடையாது என்பதால் அந்தப் புத்தகம் வாங்கி எந்தப் பயனும் இல்லை என்று தோன்றவே 'வேண்டாம்' என்று மறுத்து விட்டு. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். நான் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் விடாமல் என்னையே பின் தொடர்ந்து கெஞ்சத் தொடங்கினாள். அவள் என்னை தொட்டு தொட்டு கெஞ்சியது சற்று அறுவெறுப்பாக இருக்க எனக்கு கோவம் அதிகமாகி, 'வேண்டாம் கூட வராத' என்று சற்று கனத்த குரலில் திட்டினேன். அப்பொழுதும் அவள் சலிக்காமல், என்னைக் கெஞ்சிக்கொண்டே தொடர்ந்தாள். எனது பிடிவாதம் என் மனதை மாற விடமால் செய்தது. இப்படியே என்னைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸில் இருந்து தி.நகர் பேருந்து நிலைய சிக்னல் வரை வந்தவள், சட்டேன்று அவள் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் வைத்து விட்டு, வேகமாக திரும்பி சென்று விட்டாள். அந்த சம்பவம் என்னுள் எதோ ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டிவிட, அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி ரயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினேன். <br />
<br />
'ஆடி தள்ளுபடி' என்று ஒரு மோக அலையை மக்கள் மனதில் வீசி, மற்ற 335 நாட்களில் நடக்கும் வியாபாரத்தை இந்த 30 நாட்களிலேயே சம்பாதித்து, ஆண்டிற்கு ஒரு புதிய கிளை திறந்து விடுகின்றனர் இந்த ஆடை உலகின் முதலைகள். விலைகளை உயர்த்தி பின் தள்ளுபடி என்ற பெயரில் விலைகளை குறைத்து விற்கும் உக்திக்கு இந்த மக்கள் எத்தனை காலம் தான் விழுவர் என்று தெரியவில்லை. </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-41655326403083601962014-10-01T00:27:00.001+05:302014-10-03T12:19:01.180+05:30தேன் மிட்டாய் - ஜூன் & ஜூலை 2014<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மே மாதத்திற்கு பின் மூன்று மாதங்கள் தேன் மிட்டாய் ஏன் தடை பட்டது என்பதற்கு என்னால் பல காரணங்கள் சொல்ல முடியும். சில சம்பவங்களின் மீது பழி சுமத்தி விட்டு நான் கருணை கோரப் போவதில்லை. எனது பாதையை விட்டு சற்று தடுமாறினேன், மீண்டும் உங்கள் ஆதரவுடன் உற்சாகமாய் எனது எழுத்தை தொடருவேன் என்ற நம்பிக்கையில்.... </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">தநஉஉஇதசநுகஉ</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது என்ன என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை இந்தப் பதிவின் முடிவில்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>பேருந்து நிழற்குடை </b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற தேன் மிட்டாயில்(மே 2014) நான் OMR சோழிங்கநல்லூரில் பேருந்து நிழற்குடை இல்லாததை பற்றி எழுதியிருந்தேன். அம்மை குணமாகி ஜூன் மாதம் அலுவலகம் செல்லத் தொடங்கிய பொழுது OMR சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நடப்பதைக் கண்டு வியந்தேன். 'நம்ம தேன் மிட்டாயை யாரோ பெரிய ஆள் படிக்கராங்கப் போல' என்று என்னுள் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. துரைப்பாக்கம் முதல் சிறுசேரி வரை OMR சாலையின் இரு புறமும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு நிழழ்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடிய மாற்றம் என்றாலும், நான்கு கம்பங்களை எழுப்பி நான்கு அடி அகலத்தில் அதன் மேல் தகரத்தை வைத்து விட்டால் மக்களுக்கு நிழல் கிடைக்குமா என்ற கேள்வி வலுக்கிறது. கதிரவன் உச்சியில் இருக்கும் வேளை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த நிழற்குடைகள் தம் பணியை செய்யாதது வருத்தமே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>டாஸ்மாக் எலைட் </b></span> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலூரில் 'கோரமண்டல் பிளாசா' என்று ஒரு மால் உண்டு. ஐந்து மாடிகள் கொண்ட இந்த மாலில் நான்கு ஆண்டுகளாக இயங்கிவருது AGS திரையரங்கம் தான். சில ஆண்டுகளுக்கு முன் Dominos மற்றும் சில மாதங்களுக்கு முன் KFC, மற்றும் நான்காவது தளத்தில் உள்ள பூட் கோர்ட்டில் சில பிரபலமாகாத உணவகங்கள் இவை மட்டும் தான் இங்கு இருப்பவை. மீதம் உள்ள கடைகள் அனைத்தும் கட்டுமான வேலை மட்டும் முடிந்த நிலையில் கண்ணாடிக் கதவுகளுடன் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. ஒரு நாள் அலுவலகம் முடித்து விட்டு, படம் பார்க்க அங்கு நுழைவாயிலில் அடி வைத்த பொழுது, நான்கு பெண்கள் ஒரு கடையில் இருந்து வெளியேறுவதைக் கண்டு என் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அவர்கள் வெளி வந்த வாசலில் 'TASMAC' என்ற எழுத்துக்கள் மின் ஒளியில் ஜொலித்தன. இந்த டாஸ்மாக் தெருமுனையில் இருக்கும் மற்ற டாஸ்மாக்களை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் போல் பல வெளி நாட்டு இறக்குமதி ரக சரக்குகள் அடிக்கி வைக்கப் பட்டிருந்தன. வரிசையாக பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு விண்டோ ஷாப்பிங் செய்த பொழுது சில வற்றின் விலைகளையும் கவனித்தேன். சற்று அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுது எனக்கு விளங்கியது இது ஏன் 'டாஸ்மாக் எலைட்' என்று. இதே போல் ஒரு கடையை சமீபத்தில் ஸ்பென்சர் பிளாசாவிலும் கண்டேன். வளர்க குடி ! வாழ்க குடிமக்கள்! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">களவானிகளும் காவல் துறையும்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர் ஒருவர் தனது குடும்ப விழாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் அவரது இல்லம் கொள்ளையடிக்கப்பட்டது. சில ஆயிரம் ரொக்கம் மற்றும் சில சவரன் நகைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தன. மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் எதையும் தொட வில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சினிமாவில் வருவது போல் அவர்கள் வலை வீசி தேடி கொள்ளையர்களை பிடிப்போம் என்று வசனம் எல்லாம் பேசவில்லை. அடாவடியாக கண்டுபிடிக்க லஞ்சமும் கேட்கவில்லை. 'அவர்கள் பிடிபட்டாலும் உங்கள் பொருள் மற்றும் பணம் கிடைக்காது' என்று நேர்மையாக பதில் சொல்லி விட்டனர். இன்றளவும் அந்த கொல்லையர்கள் பிடிக்கப் படவில்லை. சம்பவம் நடந்த வீடு அந்த வட்டார காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் என்பது குறிப்பிடத்தக்கது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>உணவு</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இருக்கும் பண்புகளில் மிகவும் உயர்ந்தது விருந்தோம்பல். மற்றவர்களின் பசியை போக்கும் பொழுது நமக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. எங்கு சென்றாலும் நானாக முன் சென்று பரிமாறும் வேலையை எடுத்துக்கொள்வேன். நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு நான் சென்றிருந்த பொழுது அங்கு பந்தியில் பரிமாறும் வாய்ப்பு கிட்டியது. நான் எங்கும் காணாத ஒரு நிகழ்வு அங்கு நடந்தது. ஒரு 100 பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட ஒரு உணவுக் கூடம். வந்தவர்கள் அனைவரும் உணவருந்தி விட, கடைசி பந்தி நடந்து கொண்டிருந்த வேளை. பந்தியின் எல்லையில் இருவர் மட்டும் அந்தக் கூட்டத்துடன் சற்றும் ஒட்டமால் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதுவும் அசுர வேகத்தில். முதலில் அவர்கள் அங்கு திருமணக் கூடத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் என்று எண்ணினேன். கடைக் கண்ணால் அவர்களை கவனிக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆட்களிடம் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு ஓரமாக நின்றுகொண்டு அவர்களையே கவனித்தேன். அவர்கள் இலைக்கு வந்து உணவில் இரு கை உண்டு விட்டு, மீதம் இருந்த அனைத்தும் அவர்கள் மடியில் இருந்த பழைய டால்டா டின்னிற்குள் சென்றது. அடுத்து இரண்டு முறை அவர்கள் போதும் என்ற அளவிற்கு நான் பரிமாறினேன். நான் கவினத்ததாக அவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">அப்பா ஊட்டு ரோடு </span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி மார்ஜியானவில் சென்று கொண்டிருந்தேன். பல்லாவரம் கடந்து திருசூலம் அருகில் செல்லும் பொழுது, பழைய ஹீரோ ஹோண்டா CD 100 இல் ஒருவர், வெள்ளை பனியனுடன் அழுக்கான தலை முடியுடன் எனக்கு முன் வந்தார். அவருக்கு முன் ரோட் காலியாக இருந்த பொழுதும் அவர் ஓரம் ஒதுங்காமல் சாலையின் மத்தியிலே சென்றுகொண்டிருக்க, நானும் ஓயாமல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தேன். வேண்டுமென்றே அந்த ஆசாமி சாலையின் மத்தியில் சென்று கொண்டிருக்க எனக்குள் உஷ்ணம் தலைக்கு ஏறியது. அப்படியே அவனை அடித்து தூக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோபத்தை அடிக்கி நானும் ஒரு வேஷதாரியாக, சாலை சற்று அகலமான பொழுது அவனை முந்தி சீறிப் பாய்ந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">கல்வி </span></b> <br />
<br /></div>
<div style="text-align: justify;">
'நான் அந்த காலத்து SSLC தான், ஆனா அது இந்த காலத்து B.Scக்கு சமம்' என்று என் தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. நீங்களும் எங்காவது சில பெரியவர்கள் இப்படி பேசிக் கேட்டிருக்கலாம். இதன் அர்த்தம் எனக்கு விளங்கியதே இல்லை. சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து பார்த்த பொழுது நான் படித்ததற்கும் அதில் தற்போது இருப்பதற்கும் எவ்வளோ மாற்றங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி சற்று எளிமையாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. நான் பள்ளி பயின்ற காலத்திலேயே SSLC முறைக்கும் CBSE கல்வி முறைக்கும் அத்தனை வித்யாசங்கள் இருக்கும். தற்பொழுது இந்த தரத்தை கொண்டு CBSE மாணவர்களுடன் தமிழக மாணவர்கள் போட்டியிடுவது மிகவும் கடினமாகி விடும். இயற்கையாக இருக்கும் மனித ஆற்றலை வளரவிடாமல், மனப்பாடம் செய்து ஒரு மாணவனின் மூளையை சோம்பேறியாக்கும் இந்த கல்வி முறையை பற்றி என்னவென்று சொல்வது. பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு செய்தி தவறு என்று தெரிந்த போதிலும், அந்த தவறான செய்தியையே பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்தும் கொடுமைகளும் இங்கு உண்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">தநஉஉஇதசநுகஉ</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது நான் அலுவலகம் செல்லும்பொழுது கண்ட ஒரு சுமோ ரக வாகனத்தில் நம்பர் ப்ளேட்டில் எழுதியிருந்தவை. சத்தியமா எனக்கு புரியலைங்க. தமிழ் பற்று தேவைதான். அதற்கென்று இப்படியா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-16069137632418725722014-09-12T01:10:00.003+05:302014-09-12T01:10:48.762+05:30சினங்கொண்ட ஊழியனின் குமுறல் : CAB சிஸ்டம் நடப்பது என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<span style="color: red;"><b>முன் அறிவிப்பு : </b>இந்தப் பதிவில் வரும் சம்பவங்களோ அல்லது கருத்துக்களோ எந்த ஒரு தனி நபரையோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தையோ குறிப்பன அல்ல. இவை அனைத்தும் எனது மனக் குமுறல்களின் வெளிப்பாடு .</span></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<span style="color: red;"><br /></span></div>
<div style="margin: 0px;">
<span style="color: red;">***************************************************************************************<wbr></wbr>********************</span></div>
<div style="margin: 0px;">
<span style="color: red;"><br /></span></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
பொதுவாக IT நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அனைவருமே எனது பார்வையில் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்தவர்கள். வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே கோபத்தையும் தன்மானத்தையும் கழட்டி வைத்து விட்டு தான் அலுவலகம் நோக்கி புறப்பட வேண்டும். இப்படி பாவம் செய்தவர்களுள் கூடுதல் பாவம் செய்தவர்கள் யார் என்றால் அது என்னைப் போல் ஒரு 'சப்போர்ட்' ப்ராஜெக்டில் பணி செய்பவர்கள் தான். சப்போர்ட் என்றால் வருடத்தில் 365 நாட்கள், 24x7 அயராது பணி செய்ய போடப்பட்ட ஒப்பந்தக் கிணற்றில் அறிந்தே தற்கொலைக்கு விழுவது. </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
நான் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ எதுவாக இருந்தாலும் விடுமுறை கிடையாது. கிறிஸ்துவனாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது, முஸ்லிமாக இருந்தாலும் ரம்ஜானுக்கும் விடுமுறை கிடையாது, இந்துவாக இருந்தாலும் தீபாவளி-பொங்கல் எதுவானாலும் கணினியுடன் தான். இதுவல்லவா வேற்றுமையில் ஒற்றுமை! இதில் உச்சகட்டம் என்னவென்றால் நாங்கள் பணிபுரியும் அயல்நாட்டு அலுவலகத்தில் அவர்கள் அவர்களது தேசிய விடுமுறைகளை கொண்டாடும் போதும் இங்கு அவர்களது மென்பொருள் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி எங்களுடையது.</div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="color: black; margin: 0px;">
ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் வீதம், இருபத்து நான்கு மணிநேரங்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். காலை (06:30 - 15:30), மாலை( 13:30 to 22:30), இரவு ( 22:00 - 07:00) என்று மூன்று ஷிப்டுகளில் எங்கள் பணி. ஷிப்டானது வாரந்தோறும் மாறும். </div>
<span class="im"><div style="color: #500050; margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த கம்பனிகளுக்கு சரியான நேரத்தில் ஊழியன் உள்ளே வரவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப் பட்டது இந்த cab system. </div>
</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span class="im"><div style="margin: 0px;">
பொதுவாக மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றாலே 'வீட்டுக்கு கார் வந்து கூப்டிட்டு போய் திரும்ப கார்லையே வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுர்ராங்க. செம வசதியான வேலைப்பா' என்று நினைப்பவர்கள், தனி நபர் cabஇல் அலுவலகம் சென்றது எல்லாம் நம்ம சிம்ரன் அக்கா 'நிலவைக் கொண்டுவா: கட்டிலில் கட்டிவை'னு ஆணையிட்ட காலத்தோடையே போனது என்பதை உணர வேண்டும். எனது இந்த cab சேவை அனுபவங்கள் முழுக்க முழக்க கசப்பானவையே. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து, சமீபத்தில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். </div>
<div style="color: #500050; margin: 0px;">
<br /></div>
</span><div style="color: black; margin: 0px;">
'எப்படி?' என்ற உங்களது கேள்விக்கான பதில் இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது கிடைக்கும். ஆகவே எனது cab அனுபவங்களை அந்தக் கொலைக்கு முன் மற்றும் பின் என்று இரு பிரிவுகளாக பிரிக்கின்றேன். </div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<span style="color: red;"><br /></span></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<b>கொலைக்கு முன்:</b></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
காலை ஏழு மணிக்கு முன்னர் அலுவலகம் வருபவர்களுக்கு cab. ஏழிற்குப் பின் என்றால் அலுவலக பேருந்துகள். மாலை வீடு திரும்புபவர்களுக்கு கடைசி அலுவலக பேருந்து இரவு பத்து மணி வரை இருக்கும். அதற்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு cab சேவைதான். இது இல்லமால் சொந்த வாகனங்களில் மற்றும் அரசுப் பேருந்துகளில் அலுவலகம் வருபவர்களும் உண்டு. எந்த நேரமும் அலுவலகத்தினுள் வரலாம், போகலாம். இரவு பத்து மணி முதல் அடுத்த நாள் காலை ஏழு மணி, இந்த இடைவெளியில் அலுவலகம் உள் வருபவர்கள் அல்லது அலுவகத்தில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மட்டுமே cab. பகல் வேளைகளில் cab சேவையை பயன்படுத்தும் ஒரு சில புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி நாம் பேசப் போவது இல்லை. </div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<b>காலை ஷிப்ட் :</b></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
தொடங்குவது 06 30 மணிக்கு. எனது கைபேசியில் அலாரம் அடிக்கும் முன் cab டிரைவரிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். நான் வசிப்பது தாம்பரம் என்பதால், எனது வழியில் பெரும்பாலும் நான் தான் முதல் பிக்-அப். புறப்படும் நேரம் குறித்து அந்த அறை தூக்கத்தில் ஒரு வாக்குவாதம் நடத்தி, தூக்கம் கலையமல் அடித்து பிடித்து, குளித்தும் குளிக்காமலும் தயாராகி cabஇல் ஏறி புறப்பட்டுச் சென்றால், அடுத்த ஆள் ஏறுவதற்காக அடுத்த பாயிண்டில் காத்திருக்க வைத்து விடுவார்கள். முதல் நபரான நான் தாமதம் செய்தால் பிறருக்கு இடையூறு என்று நினைத்து நான் விரைந்து கிளம்பினால் இப்படி என்னைக் காக்க வைக்கும் சிலரை என்ன செய்வது? </div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
சந்தோஷபுரத்தில் ஒரு பெண்மணி உண்டு, cab டிரைவர் 'பாய்ண்டுக்கு வந்தாச்சு' என்று சொல்லி பதினைந்து நிமிடங்கள் கடந்தால் தான் வீட்டை விட்டு வெளியில் வருவார். எனவே இவரைக் கையாள அனைத்து டிரைவர்களும் ஒரு யுக்தியைக் கையாண்டனர். எனது வீட்டில் இருந்து புறப்படும் பொழுதே 'பாய்ண்டுக்கு வந்தாச்சு' என்று சொல்லிவிடுவர்.</div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
இங்கு அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இந்த cabகள் அனைத்துமே NON-AC, பெரும்பாலும் indica. இன்டிகாவில் நான்கு பேர் செல்லும் வழக்கத்தில், பின் சீட்டில் நடுவில் அமர்பவர் கதி அதோ கதி தான். முதலில் ஏறி டிரைவர் அருகில் இருக்கும் முன் சீட்டில் சுகமாக அமர்ந்தாலும், நான்கவதாக ஏறும் பெண்மணி 'Excuse me! Can you take the back seat?' என்று நம்மை பின்னாடி தள்ளி விடுவார். இதுவே travera அல்லது sumo என்றால் குறைந்தது ஆறு அல்லது ஏழு நபர்கள். இவர்கள் அனைவரையும் பிக்-அப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதற்குள் ஒரு வழியாகி விடும். உள்ளே நுழையும் பொழுது அனைவரது அடையாள அட்டை மற்றும் கார் டிக்கியை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பர்.</div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<b>காதலனுடன் கைபேசியில் கொஞ்சும் பெண்மணிகள், மனைவியுடன் சண்டை பிடிக்கும் கணவன்மார்கள், குறட்டை விட்டு தூங்கும் குண்டோதரன்கள், Micheal Schumacher போல் சீரிப் பாயும் சில டிரைவர்கள், என தினம் தினம் ஒரு அனுபவம் தான். </b></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<b>மாலை ஷிப்ட்: </b></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
முடிவது 10.30 மணிக்கு. இந்த நேரத்தில் அலுவலக பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால், சப்போர்ட் ப்ராஜெக்டில் இருப்பவர்களுக்கு வீடு செல்ல cab தான் ஒரே வழி. வட்டாரம் வாரியாக cab கொடுக்கும் கவுன்டர்கள் இருக்கும். அங்கு செல்ல Q வில் நின்று, எனது அலுவலக அடையாள எண்ணை கணினியில் பதிவு செய்தால், நான் இந்த நேரத்திற்கு cab புக் செய்துள்ளேனா இல்லையா என்று காட்டும். 'ஆம்' என்றால் உள்ளே செல்லலாம். 'இல்லை' என்றால் எனக்கு cab தரமாட்டார்கள். அவர்களிடம் மன்றாடுவதை விட்டு வெளியில் சென்று எவனிடமாவது லிப்ட் கேட்டு வீடு செல்வது உசிதம். இங்கு 'நான்' என்று குறிப்பிடுவது ஒரு ஆண் பாலை. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் இந்த விதி முறைகள் செல்லாது, எந்த நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை என்று அவர்களை முன்பதிவு இல்லை என்றாலும் அனுமதித்து விடுவர். </div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
</div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
'ஆம்' என்று கணினி எனக்கு பச்சை விளக்கு காட்டிய பின், எனது பாதைக்கு இருக்கும் கவுன்டருக்கு சென்று அங்கிருக்கும் cab co-ordinator இடம் எனது இடத்தை சொன்னால் எனக்கு ஒரு cab நோட்டு கொடுப்பார். அதில் என் தகவல்களை நிரப்பி விட்டு, அந்த வண்டியில் சென்று அமர்ந்துகொண்டு இன்டிகாவாக இருந்தால் மேலும் மூவர் வரவும் அல்லது சுமோ போன்ற வண்டியாக இருந்தால் மேலும் ஏழு பேர் வரவும் காத்திருக்க வேண்டும். </div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
அனைவரும் ஏறிய பின், மீண்டும் ஒரு சோதனை நடக்கும். அங்கு எங்கள் அடையாள அட்டைகளை ஸ்வைப் செய்த பின் செல்ல அனுமதிப்பர். அதன் பின் கோவிலில் சாமி சிலையை சுற்றுவது போல் அலுவலத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு தொடங்கிய இடத்தின் மிக அருகில் இருக்கும் கேட் வழியாக வெளியே செல்லும் பொழுது மீண்டும் ஒரு சோதனை. இங்கு சீட் பெல்ட் மற்றும் கார் டிக்கியை சோதனை செய்வர். ஒரு வழியாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தால், இந்த இடைப்பட்ட இடங்களில் இறங்குபவர்கள் 'லெப்ட்' 'ரைட்' என்று பல சந்துகளில் சுத்தவிடுவர். இவர்கள் அனைவரையும் இறக்கி விட்டு இறுதியாக நான் வீடு வந்து சேர்வதற்குள் நடுநிசியாகிவிடும். </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
இப்படி சுத்தி சுத்தி, தாம்பரம் வந்த முதல் இரண்டு மாதத்திலேயே, சோழிங்கநல்லூரில் இருந்து தாம்பரம் வரை இருக்கும் அனைத்து சந்து பொந்துகளும் எனக்கு அத்துப்படி. உங்களுடைய வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல உங்களுக்கு எத்தனை வழிகள் தெரியும்? அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து இருக்குமா. ஆனால் என்னால் எனது அலுவலகத்திற்கு பத்து நாட்கள் வெவ்வேறு வழிகளில் செல்ல முடியும். புதிதாக ஏதேனும் டிரைவர் வந்தால் நான் வழி சொல்லி அழைத்துச் சென்ற நாட்களும் உண்டு.</div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<b>இரவு ஷிப்ட்:</b></div>
</div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; text-align: justify;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><span class="im" style="background-color: white; color: #500050; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;"></span><br />
<div style="background-color: white;">
இந்த ஷிப்டில் அலுவலகம் செல்பவர்களுக்கு இரு வழியும் cab சேவை உண்டு. உள்ளே செல்வது மார்னிங் ஷிப்ட் பிக்-அப் போலவும், அதிகாலை வீடு திரும்புவது ஈவ்னிங் ஷிப்ட் ட்ராப் போலவும் இருக்கும். ஆனால் அந்த ட்ராப் சற்று கடினமாக இருக்கும். காரணம் நான்கு பேர் வந்தால் தான் வண்டியை நகர்த்த அனுமதி கொடுப்பர். இரவு வேளையில் அலுவலகம் வருபவர்களே மிகக் குறைவு இதில் நமது வழியில் வரும் ஊழியர்கள் மிகவும் சொற்பம். நால்வர் வரக் காத்திருந்து புறப்படுவதற்குள் கதிரவன் தன் UV கதிர்களை பூமியின் மீது ஏவத் தொடங்கி இருப்பான்.<br />
<span class="im"><b><br /></b>
<b>கொலைக்கு பின்: </b><br />
<div style="color: #500050;">
<br /></div>
</span>காலை மற்றும் இரவு ஷிப்ட்களில் பெரிதாக ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் விதி இந்த மாலை ஷிப்டை மட்டும் அதிகமாக பாதித்தது. காரணம் அந்தக் கொலைக்கு பின்னர் ஊழியர்களைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கொண்டு வந்த சில விதிமுறைகள். 'நாங்க மோசமானவங்கல்லையே ரொம்ப மோசமானவங்க' என்ற சினிமா வசனம் போல் அந்த விதிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று பின்வருவது தான்.<br />
<span class="im"><div style="color: #500050;">
<br /></div>
<b>இரவு 8:30 மணிக்கு அலுவலக வாசல் வெளியில் செல்பவர்களுக்கு சாத்தப்படும். MTC பேருந்தில் செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வெளியில் செல்ல அனுமதி கிடையாது. 8:30 மணிக்கு மேல் வெளியில் செல்வது என்றால் சொந்த சீருந்தோ அல்லது அலுவலக cabஇலோ தான் செல்ல முடியும். </b><br />
<div style="color: #500050;">
<br /></div>
</span>இந்த சட்டம் இரு பாலருக்கும் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. 'பொம்பள புள்ளைங்கள வெளிய தனியா விடலனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. பைக்ல போகும் பசங்கள எதுக்குலே நிறுத்தனும்?' இப்படி உங்கள் மனதினுள் தோன்றும். அதே எண்ணம் தான் என்னைப் போல் பலருக்கு தோன்றியது. இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால், எந்த நேரமாக இருந்தாலும் எப்படி வந்தாலும் அலுவலகம் உள் செல்ல தடை இல்லை. ஏனெனில் நாங்கள் உள்ளே வருவதில் அவர்களுக்கு லாபம் அல்லவா. <br />
<br />
அது போகட்டும். இந்த நேரங்களை மாற்றியதால் பொதுவாக அலுவலகத்தில் இருந்து செல்லும் 10 மணி கடைசி பேருந்து 08:15 மணிக்கே புறப்படும் படி மாற்றப்பட்டது. இதனால் மாலை ஷிப்ட் வடிவத்தில் பணிபுரியும் பலரும் cab சேவையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 10:30 மணிக்கு cab சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. சராசரியாக நாள் ஒன்றிக்கு குறைந்தது ஆயிரம் ஊழியர்களாவது இந்த நேரத்தில் cab பெற வந்து காத்திருக்க தொடங்கினர். இதனால் புதிதாய் ஒரு விதியும் பிறந்தது. பெண்களுக்கு Q வில் நிற்க விலக்கு அளிக்கப்பட்டது.<br />
<br />
அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து வரிசையில் காத்திருந்தாலும், எனக்கு பிறகு எனது ப்ராஜெக்டில் இருந்து கிளம்பிய பெண் தோழி எனக்கு டாட்டா காட்டி விட்டு என்னை முந்திக்கொண்டு cab கவுன்டரினுள் செல்லும் பொழுது என் மனதில் 'என்ன மாதிரி பெண்? ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம்?' என்ற கேள்வி தோன்றும். <br />
<span class="im"><div style="color: #500050;">
<br /></div>
எனக்கு பின்னே வந்த அனைத்து மகளிரும் உள்ளே சென்று cab புத்தகத்தில் கையொப்பம் இட்ட பின் ஆண்கள் Q திறக்கப் படும். நான் உள்ளே செல்வதற்குள் எங்கள் தாம்பரம் வட்டாரம் இன்டிகா cab அனைத்தும் முடிந்து விடும். எனக்கு கிடைப்பதோ sumo இன வாகனங்கள். பல்லைக் கடித்துக்கொண்டு மற்றவர்களை போல் மாத சம்பளம் மட்டும் சரியாக வந்தால் போதும் என்று பல மாதங்கள் இப்படியே கடத்தி விட்டேன். ஆனால் இந்த வாரம் முழுவதும் மாலை ஷிப்டில் எனது பொறுமை சோதிக்கப்பட்டு உடைக்கப் பட்டு விட்டடது.<br />
<br />
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அலுவலகத்தில் இருந்து எனது இல்லம் 25 கிலோ மீட்டர் தூரம். எனது ஸ்ப்ளேன்டரில், என் தந்தை செல்லும் 50 KM/H வேகத்தில் சென்றாலும் முப்பது நிமிடங்களில் எனது இல்லம் சென்றடைந்துவிடுவேன். <br />
<br />
இந்த வாரம் திங்கட்கிழமை, பத்து மணிக்கே என் வேலைகளை முடித்து விட்டு, மன்னன் படத்தில் செயின்-மோதிரம் வாங்க ரஜினியும் கவுண்டமணியும் வரிசையில் முந்திச் செல்வது போல் சென்று, வரிசையில் பத்தாவது ஆளாக நின்று, அனைத்து மகளிரும் உள்ளே சென்ற பின்பு நாங்களும் வழி தொடர்ந்து சென்று, சோதனைகளை கடந்து, எனது வட்டார கவுன்டரை அடைந்தால் ஒரு cab புத்தகமும் இல்லை. காத்திருந்து காத்திருந்து,ஒரு வழியாக ஒரு புத்தகம் வந்தது. எலும்புத் துண்டை கண்ட நாய் போல, கண்கள் ஒளிர அந்த புத்தகத்தை வாங்கினால் அதில் டெம்போ என எழுதி இருந்தது. டெம்போ என்றால் பன்னிரண்டு பேர் செல்லும் வாகனம். அங்கு அருகில் இருந்த ஒரு பெண்மணி 'இது வீடு வரை போகாது. மெயின் ரோட்லையே எறக்கி விட்டுடுவாங்க' என்று சொல்லி எழுத மறுத்து விட்டார். பிரதான சாலையில் இருந்து எனது இல்லம் சரியாக 1.5 KM தூரம். 'நடந்து செல்வதா அல்லது காத்திருப்பதா?' என்று என் மனதில் நடந்த விவாதத்தில் நடந்து செல்வதே மேல் என்று முடிவு செய்து விட்டு என் பெயரை அதில் எழுதி விட்டேன்.<br />
<br />
என்னைத் தொடர்ந்து பத்து பேர் எங்கள் வழி ஆட்கள் அதில் எழுதிடவே அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தை நோக்கிச் சென்றோம். நோட்டை எடுத்துச் செல்லும் பொழுதும் சோதனை செய்யப் பட்டு ஒரு முத்திரை குத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டை, இறுதிக்கட்ட முத்திரைக்காக ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தோம். ஓட்டுனர் வந்து எண்ணிக்கை பார்க்க ஒருவர் குறைகையில், அந்த நபர் வரக் காத்திருந்து, வந்தவுடன் புறப்பட்டு, வெளியில் செல்லும் கேட் அருகில் இறுதிக்கட்ட சோதனையை முடித்து விட்டு வண்டி அலுவலகத்தை விட்டு வெளியேறும் பொழுது மணி 11. அதன் பிறகு 'ரைட்' லெப்ட்' என்று ஒவ்வொருவராக பல சந்துகளுள் சென்று அவரவர் வீடுகளுக்கு அருகில் சென்று இறக்கி விட்டு நான் என் வீடு வந்து சென்றடையும் பொழுது மணி 11 45.<br />
<br />
அந்த நிமிடம் அந்த நொடி எனது பொறுமை தகர்க்கப் பட்டது. 10:30 மணிக்கு எனது இரு சக்கர வண்டியில் கிளம்பி இருந்தாலும் 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருப்பேன். அயல்நாட்டில் இருந்துகொண்டு குறைந்த ஊதியத்திற்கு நம்மை அடிமைப் படுத்தி வேலை வந்குபவனுக்காக உழைக்க நாம் ஏன் இத்தனை இன்னல்களுக்கும் மன உளைச்சளுக்கும் ஆளாக வேண்டும் என்ற கோபம் தலைக்கு ஏறியது. இத்தனை இன்னல்கள் இருக்கு என்று சொன்ன பொழுதும் அதை பெரிதாக பொருட் படுத்தாத உயர் அதிகாரிகளை ஒரு மாத காலமாவது ஷிப்ட் அடிப்படையில் அலுவலகம் வந்து இந்த cab சேவையை பயன் படுத்த வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் பிறந்தது. 'இத்தனை ஆயிரம் ஊழியர்களை வைத்து cab சேவையை சரி வர செய்வது எவ்வளவு கடினம் தெரியுமா உனக்கு' என்று இந்தப் பதிவை பார்த்து சம்மந்தப்பட்ட சிலர் கேட்கலாம். அய்யா! உங்களை நான் எனக்காக ஒரு தனி கார் கேட்கவில்லை, என்னை என் போக்கில் என் வசதிற்கு ஏற்ப எனது இரு சக்கர வண்டியில் வந்து செல்ல விடுங்கள் என்று தான் கேட்கின்றேன். <span style="color: #500050;"> </span><br />
<div style="color: #500050;">
</div>
</span>தனிமனித சுதந்திரம் பறி போவதைக் கண்டு இங்கு நாங்கள் யாரும் பொங்கி எழ மாட்டோம். எத்தனை விதிகள் போட்டாலும் எதிர்த்து பேச மாட்டோம். எங்கள் குறிக்கோள் பணம் சேர்ப்பது அல்லது ஏற்கனவே கடனில் இருக்கும் குடும்பத்தை மீட்பது. அதற்காக எவ்வளவு அடி அடித்தாலும் அசராமல் வாங்கிக்கொண்டே தான் இருப்போம். தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நின்ற காலமெல்லாம் கப்பல் ஏறிப் போய்விட்டது.<br />
<br />
வாழ்க சுதந்திரம்! </div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-66157833642147468262014-06-16T00:15:00.001+05:302014-06-17T06:28:36.280+05:30முகண் - சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<b style="color: red;">***************************************** </b><b><span style="color: blue;">BASED ON A TRUE STORY</span><span style="color: red;"> </span></b><b style="color: red;">****************</b><b style="color: red;">***************</b><br />
<span style="color: red;">இந்தக் கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை என்றபோதும், இதில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. </span><br />
<b><span style="color: red;">*******************************************************************************************************</span></b><br />
<b>05-May-2049</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழக்கத்திற்கு மாறாக உற்சாகத்துடனும், தன் கணவன் இன்று அனுமதிச் சீட்டுடன் வருவான் என்ற நம்பிக்கையுடனும் தனது படுக்கை அறையை வாசனை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்துக்கொண்டு இருந்தாள் ஈகா. அவளது சிந்தனை முழுவதுமே அவள் கணவன் மீதும் அவன் கொண்டு வரவிருந்த அனுமதிச்சீட்டின் மீதுமே இருந்தது. அன்று காலை மின்னஞ்சல் வழியே அரசாங்கத்திடம் இருந்து 'குழந்தைப்பேறு அனுமதி விண்ணப்பம்' வந்ததில் இருந்து அவளுக்கு தலைகால் புரியவில்லை, திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்க அனுமதிக்காக காத்திருந்தவள் அல்லவா. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஜீவா தலைமையிலான சர்வாதிகார அரசு 2030 ஆம் ஆண்டு உத்தரவு ஒன்று பிரப்பித்தது. "அரசு அனுமதி இல்லாமல் யாரேனும் பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது. மீறினால் குடியுரிமை பறிக்கப்பட்டு, அன்டார்டிக்காவிற்கு நாடுகடத்தப் படுவர்" என்ற பயங்கர ஆணையை பிறப்பித்திருந்தது. நாள் ஒன்றிற்கு நூறு குழந்தைகள் மட்டும் பிறக்க அனுமதி கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி, பதினைந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய வல்லரசாக இந்தியா உருப்பெற்றுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஈகா தன் கணவன் சிவா வருவதை கண்காணிப்பு திரையில் கண்டவுடன், கதவிற்கு பின் சென்று மறைந்துகொண்டு, அவன் உள்ளே வந்தவுடன் அவனை பின் புறமாக கட்டியணைத்தாள். சிவா சற்றும் உணர்ச்சியின்றி அவளை விளக்கிவிட்டு, சோபாவில் சென்றமர்ந்தான். ஏமாற்றத்துடன் அருகில் சென்ற ஈகாவிடம், எதுவும் பேசாமல், அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கினான். அதைப் பார்த்தவுடன் அதிர்ந்து போன ஈகா, அவளது மோதிரத்தின் முத்திரை சிவாவின் கன்னத்தில் பதியும்படி நல்ல பலமாக ஒரு முறை அறைந்தாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவா கொண்டுவந்த அனுமதியில் குழந்தைப்பெறுவதற்கு மாறாக குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதற்கான அனுமதி இருந்தது தான் அவளது சினத்தின் காரணம். குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுமதி கிடைத்தபோதிலும், அனாதை குழைந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அனுமதியை மாற்றி வாங்கி வந்ததால் அவனை தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். எதையும் பொருட்படுத்தாத சிவா, தன் வீட்டு பரணையில் இருந்து ஒரு சிறிய நாற்பது பக்க நோட்டை கொண்டுவந்து அவளிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னான். அதில் தமிழில் எழுதி இருக்கவே ஈகா நிதானமாக எழுத்துக் கூட்டி படிக்கத் தொடங்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>30-April-2014</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
சீனு, சீனி, ஸ்ரீனி, சீனுவாசன், ஸ்ரீனிவாசன் என்று பலரும் என் பெயரை பலவாறு உச்சரிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட சீனிவாசன் நான். தென்காசி காற்றை சுவாசித்து வளர்ந்த நான் சென்னையின் உஷ்ணக் காற்றை உட்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறேன். பலரைப்போல் அறிவியலில் இளங்கலை பயின்று, முதுகலையில் கணினி பயன்பாட்டு அறிவியல் பயின்று, சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் இருக்கும் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பல்லாயிரகணக்கான மனித மந்தையில் ஒருவனாக வேலை பார்க்கும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களுக்கு சற்றும் மாறாத ஒருவன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ன வேலை என்று கேட்கின்றீர்களா? உங்களுக்கு மட்டும் சொல்கின்றேன், யாரிடமும் கூறிவிடாதீர்கள், அது பரம ரகசியம். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின், மென்பொருள் இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணி. அந்த இயந்திரத்திற்கும் ஒரு பெண்ணுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஒரு பெண் எப்பொழுது சிரிப்பால் இல்லை அழுவாள் என்று யாராலும் கணிக்க முடியாதோ, அது போலத்தான் அந்த இயந்திரமும். எந்த நேரத்தில் பழுதாகும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு மாய வஸ்து. எங்கள் நிறுவனம் அந்த அமெரிக்க நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின்படி உடனுக்குடன் பழுது பார்க்க வேண்டும் இல்லையேல் எங்களைப் பதம் பார்ப்பார்கள். இங்கு பழுது பார்க்கும் என்னைப் போன்றவர்கள் தான் இந்த அமைப்பின் அடிமட்டம். எப்படி ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றாலும் தோற்றாலும் காரணம் கங்குலி என்பரோ, அப்படித்தான் இங்கு நாங்கள். எங்களுக்கு பழியிலும் புகழிலும் என்றுமே குறைவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேற்று (29-April-2014 அன்று) அந்த இயந்திரத்தில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு பயன்பாடு பழுதாகிவிட, அதை நான் மட்டுமே சீர் செய்ய முடியும் என்ற நிலை தோன்றிய கட்டாயத்தின் பேரில், நேற்று காலை பத்து மணிக்கு அலுவலகம் வந்த நான், அலுவலகத்தை விட்டு, எனது இருசக்கர வண்டியில் புறப்படத் தயாரான பொழுது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட மூன்று, நாள் 30-April-2014. வன்பொருள் இயந்திரத்தை நாள் முழுவதும் பழுது பார்க்கும் அளவிலான சோர்வும், மன உளைச்சலும், மென்பொருள் இயந்திரத்தை ஒரு மணி நேரம் பழுதுபார்த்தாலே அடைந்து விடுவோம். அப்படியென்றால் பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்ததால் நான் பெற்ற சோர்வை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அலுவலக அடித்தள பார்க்கிங் செல்ல வெளியில் வரும் பொழுது தான் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்ததை கவனித்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியில் நடக்கும் நிகழ்வுகளால் வேலையில் இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, ஒலி, ஒளி, காற்று இவை எதுவும் உள் நுழையாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரீக கண்ணாடிச் சிறை அது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழையில் நான் நனைந்தாலும் பரவாயில்லை எனது ஆண்டிராய்டு கைபேசி நனையக் கூடாது என்று எண்ணிக் கொண்டு எனது கைபேசியை கையில் எடுக்கும் பொழுது தான் கவனித்தேன் அதுவும் என்னைப்போல் உயிரற்று கிடந்ததை. முன்பெல்லாம், எனது பேசிக் மாடல் நோக்கியா கைபேசியில் ஒரு முறை முழு சார்ஜ் ஏற்றி விட்டால் போதும் குறைந்தது மூன்று நாள் வரை உயிருடன் இருக்கும். இந்த ஆண்டிராய்டு கைபேசி வந்ததில் இருந்து, எங்கு சென்றாலும் போனுடன் சேர்த்து சார்ஜரையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இன்று சார்ஜரை மறந்ததால் இந்த நிலை. அதே நிமிடம் தான் நான் மறந்த மற்றொன்று நினைவுக்கு வந்தது. அது என்னுடைய இரவு உணவு. பித்து பிடித்தவன் போல் நீரும் அன்ன ஆகாரம் இன்றி வேலை செய்ததை எண்ணி வருந்துவதா இல்லை பெருமை படுவதா என்று எனக்கு தெரியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அலுவலகத்தை விட்டு வெளியே சென்றால் சிங்கிள் டீ கூட கிடைக்காது அதிகாலை என்பதாலும், எனது கைபேசியை மழையில் இருந்து காக்க ஒரு பிளாஸ்டிக் பை தேவை பட்ட காரணத்தாலும், வேறு வழியின்றி அலுவலகத்தின் உள் இருக்கும் சரவண பவனை நோக்கி நடந்தேன். அங்கு கவுன்டரில் சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விசாரித்தால் 'தோசை மட்டும் தான் இருக்கு,சாம்பார் இல்ல' என்று சிவந்த கண்களால் கணினித் திரையை பார்த்துக்கொண்டேமேலும் சிவந்தான். வேறு வழியின்றி அந்த தோசையையும், பிளாஸ்டிக் கவருக்காக ஒரு உருளை சிப்ஸும் வாங்கினேன். இவர்கள் கொடுக்கும் தோசையின் மகத்துவம் என்னவென்றால், கல்லில் இருந்து எடுக்கபடும் அந்த பேப்பர் போன்ற தோசை தட்டை அடையும் முன், சூடான கல்லில் இருந்து எடுத்ததற்கான எந்தத் தடையமும் இன்றி நொடியில் ஆறி இருக்கும் என்பது தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கைபேசியை பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு, நான் நனைந்தாலும் பரவாயில்லை, வீடு சென்று படுக்கையில் எந்தச் சலனனும் இன்றி உறங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணத்தை தொடங்கினேன். கன மழை என்பதால் வண்டி ஓட்டக் கடினமாக இருந்தாலும், அந்நேரத்தில் மிக சொற்ப வாகனங்களே OMR சாலையில் சென்றுகொண்டிருந்ததால், முன்னெச்சரிக்கையுடன் இன்டிகேட்டர் போட்டுக்கொண்டு சாலை ஓரமாகவே சென்றுகொண்டிருந்தேன். மழைத்துளிகள் எனது ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு சாலையை மறைத்தால், கண்ணாடியை மேல் தூக்கி விட்டு இன்னும் மெதுவாக வாகனத்தை செலுத்தினேன். மழை தனது உச்சகட்டத்தை எட்டி இருந்தது. மழை நீர் துளிகள், ஊசி குத்துவதுபோல் எனது முகத்தை துளைத்துக் கொண்டிருந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாலையிலும் நீர் வரத்து சற்று அதிகரித்து இருந்தது. 'இது போன்ற சமயங்களில் டயர் நனைந்து போவதால் , பிரேக் பிடிக்கும் பொழுது வண்டி வழுக்கி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால் மிகவும் மெதுவாக சென்றால் தான் வண்டியை நமது கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும்' என்று எனக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்த தந்தையின் குரல் எனக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்த சமயம் நான் புனித ஜோசப் பொறியியல் கல்லூரியை கடந்து சத்யபாமா பல்கலைக் கழகத்தின் அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென ஒருவர் நான் வருவதை கவனிக்காமல் சாலையை தனது சைக்கிளில் கடக்க முயல்கிறார் என்பதை நான் கவனித்துவிட்டேன். ஹாரனை அடித்து அவரை எச்சரித்து கொண்டே எனது வண்டியின் பின் பிரேக்கை அழுத்தினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரேக் பிடித்தும் அவரது சைக்கிள் நிற்காததால், சற்று பயந்து போன அந்த சைக்கிள்காரர், தனது காலை சாலையில் ஊன்றி அவரது சைக்கிளை நிறுத்தும் சமயம், அவரது முன் சக்கரம் எனது வண்டியின் முன் சக்கரத்தை மிகவும் லேசாக முத்தமிட்டது. இவரும் நிம்மதி பெரு மூச்சு விட, அவர் என்னைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடி அவரும் அவர் சைக்கிளும் வானில் பறக்க, அவரை அடித்த டெம்போ எந்தக் கவலையும் இன்றி அசுர வேகத்தில் மறைந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்த நான் மீள்வதற்குள் மழை நின்று விட்டது. எனது வண்டியை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நான் ஓட, சிதறு தேங்காய் போல அவரது சைக்கிள் சிதறிக்கிடந்தது. அவர் அதைத் தாண்டி சாலை ஓரத்தில் இருந்த மணலில் விழுந்து நினைவின்றி கிடந்தார். அவரது காலில் இருந்து ரத்தம், குழாயில் இருந்து வரும் நீர் போல ஓடி மழை நீருடன் கலந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவர் உடலில் உயிர் இருந்தது. இல்லை இருந்தும் இல்லாமல் இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது பான்ட் பாக்கெட்டைத் தடவினேன் அதில் கைக்குட்டை இல்லை என்பதை அறிந்தவுடன் எனது வண்டியை நோக்கி ஓடினேன். மழையில் நனைந்து ஈரமாயிருந்த வண்டி துடைக்கும் துணியை சாலையில் தேங்கி இருந்த நீரில் அலசி விட்டு அவரது வலது முட்டிக்கு கீழே இறுக்கி கட்டினேன். ஆம்புலன்சை அழைக்க எனது கைபேசியில் உயிர் இல்லை, அந்த இடத்தில மனித நடமாட்டமும் இல்லை. அவரிடம் கைபேசி உள்ளதா என்று தேடத் தொடங்கிய பொழுது அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டை இருந்தது. அவர் பெயர் கோபால் என்றும் அவர் ஒரு அரசாங்க துப்புரவு தொழிலாளி என்பதையும் வாசித்த சமயம் அவரது சைக்கிளுக்கு அருகில் கைபேசியும் சிதறுகாயாக உடைந்திருப்பதைக் கண்டேன். அந்த சிம்கார்டை மட்டும் எனது பைக்குள் போட்டுக் கொண்டு, சாலையின் மத்தியில் வாகனம் ஏதேனும் வர காத்திருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமார் பத்து நிமிடம் கழித்து சாலையின் எதிர் புறத்தில் வந்த வாகனத்தை ஓடிச் சென்று நிறுத்தி, அதன் ஓட்டுனரிடம் உடனே ஆம்புலன்சை அழைக்கச் சொன்னேன். எப்பொழுதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தின் அருகில் ஒரு அரசு ஆம்புலன்ஸ் இருப்பதை கவனித்ததுண்டு. ஐந்தாவது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிச் செல்ல, அவரை அப்படியே விட மனமின்றி, நானும் எனது வண்டியில் அவர்களை பின் தொடர்ந்தேன். சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய அரசு மருத்துவமனையில் கோபாலுக்கு அவசர முதலுதவி சிகிச்சை தொடங்கும் பொழுது மணி 4:15. அவரது வீட்டிற்கு தகவல் சொல்லலாம் என்று அவரது அடையாள அட்டையை எடுத்து மீண்டும் பார்த்தேன் அதில் அவரது கைபேசி எண் மட்டும் தான் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு காவல் துறை அதிகாரி (கான்ஸ்டபில்) என்னை விசாரிக்க, நான் நடந்ததை சொல்லி முடித்த பிறகு 'நம்பர் நோட் பண்ணிங்களா' என்று கேட்க, நான் 'இல்லை' என்று தலையாட்ட, பின் எனது முகவரி மற்றும் கைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டார். அவரிடம் அந்த அடையாள அட்டையைக் கொடுத்தவுடன், அவர் அந்த விலாசத்திற்கு ஆள் அனுப்பி தகவல் சொல்வதாக கூறினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குள் அந்த மருத்துவர் என்னிடம் வந்து 'அவருக்கு வேண்டிய முதலுதவி கொடுத்தாச்சு, பெரிய ஆபத்து ஒன்னும் இல்லை. ஆனால் அவர் காலில் அடி பலமாக இருக்கு. அறுவை சிகிச்சை செய்யணும். இங்கு அதற்கான வசதி இல்லை. நீங்க ஒரு நல்ல தனியார் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோயிடுங்க' என்று கூறினார். 'இதற்கு மேல் அவரது குடும்பம் பார்த்துக் கொள்ளட்டும் நான் போய் என் பொழப்பை பார்க்கின்றேன் ' என்று நான் சொல்ல முற்பட்டாலும் எனது மனிதாபிமானம் என்னைத் தடுத்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகில் கஷ்டத்தில் இருக்கும் அனைவரையும் என்னால் காத்து உதவ முடியாத ஒரு சுய நல வாழ்க்கை வாழும் எனக்கு, என் கண் முன் வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதிலாவது ஒரு அல்ப சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினேன். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான் முற்பட, அதை தடுக்க முயன்ற அந்த காவல் துறை அதிகாரிக்கு என்னிடம் இருந்த ஒற்றை ஐநூறு ரூபாய்த் தாளை அவர் கையில் வைத்து, நான் செல்லும் தனியார் மருத்துவமனைக்கு கோபாலின் குடும்பத்தை அனுப்ப சொல்லி விட்டு ஆம்புலன்சுடன் சென்றேன். அந்தத் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துச் செல்ல, அங்கு வரவேற்பில் இருந்த பெண்ணிடம் எனது கைபேசிக்கு உயிர் ஊட்ட அவள் உதவியை நாடினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவளிடம் எனது கைபேசிக்கு பொருந்தும் சார்ஜர் இருக்க, அளவான புன்னைகையுடன் எனது கைபேசியை வாங்கி அவள் இடத்தில இருந்த பிளக் பாயிண்டில் சார்ஜரை சொருகினாள். நான் அங்கிருந்து திரும்பியவுடன் அந்த மருத்துவர் 'அவருக்கு பிளோ ணீ அம்புயுடேஷன்(below knee amputation) பண்ணனும். அவரு வீட்டுக்கு தகவல் சொல்லி சீக்கரம் வரச் சொல்லுங்க. பார்ட்டி தௌசந்(forty thousand) கட்டணும்' என்று அவர் நிதானமாக சொல்லி முடிபதற்குள், வரவேற்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றால் அந்தப் பெண் ஒருவரை கை காட்டி அவர் கோபாலை தேடி வந்ததாக சொன்னாள். இம்முறையும் அதே அளவில் புன்னகை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயரம் சற்று கம்மியாக, தலை முடி நரைக்கத் தொடங்கிய நிலையில் இருந்த அந்த ஆசாமி என்னிடம் வந்து 'நான் ராமசாமி. கோபாலோட தோஸ்து. அவனோட பக்கத்துக்கு ஊடு தான். என்ன ஆச்சு?' என்று கேட்டார். சத்யபாமா முதல் இந்த தனியார் மருத்துவமனை வரை முழு கதையையும் சொன்னேன். சற்றே கலங்கிய ராமசாமி சுவரின் ஓரம் வரிசையாக இருந்த இருக்கைகளின் ஒன்றில் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தார். அவரது அருகில் சென்று அமர்ந்து 'அவர் வீட்ல இருந்து யாரும் வரலையா?' என்று கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அவன் சின்ன வயசுலையே அவங்க அப்பா அம்மா செத்துட்டாங்க. என் ஆத்தாதான் அவனையும் வளர்த்துச்சு. அவனுக்கு இருக்குறது அவங்க அப்பா விட்டுட்டு போன ஒரு குடிசையும் அப்பறம் அவன் அடம் பிடுச்சு கட்டிக்கின இந்தப் பொண்ணும் தான்' என்று அவர் சொல்லியவுடன் நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். என்ன நடக்கின்றது என்பது கூடத் தெரியாமல் ஏதோ ஒரு உலகில், என்னவோ, யாரிடமோ பேசிகொண்டிருந்தாள். அவளது முந்தானை விலகி இருப்பதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை அவள் கைகளுக்கு உணர்த்த முடியாத நிலையில் அவள் மூளை இருப்பதை நான் உணர்ந்த பொழுது, 'கோபால் யு ஆர் கிரேட்' என்று என்னுள் சொல்லிக்கொண்டேன். ராமசாமி 'இந்தப் பொண்ணு மூணு மாசம் முழுவாம வேற இருக்கு. இனி இந்த மூணு உசுர அந்த கருப்பன் தான் காப்பாத்தணும்' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களுக்கு அது மிகவும் பெரிய தொகை என்பதையும், கருப்பன் வந்து காப்பாத்துவதற்குள் அவர் நிலை மோசமாகி விடும் என்பதையும் நான் உணர்ந்தேன். அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, வரவேற்பை நோக்கிச் சென்று, எனது கைபேசியை அந்தப் பெண்ணிடம் கேட்டேன். அவளுடைய சிரிப்பின் அளவே உயிர் பெற்றிருந்த எனது கைபேசியை நீட்டினாள். கைபேசியை ஆன் செய்த பொழுது மணி 07:30. அன்று மாதத்தின் கடைசி நாள் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் சம்பளம் வந்துவிடும். எனக்கும் அம்மாத சம்பளம் வந்தவுடன், வங்கி இருப்பு 37 ஆயிரம் ரூபாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. நீங்கள் என்ன நினைகின்றீர்களோ அதே தான் நானும் செய்தேன். உடனே சென்று 35 ஆயிரம் ரூபாயை செலுத்தி, சிகிச்சையை தொடங்கச் சொல்லிவிட்டு, என் நண்பனுக்கு அழைத்து 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வரச் சொன்னேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மணி நேரத்திற்குள் காசுடன் வந்த என் நண்பன், நடந்ததை அறிந்தவுடன் 'அதுதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்ட இல்ல. மூடிட்டு வீட்டுக்கு வர வேண்டியது தான. பேர் தெரியாத யாருக்கோ இப்படி காச தூக்கி கொடுக்கற. உனக்கு அறிவே இல்லயா' என்று என்னை திட்டத் தொடங்கினான். அவனை பொருட்படுத்தாமல் ஐந்தாயிரத்தை செலுத்திவிட்டு, மீதம் இருந்த ஐந்தாயிரத்தை ராமசாமியிடம் 'மருந்துச் செலவுக்கு இத வச்சிக்கோங்க. அவர பார்த்துக்கோங்க. நான் அப்பறம் வர்றேன்' என்றவுடன், ராமசாமியின் கண்ணில் நீர் தானாக ஒழுகத் தொடங்கியது, கைகூப்பி எனக்கு நன்றி சொன்னார். ஒரு உயிரை காப்பாத்திய பெருமையுடன் அன்று பகல் முழுவதும் நிம்மதியாக உறங்கினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்று நாட்கள் கழித்து கோபாலை சந்திக்க அந்த மருத்துவமனைக்குச் சென்றேன். ஒற்றை காலை இழந்து சுய நினைவுடன் இருந்த கோபால், 'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க. நான் பூட்ருந்தா என் சரோஜா என்ன ஆயிருக்கும். கலைனர் காப்பீட்டு திட்டத்துல இருந்த காசு வந்ததும் உங்களுக்கு கொடுத்துர்றேன்' என்றார். 'காசு பற்றி கவலை வேண்டாம், உடலை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அவருக்கு ஆதரவு சொல்லி வீடு திரும்பினேன். ஒரு மாத சம்பளம் முழுவதையும் இழந்ததால் அந்த மாசத்தை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. வீட்டு வாடகையை நண்பர்கள் பார்த்துக்கொண்ட பொழுதும், அந்த மாதத்தின் பல நாட்கள் இரண்டு வேளை மட்டுமே உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு வாரம் கழித்து அவரை பார்க்கச் சென்ற பொழுது, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து வந்த இருபது ஆயிரம் ரூபாயை, நான் மறுத்தும், கட்டாயப் படுத்தி என்னிடம் கொடுத்தார். மீதி பணத்தை மூன்று மாதத்தில் திரும்பத் தருவதாக அவர் சொன்னதை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதில் பத்தாயிரத்தை எனது நண்பனிடம் கொடுத்து விட்டு, மீதம் இருந்த பணத்தில் ஒரு வீல் chair உம், ஒரு பேசிக் மாடல் நோக்கியா போனும் வாங்கினேன். அவரது சிம் கார்டை அதில் போட்டு அவரிடம் இரண்டையும் கொடுத்து விட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்கு மாதங்களுக்கு பிறகு அவரது ஓய்வுத் தொகையை வைத்து அவர் தொடங்கிய ஒரு சின்ன ரீசார்ஜ் கடையை திறக்கும் பொழுது என்னையும் அழைந்திருந்தார். என் வாழ்வில் நான் சந்தித்த பல மனிதர்களில், கோபாலைப்போல் தன்னபிக்கை உடையவர்களை நான் கண்டதில்லை. ஊனம் என்பது உடலில் இல்லை ஒருவரின் மனதில் தான் இருக்கின்றது என்பதை எனக்கு புரியவைத்தவர் கோபால். ஒன்பதாவது மாதம் ஒரு அழகான ஆண்பிள்ளையை அவர் மனைவி ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையைக் கண்ட அந்த கணமே 'அவனின் செலவுகளுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொண்டு அவனுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தேன். இதை கோபாலிடம் கூறியபொழுது அவர் உடன்படவில்லை, தன் மகனைத் தன்னால் ஆளாக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ராமசாமி எனக்கு துணையாக அவர் மனதை மாற்ற உதவினார். என்னிடமிருந்த ஒரே ஒரு கோரிக்கையை கோபாலிடம் கூறினேன். 'இவன் வளர்ந்து எனக்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை, ஆனா இவன் ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலே எனக்குப் போதும்' என்று நான் உறுதியாக கூற கோபால் உடன்பட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>05-May-2049</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதை முழுவதும் படித்து முடித்து, புல்லரித்து இருந்த ஈகாவின் காது அருகில் சென்று சிவா 'அந்தப் பையன் நான் தான்' என்று சொல்லியவுடன், அவள் கண்களில் இருந்து பெருகிய நீர் கன்னத்தின் வழியாக வடிந்து அவள் கையையும் தாய்மையையும் நனைத்தது.</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-72337769415756571392014-06-13T00:40:00.000+05:302014-06-16T00:39:33.542+05:30தேன் மிட்டாய் - மே 2014<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">Anniversary:</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிக முக்கியமான தேன் மிட்டாய் எனது உடல் நலக் குறைவால் தாமதமாக வெளியிடுகின்றேன். சென்ற ஆண்டு இதே மே மாதம் தொடங்கியது எனது தேன் மிட்டாய் பகுதி, இந்தப் பதிவுடன் ஓர் ஆண்டுகால சாதனையை நிறைவு செய்கிறது. எனது பார்வையில் எனது வாழ்க்கை அனுபவங்கள் வாசகர்களை எந்த அளவுக் கவரும் என்ற ஒரு சந்தேகத்துடன் தான் 'தேன் மிட்டாயை' தொடங்கினேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழி ஒருவர் சென்ற மாத பதிவை படித்து விட்டு, 'தேன் மிட்டாய் நல்லா இருக்கு நீ எழுதற மத்ததை விட. தேன் மிட்டாய் மட்டுமே நீ எழுதலாம்' என்று கூறியதில் எனக்கும் தேன் மிட்டாய்க்கும் பெரும் வெற்றியே. மற்ற பகுதிகள் அவள் பார்வையில் மொக்கையாக உள்ளன என்ற உள் குத்தையும் அந்த வாசகத்தின் மூலம் நான் அறிவேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>ஆயிரத்தில் ஒருவன்:</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமீபத்தில் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையில் தோன்றியதை நான் திரையரங்கம் சென்று கண்ட அனுபவத்தை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். அதற்கான நேரம் இது வரை வராததால், இங்கு சிறு குறிப்பாக பதிகின்றேன். வரலாறு மிக முக்கியம் அல்லவா. சத்தியம் திரையரங்கில் Studio-5 திரையில், MGR வெறுக்கும் எனது தோழனுடன் படத்தை காணச் சென்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் நண்பனோ சிவாஜியை போற்றி MGRயை பழிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன். நானோ என்றும் MGR பக்கம் நிற்கும் குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவன். என்னை அவன் பல ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்க்கச் செய்த கொடுமைக்கு அவனை பழிவாங்க எனக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் இது என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அவனால் இருக்கையில் அமர முடியவில்லை, MGR திரையில் தோன்றி வீர வசனங்கள் பேசும் பொழுதெல்லாம் நெளிந்து கதறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்களைத் தவிர்த்து உள்ளே இருந்தவர்கள் அனைவரும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒவ்வொரு பாடல் திரையில் வரும் பொழுதும் எனது அருகில் இருந்தவர், பாடத் தொடங்கி விடுவார். 'அதோ அந்த பறவை போல...' என்று TMS குரல் ஒலிக்க, என்னை அறியாமல் எனது உதடுகளும் பாடத் தொடங்கின. ஒரே ஒரு குறை தான். சத்யம் என்பதால் அனைவரும் சற்று அமைதியாகத் தான் படம் பார்த்தார்கள். அடுத்து MGR படம் திரையில் வரும் பொழுது MGR ரசிகர்களுடன் விசில் சத்தம் காதுகளை பிளக்க ஒரு லோக்கல் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">பேருந்து நிழற்குடை</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுட்டெரிக்கும் மதிய வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் சமயம், கருப்பு லெதர் சூவை லென்ஸ் வைத்து எரிப்பது போல் சூரியன் சுடும் சமயம் பலரை எனது வாய் பழிச் சொல்லால் சபிக்கும். 'அவுங்க நாடு குளிர் நாடு, அவன் சூ, கோட்டு எல்லாம் போட்டு வேல பார்ப்பான். இங்க வெய்யில். எங்களால முடியல சாமி'. கணினி முன் செய்யும் வேலைக்கு முழுக்கை சட்டையும் சூவும் எதற்கு என்று பலமுறை நான் சிந்தித்ததுண்டு. இவை அனைத்தும் பொருளாதார அடிமைத்தனத்தின் உச்சகட்டம். அந்த வட்டத்திற்குள் சென்றால் பல சிக்கல்கள் வரும், நாம் திரும்பிவிடுவோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோழிங்கநல்லூர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக வேகமாக மாறிவருகின்றது. அங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் பேருந்துகளை உபயோகிக்கின்றனர். அப்படி இருக்க அங்கு நிழல் தரும் ஒரு மரமும் இல்லை, பேருந்து நிலையமும் இல்லை. மதிய வேளைகளில் முடியல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பக்கம் பேருந்து நிலையம் இல்லை என்றால், இருக்கும் இடங்களில் 'மாண்புமிகு .............. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில்' என்று ஆரம்பித்து அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பெயர் வரை எழுதிவிடுகின்றனர். ஆனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் மட்டும் எங்கு தேடியும் கிடைப்பதில்லை. ஊருக்கு புதிதாய் வருபவர்களின் கதி அதோ கதி தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">Vending Machine</span></b></div>
<div style="text-align: justify;">
அலுவலகத்தில் புதிதாய் மூன்று Vending Machine களை நிறுவியுள்ளனர். இதில் 5,10,20 ரூபாய் தாள்களை செலுத்தி, item-codeஐ என்டர் செய்தால், நமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அதனுள் பெரும்பாலும் இந்த டின் கோக்,பெப்சி வகையறா, lays, haldiraams தின்பண்டங்கள், மற்றும் சாக்லேட்கள் இருக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு முன் இந்த இயந்திரங்களை பயன்படுத்திய அனுபவம் எனக்கு கிடையாது என்பதால் எனது தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு அதில் ஏதேனும் வாங்க வேண்டும் என்று சென்றேன். முதலில் நாங்கள் செலுத்திய பத்து ரூபாய் தாளை, 'கசங்கிய தாள்' என்று அது துப்பிவிட்டது. அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு மேலும் நான்கு புதிய பத்து ரூபாய் தாள்களை செலுத்தினோம். தோழி 25 ரூபாய் டின் கோக் வாங்க, நான் 12 ரூபாய் ப்ரூட்டி வாங்கினேன். எனது மனதினுள் '25+12=37. 40-37=3', அப்ப அந்த மூன்று ரூபாய் வராதா என்று ஏங்கிய பொழுது ஒரு அம்மணி அவரசமாக வந்து பத்து ரூபாய் தாளை உள்ளே செலுத்தினார். 'நம்ம மூனு ரூபா போச்சு' என்று நான் நம்பிக்கை இழக்கும் சமயம், அவர் 10 ரூபாய் lays மட்டும் வாங்க, அடுத்த பத்து நொடிகளில் அந்த இயந்திரம் எனது சில்லறையை துப்பியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">வாழைத் தோட்டம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழக்கம் போல் அலுவலகம் செல்லும் ஷேர் ஆட்டோ... சி... கேபில் செல்லும் பொழுது மேடவாக்கம் அருகே ஒரு பெண்மணியை பிக் அப் செய்ய சென்ற வழியில், ஒரு பெரிய கிணறுடன் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு வாழைத் தோட்டம் ஒன்றைக் கண்டேன். கான்கிரிட் காடுகளுக்கு மத்தியில் ஒரு வாழைத் தோட்டத்தைக் கண்டது என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. அடுத்த முறை அந்தப்பக்கம் சென்றால் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">Unibrom </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது எனது பாட்டிக்கு அவரது கண் டாக்டர் புதுவையில் எழுதிக் கொடுத்த சொட்டு மருந்து. அது தீர்ந்து விடவே, சென்னை வந்தப்பொழுது என்னை வாங்கித் தரச் சொன்னார். நானும் பல மருந்துக் கடைகளில் கேட்டு, எங்கும் கிடைக்காததால், எங்கள் வட்டாரத்தில் சற்று பெரிய மருந்துக் கடைக்குச் சென்றேன். அங்கும் கிடைக்கவில்லை. அந்தக் கடை உரிமையாளரிடம் 'இது எங்கு தான் கிடைக்கும்?' என்று வெறுப்புடன் கேட்டேன். அவர் 'இது யார் எழுதியது?' என்று பொறுமையாக கேட்டார். நான் 'புதுவையில் ஒரு டாக்டர்' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'அங்கு மட்டும் தான் கிடைக்கும்' என்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது கிளினிக் உடன் இருக்கும் தனது சொந்த மருந்துக் கடையில் மட்டும் கிடைக்கும் மருந்துகளை மக்களுக்கு எழுதிக் கொடுத்து நல்ல வியாபாரம் பார்க்கும் மருத்துவச் சமுதாயம் பெருகிக் கொண்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">ஆபாச விளம்பரம் </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
IPL விளையாட்டுகள் பார்த்த பொழுது என்னை மிகவும் கோபப்படுத்தியது சில விளம்பரங்கள். மிகவும் குறிப்பாக சில ஆணுறை மற்றும் பாடி ஸ்ப்ரே விளம்பரங்கள் சற்று அதிக அளவில் ஆபாசத்தை தொலைகாட்சித் திரையில் தெளிக்கின்றன. தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு என்று இயங்கும் சென்சார் போர்டின் அளவுகோல் தான் என்ன? </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"> கனவில் யார் தெரியுமா? </span></b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மே மாதம் 23 ஆம் நாள், நோய் வாய்ப்பட்டு குணமான எனது தாத்தாவை எங்களது கிராமத்தில் சென்று விட்டு சென்னை திரும்பிய அந்த வெள்ளி இரவு கடும் ஜுரம். மறு நாளும் ஜுரம் தொடர, எனக்கு சில சூட்டுக் கட்டிகளும் உடன் தோன்றின. எங்கள் வீட்டில் அம்மை வந்த அனுபவம் உள்ள எனது அம்மா மட்டும் 'இது அம்மை' தான் என்று உறுதியாக சொன்ன பொழுதும், சில கட்டிகள் முதுகில் மட்டும் இருக்கவே என்னால் அதை ஏற்க முடியவில்லை. மாலை டாக்டரிடம் சென்றால் அவர் ஒரு கட்டியை பார்த்தவுடனே இது அம்மை தான் என்றார். அம்மைக்கு மருந்து எதுவும் இல்லாததால், ஜுரத்திற்கு மட்டும் மருந்து கொடுத்து அனுப்பினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மை என்றவுடன் 'அம்மன்.சாமி' என்று பல அலப்பறைகள் செய்யத் தொடங்கினர். அது அந்தச் சிறுக்கி varicellaவின் வேலை என்றால் யாரும் கேட்கவில்லை. இவர்கள் பண்ண அலப்பறையுடன் உறங்கிய எனது கனவில், அம்மன் வடிவில் நம்ம ரோஜா ஆண்டி எனது வீட்டிற்கு வந்து என் நெற்றியில் கை வைக்கின்றார், சூட்டை குறைக்க. </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-66652189296639440002014-05-15T05:18:00.001+05:302014-05-15T05:18:03.670+05:30தேன் மிட்டாய் - ஏப்ரல் 2014<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சில அலுவல்கள் காரணமாக எழுத்துக்கு நெடுநாள் இடைவெளி விட்டிருந்தேன். மீண்டும் உங்களை உற்சாகத்துடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">சென்ற மாதத்தின் தொடர்ச்சி</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்களின் பின் சென்றால் அது எப்போழுதும் ஏமாற்றம் தான் என்பது பெண்களின் பின்னழகை ரசித்து பின் தொடர்ந்து, முன்னழகைக் கண்டு மனம் புண்ணான பல ஆண்கள் அறிந்த உண்மை என்பதால் அந்த சம்பவத்தை பற்றி மேலும் பேசப் போவதில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">கல்யாண சீசன்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னமோ எதோ தெரியவில்லை, இந்த மாதம் எதிர்பாராத பல கல்யாண சேதிகள் என் காதுக்கு வந்து சேர்ந்தன. ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், மறுபுறம் மனதை ஒரு இனம் தெரியாத சோகம் வந்து சூழ்ந்து கொண்டது. சில திருமணங்கள் முன்பே திட்டமிட்ட பொழுதும் நாட்கள் நெருங்கும் பொழுது தான் பிரிவின் வலி மேலும் அதிகமாகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1.எத்தனை தமிழ் சினிமாவில் கேலி செய்த பொழுதும், தமிழ் நாட்டில் இன்னும் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு மௌசு குறையவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2.ஆண்-பெண் நட்பு என்பது அந்தப் பெண்ணின் திருமணம் வரையில் தான். எவ்வளவு தான் மனிதர்கள் தாங்கள் நாகரிகமாகவும் மிகவும் 'பிராக்டிகலாகவும்' மாறிவிட்டதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருக்கும் மிருக குணமான சந்தேகம் இன்னும் மாறவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>மாங்காய் லஞ்சம்</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிப்காட் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு மாமரம் உண்டு என்பதை கவனிக்கும் அளவு கூட நேரம் இல்லாத சாபம் பெற்றவர்கள் சக மென்பொருள் தோழர்கள். ஒரு நாள் பேருந்து வரக் காத்திருக்கும் பொழுது 'தொப்' என்ற சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த பொழுது மூன்று சிறுவர்கள் தேர்ந்த கல் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு மாங்கனி ஏற்கனவே இருந்தது. நான் எறிய பேருந்தில் அவர்களும் ஏற, நாங்கள் நால்வரும் ஓட்டுனரின் இடது பக்கம் இருக்கும் சீட்டில் அமர்ந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூவரில் சற்று உயரமாக இருந்தவன் ' அண்ணா இந்தப் பையன் கிட்ட பாஸ் இல்ல. செக் பண்ணுங்க' என்று சற்று குள்ளமாக இருந்த சிறுவனை ஓட்டுனரிடம் மாட்டிவிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டோல் கேட்டில் வண்டியை நகர்த்திக் கொண்டே ஓட்டுனர் ' உன் வீடு எங்கடா' என்று கேட்க, அந்தச் சிறுவன் ஒரு வினாடியும் தாமதிக்காமல் 'துபாய்ல', என்று சொல்ல சற்று சத்தமாகவே நான் சிரிக்க, ஓட்டுனர் முகம் காற்று போன சைக்கிள் டுயுப் போல சுருங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலூர் - சத்யபாமா பேருந்து நிருந்தங்களுக்கு இடையில் ஒரு மாந்தோப்பு சாலை ஓரமாக உண்டு. அதைக் கடக்கும் பொழுது அந்த சிறுவர்கள் ' பார்ரா எவ்வளோ மாங்கா' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டு, 'அண்ணா அந்தத் தோப்பு பக்கத்துல ஓரமா நிறுத்துங்க' என்று பணிந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓட்டுனரோ 'இங்க ஸ்டாப் எல்லாம் இல்ல, அடுத்த ஸ்டாப்ல இறங்கி நடந்து வாங்க' என்று மறுக்க, அந்தச் சிறுவனோ 'நீங்க திரும்பி வரப்ப மாங்கா தர்றேன்' என்று வியாபாரம் பேசத் தொடங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாங்காய்த் திருட சிறுவர்கள் லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு சமுதாயம் மேலோங்கியுள்ளதைக் கண்டு அகமகிழ்ந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">எங்கும் தமிழ்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த மாதம் அதிக நேரம் மருத்துவமணையில் செலவழிக்கும் பொழுது என்னைச் சிந்திக்க வைத்தது ஒரு பெயர் பலகை.</div>
<div style="text-align: justify;">
Out-Patients - புறநோயாளிகள்</div>
<div style="text-align: justify;">
In-Patients - உள் நோயாளிகள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புறம் என்பதிற்கு எதிர் அகம் தானே. அப்படியென்றால் அகநோயளிகள் என்றுதானே இருக்க வேண்டும். அல்லது உள் என்பதிற்கு எதிர்மறையாக 'வெளி நோயாளிகள்' என்றல்லவா இருக்க வேண்டும். இது என்னையா குழப்பம்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">சேவை மையம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரவு தூங்கப் போகும் பொழுது என் கைபேசியை சார்ஜில் போட்டு விட்டு பத்து மணி நேரம் கடந்த பின்பும் 75% மட்டுமே சார்ஜ் ஏறி இருந்தது. 100% சார்ஜ் பூர்த்தி ஆனாலே ஆறு மணி நேரம் தான் தாங்கும், இப்படி பொறுமையாக சார்ஜ் ஏறினால் என் பாடு அதோ கதிதான் என்பதால் இணையத்தில் தாம்பரத்தில் இருக்கும் சாம்சங் சேவை மையத்தை தேடித் பிடித்து அங்கு சென்றடையும் பொழுது மாலை ஆறு மணி பத்து நிமிடம். சேவை மைய வரவேற்பில் இருந்த அம்மையார் ஆறு மணியுடன் அவர்கள் சேவை முடிந்ததால் நாளை வரச் சொன்னார். நானோ எனக்கு இரவுப் பணி இருப்பதால் சற்று தாமதமாகி விட்டது, நாளை மீண்டும் வருவது கடினம், இன்றே எடுத்துக் கொள்ளுங்கள் என்று போராடினேன். மேலும் பத்து நாட்கள் கடந்தால் எனது வார்ரன்ட்டி காலம் முடிவடையும் என்ற காலக் கெடு வேறு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த அம்மையார் 'செக் பண்ணி என்ட்ரி போடணும். ஒரு மணி நேரம் ஆகும். நாளைக்கு வாங்க' என்று என் வேண்டுகோளுக்கு இணங்காமல், சக அலுவலரிடம் 'ஆறு மணிக்கு கதவ சாத்த சொன்னன்தான உன்ன' என்றவுடன், எனக்கு மேலும் அங்கு கெஞ்ச பிடிக்காமல் வீடு திரும்பினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள் இரவுப் பணி முடித்து, என் உறக்கத்தை பாதியில் தடைபோட்டு விட்டு, கதிரவன் சுட்டெரிக்கும் நடுப்பகலில் அந்தச் சேவை மையம் சென்றடைந்தேன். அதே அம்மையார். இம்முறை என்னுடைய பெயர் மற்றும் கைபேசி எண்ணை, ஒரு கோடு போட்ட சிறு நோட்டில் குறித்துக் கொண்டு 'பத்து நாள் கழித்து புதுசு வந்தவுடன் கால் பண்ணுவோம்' என்றார் . 'நேத்து என்னமோ செக் பண்ணனும், ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னது' என்று எனக்குள் ஒரு கோவம் எழுந்த போதும், எனது சுபாவம் அதை விழுங்கி விட அமைதியாக வீடு திரும்பினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்து நாட்கள் கழித்து அழைப்பு வர, எனது பழுதடைந்த சார்ஜர், மற்றும் ரசீதின் நகலுடன் சென்றேன். அன்றும் அதே அம்மையார். ஒரு வழியாக எனது சார்ஜரை திரும்ப வாங்கிக்கொண்டு புதுசு கொடுத்தார். இறுதிவரை அதை அவர் முதல் நாள் சொல்லியது போல் செக் செய்யவே இல்லை. ஆனால் இம்முறை 'ரூபக் சார்! ரூபக் சார்' என்று ஒரே மரியாதைதான். நான் வலையில் எழுதிவிடுவேன் என்ற பயமோ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">கவனம் தேவை</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
OMR சாலையில் செல்லும் கல்லூரி வாகனங்களில் எழுதி இருக்கும் வாசகம் 'கல்லூரி வாகனம் கவனம் தேவை' . இதற்கு பல நாட்களாக தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருந்தேன். சமீபத்தில் அந்த கல்லூரி வாகனம் ஒன்று என்னை சாலையில் கடந்த பொழுதுதான் அந்த வாசகத்தின் உண்மையான அர்த்தம் எனக்கு புரிந்தது. கல்லூரி வாகனம் வந்தால் நாம் கவனமாக ஒதுங்கி செல்ல வேண்டும் போல. OMR சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வாசகத்தின் அர்த்தம் புரியாமல் இருக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மாத்தி பேசு</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் C51 ஏறி காலை ஏழு மணிக்கு தாம்பரம் சென்றுகொண்டிருக்கையில், சுங்கச் சாவடிக்கு முன் குடும்பமாக நால்வர் பேருந்தில் ஏறி, ஸ்டேஜ் க்ளோஸ் செய்துகொண்டிருந்த நடத்துனரிடம் அவர்கள் 'தாம்பரம்' என்று சொல்ல, அவர்களை இருக்கையில் அமரும்படி நடத்துனர் சைகை செய்துவிட்டு தன் பணியை தொடர்ந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தம் பணியை முடித்து அவர்களிடம் டிக்கெட் கொடுக்க அணுகும் பொழுது நால்வரிடமும் ஏற்கனவே ஒரு நாள் பாஸ் இருந்தது. அவர்கள் நால்வருக்கும் சேர்த்து ஸ்டேஜ் கிளோஸ் செய்த நடத்துனர் சற்றே கோபமுற்று சண்டைப் பிடிக்கத் தொடங்கினார். சண்டை வலுக்க அவர்கள் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலம்பிக் கொண்டே நடத்துனர் மற்றவர்களிடம் டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார். ஒருவர் 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்க, நடத்துனரின் முகம் சிவக்க, 'காலையில நோட்டு நோட்டா நீட்டனா. நான் எங்க போறது' என்று அவர் தன் வாயில் வயலின் வாசிக்க தொடங்கும் பொழுது, அந்த 500 ரூபாய் தாளை நீட்டியவர் 'அவங்க அந்த ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஏறிய உடனே காட்டியிருக்கணும்' என்றவுடன் நடத்துனரின் கோபம் மீண்டும் அவர்கள் மேல் திரும்ப, இவருக்கு சில்லரையும் கிடைத்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>Octopus</b></span></div>
<div style="text-align: justify;">
ஒரு தனியார் தொலைகாட்சியில், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் octopus சீன முறையில் சமையல் செய்யும் காட்சியை பார்த்தது முதல் அந்த உணவை உண்ண வேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம் நாவில் உமிழ் நீர் சுரக்கின்றது. நான் எப்பொழுது சீனா சென்று அதை உண்பது? அது போகட்டும். இந்த octopus என்றால் தமிழில் என்ன? <br />
<br />
இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவு - <span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 18px; text-align: start;"><a href="http://vasagarkoodam.blogspot.com/2014/05/sorgath-theevu-sujaatha.html" target="_blank"><span style="color: blue;">சொர்க்கத் தீவு</span></a></span></div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-7358350288088595602014-03-31T00:02:00.001+05:302014-03-31T00:52:08.457+05:30தேன் மிட்டாய் - மார்ச் 2014<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
என் வலைப் பெயரை நீங்கள் கவனித்திருந்தால் அது மாறியிருப்பதை உணரலாம். எனது வலையுலக வாழ்வில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது, புது உற்சாகம் பிறக்க 'கனவு மெய்ப்பட' என இயங்கிவந்த எனது தளம், இனி 'சேம்புலியன்' என்று இயங்கும். பெயர் மாற்றலாம் என்று முடிவு செய்துவிட்டு, யோசனைக்காக ஒரு பிரபல பதிவரை அணுகிய பொழுது, 'சேம்புலிபுரம்' என்னும் எனது கிராமத்தின் பெயரை டிங்கரிங் செய்து அவர் சூட்டிய பெயர் தான் 'சேம்புலியன்'. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">கட்டாயத் தேர்வு </span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
முந்தைய <a href="http://www.rubakram.com/2014/02/2014.html" target="_blank"><span style="color: blue;"><b>தேன் மிட்டாயின்</b></span></a> தொடர்ச்சி, மொத்த 64 கேள்விகளில் முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடனே அந்தத் தேர்வு அறையை விட்டு வெளியேறி, தேர்வு அதிகாரியை அழைத்தேன். அவர் உள்ளே வந்து இரண்டு முறை கிளிக் செய்ய முயன்றும், திரை மந்தமாக எந்த ஒரு மாற்றமும் காட்ட மறுத்தது. என்னிடம் 'எவளோ நேரமா இப்படி இருக்கு' என்று கேட்க, நான் 'ஐந்து நிமிஷமா' என்றேன். உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்தார். விண்டோஸ் லோகோ திரையில் உருபெறும் பொழுது எனது இதயம் வழக்கத்தை விட அதிக ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. தேர்வு சாப்ட்வேரை லோட் செய்ய, விட்ட இடத்தில் இருந்து தேர்வு தொடர, செலுத்திய கட்டணம் வீண் போகாது என்று என் மனமும் ஆறுதல் அடைந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">ஓர் பிரபலம் </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் த்ரிஷ்யம் திரைப்படத்தை PVR திரையரங்கில் பார்த்துவிட்டு, இரவு பதினோறு மணியளவில் Skywalk மாலை விட்டு, என்னுடன் வந்திருந்த பிரபலத்துடன் வெளியேறினேன். படத்தின் பெருமைகளை பேசிக்கொண்டே நடந்தோம், வாசல் வந்தவுடன் முன்னே சென்ற ஒரு பெண் இடது புறம் திரும்ப அதுதான் வழி என்று நாங்களும் அப்படியே சென்றோம். ஆனால் அந்தக் பக்கம் வழி மூடப் பட்டிருந்தது, எங்களுக்கு முன் சென்ற பெண்ணையும் காணவில்லை. வந்த வழியே திரும்பி சாலையை நோக்கி செல்லும் பொழுது, 'இதுக்குத்தான் பொண்ணுங்க பின்னாடி போகக்கூடாது' என்று சொல்லி, தனது பாணியில் சிரித்தார் அந்த பிரபலம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரதான சாலையை நாங்கள் அடையும் பொழுது, வெள்ளை நிற சட்டை அணிந்து, நரைத்த முடியுடன் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினார். என்னுடன் இருந்த பிரபலம் 'அவர்தான் சாருநிவேதிதா' என்று அவர் கேட்கும் படி சொல்ல அவரைக் கடந்து சென்றோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>அழியும் பசுமை</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் கீழேக் காணும் படம், பத்து ஆண்டுகளுக்கு முன், எனது கிராமத்தில் முப்போகம் நெல் விளைந்த வயல்வெளி. இன்று பிளாட் போடப்பட்டு பாலை நிலம் போல் காட்சி அளிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGVNarnbLsdvwRQS_MO1sJ4bwbuucyr2R3dvKMN3A2LDNX1vaVGUL1lhk_wwcko2u-8P5l1yXeDA5W7B7xf0T0DlbWo_ywUGZo5p-nQjTW7-q4rAxd7af7tnRoOytSiJpYpbYxx6w-GME/s1600/image+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGVNarnbLsdvwRQS_MO1sJ4bwbuucyr2R3dvKMN3A2LDNX1vaVGUL1lhk_wwcko2u-8P5l1yXeDA5W7B7xf0T0DlbWo_ywUGZo5p-nQjTW7-q4rAxd7af7tnRoOytSiJpYpbYxx6w-GME/s1600/image+(1).jpg" height="240" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<b><span style="color: red;">கல்வெட்டுக்கள் </span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
பல வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களில் மக்கள் தம் பெயரையோ அல்லது காதல் ஜோடிகளின் பெயரை செதுக்கி வைத்திருப்பதை காணும் பொழுது, அவர்கள் பெயர் வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கவும் அவர்கள் காதல் சரித்திரக் காதலாகவும் மாற அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வதுண்டு. ஆனால் எனது கிராமத்தையும் பக்கத்துக்கு கிராமத்தையும் பிரிக்கும் ஓடையின் மேல் அரசாங்கம் கட்டிய பாலத்தில்,(அந்த ஓடை வற்றிய பின் தான் பாலம் கட்டப் பட்டது என்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) தன் பெயரை செதுக்கிய இவரை என்ன செய்வது, நியாயன்மார்களே! </div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCB2-fhGiWbMO84LFq60V0crmD35M_Lq8bPQCdUMDkgOQBKCPur32iBwNY5Ah3mz-lZwH1iCPJzm-5iOJOD3FzUajbvCRgNoGzdNQdHI_MGhVOpvVh3Vgp93K3DRkUOlSvLPDxZl4PBN4/s1600/image+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCB2-fhGiWbMO84LFq60V0crmD35M_Lq8bPQCdUMDkgOQBKCPur32iBwNY5Ah3mz-lZwH1iCPJzm-5iOJOD3FzUajbvCRgNoGzdNQdHI_MGhVOpvVh3Vgp93K3DRkUOlSvLPDxZl4PBN4/s1600/image+(2).jpg" height="240" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">ஆட்டோ மீட்டர் </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மாலை வேளையில் உஸ்மான் ரோட்டில் இருக்கும் போத்திஸ் எதிரில் சாலையைக் கடக்கும் பொழுது, ஆட்டோக்களை காவல் துறையினர் நிறுத்தி பிரயாணிகளிடம், 'ஆட்டோ மீட்டர் ஏறும் பொழுது போட்டாங்களா?' என்று விசாரித்துக்கொண்டிருந்தனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ? அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">கூலிங் கட்டணம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் உண்ட கோழி எனது உணவுக் குழாயில் சிக்கித் தவிக்க, அதை அடக்கம் செய்ய ஒரு சோடாக் குடிக்க எனது தெருவில் இருக்கும் கடைக்குச் சென்றேன். சோடா இல்லாத காரணத்தால், ஸ்ப்ரைட் வாங்கினேன். 35 ரூபாய் கேட்டார் அந்தக் கடைக்காரர். பாட்டில் மேல் இருந்த mrpயை பார்த்தேன், 34 ரூபாய் என்றிருந்தது. 'ஏன் கூடுதல் கட்டணம்' என்று நான் கேட்க, 'கூலிங் சார்ஜ்' என்றார் அவர். 'நான் என் வீட்டிலேயே கூல் செய்து கொள்கின்றேன்' என்று சாதாரண பாட்டிலை 34 ரூபாய் கொடுத்து வாங்கினேன். பேருந்து நிறுத்தங்களில் பொதுவாக நடக்கும் இந்தக் 'கூலிங் கொள்ளை' நான் வசிக்கும் தெருவிலும் தொடங்கியிருப்பது வருத்தமே. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">இலவச இணைப்பு</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் கடையில் நிற்கும் பொழுது, ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையுடன் இலவசமாக ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் இணைத்திருப்பதைக் கண்டேன். சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் இவர்கள் பத்திரிக்கையை படிக்க இலவசம் கொடுக்கும் பொழுது, எனது வலைக்கு பிரதிபலனின்றி வந்துப் படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">துக்க விசாரணை </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு இரங்கலுக்கு சென்றிருந்த பொழுது, அங்கு இறந்தவரின் உற்றார் உறவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க. ஒருவர் மட்டும் வாய் முழுவதும் பல்லாக ஒரு மூலையில் சிலரின் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். துக்க வீட்டில் சிலர் தைரியமாக இருப்பது தேவை தான், ஆனால் சற்று கூட அந்த மரணத்தின் பாதிப்பே இல்லாமல் எப்படி சிலாரல் இப்படி கேலியும் கிண்டலும் செய்ய முடிகின்றது? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">Beat Officer</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் மதியம் எனது அலுவலகம் செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்லும் பொழுது, திருவள்ளுவர் தெருவில், மெரூன் நிற பல்சரில், பெட்ரோல் டாங்க மீது 'Beat officer' என்று ஆங்கிலத்தில் எழுதிருக்க, அதன் மீது காக்கி நிற சீருடை அணிந்த ஒரு காவல் துறை அதிகாரி, 'Beat officer' என்று ஆங்கிலதில் பதியப்பட்ட ஒரு கருப்பு நிற மேலங்கி அணிந்து கம்பீரமாக இருந்தார். எனது மனதில் பலக் கேள்விகள் தோன்றிய பொழுதும் அவரிடம் சென்று வினவ அந்தச் சமயம் ஏனோ தோன்றவில்லை. இதே போல் ஒரு பீட் ஆபிசரை சோழிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு வெளியிலும் கண்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யார் சாமி இந்த பீட் ஆபீசர்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">ஸ்கை ப்ளூ துப்பட்டா </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பீட் ஆபிசரை கடந்து சென்று, இளங்கோவன் தெருவில் திரும்பினால், எனக்கு முன் ஒரு பெண் கருப்பு குடை பிடித்து நடந்து செல்வது தெரிந்தது. வெள்ளை நிற சல்வாருடன் நீல நிற துப்பாட்ட அணிந்திருந்த அவள் பின் இருந்து பார்க்க ஒரு தேவதை போலே காட்சியளித்தாள். அவளது முகத்தை காணவேண்டும் என்று ஆவல் என்னுள் தோன்ற, சுட்டெரிக்கும் மதிய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணின் குளிர்ச்சியில் நனைய, சற்று வேகமாக அடியெடுத்து வைக்க தொடங்கினேன். எனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளி விரைவாக குறைந்து வரும் சமயம், அவள் பிரதான சாலையின் மிக அருகில் சென்றுவிட்டாள். அவளும் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் தான் செல்கிறாள் என்று என் மனதில் ஒரு இச்சை தோன்ற, அவளை முந்திக்கொண்டு பேருந்து நிலையம் செல்ல எனது வேகத்தை அதிகரித்தேன். அவளுக்கு மிக அருகில் செல்ல, அவளது சுழல் போன்ற கரிய கூந்தலும், அவளது காது ஜிமிக்கியும் அவள் நடைக்கேற்ப நடனமாட... தொடரும்... </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-60198067581883276282014-03-24T00:06:00.002+05:302014-03-24T00:11:08.849+05:30சிம்லா ஸ்பெஷல்- பனியைத் தேடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
23-12-2012 அன்று நான் பனியைத் தேடி சிம்லா சென்ற பயண அனுபவங்கள் மூன்று பகுதிகளாக கீழே.<br />
<div>
<br /></div>
<div>
1. <a href="http://www.rubakram.com/2014/03/Delhi-metro.html" target="_blank"><b>சிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம்</b></a><br />
<br />
2. <a href="http://www.rubakram.com/2014/03/shimla-special-kufri-narkanda-tata-paani.html" target="_blank"><b>சிம்லா ஸ்பெஷல் - கண்டனன் பனியை</b></a><br />
<br />
3. <a href="http://www.rubakram.com/2014/03/Shimla-temples-mall-street-rashtrapathi-nivas.html" target="_blank"><b>சிம்லா ஸ்பெஷல் - நகர்வலம்</b></a><br />
<br />
<br /></div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-69195208574581762962014-03-24T00:03:00.002+05:302014-03-24T00:03:42.812+05:30சிம்லா ஸ்பெஷல் - நகர்வலம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அன்று நதியில் துடுப்பு பிடித்ததும், பனியில் விளையாடியதும் உடலுக்கு தந்த சோர்வில் இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் நான்றாக தூங்கிவிட்டேன். மறுநாள் சிம்லா நகரை சுற்றி சில இடங்களுக்கு எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்றார். </div>
<div>
<br /></div>
<div>
<b><span style="color: red;">ஜக்ஹூ கோயில் (Jakhoo temple)</span></b></div>
<div>
<br /></div>
<div style="text-align: justify;">
நாங்கள் அன்று காலை முதலில் சென்றது இங்கு தான். சிம்லா மலை மீது மற்றொரு மலை ஏறி எங்களை அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் சென்றதில் இதுதான் மிகவும் குறுகலான பாதை. ஒரு சீருந்து செல்லும் அளவு தான் சாலை இருக்க, மலை மேல் ஏறும் வளைவுகள், '<' இப்படித்தான் இருந்தன. அந்த சாலையில் வண்டி ஓட்ட ஒரு அசாத்திய திறமை வேண்டும். ஒரு வழியாக மேலே சென்றோம். இதுவரை பெரிதும் பேசாத எங்கள் ஓட்டுனர் 'குரங்குகள் இங்கு சேட்டை செய்வது அதிகம். மிகவும் ஜாக்கரதையாக இருங்கள்' என்று எச்சரித்தார். அது ஒரு ஆஞ்சநேயர் கோயில் அங்கு ஒரு மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. வழக்கம் போல் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்கள் சீருந்தை நோக்கி இறங்கினோம்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE9aKNnblLyoR_APQ5ULshZ0vEqY_1eOyeHqNdeSjksvfTsHdxlPTeCLqs2NwV3JFKmIJZulSk_QVL5qkIq9FpC2u-MImmpUkeA6bs9hkjetbP0ONsJglLUJCzQD5yhYzNYUdyxdlWqC0/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE9aKNnblLyoR_APQ5ULshZ0vEqY_1eOyeHqNdeSjksvfTsHdxlPTeCLqs2NwV3JFKmIJZulSk_QVL5qkIq9FpC2u-MImmpUkeA6bs9hkjetbP0ONsJglLUJCzQD5yhYzNYUdyxdlWqC0/s1600/image.jpg" height="320" width="213" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
வரும் வழியில் அங்கு பிரசாதம் விற்பவர்கள் குரங்குகளை கொம்பு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர். சீருந்தின் அருகில் வந்து, உள்ளே ஹீட்டர் இருப்பதால், எனது ஜாக்கெட்டை கழற்றிவிட்டு, சீருந்தினுள் நுழையும் பொழுது, 'ஐயோ குரங்கு' என்று என் நண்பன் அலற அனைவரும் விரைந்து சீருந்தினுள் குதித்தோம். ஓட்டுனர் வண்டியை ஐம்பது அடி நகர்த்துவதற்குள், என் நண்பன் 'ஐயோ' என் கண்ணாடி?' என்று மீண்டும் அலறினான். ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட, சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று பார்த்தால், மரத்தின் மேல் ரே-பான் கண்ணாடியுடன் சோக்கா போஸ் கொடுத்தது அந்தக் குரங்கு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை. சிறு வயதில் படித்த குல்லா கதைதான் நினைவுக்கு வந்தது. அதற்குள் எங்கள் ஓட்டுனர் ஒரு பிரசாத பாக்கெட்டை வாங்கி, மேலே வீச, யுவராஜ் சிங் போல அதை தாவிப் பிடித்தது அந்தக் குரங்கு. மனிதர்கள் போல் இல்லாமல், நேர்மையாக வாழும் அந்தக் குரங்கு, பிரசாதம் கைக்கு வந்தவுடன், கண்ணாடியை அழகாக என் நண்பன் கைக்கு வீசியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>ராஷ்ட்ரபதி நிவாஸ்</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து நாங்கள் சென்றது வெள்ளையர்களின் கோடைக்கால தலைமையகமாக விளங்கிய ராஷ்ட்ரபதி நிவாஸ் மாளிகைக்கு. இது Indian Institute of Advanced Study நிறுவனத்தின் தற்காலிக கட்டிடமாக இருந்தாலும், வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த இடத்தின் சில பகுதிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW4jR4n22IzY4zXT1zYm1N5WmOMx973AMfL-F6GusS2CqKMBb8nvb1fI6E60FWWbOHcvJ40ciLCK62W_X7PlDtE98JQp_H1buvQ5ado_1lpIcqPsuuPwgpoJ6PoOcrgF_ontBw2Mn3ikI/s1600/SDC10300.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW4jR4n22IzY4zXT1zYm1N5WmOMx973AMfL-F6GusS2CqKMBb8nvb1fI6E60FWWbOHcvJ40ciLCK62W_X7PlDtE98JQp_H1buvQ5ado_1lpIcqPsuuPwgpoJ6PoOcrgF_ontBw2Mn3ikI/s1600/SDC10300.JPG" height="240" width="320" /></a></div>
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலேயர்கள் ஹைட்ரோ-எலக்ட்ரிக் முறை மூலம் அந்நாளில் அந்த கட்டிடத்துக்காக தயார் செய்யப் பயன்படுத்திய மின் சாதனங்கள், இன்றளவும் அங்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதை கண்டு வியந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜின்னாவின் கோரிக்கையின் படி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை தனி நாடாக பிரிக்க முடிவு செய்த வரலாற்று புகழ் பெற்ற, மவுண்ட் பாட்டன் தலைமையிலான 'சிம்லா கான்பிரன்ஸ்' நடந்த அறையினுள் அந்த இருக்கைகைளையும் பராமரித்து வருகின்றனர். மாணவர்களின் ப்ராஜெக்ட் காட்சியளிப்பிற்காக இன்று அந்த அறை பயன்படுத்தப் படுகிறதாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கு விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில ஆங்கிலப் பிரபுகளின் படங்கள் இருந்தன. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மவுண்ட் பாட்டன் பிரபு அவர்களின் மனைவியின் புகைப்படம் தான். அந்த அம்முணி எம்புட்டு அழகு தெரியுமா. அந்த நிமிடமே அவருடன் என் மனதில் ஒரு மதராசபட்டின கனவு அரங்கேறியது. <br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZSC1KXOwHxqhv1j5zTeZ8xSPLD5sZpE4fGCglQVy7FxEN2wr_TIWBQs8HAM2Ny0xegCLV_QPQ0rbKDumAUox4INO2Jt5yN4E3SGkr2rztiJ7jh-H7__Ozx6_561R3IKoeGhhFq8QGQ74/s1600/SDC10336.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZSC1KXOwHxqhv1j5zTeZ8xSPLD5sZpE4fGCglQVy7FxEN2wr_TIWBQs8HAM2Ny0xegCLV_QPQ0rbKDumAUox4INO2Jt5yN4E3SGkr2rztiJ7jh-H7__Ozx6_561R3IKoeGhhFq8QGQ74/s1600/SDC10336.JPG" height="320" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Lady Mount Batten</td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>ஸ்ரீ சங்கட் மோச்சன் கோவில் (Shri Sankat Mochan Temple)</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் எங்கள் ஓட்டுனர் ஒரு கோவிலுக்கு தான் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கோவில் மலை சரிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. முதலில் ஹனுமான் கோவிலாக உருவாகி, பின்னர் அனைத்து தெய்வங்களும் அங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கும் கடவுளுக்கும் மிகவும் தூரம் என்பதால், என் நண்பர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவர்களை உள்ளே தரிசனம் காண அனுப்பிவிட்டு, வெளியில் இருந்த இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, எனது நண்பனிடம் இருந்து உள்ளே வரச் சொல்லி கைபேசியில் அவசர அழைப்பு வரவே, காலணிகளை ஹனுமான் பொறுப்பில் விட்டு விட்டு உள்ளே சென்றேன். உள்ளே படி வழியாக இறங்கி சென்றால், ஒரு பெரிய மண்டபம் போல் இருந்தது. அங்கு வரிசையாக மக்கள் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 'நண்பேன் டா!' என்று அவனுக்கு ஒரு சலாம் போட்டு விட்டு, நானும் அமர்ந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெள்ளை நிறத்தில், பொங்கிய வடிக்கப்பட்ட அரிசி என் இலையில் பார்த்தவுடனே எனது மனம் தமிழகத்தை நோக்கிச் சென்றது. ராஜ்மா குழம்பு, பட்டாணி குழம்பு, மற்றும் ஒரு இனிப்பு என்று அசத்தலாக இருந்தது அந்த அன்னதானம். அந்த ஏழு நாட்களில் நாங்க உண்ட உணவில் மிகவும் சுவையானது அதுதான். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அன்றோ. </div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மால் ஸ்ட்ரீட் (Mall Street)</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னைக்கு எப்படி பாண்டி பஜார் மற்றும் ரங்கநாதன் தெருவோ அப்படித்தான் சிம்லாவிற்கு இந்த மால் ஸ்ட்ரீட். இங்கு அனைத்து அரசாங்க அலுவலங்களும் உள்ளன. அந்த அலுவலகங்களை தாண்டிச் சென்றால் வரும் பிரதான சாலையில் அனைத்து ரக பிரான்டட் கடைகளும் இருக்கும். அந்த பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் சற்று கீழே இறங்கினால் மலிவு விலைக் கடைகள் அனைத்தும் இருக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படி ஒரு சந்தினுள் ஒரே சாப்பாட்டுக் கடைகளாக இருக்க, ஒரு கடையின் உள்ளே சென்று அமர்ந்தோம். அங்கு சுடச் சுட கிடைத்த சென்னா படுறா(சோலாபூரி) வின் சுவை இன்றும் என் நாவில் உமிழ் நீர் சுரக்ச் செய்கின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மால் ஸ்ட்ரீடில் தென்பட்ட பொம்மைகளை ரசித்தபடி இனிதே எங்கள் சிம்லா பயணம் முடிவடைய, மறுநாள் விடியற்காலை கல்கா நோக்கி சென்றோம். ஆறு மணிக்கு கல்காவில் ரயில் என்பதால், நான்கு மணிக்கு சிம்லாவை விட்டு கிளம்பினோம். நான்கு மணிக்கு அந்தக் குளிரில் குளிக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல. சிம்லாவில் இருந்து மலை இறங்கும் அந்தப் பயணம் சந்திர ஒளியில் அழகா இருந்ததை நான் ரசித்துக் கொண்டே வர, என் நண்பர்கள் தூங்கி கொண்டே வந்தனர். சில நேரம் கடந்து தான் எங்களது சீருந்தின் என்ஜின் ஓடாததை உணர்ந்தேன், neutral கியரில் வண்டியை எங்கள் ஓட்டுனர் மலையில் இருந்து கீழு உருட்டிக்கொண்டு வந்தார் என்பதை அறிந்தவுடன் எனக்கு 'குபீர்' என்றானது. அவருக்கு என்னமோ அப்படி ஓட்டிப் பழக்கம் இருந்தாலும், மலையில் இருந்து கீழ் இறங்கும் வரை ஒவ்வொரு முறை அவர் பிரேக் அழுத்தும் பொழுதும் எனது உயிர் சந்திரனை தொட்டு விட்டு பூமி திரும்பியது. </div>
<div>
</div>
<div>
நிசாமுத்தின் ரயில் நிலையத்தில், 3 3௦ மணிக்கு வழக்கமாக வரும் சென்னை செல்லும் MAS-Durronto எக்ஸ்பிரஸ் அன்று மணி ஏழாகியும் வரவில்லை. </div>
<div>
<div style="text-align: right;">
</div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-44864639191792571282014-03-24T00:03:00.001+05:302014-03-24T00:03:32.757+05:30சிம்லா ஸ்பெஷல் - கண்டனன் பனியை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div>
புது டில்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த சமயம், எனது நண்பனின் அண்ணன், எங்களைப்போல் அங்கு ரயிலுக்காக காத்திருந்த ஒரு குடும்பத்துடன் சிநேகம் பிடித்துக்கொண்டார். அந்த சிநேகம் எங்களுக்கு பின் பேருதவி செய்ய காத்திருக்கும் என்பதை நாங்கள் அப்பொழுது அறியவில்லை. மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தது. மெட்ரோ ரயிலைக் கண்டு வியந்தது போலவே, ஷடாப்தி ரயிலின் உட்புறத்தைக் கண்டு வியந்தேன். மிகவும் சுத்தமாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. </div>
<div>
<br /></div>
<div>
"'டாய் ரயிலுக்கு இந்த ரயிலுடன் கனெக்சன் இருக்கும். நமக்காக அது காத்திருக்கும்' என்று என் நண்பன் சொல்லிய மொழி சற்று ஆறுதல் தர எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். டிக்கெட் முன்பதிவுடன் காலை உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்தது எனக்கு ரயில் ஏறிய பின் தான் தெரியவந்தது. ரயிலில் ஏறியவுடன் எல்லா இருக்கைகளுக்கும் ஒரு தண்ணீர் பாட்டில், மற்றும் இரு மொழி ( ஹிந்தி & ஆங்கிலம்) செய்தித்தாள் வழங்கினர். சற்று நேரம் கழித்து, காலை உணவு பரிமாறத் தொடங்கினர். பணியாளர்கள் அனைவரும் சுத்தமான சீருடைகளுடன் ராஜஸ்தான் மாநில சிப்பாய்கள் போல் காட்சியளித்தனர். </div>
<div>
<br /></div>
<div>
இங்கும் பிரட் ஆம்லெட் மற்றும் வடை பொங்கல் தான். வட இந்திய பொங்கலை உண்ண விருப்பமின்றி, பிரட் ஆம்லெட் வாங்கிக்கொண்டேன். ஒரு ட்ரேயில் இரண்டு துண்டு கோதுமை ரொட்டி, ஒரு ஆம்லெட், அமுல் வெண்ணை, ஒரு பாக்கெட் ஜாம், கத்தி மற்றும் முள் கரண்டியுடன் (fork) பரிமாறினார். அருகில் அமர்ந்திருந்தவர் ஸ்பூன் வைத்து பொறுமையாக அந்த ஒரு கரண்டி பொங்கலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டே உண்டார். எனக்கு கையில் உண்டுதான் பழக்கம் என்பதால், அந்த உணவை விரைந்து உண்டேன். இந்த இரண்டு துண்டு ரொட்டிகள் காலை உணவா, இதை உண்டு எப்படி உயிர் வாழ்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தபொழுது, நான் புது டில்லி நடைமேடையில் உண்ட பூரி எனது ஏப்பமாக வெளிவந்தது.</div>
<div>
<br /></div>
<div>
சற்று நேரம் கழித்து, அனைவருக்கும் ஒரு பிளாஸ்கில் வெண்ணீர் கொடுத்து, உடன் காப்பி தூள், டீத் தூள், அமுல் பால் பவுடர், சர்க்கரை முதலியவை வழங்கினர். எனக்கு காப்பி டீ குடிக்கும் பழக்கம் இல்லாததால், எனது நண்பனுக்கு டபுள் ஸ்ட்ராங் காப்பி கலந்து கொடுத்தேன். என் வாழ்வில் நான் முதல் முறை தயார் செய்த காப்பியும் அதுவே (ஹி ஹி ஹி ...). சற்றும் பயண அலுப்பே தராத அந்த ஷடாப்தி ரயில் பயணம் கல்கா வந்த பொது முடிந்தது. </div>
<div>
<br /></div>
<div>
கல்கா ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, அங்கு டாய் ரயில் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். ஆனால் எங்கள் ஆனந்தம் தொடர வில்லை. டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுது, அனைத்து டிக்கெட்களும் புல் என்று எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அங்கிருந்து சிம்லா செல்ல வாடகை டாக்ஸி தான் ஒரே வழி என்று வெளியே வந்தால், அங்கு பெருங் கூட்டம் இருந்தது. நண்பனின் அண்ணன் விசாரித்ததில் அங்கு சின்ன கார்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன என்றும், டெம்போ மட்டும் தான் உள்ளது என்றும் தெரியவந்தது. நால்வர் மட்டும் செல்ல டெம்போ எடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று நாங்கள் தயங்கி, சிம்லா எப்படி செல்வது என்று விழித்தோம். அடுத்து டாய் ரயில் மறுநாள் காலை புறப்படும் வரை ரயில் நிலையத்தில் தங்குவதுதான் ஒரே வழி என்று நாங்கள் முடிவு செய்யும் சமயம், ஒரு வழி பிறந்தது. </div>
<div>
<br /></div>
<div>
புது டில்லி ரயில் நிலையத்தில் என் நண்பனின் அண்ணன் சிநேகம் செய்த குடும்பம் எங்களுடன் டெம்போவில் வர சம்மதிக்க, எங்கள் டாக்ஸி செலவு பாதியாக குறைந்து, சிம்லா நோக்கிய எங்கள் டெம்போ பயணம் தொடங்கியது. டாய் ரயிலில் செல்வதை விட டெம்போ விரைந்து சிம்லா சென்றுவிடும் என்று எங்கள் ஏமாற்றத்தை நாங்களே சமாதானம் செய்துகொண்டோம். ரயில் நிலையத்தில் இருந்து, ஊருக்குள் வந்தவுடன், டெம்போ ஒரு கடைக்கு அருகில் நின்றது. டிரைவர் மொழியை அண்ணன் மொழி பெயர்த்து 'சிம்லாவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் வேண்டும் என்றால் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். </div>
<div>
<br /></div>
<div>
எனது ஏழாம் வகுப்பு ஆசிரியர் சாம், அடிக்கடி சொல்லும் 'If you can't break the rules, bend them' என்ற வாக்கியம் தான் என் நினைவிற்கு வந்தது. 'நீங்க எல்லாம் நல்லா வருவிங்க சாமி' என்று நான் அந்த டிரைவரை பார்த்து பல் இளிக்க, தமிழ் தெரியாத அவன், நான் எதோ அவனைப் புகழ்வது போல் எண்ணிக்கொண்டு பதிலுக்கு அவனும் இளித்தான். டெம்போவில் அந்தக் குடும்பம் பின் இருக்கைகளில் அமர, மலை சாலைகளில் வாகனம் செல்வதை எனக்குப் பார்க்கக் பிடிக்கும் என்பதால் நான் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். </div>
<div>
<br /></div>
<div>
பொதுவாக வகானம் ஓட்டுபவர்கள் கைபேசியில் பேசுவது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவனோ மலைப் பாதையில் ஓட்டும் பொழுது பேசிக்கொண்டே வந்தான். பேச்சு பின் சண்டையாகவும் மாறியது, சண்டையில் வண்டியின் வேகம் அதிகரித்தது, எனக்கோ 'பக் பக்' என்று இதயம் துடித்தது. சிம்லா மண்ணில் கால் வைத்து, வாத்தியார் போல் 'புதிய வானம் புதிய பூமி' என்று பாட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, ஒரு வழியாக எந்த வித சேதமும் இன்றி எங்களை மலை மீது கொண்டுவந்து சேர்த்தான். சிம்லா நகரில் எங்கும் உறை பனி இல்லாதது கண்டு நான் அஞ்சியபோழுது, பனியைத் தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினர். </div>
<div>
<br /></div>
<div>
முதலில் அந்தக் குடும்பத்தை அவர்கள் தங்கவிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டு பின் நாங்கள் செல்வது என்று முடிவு செய்தோம். அவர்களை இறக்கிவிட்டு நாங்கள் திரும்புகையில் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர்களின் ஒரு பை மட்டும் வண்டியிலேயே தவறவிட்டார்கள் என்று. சிம்லாவில் இருக்கும் சாலைகள் மிக மிக குறுகியவை, அங்கு வாகனத்தை நிறுத்தினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகம். மற்றவர்களுக்கு உதவும் பெரும் குணம் கொண்ட அண்ணன், ஓடும் வண்டியில் இருந்து எதையும் யோசிக்காமல் அவர்கள் பையுடன் இறங்கினார். </div>
<div>
<br /></div>
<div>
எங்கள் விடுதிக்கு அருகில் இருக்கும் டன்னலில் (tunnel), இடம் தெரியாத அந்த புதிய ஊரில், அவர் வழி தவறாமல் சரியான பாதையில் வர, மொழி தெரியாத நாங்கள் பீதியுடன் காத்திருந்தோம். <br />
<br />
<div>
அண்ணன் வர டன்னலின் அடியில் காத்திருக்கும் பொழுது தான், அங்கு நிலவிய குளிர் என் ஆடைக்குள் ஊடுருவத் தொடங்குவது தெரிந்தது. என் மாமா, அவர் அமெரிக்காவில் இருந்தபொழுது பயன்படுத்திய விண்டர் ஜாக்கெட் மற்றும் க்லவ்ஸ் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதுதான் எனக்கு அந்தக் குளிருக்கு கவசமாக நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னைக் காத்தது. எங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல எங்களுடன் சாலைக்கு வந்து காத்திருந்த விடுதிப் பணியாளர் வழி சொல்ல, ஒரு வழியாக அண்ணன் நாங்கள் காத்திருந்த டன்னலை வந்தடைந்தார். </div>
<div>
<br /></div>
<div>
எங்களிடம் இருந்த மூன்று பளுவான பைகளை, அந்த விடுதிப் பணியாளர் தன் முதுகில் ஒன்றும், இரு கைகளில் ஒன்றுமாக யேந்திக்கொண்டு, ஒற்றையடிப் பாதைப் போல் இருந்த, சிமெண்ட் படிகள் மீது ஏறத் தொடங்கினார். பளு சுமந்த பொழுதும் மலை ஏறிப் பழக்கமான அவர் வேகமாக ஏற, நாங்கள் சற்று பின் தங்கியே தொடர்ந்தோம். மலை மீது ஒரு குட்டி மலையே ஏறி, அதன் பின் ஒரு சரிவில் இறங்கி எங்களது விடுதி முன் வந்து சேர்ந்தோம். இதற்குள் மணி ஏழாகி விட்டது. அன்றைய இரவு அறையில் தான் என்றானது. 'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வீடு போல், மலை உச்சியில் மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட அந்த அறைக்குள் சென்ற பொழுது, இதயம் சற்று 'பக் பக்' என்றே துடித்தது. இரண்டு முறை குதித்து உறுதியை சோதித்து பார்த்த பின்னே அடுத்த அறைக்குள் சென்றேன். </div>
<div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5QRFF0X3YK1YKgoSctojxJLhhzJzUPkeXl9HylyfR8YwOUgoIbRtUg4oz7l1Rk_egvnOEWhkdmtrjDKIDCgk4HLmgGhzYCF7cL-kLx1_2x_wnBZs9sonrSAtgZlwHErnKZVL1JR7b_QU/s1600/DSC05776.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5QRFF0X3YK1YKgoSctojxJLhhzJzUPkeXl9HylyfR8YwOUgoIbRtUg4oz7l1Rk_egvnOEWhkdmtrjDKIDCgk4HLmgGhzYCF7cL-kLx1_2x_wnBZs9sonrSAtgZlwHErnKZVL1JR7b_QU/s1600/DSC05776.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எங்கள் அறை</td></tr>
</tbody></table>
</div>
<div>
குளிர் காலத்தில் சிம்லா சென்றால், குளிரின் உச்சகட்டத்தை உணரலாம் என்பது என் திட்டம். ஆனால் நான் அங்கு உணர்ந்ததோ நான் எதிர் பார்த்ததை விட மிகவும் கடுமையான குளிர். அந்த இரவை கடக்க நிச்சயம் நெருப்பின் துணை தேவை என்று தோன்ற, 'ரூம் ஹீட்டர்' ஆர்டர் செய்யலாம் என்று நான் முனைய, என் நண்பன் என்னைத் தடுத்து, அலமாரியின் உள் இருந்து பஞ்சு மெத்தையில் பாதி கணம் இருக்கும் ஒரு வெள்ளை நிற ரஜாய் (ஆங்கிலத்தில் comforter என்றும் quilt என்றும் கூறுவார்கள்) எடுத்து கொடுத்தான். இதையா போர்த்திக் கொள்வது என்று முதலில் நான் யோசித்தாலும், வேறு வழியின்றி மெத்தை மேல் அதை விரித்து அதற்கு அடியில் சென்றேன். சற்று நேரமாக, அது எனது உடலின் உஷ்ணத்தை பாதுகாத்து, நல்ல கத கதப்பை தந்தது. அருமையான ஒரு கண்டுபிடிப்பு அது. </div>
<div>
<br /></div>
<div>
காலையில் குளித்து முடிப்பதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லி மாளாது. ஹீட்டர் குழாயில் இருந்து வரும் சூடான நீர், வாளியை அடையும் முன், தன் சூட்டை இழந்து விட்டது. ஒரு வழியாக குளித்து முடித்து, தயாராகி, பனியைத் தேடும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் ஒரு கோல்ப் மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி, அங்கு சென்று சுற்றிப்பார்க்கும்படி எங்களது ஓட்டுனர் சொல்லினார். முடியவே முடியாது எங்களுக்கு பனிதான் வேண்டும் என்று நாங்கள் மறுத்துவிடவே, எங்களை குப்ரி அழைத்துச் சென்றார். குப்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு சிகரம். அதன் அடியில் இருந்து உச்சிக்கு செல்வதற்கு குதிரை சவாரி செய்ய வேண்டும். அதில் நிஜ குதிரைகளும் சில போலி குதிரைகளும் உங்கள் அதிர்ஷ்டம் போல் கிடைக்கும். (குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்தது இந்த போலிக் குதிரை. இதை ஆங்கிலத்தில் mule என்பர்)</div>
<div>
<br /></div>
<div>
எனக்கு குதிரை ஏறிப் பழக்கம் இல்லாததால் சற்று பயத்துடன் நான் இருக்க, எனக்கு போலிக் குதிரையே வழங்கினர். எங்கள் நால்வரின் குதிரையையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு, அதன் பாகன் எங்களுடன் நடந்து வந்தான். அவன் முன்னே வழி காட்டிக்கொண்டு செல்ல, எனது குதிரை கடைசியில் வந்தது. ஒற்றையடிப் பாதையாக மலை மேல் செல்லவும் இறங்கவும் ஒரே வழிதான். மேலிருந்து குதிரைகள் இறங்கும் பொழுது, எனது குதிரை சற்று பயந்து ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும்பொழுது, எனக்கோ 'எங்கே, குதிரை கால் இடறி சரிந்து விடுமோ' என்ற பயம் தோன்றும். ஒரு முப்பது நிமிட 'திக் திக்' குதிரை சவாரிக்கு பின் குப்ரி சிகரத்தை அடைந்தோம். சிம்லாவில் இருக்கும் உயர்ந்த சிகரத்தில் நிச்சயம் பனி இருக்கும் என்ற எனது ஆசையில் மண் தான் விழுந்தது. அங்கு சில மேகி(maggi) கடைகளும் ஒரு தீம்(theme) பார்க்கும் தான் இருந்தன. </div>
<div>
<br /></div>
<div>
தீம் பார்க்கில் சில மொக்கை ரைடுகளை தவிர்த்து ஒரு ரைடு மட்டும் எங்களைக் கவர்ந்தது, நானும் என் நண்பனும் மட்டும் அதில் ஏறினோம். மத்தியில் ஒரு கம்பம், அந்தக் கம்பம் தாங்கும் ஒரு வளைவான சக்கரம், அந்தச் சக்கரத்தில் வட்டமாக ஒருவர் மட்டும் அமரும் ஊஞ்சல். பார்க்க சாதாரண ஊஞ்சல் போல் இருந்தால், அது இருந்தது மலை உச்சியில் என்பதாலும், அது சுற்றிய வேகத்தாலும், ஆகாயத்தில் தூக்கி வீசப் படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. எனது உணவுக் குழாயில் இருந்து வயிறு வரை அனைத்தும் ஒரு சக்சன்(suction) பம்ப் வைத்து உரியப்படுவது போல் ஒரு உணர்வு. ஒரு வழியாக சுற்றி நிற்க, நான் இறங்கலாம் என்று நிதானிக்கும் பொழுது, என் நண்பன் 'ஒன்ஸ் மோர் ப்ளீஸ்' என்று கேட்க, எனது உயிர் மீண்டும் ஊஞ்சல் ஆடியது. </div>
<div>
<br /></div>
<div>
அங்கு அருகில் ஆப்பிள் தோட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்க, இதுவரை வாழ்வில் காணாத ஆப்பிள் மரங்களைத் தேடிச் சென்றோம். சரிவாக செல்லும் பாதையில் நெடுந்தூரம் சென்றும் அங்கு ஆப்பில் மரங்கள் ஏதும் தென்படவில்லை. வழிதவறிவிட்டோம் என்று நாங்கள் உணரும் பொழுது, நாங்கள் மிகவும் எதிர் பார்த்திருந்த தருணம் வந்தது. சாலையில் உறைப்பனி தென்படத் தொடங்கியது. நாங்கள் எதிர்பார்த்து போல் இல்லை. வெள்ளை நிற சோப்பு நுரையை மணலில் கலந்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் அந்தப் பனி அழுக்காக இருந்தது. கிடைத்த வரை லாபம் என்று அதனுடன் விளையாடத் தொடங்கினோம்.<br />
<br /></div>
<div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIBwAdqGzjvIgeKWJpZ9NJ9406Kfr93lkucwoaqOaKiHMUax4X4mKn1eO0eOLMMI-U-dp1UORDqcKq7Z6PD3rlnwFowklLQXs_1JLDm9OqEyMvB9fDr7OLnC7JszREL3mqVQyJoHOiPzo/s1600/Untitled.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIBwAdqGzjvIgeKWJpZ9NJ9406Kfr93lkucwoaqOaKiHMUax4X4mKn1eO0eOLMMI-U-dp1UORDqcKq7Z6PD3rlnwFowklLQXs_1JLDm9OqEyMvB9fDr7OLnC7JszREL3mqVQyJoHOiPzo/s1600/Untitled.jpg" height="192" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எனது கையில் பனி!</td></tr>
</tbody></table>
<br /></div>
<div>
அந்தப் பனியை கையில் ஏந்தும் பொழுது, பல நாட்களாக டீப் ப்ரீஸ் (deep freeze) ஆகி உறைத்திருக்கும் உங்கள் பிரிட்ஜ் ப்ரீசர் பாக்சில் கை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கும் பொழுது, எப்படியாவது சட்டையினுள் ஊடுருவும் பொழுது அந்தப் பனி உண்டாக்கும் சிலிர்ப்பை சொல்ல வார்த்தை இல்லை. பனியைக் கண்ட ஆனந்தத்தில் சற்று நேரம் கூடுதலாகவே செலவழித்துவிட்டோம். </div>
<div>
<br /></div>
<div>
இறங்கும் பொழுது மிகவும் எளிதாக இருந்தப் பாதை, ஏறும் பொழுது சற்று கடினமாக மாறியது. அதிக இடங்களில் அமர்ந்து அமர்ந்து செல்லத் தொடங்கினோம். இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். காலை டிபனும் நான்-ரொட்டி என்பதால் சற்று குறைவாக உண்ண, எனது உடலில் வலு வேகமாக குறைந்தது. எனது நண்பர்களை விட மிகவும் பின் தங்கத் தொடங்கினேன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது, அந்த குளிரிலும் நெற்றி வியர்த்தது. இனி ஒரு அடியும் நகர முடியாத நிலையில், எனது கால்களை பூமியில் என்னால் உணர முடியவில்லை. <br />
<br />
<div>
உணர்விழந்து நான் கீழே அமர, சில நொடிகள் என்ன நடந்தது என்ற நினைவு எனக்கு இல்லை. என் நண்பன் மேல் இருந்து கொண்டுவந்த நீரைப் பருகியதும் தான் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கொஞ்சம் வலு பெற்று மெதுவாக ஒரு கடைக்கு முன் சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்தேன். ஆளுக்கு ஒரு ப்ளேட் மேகி (maggi) ஆர்டர் செய்தோம். அந்தத் தருணம், அந்தக் குளிருக்கு இதமாக சூடாக சுவைத்த மேகி எனது வாழ்நாளில் வேறு எந்தத் தருணத்திலும் அவ்வளவு சுவையாக இருந்தது இல்லை.</div>
<div>
<br /></div>
<div>
உணவு உண்டபின் கிடைத்த வலுவுடன், மீண்டும் தடைபட்ட எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். என் போலிக் குதிரையின் மேல் ஏறி மலை இறங்கத் தொடங்கினோம். இறங்குவது சற்று பயமின்றி சுலபமாகவே இருந்தது. அங்கிருந்து எங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்த இலக்கு நோக்கி அழைத்துச் சென்றார். அப்பொழுது சீருந்தில் இருந்த டிஸ்ப்ளே காட்டிய வெப்பம் 4 டிகிரி செல்சியஸ். </div>
<div>
<br /></div>
<div>
எங்களை தட்டா பாணி(Tata Paani) என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது சிந்து நதியின் ஒரு பிரிவான சட்லஜ் நதி பாயும் இடம். அண்ணன் பேரம் பேச அந்த நதியில் நாங்கள் ராப்டிங்(rafting) செல்ல தயாரானோம். எங்களது காலணிகளை சீருந்திலேயே விட்டு விட்டோம். எங்களது பணப் பை, கேமரா, கைபேசி அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி அந்த பலூன் படகின் ஒரு மூலையில் போட்டார் அந்தப் படகுக் காரர். எங்கள் படகில் படகுக் காரருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர், நதியில் மிதக்கத் தொடங்கினோம். </div>
<div>
<br /></div>
<div>
என் வாழ்வில் தண்ணீரே பாயாத பாலரைக் கண்டு வளர்ந்த எனக்கு வற்றாத நதிகளைக் கண்டால் கொஞ்சம் போறாமையாகத் தான் இருக்கும். நமது தென்னகத்து நதிகளுக்கு நேர் மாறாக கோடைக் காலத்தில், இமய மலையில் பனி உருகி, அந்த நதிகளில் வெள்ளம் இன்னும் அதிகமாக இருக்குமாம். அந்த நதியின் கரையில் காலை வைக்கும் பொழுதே அந்த நீரின் குளிர்ச்சி புலப் பட்டது. நீங்கள் ஐஸ் கட்டியில் கரைந்து வரும் நீரில் காலை வைத்து பார்த்ததுண்டா? அப்படித்தான் இருந்தது அந்த நீரின் குளுமை. </div>
<div>
<br /></div>
<div>
படகுக்காரர் சொல்லும் கட்டளைகளை கேட்டு நாங்கள் துடுப்பு விட்டு மறுமுனை செல்ல வேண்டும். துடுப்பு விட பெண்களுக்கு மட்டும் விடுப்பு, அவர்கள் அழகாக மத்தியில் அமர்ந்து படகுச் சவாரியை ரசித்தனர். அந்த நதியில் படகு சீறிப் பாய்ந்து சென்றது. நதியின் சுழல்களுக்கு ஏற்ப அவர் திறமையாக எங்களை துடுப்பு பிடிக்கச் செய்து நதியில் படகை விரைவாக செலுத்திக்கொண்டிருந்தார். நான் மட்டும் நீருக்கு வலிக்காத வண்ணம் சற்று மெதுவாகவே துடுப்பை வலித்துக் கொண்டிருக்க. எனது பாசாங்கை அறிந்து நக்கலாக அவர் ஹிந்தியில் எதோ சொல்ல, அந்தப் பெண்கள் குபீர் என்று சிரித்தனர்.<br />
<br /></div>
<div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMNkxrtQwXm0rU73N-y4HmTrda7QcfgdBgXce8U2Vrkb5Dks2l5Eva9qncQx9XCDJBDERGPrRSmLrbdBeh4t-uudHlPQpC7VizOB1TlN27bO7WZWftnXLCzxfGNd-nx4KDODK28fXvdxg/s1600/DSC05867.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMNkxrtQwXm0rU73N-y4HmTrda7QcfgdBgXce8U2Vrkb5Dks2l5Eva9qncQx9XCDJBDERGPrRSmLrbdBeh4t-uudHlPQpC7VizOB1TlN27bO7WZWftnXLCzxfGNd-nx4KDODK28fXvdxg/s1600/DSC05867.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Rafting in Sutlej</td></tr>
</tbody></table>
</div>
<div>
ஒரு வழியாக நதியின் மறுமுனைக்கு திறமையாக வந்து சேர்ந்தோம். படகு செலுத்தும் சுவாரசியத்தில், எனது கால்களை கவனிக்க மறந்தே போனேன். எனது கால், படகினுள் புகுந்த குளிர்ந்த நீரின் சதியால், ரத்தம் செல்லாத வண்ணம் மறத்துப் போயிருந்தது. படகை விட்டு இறங்கி நொண்டிக்கொண்டு கரையை அடையும் பொழுது மற்றொரு அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது.</div>
<div>
<br /></div>
<div>
கரையின் ஓரங்களில், மணலில் இருந்து சூடான ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த ஆவி கிளம்பும் இடங்களில் நீர் வெதவெதவென்று குளிருக்கு இதமாக இருந்தது. எனது கால், மற்றும் நீரில் நனைந்த மற்ற பாகங்களை அந்த சூட்டில் காட்டி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தேன். இப்படி இயற்கையாக உஷ்ணம் தோன்றும் இடங்களை ஆங்கிலத்தில் 'Sulfur Springs' என்று சொல்லுவார்கள். இயற்கையில் தான் எத்தனை விந்தைகள் அடங்கியுள்ளன?. அந்த குளிரில் அந்த சூடான மணலில் அமரும் பொழுது எத்தனை சுகமாக இருந்தது தெரியுமா? ஆனந்தம்! பிரியா விடைபெற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். <br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCVTDqUzyfLf397hQVhT779tzEGshGWpwPqmajIg3h7gCpeNfdK_iU2qdesGXFNpdrFFEEt_VCClJr6VLneDg6ucnJoUXBD41ZeA88wEmZ6tC4-Frhn7sqIFaPAgjDYDGb1nnTgf7Tz38/s1600/DSC05869.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCVTDqUzyfLf397hQVhT779tzEGshGWpwPqmajIg3h7gCpeNfdK_iU2qdesGXFNpdrFFEEt_VCClJr6VLneDg6ucnJoUXBD41ZeA88wEmZ6tC4-Frhn7sqIFaPAgjDYDGb1nnTgf7Tz38/s1600/DSC05869.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Sulfur Springs @ Tata Paani</td></tr>
</tbody></table>
</div>
<div>
<br /></div>
<div>
எங்கள் பயணத்தில் நாங்கள் எதிர் பார்த்து வந்த ஆசை நிறைவேறாத வருத்தமும், எதிர்பாராத பல சுவாரசியமான அனுபவங்கள் நிகழ்ந்த சந்தோஷமும், எங்கள் மனதை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. மலைகளை கடந்து, வளைந்து வளைந்து, மலையை ஒட்டி செல்லும் அழகான சாலைகள் எங்கள் மனதிற்கு குதூகலத்தை தந்தது. ஒரு இடத்தில மரங்களுக்கு நடுவில் சென்று சீருந்தை நிறுத்தி, எங்களை ஒரு மணல் பாதையில் அழைத்துச் சென்றார். பசுவின் பின் செல்லும் கன்றைப் போல அவரை பின் தொடர்ந்து சென்றோம். அந்தப் பாதை சற்று சரிவின் மேல் ஏறியது, எங்கள் உள்ள மகிழ்ச்சியும் இமயத்தின் மேல் ஏறியது. எங்கள் பயண இலட்சியத்தை நாங்கள் அடைந்தது அங்கேதான். எங்கள் கனவு நினைவானது அங்கேதான். அதுதான் நார்க்கண்டா (Narkanda) என்னும் இடம்.<br />
<br /></div>
<div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdhoxfodztzIs_z3oGO1W28Gd9GeJvGUlWpLf6KKLWToMrlwfBaJpqzCiHi1XsVk-mjLXcyy_tx886jh9IkQm32KcHaJl3Ur2-6KAaDgpyvWbivTJpIShhAym6Vb3hz-mMHnMDkzRAM0Q/s1600/SDC10215.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdhoxfodztzIs_z3oGO1W28Gd9GeJvGUlWpLf6KKLWToMrlwfBaJpqzCiHi1XsVk-mjLXcyy_tx886jh9IkQm32KcHaJl3Ur2-6KAaDgpyvWbivTJpIShhAym6Vb3hz-mMHnMDkzRAM0Q/s1600/SDC10215.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Narkanda</td></tr>
</tbody></table>
</div>
எங்கள் கண் முன் தோன்றிய காட்சி வெள்ளைப் பனி சூழ்ந்த பனி மலை. அங்கு மக்கள் கூட்டம் எறும்புகள் போல் தெரிந்தது. படங்களில் காண்பது போன்ற பனி, என் முட்டி வரை அந்தப் பனியில் புதைந்தது. மீண்டும் மழலைகள் ஆகி, பனிப் பந்தெறிந்து விளையாடினோம். சற்று வளர்ந்து வாலிப வயதை எட்டி, ஜேம்ஸ் பான்ட் படங்களில் வருவது போல் பனி சறுக்கும் செய்தோம். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். 'மீண்டும் அப்படி ஒரு நாள் வருமா?' என்று மனம் இன்றும் ஏங்குகிறது. <br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicHIqIVv8yhT73PE4CrnGIODo__X1g8i4LngMbKn2xbIUz1o7Y1jQwMfGwPFe4jPx4htmXbF6F2ohyV64NckVFDY2HDsv1la-2hzLGAYKGsTw8T2e_BKIdZ_wRJmLnb7so12AeuN5WnoA/s1600/DSC05842.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicHIqIVv8yhT73PE4CrnGIODo__X1g8i4LngMbKn2xbIUz1o7Y1jQwMfGwPFe4jPx4htmXbF6F2ohyV64NckVFDY2HDsv1la-2hzLGAYKGsTw8T2e_BKIdZ_wRJmLnb7so12AeuN5WnoA/s1600/DSC05842.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Myself ice skating </td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div style="text-align: right;">
தொடரும்.... </div>
</div>
</div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-21077248455256657332014-03-24T00:03:00.000+05:302014-03-24T00:03:07.539+05:30சிம்லா ஸ்பெஷல் - ரயில் பயணம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
சில ஆங்கிலப் படங்களிலும், தமிழ் சினிமா பாடல்களிலும் காட்டப்பட்டப் பனிப் பிரதேசங்களைப் பார்த்து, சிறுவயது முதலே உறைப்பனியை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்ற ஆசை மனதில் வளர்ந்து கொண்டு இருந்தது. பொருளாதார சிக்கல்களால் அலுவலகம் சேரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகம் சேர்ந்து கல்லூரி நண்பர்களுடன் கலந்து பேசி, ஏழு பேர் கொண்ட குழு உருவாகி, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் வேளையில் மனாலி செல்வது என்று முடிவானது. </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
டிசம்பர் மாதம் என்பதால் அங்கு குளிர் உச்சக்கட்டத்தை அடைந்து, பனி உருவாகும் என்பது எங்கள் எண்ணம். அதே வானிலை மோசமான நிலையை அடைந்தால், சாலையில் பனிச் சரிவுகள் உண்டாகி, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, அங்கேயே சில நாட்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகலாம் என்ற ஒரு செய்தியும் எங்களை கலக்கியது. பல குழப்பங்களுக்கு நடுவே எங்கள் இலக்கு சற்று மேற்கு திரும்பி, சிம்லா செல்வது என்று முடிவானது. </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
ஏழு பேர் என்பதால், நால்வர் மற்றும் மூவராக பிரித்து ரயில் சீட்டு முன்பதிவு செய்துகொண்டோம். வெய்டிங் லிஸ்ட் தான் என்றாலும் நிச்சயம் கன்பார்ம் ஆகி விடும் என்ற நம்பிக்கை முன்பதிவு செய்த என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்தது. சில நாட்கள் கழித்து நண்பர்கள் மூவர் பின்வாங்க, என்னுடன் சேர்த்து நால்வர் மட்டுமே செல்வது என்று இறுதியானது. நான், எனது நண்பன், எனது நண்பனின் பள்ளி நண்பன், மற்றும் அவனின் அண்ணன், இதுவே எங்கள் பயணக் கூழு. மூவருக்கு என முன் பதிவு செய்த சீட்டில் என்னைத் தவிர மற்ற இருவரும் பின்வாங்க, தனிமையான ரயில் பயணம் எனக்காக காத்திருந்ததை அப்பொழுது நான் அறியேன். </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: justify;">
எனக்கும் எனது நண்பனுக்கும்(பின் வாங்கியவர்களில் ஒருவன்) கல்லூரி முதலே ஒரு ஆசை உண்டு. முக்கால் காற்சட்டை அணிந்து, தோளில் பையுடன், கலர்க் கண்ணாடி அணித்து ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். என் நண்பன் என்னுடன் வராவிடினும், முக்கால் காற்சட்டையுடன் 2012, டிசம்பர் 21 ஆம் நாள் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, பனியைத் தேடிய என் பயணம் ஆரம்பமாகியது. </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: x-small;"><span style="font-size: 16px;">எனது நண்பனின் எண்ணம் போலே முன்பதிவு செய்த டிக்கெட்கள் </span></span>கன்பார்ம் <span style="font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: x-small;"><span style="font-size: 16px;"> ஆகின. மூவர் S3 யிலும் நான் மட்டும் S8 யிலும் என்று கணினி முடிவு செய்திருந்தது. சென்ட்ரலில் இறங்கியவுடன் ஹிக்கின் பாதம்ஸ் சென்று, மூன்று சுஜாதாவின் நாவல்களை வாங்கிக்கொண்டேன். </span></span></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
பயணிகள் பெயர் பட்டியல் வழக்கம் போல் தந்த ஏமாற்றத்துடன், எனது பெட்டியில் நான் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரே ஒரு பூட்டு-சங்கிலி வியாபாரி வந்து என்னை தடுத்தார். பூட்டுடன் வலுவான சங்கிலி எனது உடமைகளை ரயிலில் பாதுகாக்க உதவும் என்று சொல்லி, அறுபது ரூபாய்க்கு என்னிடம் விற்றார். இன்றளவும் எனது அனைத்து ரயில் பயணங்களிலும் அந்த பூட்டு சங்கிலி எனது உடமைகளுக்கு ஒரு அரணாக உள்ளது. </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br />
எனது அனைத்து ரயில் பயணங்களுக்கும் மூன்று ஒற்றுமைகள் உண்டு:<br />
<br />
1) கட்டாயமாக டூத் பிரஷ் எடுத்துச் செல்ல மறந்திடுவேன்.<br />
<br />
2) எனது இருக்கை கழிவறைக்கு மிக அருகில் அமைவது வழக்கம்.<br />
<br />
3) எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்) <br />
<br />
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
இந்தப் பயணமும் இந்த ஒற்றுமைகளுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் தொடங்கும் முன் என் மற்ற நண்பர்களை சந்தித்தேன், என்னிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் சென்றனர். எல்லாப் பெட்டிகளும் இணைக்கப் பட்டவை தானே இடையில் அவர்களை சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். வாங்கிய சங்கிலியுடன் எனது பையை கீழே பூட்டி விட்டு, சைடு அப்பர் பெர்த்தில் நான் ஏறி அமர, MAS - Durronto எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தனது புது தில்லி நோக்கிய பயணத்தை தொடங்கியது. <br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL-LHUWL17jTWhLra-by-ZyqMf6Wf0c5M9JnAIoIdGPBVGI57t6QOQhB0AxPkD0cTytyYeXK1DYUW4DBfxoQa7NfABiwQaBosfv811bzVQ_Qs8DUuYTzFDH8Tpg9fhWy6AbFtHKSClx_Q/s1600/SDC10228.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL-LHUWL17jTWhLra-by-ZyqMf6Wf0c5M9JnAIoIdGPBVGI57t6QOQhB0AxPkD0cTytyYeXK1DYUW4DBfxoQa7NfABiwQaBosfv811bzVQ_Qs8DUuYTzFDH8Tpg9fhWy6AbFtHKSClx_Q/s1600/SDC10228.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பயணக் குழு</td></tr>
</tbody></table>
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
இரவு உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்த புளியோதரை மட்டும் அவித்த முட்டையுடன் முடித்த பொழுது, தமிழக உணவின் சுவையை அடுத்த எட்டு நாட்களுக்கு நான் இழக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இரவு ரயில் ஆந்திராவை கடக்கும் பொழுது, காலை அலுவலகம் சென்று வந்த களைப்பில் நன்கு உறங்கி விட்டேன். காலை உணவாக பிரட் ஒம்லெட் ஆர்டர் செய்துகொண்டேன். அருகில் இருந்தவர் உண்ட பொங்கல் வடையைக் கண்ட பொழுதே எனது பிரட் ஒம்லெட் பன் மடங்கு மேல் எனத் தோன்றியது.<br />
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
ஆந்திராவை முழுவதும் கடந்து வடக்கு நோக்கி செல்ல, ரயில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிற்கத் தொடங்கியது. அந்த ஊர்களில் ஏறுபவர் ஓபன் டிக்கெட் வாங்கினாலும், ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறி காலியாக இருக்கும் இடங்களை தங்கள் வசமாக்கி, அந்த சீட்டுக்கு உரியவரை ஓரம் ஒதுக்கி விட்டனர். எனக்கு சைடு அப்பர் என்பதால் எனது அருகில் யாரும் வரவில்லை. எனது இருக்கையை காலியாக விட்டு நான் அசையமுடியாத, எனது மற்ற நண்பர்களையும் காணசெல்ல முடியவில்லை. இருப்பினும் என் நண்பன் தன் இருக்கைக்கு ஒரு தமிழரரை காவல் வைத்து விட்டு, என்னைக் காண வந்தான். அவன் பெட்டியிலும் இதே நிலை தான் என்று புலம்பினான். ரயில் ஊர்களை நெருங்கும் பொழுது கழிவறைக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன். </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
மதியமும் இரவும், முட்டை பிரியாணியுடனும் (சுவை தக்காளி சாதம் போலத் தான் இருந்தது), எனக்கு வழித்துணையாக பயணித்த சுஜாததாவுடனும் சென்றது. தனிமையில் இரவு வருவதற்குள் அந்த ஒரு பகல் பல யுகங்கள் போல் தோன்றியது. அதிகாலை வேளையில் குளிர்ந்த வானிலை என்னை எழுப்ப, ரயில் பனி மூட்டம் காரணமாக சற்று மெதுவாக செல்வதை உணர்ந்தேன். சீட்டை விட்டு இறங்கிய போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த பலரும் எனது முக்கால் காற்சட்டையை பார்த்து வியந்தனர். ரயில் ஆக்ராவை அடையும் பொழுது, என்னால் குளிரை பொறுக்க முடியாமல், ஜீனுடன் சூவையும் மாற்றிக்கொண்டேன். குளிரில் மதுபானங்கள் பருகுவது எதற்கு என்பதை அந்த நிமிடம் என் அருகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் என்னிடம் சொல்லி, நக்கலாக சிரித்தார். </div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
ஏழு மணிநேர தாமதமத்துடன் ரயில், நிஷாமுத்தின் ரயில் நிலையத்தை அடைய, பல வித எதிர்பார்க்புகளுடன், என் நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்.<br />
<div style="text-align: right;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
நிசாமுதினில் இருந்து முதலில் நாங்கள் சென்ற இடம் புது டில்லி ரயில் நிலையம். நிசாமுதின் மற்றும் புது டில்லி ரயில் நிலையம், நமது எக்மோர் மற்றும் சென்ட்ரல் போல் என்று நானே யூகித்துக்கொண்டேன். வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நம் தலை நகரம் இருக்கும் என்ற எண்ணத்துடன், ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கோ ஏழ்மை தலை விரித்தாடும் கோலத்தை கண்டேன். சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வசிப்பதைக் கண்டேன். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் சென்னையில் நான் கண்டிராத மனித ரிக்சாக்களை அங்குக் கண்டு மனம் நொந்தேன். பல எதிர்பார்ப்புக்களுடன் தலை நகரில் வந்து இறங்கிய எனக்கு பெருத்த ஏமாற்றம் தான். </div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
இந்திய ரயில்களுக்கும் நேரம் தவருவதுக்கும் ஒரு இனம் புரியா பந்தம் இருப்பதாலும், சென்னையில் இருந்து புது டில்லி செல்லும் ரயில்கள் என்றுமே சரியான நேரத்திற்கு செல்வதில்லை என்பதாலும், டில்லியில் இருந்து எங்களது சிம்லா பயணத்திற்கு டிசம்பர் 24 அன்றே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு முறை மட்டும் கல்கா செல்லும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் அது. என் நண்பனின் முன் யோசனைப் படி செயல் படாமல், அன்றே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் அந்த ரயிலை தவற விட்டிருப்போம். ஒரு நாள் பொழுது டில்லியில் என்றானது. </div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
புது டில்லி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் MEM இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு, டில்லியை சுற்றக் கிளம்பினோம். தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாமல் வட தேசம் நோக்கி சென்றோமானால் ஒரு எலியைக் கூட யானை என்று ஏமாற்றி நம் தலையில் கட்டுபவர்கள் அதிகம். எங்களுக்கு மிக அருகில் அதிருஷ்ட தேவதை இருந்ததால், எங்கள் குழுவில் இருந்த நண்பனின் அண்ணனுக்கு ஹிந்தி சரளமாக பேசவும் படிக்கவும் தெரியும். அவரது ஹிந்தி பேச்சினால் எங்கள் பயணத்தில் 4000 ரூபாய் வரை சேமித்தோம் என்பது இன்றளவும் நம்ப முடியாத உண்மை. மேலும் அவர் உயற்கல்வி பயின்றது டில்லியில் என்பதால், அவரது தலைமையில் எங்கள் தலை நகர் உலா தொடங்கியது. </div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
டில்லியில் அதிக பிரபலமான சில அங்காடித் தெருக்களுக்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டு, அங்கு பயணிக்க மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். மெட்ரோவில் எங்கு செல்லவேண்டுமானாலும் டோக்கன் தான். நமது இலக்கை சொல்லி காசு கொடுத்தால் அதற்கு ஒரு டோக்கன் தருகின்றனர், அதை பயன்படுத்தி தான் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முடியும். அதே போல் நம் இலக்கை அடைந்த உடன் அதை பயன் படுத்தினால் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளிய வர முடியும். இங்கு வழக்கமாக பயணிப்பவர்கள் பாஸ் வைத்துள்ளனர், பயண தூரத்தை நுழைவு மற்றும் வெளியேறும் ஸ்டேஷன் மூலம் கணினி கணித்துக் கொண்டு அதற்கேற்ப காசு கழித்துக்கொள்கிறது. </div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
அந்த ரயில் நிலையத்தில் வழக்கமாக காணப்படும் பாண் பராக் மற்றும் எச்சில் கரைகள் சுவரில் இல்லாததை கண்டு வியந்தேன். மெட்ரோ ரயில் வந்தவுடன் தானியங்கிக் கதவு திறந்து எங்களை வரவேற்தது. அந்த ரயிலின் உள்ளே சென்றவுடன், 'அம்மம்மா நாம் இந்தியாவில் தான் உள்ளோமா?' என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். மேல்நாட்டு சினிமாவில் காண்பது போன்ற மிகவும் சுத்தமாக, தட்ப வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதியுடன் நவீனமாக இருந்தது. ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் டில்லியில் மெட்ரோவை பயன்படுத்தினாலும் இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பது பெரிய விஷயம் தான்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEC-17yrFosmwdFjyjFTEvwPYwTB50EvUf_xNf_zm0aZK9XzVccAcYsuzzWWKABzxSumHWR8t6jfyNXWRa4f1sDFsainf1NQQ37LLiMAB7o4BUUZ27x4NILACNfa7JeQIZbYpfArBBms0/s1600/DSC05765.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEC-17yrFosmwdFjyjFTEvwPYwTB50EvUf_xNf_zm0aZK9XzVccAcYsuzzWWKABzxSumHWR8t6jfyNXWRa4f1sDFsainf1NQQ37LLiMAB7o4BUUZ27x4NILACNfa7JeQIZbYpfArBBms0/s1600/DSC05765.JPG" height="320" width="240" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மெட்ரோ ரயிலினுள்</td></tr>
</tbody></table>
</div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
டில்லியில் ரோட்டோரக் கடைகளுக்கு பஞ்சமே கிடையாது. எத்தனை வகைகள். எத்தனை கடைகள். இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சற்று சுருக்கமாக கையேந்தி பவன்களை பற்றி சொல்லி விடுகிறேன். எமது நண்பரின் அண்ணன் டில்லியில் படித்தால் அவருக்கு பரிட்சயமான கடைகளுக்கு அழைத்துச் சென்றார். முதலில் குல்ச்சா வாங்கித் தந்தார், பின் பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆலு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ என அனைத்து வகைக்கடைகளிலும் ஒரு வேட்டை தான். எல்லாமே ரோட்டோரக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி வந்து விட்டு டில்லி அப்பளத்தை தவற விடுவோமா, அதையும் கொறித்து விட்டோம். இரவு ஒரு கோழிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு எங்கள் தலை நகர உலாவை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம். </div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
மறு நாள் காலை, டில்லியில் வரலாறு காணாத பனி பொழிந்த அந்த வேளையில் கல்கா நோக்கி செல்லும் ரயில் பிடிக்க புது டில்லி ரயில் நிலையம் நோக்கி சென்றோம். ரயிலுக்காக காத்திருந்த வேளையில் அங்கு நடைமேடையில் ஒரு தள்ளு வண்டியை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்க அங்கு சென்று பார்த்தோம். அங்கு பூரி விற்றுகொண்டிருன்தனர். பத்து ரூபாய்க்கு எட்டு பூரிக்கள் சப்ஜியுடன் தந்தனர். பூரிக்கு உருளை மசாலா மட்டுமே உண்டு பழக்கப் பட்ட நாக்கு அங்கு பசியின் பிடியில் அந்த நீர் போன்ற சப்ஜியுடன் வயிற்றை நிரப்பியது. </div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
<br /></div>
<div style="font-family: 'Times New Roman'; font-size: medium;">
ஆறு மணிக்கு இந்த ரயிலை பிடித்து கல்கா சென்று, அங்கிருந்து மலை வழியாக சிம்லா செல்லும் டாய் ரயிலில் செல்வதுதான் எங்கள் திட்டம். அந்த டாய் ரயில் நமது ஊட்டி ரயில் போல, அதில் சென்றால் தான் சிம்லா மலைகளின் இயற்கை எழிலை நன்கு அனுபவிக்க முடியுமாம். மணி ஏழானது, பின் எட்டானது, பின் ஒன்பது மணியையும் கடந்தது. தனது சேவை நாட்களில் ஷதாப்தி ரயில் என்றுமே நேரம் தவறியதில்லையாம். எங்கள் அதிஷ்டம் அதையும் தொத்திக்கொண்டது. ஷதாப்தி ரயில் வருமா, டாய் ரயிலை பிடித்து விடுவோமா? <br />
<br />
<span style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px; text-align: right;">தொடரும்.... </span></div>
<div style="text-align: right;">
</div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-7516869105396842702014-03-17T06:34:00.000+05:302014-03-17T06:37:26.625+05:30சா. மு. கா. வே. உலக சினிமா - த்ரிஷ்யம் (2013) <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div style="text-align: justify;">
*********************************************************************************************************</div>
<div style="text-align: justify;">
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை '<b>சா</b>கும் <b>மு</b>ன் <b>கா</b>ண <b>வே</b>ண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.</div>
<div style="text-align: justify;">
*********************************************************************************************************</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3WqXkqkpkt7IZrPmanQRvbQfVJR75qk2ZMTZr8ldl1aUqEl2lFtDk1RPRm9y7rLsCnF7WoVRV_rASJwo32OyCdfIyPYRJ6ofmtFGt1EfqmjXzr2dChpj5jGOMB-r0jSAU1o3nMAUwmNU/s1600/Drishyam--3-DRISHYAM-MALAYALAM-MOVIE-POSTERS-CS(4).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3WqXkqkpkt7IZrPmanQRvbQfVJR75qk2ZMTZr8ldl1aUqEl2lFtDk1RPRm9y7rLsCnF7WoVRV_rASJwo32OyCdfIyPYRJ6ofmtFGt1EfqmjXzr2dChpj5jGOMB-r0jSAU1o3nMAUwmNU/s1600/Drishyam--3-DRISHYAM-MALAYALAM-MOVIE-POSTERS-CS(4).jpg" height="198" width="320" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
சமீபத்தில் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த சினிமா த்ரிஷ்யம் என்னும் மலையாள மொழி திரைப்படம். படம் பற்றிய விமர்சனங்கள் வந்து குவிய, இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்கில் தான் காணவேண்டும் என்று ஜனவரியில் முடிவு செய்தேன். சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் வாரா வாரம் புதுப் படங்களின் வருகையால் காட்சிகள் மாறுவது வழக்கம். அப்படி ஓரம் தள்ளப் பட்டது த்ரிஷ்யம். சென்னையில், ஸ்கைவாக் PVR திரையரங்கில் 6 45 மணிக்கும், எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக்கும் மொத்தம் இரண்டு காட்சிகள் மட்டும் தான் திரையிடப்பட்டன. பல மாத போராட்டங்களுக்கு பிறகு மார்ச் முதல் வாரம் PVR திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டேன். மேலும் ஒரு தடங்கலாக 7 மணி ஆனபோதும் படம் தொடங்கவில்லை. காட்சி தடை செய்யப்பட்டால் என்னுள் ஏற்படும் ஏமாற்றத்தை எப்படி தீர்ப்பது என்று நான் ஐயம் கொள்ள, 7 30 மணிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக படம் தொடங்கியது. </div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு மலையாளம் தெரியாது என்பதையும், திரையில் சப்-டைட்டில் போடவில்லை என்பதையும் முன்னமே தெரிவித்துக்கொள்கிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் மலையாளம் அறிந்தவர்கள் மன்னித்து திருத்தவும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சிறிய கிராமத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் கடை வைத்திருப்பவர் ஜார்ஜ் குட்டி (மோகன் லால்). இவரது மனைவியாக மீனா நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு படத்தில் பள்ளி செல்லும் வயதில் இரு மகள்கள். ஜார்ஜ் குட்டி கிராமத்து மக்களிடம் கலகலப்பாக பழகும் ஒரு வெள்ளந்தி மனிதர். முழு நேரமும் சினிமா பார்க்கும் பழக்கம் அவருக்கு உண்டு. பல நாட்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல் விடிய விடிய தன் கடையிலேய சினிமா பார்க்கும் (என்னைப் போன்ற) ஒரு உலக சினிமா பைத்தியம் என்றே சொல்லலாம். நான்காம் வகுப்பு வரை மட்டும் படித்து, தனது உழைப்பால், தனது நடுத்தர குடும்பத்தை நம்பிக்கையுடன் நடத்திவருபவர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdt6QN9ivTDUZIxnZAroOCahu42t8Hc7NfCUFu0GG2S1bZ2_yPSfZdtaeXaghiSL8o10DVSayiRheiOAe4-LhUnfX67OfdIActGsuGeESo7hgM0xCePCIruxqEbuLr5f8rpmJQC3TGC0w/s1600/drishyam-movie-stills-0143.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdt6QN9ivTDUZIxnZAroOCahu42t8Hc7NfCUFu0GG2S1bZ2_yPSfZdtaeXaghiSL8o10DVSayiRheiOAe4-LhUnfX67OfdIActGsuGeESo7hgM0xCePCIruxqEbuLr5f8rpmJQC3TGC0w/s1600/drishyam-movie-stills-0143.jpg" height="213" width="320" /></a></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி அன்பும் கலகலப்பும் நிறைந்து இருக்கும் குடும்பத்தில் ஒரு சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. காவல் துறை உயர் அதிகாரியின் ஒரே மகன் ஜார்ஜ் குட்டியின் வீட்டில், அவனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயல, அவள் அவன் தலையில் அடிக்க, அவன் இறந்துவிடுகிறான். தனது சினிமா அறிவை பயன்படுத்தி ஜார்ஜ் குட்டி கொலைக்கான தடையங்களை மறைக்கிறான்.<br />
<br />
இறந்தவனின் கைபேசி கடைசியாக இயங்கியது ஜார்ஜ் குட்டியின் கிராமம் என்பதாலும், மேலும் அந்த காணாமல் போன பையன் ஜார்ஜ் குட்டியின் மூத்த மகளுடன் கேம்ப் சென்றான் என்பதாலும், காவல் துறைக்கு ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் சந்தேகம் எழுகின்றது.<br />
<br />
தனது மகனின் நிலையை அறிய போராடும், தாய்ப் பாசமும் அதிகார கர்வமும் கலந்த காவல் துறை DIG, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் மேல் குற்றம் உறுதி செய்ய போராடுவதும், நான்காம் வகுப்பு வரைப் படித்த ஒரு சாமான்யனான ஜார்ஜ் குட்டி, தனது சினிமா பார்த்த அறிவை மட்டுமே பயன்படுத்தி, தனது குடும்பத்தை கொலைப் பழியில் இருந்து காக்கக் போராடுவதுமே மீதிப் படம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>படத்தில் நான் ரசித்தவை:</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜார்ஜ் குட்டியாக படம் முழுவதும் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மோகன் லால்.</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_VIfMxjFqGsf_9q8nqQnkWOwxTRXhcp-mOourhyphenhyphen7bFJ17Loe-4cInOjk8mj8P8hyjV5siZ1OSDf35VlzCpeSICGNrStm9kHuCHKER_9gV6JLvZLoRAf67CETqgnMxxxIoVDUjh64MlsA/s1600/Drishyam-Movie-Still.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_VIfMxjFqGsf_9q8nqQnkWOwxTRXhcp-mOourhyphenhyphen7bFJ17Loe-4cInOjk8mj8P8hyjV5siZ1OSDf35VlzCpeSICGNrStm9kHuCHKER_9gV6JLvZLoRAf67CETqgnMxxxIoVDUjh64MlsA/s1600/Drishyam-Movie-Still.jpg" height="194" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
ஒரு குடும்பத் தலைவியாக ராணி கதாப்பாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மீனா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காவல் துறை அதிகாரியாகவும் மகனை பறிகொடுத்த தாயாகவும் நம்மை மிரட்டியுள்ளார் ஆஷா.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqTv7MwzNGePr3OGUssx2kYx-8mlqUze5ccuhihLnXOeZeNkD9_KUvHmmFUTBb7ah8CK82_iuwfJUHbR7uBuurzaBTS37B3JvNpD4Mp3P83JP6dD77oEIS2Oyne3xI5qH2-G6vYhq1eW8/s1600/asha-sarath-photos-in-drishyam-movie-2-large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqTv7MwzNGePr3OGUssx2kYx-8mlqUze5ccuhihLnXOeZeNkD9_KUvHmmFUTBb7ah8CK82_iuwfJUHbR7uBuurzaBTS37B3JvNpD4Mp3P83JP6dD77oEIS2Oyne3xI5qH2-G6vYhq1eW8/s1600/asha-sarath-photos-in-drishyam-movie-2-large.jpg" height="213" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை என்றாலும், கான்ஸ்டபிள் சஹாதேவன் மீது நமக்கு வெறுப்பை உண்டாக்கி அவரையே வில்லன் போல் பாவிக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZT3k4XnLqfzEqcM5zU02Tp5W_xOvvy6c_MSCHIFAP0NvcaJnnSE6n9r_0fBk84tukASyd8euswNWiimv2oEQ-rbWdm1P2cpQTCyPRCA6Y7pH6vuZXBgpYZHXv5EQG5NZrD0hx1IwV-xo/s1600/Drishyam+(50).JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZT3k4XnLqfzEqcM5zU02Tp5W_xOvvy6c_MSCHIFAP0NvcaJnnSE6n9r_0fBk84tukASyd8euswNWiimv2oEQ-rbWdm1P2cpQTCyPRCA6Y7pH6vuZXBgpYZHXv5EQG5NZrD0hx1IwV-xo/s1600/Drishyam+(50).JPG" height="213" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சகாதேவன் </td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: justify;">
<br />
தேவையின்றி எரியும் மின் விளக்கை அணைக்கும் காட்சி, தேவையற்ற பாடல்கள் படத்தில் இல்லாதது, சண்டைக் காட்சிகள் போன்ற மசாலாக் கலவைகள் இல்லாதது, படத்தின் இயல்பான திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மனிதனின் சினிமா அறிவு அவனை எந்த அளவு சாதிக்கச் செய்யும் என்பதை ஜார்ஜ் குட்டியின் மூலம் பிரதிபலித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படம் முடியும் பொழுது திரையில் தோன்றும் எதிர்பாராத திருப்பம், உங்களை அறியாமலே உங்களை விசில் அடிக்கச் செய்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொத்தத்தில் யாரும் தவற விடக்ககூடாத ஒரு அழகான சினிமா. <br />
<br />
*******************************************************************************************************<br />
ஆண்டு : 2013<br />
மொழி : மலையாளம்<br />
என் மதிப்பீடு : 4.8/5 <br />
******************************************************************************************************* <br />
<br />
இன்று வலைச்சரத்தில் நான் எழுதிய பதிவு : '<a href="http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_17.html" target="_blank"><span style="color: blue;"><b>எனது வலையுலகப் பயணம்</b></span></a>' </div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-40496494047379037312014-03-12T07:26:00.001+05:302014-03-12T07:27:59.688+05:30ஒரு மார்கழியில் கொலை (சிறுகதை) <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மார்கழி 1</span></b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
அம்பத்தூர் காவல் நிலையத்தில் அபசுரமாக ஒலித்த தொலைபேசியின் சுப்ரபாதம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பாராவின் தூக்கத்தை கலைக்க, களைப்பு நீங்காத அலுப்பில் மெல்ல தன் தலையை சுற்றி இருந்த சால்வையை விளக்க்கி பதில் கூறுவதற்கு முன் 'உனக்கேன் சிரமம்' என்பது போல நின்றுவிட்டது.'இனி தூக்கம் வந்த மாதிரிதான்'எள்ற முனங்களுடன் கழிவறையை நோக்கி சுப்பாராவ் நடக்கத் தொடங்கியபோது, தொலைபேசி மீண்டும் தன் கானக்குரலில் கதறத் தொடங்கியது. அந்த தொலைபேசியை எடுத்த வேகத்தில் ஏதோ ஒரு விலாசத்தை அவசரமாக குறித்து,அதே அவசரத்துடன் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள் கண்ணனை தட்டி எழுப்பினார் சுப்பாராவ். ஒரு நிமிடம் கூட தாமதியாமல் தன் சுந்தரம் அய்யாங்கார் காலத்து டிவிஎஸ் பிப்டியை மிதித்து சம்பவ இடத்திற்கு கிளம்பிய போது மணி ஆறு, மார்கழி ஒன்று.</div>
<div style="text-align: justify;">
<span style="color: #222222;"><br /></span></div>
<div style="text-align: justify;">
எவரேனும் போர்வையை உருவினால் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு திரும்ப போர்த்திக் கொண்டு தூங்கும் அளவு குளிர் நிலவும் அந்தக் காலை வேளையில் கைபேசி நம் தூக்கத்தை கலைத்தால் எவ்வளவு ஆத்திரம் வரும். ஆனால் ராகவனால் கோபப் பட முடியவில்லை, அவனை அழைத்தது அவன் காதலி பிரியா என்பதால். அவள் கூறிய விலாசத்தைக் குறித்துக் கொண்டு கதிரவன் தன் தூக்கத்தை தொடர நினைக்கும் காலை வேளையில் தன் இரு சக்கர வாகனத்தில் சீறிப் பாய்ந்தான். வாகன ஓட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் தன் காதலியுடன் நடந்த சந்திப்பை மனதில் அசைப்போட்டன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்திப் பூங்காவில் ராகவனுக்காக காத்திருந்த பிரியா, அவனைக் கண்டவுடன் 'எப்பவும் பசங்கதான் வெயிட் பண்ணுவாங்க. இங்க எல்லாமே தல கீழ நடக்குது' என்று சலித்துக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராகவன் அவள் கையை பிடித்து, அவளை தன் மார்பினுள் அணைத்து, போப் ஆண்டவர் முத்தம் ஒன்று அவள் உள்ளங்கையில் கொடுத்து அவள் சினத்தை குறைத்துவிட்டு, 'அப்பா என்ன சொன்னார்?' என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அப்பா ஒ.கே. சொல்லிடாரு' என்று சொல்லி 1000 வோல்ட் பல்ப் போல் பிரகாசித்த பிரியாவின் முகம், திடீர் மின் வெட்டு வந்தது போல் 'அதுல ஒரு கண்டிஷன் இருக்கு' என்று அணைந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அப்பா நீ கொஞ்சம் பிரபலம் ஆகணும்னு நினைக்கராறு' என்று சொல்லி அவள் தயங்க, 'என்ன மேடம் சிட்டில நான்தான் நம்பர் ஒன் மாட்ரிமோனியல் டீடெக்டிவ்னு உங்க அப்பா கிட்ட சொல்லலியா?' என்று சினுங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'சொன்னேன். ஆனா அப்பாவுக்கு அது பிடிக்கல. தனிமனித வாழ்கைய நீ ரகசியமா நோட்டம் விட்டு தகவல் சேகரிக்கறது ஒழுக்கம் இல்லைன்னு அவர் நினைக்கிறார்.', அவன் எதோ சொல்ல வர, அவனை தடுத்து விட்டு பிரியா தொடர்ந்தாள், 'அவர் கிட்ட நான் சண்டை போட்டேன். கடைசியா அவர் கொஞ்சம் எறங்கி வந்தாரு. ஒரே ஒரு கேஸ்லயாவது நீ வெளிப்படையா துப்பு துலக்கி பிரபலம் ஆகிட்டா நம்ம கல்யாணத்தை அவரே செய்து வைக்கரன்னு சொல்லி இருக்காரு. எனக்காக இது கூட செய்யமாட்டியா ராகவ்?' என்று மனதை வசீகரிக்கும் தோனியில் அவனை கெஞ்சினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இதுதான் எறங்கி வர்ரதா' என்று தன்னுள் நினைத்துக் கொண்டான். முடியாது என்று சொல்லி வெடிக்கும் ரணகளத்தை விட அந்த ரத்த களமே மேல் என்று முடிவு செய்து 'உனக்காக கண்டிப்பா செய்றேன் என்று' ராகவன் சொல்லி முடிப்பதற்குள் பிரியா அவனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பழனியப்பா நகரில் இருந்த ஒன்பதாம் நம்பர் வீட்டின் வாசலுக்கு சுப்பாராவ், கண்ணனுடன் வந்து சேர்ந்தார்.வீட்டின் வாசலில் கூடியிருந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டார், போலீஸ் வருவதைக் கண்டு விளகினர். 'யாரும்மா போன் பண்ணது' என்று சுப்பாராவ் கேட்க, 'நான்தாங்க. இந்த வீட்டு வேலைக்காரி காலை நாலு மணியில இருந்து கதவ தட்டினேன். யாரும் தொறக்கல. போன் பண்ணா உள்ளயே அடிக்கற சத்தம் கேட்குது.அதுதான் சந்தேகத்துல உங்களுக்கு போன் பண்ணேன்' என்று கூறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'கண்ணா போய் கதவ ஓட' என்று சுப்பாராவ் ஆணையிட, கண்ணனன் தன் வாலிப வலிமைகளையும் கடப்பாரையும் கொண்டு கதவை உடைப்பதை கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து ராகவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கும் படி கண்ணனை வாசலில் காவல் நிறுத்திவிட்டு சுப்பாராவ் உள்ளே சென்றார். அவர் சென்ற பதினைத்து நிமிடங்களில் போலீஸ் வாகனமும், மருத்துவ ஊர்தியும் வந்ததையும், அடுத்த இருபது நிமிடங்களில் வீட்டினுள் இருந்து இரு உடல்கள் கொண்டு வரப்பட்டதையும் ராகவன் பார்த்துக்கொண்டிருந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த உடல்களின் பின் வெளியே வந்த சுப்பாராவ், 'மிஸ்டர் ராகவன் இங்க என்ன பண்றீங்க?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் கூட்டத்தைப் பார்த்து அப்படியே நின்னுட்டேன்' என்று சமாளித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'மாட்ரிமோனியல்ல இருந்து கிரைம்கு மாறியாச்சா?' என்று ஏளனம் செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அது எல்லாம் ஒரு கட்டாயக் கதை, அப்பறம் விவரமா சொல்றேன். என்ன கேஸ் சார்?' என்று ராகவன் கேட்க 'வாங்க டீ சாப்டுடே பேசலாம்' என்று கடையை நோக்கி அழைத்துச் சென்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டீக்கடையில் சுப்பாராவ் கொடுத்த தகவல்களை ராகவன் தன் கைபேசியில் குறித்துக்கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<ul>
<li style="text-align: justify;"><i>வீட்டுக் </i><i>கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள் பக்கமாக பூட்டி இருந்தன.</i></li>
<li style="text-align: justify;"><i>கணவன் மனைவி இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தனர்.</i></li>
<li style="text-align: justify;"><i>பணம் மற்றும் நகைகள் திருடு போன தடயங்கள் எதுவும் இல்லை.</i></li>
<li style="text-align: justify;"><i>அவர்கள் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியாவில்லை, உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின்பு தான் இறந்ததன் காரணம் தெரியும்.</i></li>
<li style="text-align: justify;"><i>கடைசியாக நேற்று மாலை ஆறு மணிக்கு அவர்களை உயிருடன் கண்டது அந்து வீட்டு வேலைக்காரி.</i></li>
<li style="text-align: justify;"><i>அக்கம் பக்கம் விசாரித்ததில் அன்பாக வாழ்ந்த இளம் தம்பதியர் எனத் தெரிகின்றது.</i></li>
<li style="text-align: justify;"><i>இருவர் தவிர்த்து அந்த வீட்டிற்கு வேறு யாரும் வந்தது கிடையாது என்று அந்த வேலைக்காரி உறுதியாக சொல்கிறாள்.</i></li>
</ul>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span style="font-weight: bold;"><br /></span></div>
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"> மார்கழி 2</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'என்ன ராகவன் ஸ்டேஷன்கு வந்திருக்கிங்க. அந்தக் கணவன் மனைவி கேஸ்ஆ' என்று காவல் நிலையத்தினுள் நுழைந்த ராகவனை பார்த்துக் கேட்க, அவன் 'ஆம்' என்று தலையாட்ட, மேலும் தொடர்ந்தார் 'அந்த கேஸ்ல எங்களுக்கே வேலை இல்லைன்னு ஆயிடுச்சு. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் புட் பாய்சன்னு வந்திருக்கு. நீங்க ஏன் இன்னமும் அதுல ஆர்வமா இருக்கீங்க? ' என்று சுப்பாராவ் கேட்க, 'என் உள் மனசு எதோ தப்பு நடந்திருக்குன்னு சொல்லுது' என்றான் ராகவன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'போய் உங்க பொழப்ப பாருங்க ராகவன், உங்க காதலை வாழவைக்க வேற கேஸ் ஏதாவது வந்தா நானே சொல்லி அனுப்புறேன்.' என்று அவனை திட்டி அனுப்பினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மார்கழி 6</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நாட்கள் கடந்து சென்றாலும், ராகவனின் மனம் சமாதானம் அடையவில்லை. எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று அவன் மனது அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டிருந்தது. 'அந்த வீட்டிற்க்குச் சென்று ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்' என்று முடிவு செய்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று இரவு யாருக்கும் தெரியாமல் ராகவன் அந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக பின் வாசல் பால்கனி வழியே நுழைந்தான். மரணம் நடந்த அந்த வீட்டில் ஒரு இடுகாட்டின் அமைதி நிலவியது. ஒவ்வொரு அறையாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தடயங்களைத் தேடத் தொடங்கினான். முதலில் சமையல் அறையின் குப்பைத் தொட்டியை ஆராய்ந்தான், அதில் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில் இரண்டு காளான் துண்டுகள் கிருமிகள் சூழ கருநிறத்தில் இருந்தன. 'ஒரு குடும்பத்தை நீயா கொன்றாய். நிச்சயம் இருக்காது' என்று அந்த காளானுடன் பேசுகையில் பிரிட்ஜின் அருகில் ஒரு அறை மட்டும் பூட்டி இருந்ததைக் கண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அங்கு இருந்த சுத்தியை வைத்து அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பல நாள் துவைக்கப்படாத ஒரு காலணியில் இருந்து வருவது போன்ற வாசனை அந்த அறை எங்கும் பரவி இருந்தது. ஜன்னல் ஏதும் இல்லை, சூரிய ஒளி வர எந்த ஒரு துவாரமும் இல்லை. அந்த அறையினுள் இருந்த சவுண்ட் ப்ரூப் டோர், ப்ரொஜெக்டர், டிஸ்கோ லைட்ஸ் அவனுள் பல கேள்விகளை எழுப்பியது. இருவர் மட்டும் வாழும் வீட்டில் இவை எதற்கு?</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குளியல் அறையில் தான் அவனுக்கு சில தடயங்கள் கிடைக்கத் தொடங்கின. அதுவரை அந்தக் கொலையின் மேல் இருந்த அவனது பார்வை திரும்பத் தொடங்கியது. அந்த தடயம் கிடைத்த பின், புதிய தெளிவான கோணத்தில் வீட்டை மீண்டும் அலசத் தொடங்கினான். சில தடயங்கள் சிக்கின. கதவை உடைத்தது வீண் போகவில்லை என்று தன்னுள் நினைத்துக் கொண்டு பால்கனி கிரில் கதவை தான் கொண்டுவந்த பூட்டால் பூட்டி விட்டு வெளியே வந்தான்.<br />
<br />
<b><span style="color: red;">மார்கழி 7</span></b><br />
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
பிரியாவுக்கு அழைத்து, 'தாலி கட்ட கழுத்த தயாரா வைச்சிக்கோ. இந்த கேஸ்ல பெரிய தடையம் கிடைத்திருக்கு. இந்த கொலைய வெளிச்சத்திற்கு கொண்டுவந்துட்டு உன்ன மீட் பண்றேன்' என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மார்கழி 28</span></b><br />
<br /></div>
<div style="text-align: justify;">
காந்திப் பூங்காவில் பிரியா வர ராகவன் காத்திருந்தான். ராகவனைக் கண்டவுடன் பிரியா ஆர்வத்துடன் 'ஹை. கேஸ் என்ன ஆச்சு?' என்று உற்சாகத்துடன் கேட்டாள்.<br />
<br />
'இந்த கேஸ் வேண்டாம், வேற கேஸ் கிடைக்கும்' என்று சோகத்துடன் கூறினான்.<br />
<br />
சினங்கொண்ட பிரியா, சூடனா எண்ணையில் போட்ட கடுகு போல் வெடிக்கத் தொடங்கினாள். உண்மையை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், முள்ளின் மேல் நிற்பது போல் ராகவன் தவித்தான். பிரியா அவளது ஆத்திரம் தீர வெடித்தவுடன்,அவள் பிரம்மாயுதத்தை பயன்படுத்த துவங்கினாள். அணை உடைத்துக்கொண்டு கண்ணீர் கடல் பெருக, ராகவன் தன் மனப் பூட்டை உடைத்தான்.<br />
<br />
<b><span style="color: red;">மார்கழி 6</span></b><br />
<b><br /></b>
அன்று இரவு அந்த வீட்டை முதலில் அடைந்த பொழுது நானும் காவல் துறையின் கண்ணோட்டத்தில் தான் அலசினேன். ஒரு மர்ம அறையைத் தவிர வேறு ஒரு பெரியத் தடயமும் கிடைக்க வில்லை. சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்ற பொழுது, அங்கு இருந்த ஒரு துவாரத்தில் விஸ்பர் மற்றும் ஸ்டேப்ரீ கவர்கள் இருப்பதைக்கண்டேன். என் மூளையில் ஒரு கேள்வி தோன்றியது. ஆம் இந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்திருக்க சாத்தியங்கள் இருக்கு என்று, ஆடைகளை அலசத் தொடங்கினேன். சில ஆடைகளின் அளவுகள் வேறு பட்டிருந்தன. துணி அலமாரியின் அடுக்குகளின் மேல் போடப் பட்டிருந்த செய்தித்தாளின் அடியில் ஒரு கன்னிகாஸ்த்ரியின் புகைப்படம் கிடைத்தது.<br />
<br />
<b><span style="color: red;">மார்கழி 9</span></b><br />
<b><br /></b>
தேர்தல் ஆணையத்தில் பணி புரியும் என் நண்பன் ஒருவன் உதவியுடன், வாக்காளர் அடையாள அட்டை தகவல் கிடங்கிலிருந்து அந்த கன்னிகாஸ்த்ரியின் விவரங்கள் கிடைத்தது. அவரைத் தேடி வேலூர் சென்றேன். அவர் இருந்த அந்த அனாதை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்.<br />
<br />
'நான் உங்களோட உதவி நாடி இங்க வந்திருக்கேன். நீங்க உண்மையை மட்டும் பேசுவிங்க என்ற நம்பிக்கையில்' என்றேன்.<br />
<br />
'என்ன உதவி வேணும் சொல்லுங்க. அந்த ஏசுவின் கிருபையால் என்னால் முடிந்ததை செய்றேன்' என்றார் அந்த கன்னிகாஸ்த்ரி.<br />
<br />
'சமீபத்தில் உங்கள சந்திக்க, உங்களுக்கு தெரிந்த பெண் யாராவது உங்களைத் தேடி வந்தாங்களா?' என்று கேட்டு அவர் பதிலை எதிர் பார்த்து காத்திருந்தேன். அவர் முகத்தில் ஒரு வித குழப்பம் தோன்றி மறைந்தது.<br />
<br />
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'நான் போலீஸ் இல்ல, நான் ஒரு பிரைவேட் டீடெக்டிவ். அவங்களுக்கு உதவி பண்ணத்தான் இங்க வந்திருக்கேன்' என்று ஒரு பொய் சொன்னேன்.<br />
<br />
'அந்தப் பெண் செய்த கொலைக்கு பாவ மன்னிப்பு வாங்கி அவ கர்த்தர் கிட்ட தன் பாவத்தை இறக்கி வைச்சுட்டா. அவள பத்தி நீங்க அவ கிட்டயே கேட்டுக்கோங்க' என்று என்னை அந்தப் பெண் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவளது கதையையும் சொன்னார்.<br />
<br />
சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து, இந்த இல்லத்திலேயே வளர்ந்து வந்த பைரவி, ஏசுவின் உதவியால் கலைக்கல்லூரியில் படித்து பட்டப்படிப்பு படித்து திருச்சபையிலேயே சில பணிகளை செய்து வந்திருக்கிறாள். ஏழு மாதங்களுக்கு முன்பு காமேஸ்வரன் என்ற ஒரு வாலிபன் தாமாக இவளை மனம் முடிக்க முன்வந்து, இவளை திருமணம் செய்துகொண்டு சென்னை அழைத்துச் சென்றான் என்றும், அதன் பின் இப்பொழுதுதான் அவளை இந்த நிலையில் கண்டதாகவும் அவர் சொல்லி வருத்தப்பட்டார். <br />
<br />
ஒரு சாயம் போன வெந்தைய நிற சல்வாரில் வந்த பைரவி, அழகான உடலமைப்பு கொண்டிருந்தாலும், சரியான தூக்கமின்றி கண்களுக்கு கீழ் கரு வளையத்துடன் பொலிவிழந்து காணப்பட்டாள். அவளிடம் ''எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியலை. ஏன் இப்படி செய்திங்க?" என்று கேட்டேன்.<br />
<br />
புன்முறுவலுடன் பைரவி, "வாழத் தகுதியற்றவர்கள் அவர்கள்" என்று அந்நியன் விக்ரம் போல கூறித் தன் கதையை கூறினாள்.<br />
<br />
அனாதை இல்லத்தில் இருந்து திருமணம் செய்துகொண்டு அன்று இரவு அவளை சென்னை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். சென்னை வந்த பின் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த வீட்டில் அவன் மனைவி இருப்பது அவளுக்கு தெரிந்தவுடன், அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைரவியை அந்த ஜன்னல் இல்லாத மர்ம அறையில் தள்ளி பூட்டி விட்டான். சவுண்ட் ப்ரூப் என்பதால் அவள் கூச்சல் வெளியே கேட்பதில்லை. பகல் முழுவதும் அவள் அறையினுள்ளே பூட்டி வைக்கப் பட்டிருந்தாள்.<br />
<br />
அன்று இரவு அவளுக்கு உணவு கொடுத்து, பின் அவளை கட்டாயப்படுத்தி, இருவருடன் உடலுறவு கொண்டிருக்கான் அந்த காமேஸ்வரன். சில நாட்கள் இதுவே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு, அவளை தன் முதல் மனைவியோடு ஓரினச்சேர்க்கைல ஈடுபட கட்டாயப்படுத்தி இருக்கான். பைரவி அதற்கு மறுத்தவுடன், அவளை பெண் என்றுகூட பாராமல் தன் ஆத்திரம் அடங்கும் வரை, பாக்சிங் பையை அடிப்பது போல் அவள் வயிற்றை அடித்திருக்கிறான் அந்தக் காமக்கொடூரன். ஒரு கட்டத்தில் சித்தரவதை தாங்க முடியாமல் அவர்களின் ஆசைக்கு இயந்திரம் போல இணங்கியிருக்காள் பைரவி. தினமும் பைரவி முதல் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது, அதைக் கண்டு அந்தக் காமக்கொடூரன் சுயயின்பம் கொள்வது வழக்கமாயிற்று. <br />
<br />
'பாஸ்டர்ட்ஸ்' என்று பிரியா முணுமுணுத்தது ராகவன் காதில் விழாதது போல் அவன் மேலும் தொடர்ந்தான்.<br />
<br />
இப்படி ஒரு கொத்தடிமையாக அவள் வாழக்கை செல்ல, ஒரு நாள் இரவு கழிவரையில் இருக்கும் பொழுது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாள்.<br />
<br />
'காமா எனக்கு இவ ரொம்ப போர் அடிச்சு போயிட்டா.' என்று அவன் முதல் மனைவி சொல்ல 'இன்னும் ரெண்டு வாரம் தான். கோவைல இருக்கற ஒரு ஆஷ்ரமத்துல ஒரு பெண் பார்த்திருக்கேன். இவ சாப்பாட்டுல வழக்கம் போல அர்செனிக் கலக்க வேண்டியதுதான்' என்று அவர்கள் பேசிக்கொண்டது இவளை திடுக்கிட செய்தது. தன்னைப் போல் பல பெண்களுக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதா என்று நொறுங்கிப்போனாள். இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தன்னுள் முடிவு செய்தாள்.<br />
<br />
அன்று இரவு அந்த அர்செனிக் இருக்கும் ஜாடியை கண்டுபிடித்து, அவர்கள் சற்று அசந்த நேரத்தில் அவர்கள் உணவில் கலந்து விட்டாள். அவர்கள் உறக்கத்தில் இறந்தது போல் ஏற்பாடு செய்துவிட்டு, பால்கனி கிரில் கதவு வழியே இரண்டாவது சாவி கொண்டு வெளியே வந்து, பின் உள் பக்கமாக பூட்டி விட்டு, அந்த அனாதை இல்லத்திற்கே மீண்டும் திரும்பி விட்டதாக சொல்லி முடித்துவிட்டு, 'நீங்க இத போலீஸ் கிட்ட சொன்னாலும் எனக்கு கவல இல்ல. பல முகம் தெரியாத பெண்கள காப்பாத்தன சந்தோஷத்திலேயே நான் தூக்குல தொங்கத் தயார். ஒரு தடவ மதர பார்த்து அவங்க மடியில எல்லாம் சொல்லி அழனம்னு தான் இங்கே வந்தேன்' என்று அவள் முடிக்கும் பொழுது அவள் கண்ணில் நீர் ததும்பியது.<br />
<br />
'நீங்க செய்தது சட்டப்படி குற்றமா இருக்கலாம். ஆனா தர்மப்படி அது தப்பு இல்ல. நான் தர்மத்தின் பக்கம். உங்க ரகசியம் என்னோட மறையும்' என்று நான் சொல்லியவுடன், எனக்கு நன்றி சொல்லி மேலும் ஒரு உதவி கேட்டாள். <br />
<br />
<b><span style="color: red;">மார்கழி 28 </span></b><br />
<br />
ஆச்சரியத்தில் இருந்த பிரியா, "அது எப்படி சாப்பாட்டுல அர்செனிக் கலந்தா, சாப்படும் பொழுது தெரியும் இல்ல? அப்பறம் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல எப்படி மிஸ் ஆச்சு" என்று ராகவனை விசாரித்தாள்.<br />
<div>
<br /></div>
"பிரெஞ்சு மனனர் நெப்போலியன் சாவுல இருக்கறதா சந்தேகபட்படர அர்செனிக், இந்தக் கொலையிளையும் சம்மந்தப்பட்டு இருக்குறது வினோதம்தான். அர்செனிக் ஒரு பழங்கால விஷம்.அர்செனிக்கோட பியுட்டியே அதுக்கு வாசனை, நிறம், சுவை எதுவுமே கிடையாது தான். நீர்ல, இல்ல சாப்பாட்டுல கலந்தா கண்டே பிடிக்க முடியாது. அதோட விஷம் கொடுக்கற எபக்ட் எல்லாமே புட் பாய்சன் போலத்தான் இருக்கும். அதனால சாப்புட்ரவங்களுக்கும் தெரியாது,பிரேதப்பரிசோதனையிலும் தெரியாது" என்று பெருமையுடன் கூறி, 'இதையெல்லாம் நீ போய் போலிஸ்ல சொல்ல மாட்டதன?" என்று சந்தேகத்துடன் கேட்டான்.<br />
<br />
"நீ என்னப் புரிந்துக்கொண்டது அவளதானா.நானே அவங்கள கொன்னிருப்பேன். இந்த பைரவி ரொம்ப பாவம். நம்ம கல்யாணத்துக்கு வேற கேஸ் கிடக்கும்" என்று அவன் தோள் மீது சாய்ந்தவள் சட்டென்று எழுந்து 'அவ என்ன உதவி கேட்டா சொல்லவே இல்லையே?' என்று வினவினாள். <br />
<br />
"எல்லாத்தையும் நானே சொல்லிட்டா என்ன சஸ்பென்ஸ் இருக்கும். நாளை காலை தினசரில செய்தி வரும் " என்று சொல்லி, தன் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, " ரெண்டு புது மாட்ரிமோனியல் ப்ரோபைல் வந்திருக்கு நான் கிளம்பறேன்" என்று கேள்விகளுடன் இருந்த பிரியாவின் கன்னத்தில் முத்தமிட்டு ராகவன் புறப்பட்டான். <br />
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மார்கழி 29</span></b><br />
<b><br /></b>
காலையில் எழுந்தவுடன் தன் தந்தை கையில் இருந்த தினசரியை பிடுங்கி, பக்கங்களை ஆராயத் தொடங்கினாள். மூன்றாவது பக்கத்தில்:<br />
<br />
சமீபத்தில் கணவன் மனைவி புட் பாய்சனால் இறந்து கிடந்த வீடு நேற்று இரவு திடீரென காஸ் சிலின்டர் வெடித்து தீ பிடித்தது. அந்தப் பகுதி மக்கள் அமானுஷ்ய பயத்தில்....</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6707807930469848027.post-65453245484352398862014-03-06T00:43:00.002+05:302014-03-06T00:43:14.713+05:30சாப்பாட்டு ராமன் - புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் : சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<b><span style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif;">புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்</span></b></div>
<div style="font-family: Calibri, Arial, Helvetica, sans-serif; font-size: 16px;">
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
இம்மாதம் அரசன் வீட்டு கல்யாணதிற்காக அரியலூர் செல்கையில், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சரித்திர கோவில்களை பார்த்துவிட்டு செல்வது என்று முடிவுசெய்தோம். காலையில் குடுமியான் மலை குடவரைக் கோவிலில் குடுமியானுடன் துவார பாலகர்களை தரிசித்து விட்டு, பின் சித்தன்ன வாசல் சிற்பங்களின் வர்ண ரகசியங்களை அலசிவிட்டு, உச்சி வெய்யில் வேளையில் நார்தாமாலை சோழ கோவிலை கண்ட பின் மலையில் இருந்து கீழே இறங்கும் பொழுது ராமனின் வயிர் சத்தம் போடத் தொடங்கிவிட்டது. </div>
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
நார்த்தாமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் போது, கைபேசியில் அழைத்த நண்பர் 'சிவகாசிக்காரன்' ராம் குமார், புதுக்கோட்டை வந்து உண்ணும் படி பணித்தார். (சில அலுவல்களால் அவர் வரமுடியாமல் போனது ). புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பழநியப்பா மெஸ் தான் அவர் எங்களுக்கு பரிந்துரை செய்தது.<br />
<br /></div>
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEird3UeHi5CeeXR1UkvqXVU2S9GgmIRUltXY-9I0iXdraYaSv6s0rZ853MtKfNZ9QzZWNL7Fgj8AcTgcsoMEU9rpdJmuG_9fRHQ6LMgp_B14qlZSO7h6H-gwagzbXfP5RlSE0DoMy3jBf0/s1600/palniappa+mess.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEird3UeHi5CeeXR1UkvqXVU2S9GgmIRUltXY-9I0iXdraYaSv6s0rZ853MtKfNZ9QzZWNL7Fgj8AcTgcsoMEU9rpdJmuG_9fRHQ6LMgp_B14qlZSO7h6H-gwagzbXfP5RlSE0DoMy3jBf0/s1600/palniappa+mess.jpg" height="257" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
உணவகத்தின் பார்கிங் இடம் ஒரு நூறு மீட்டர் முன்பே இருக்க, வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, 'பழநியப்பா மெஸ்' என்று தெரிந்த பெயர் பலகையை நோக்கி நடந்தோம். பிரதான சாலையில் சற்று சிறிய வாசலுடனே இருக்க, சின்ன உணவகம் என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே உணவகம் எதிர்பார்த்ததை விசாலமாக இருக்க, கூட்டமாக இருந்த மேசைகளைக் கடந்து உள்ளே இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே, குளிர் சாதன அறைக்கு அருகில் சென்றுவிட்டோம்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இரண்டு குளிர் சாதன அறைகளுக்கு நடுவில் இருள் சூழ்ந்த குகை போன்று வடிவமைக்கப்பட்ட அறை ஒன்று இருந்தது. உள்ளே அனுமதிப்பார்களா என்று நாங்கள் சற்று தயங்க, எங்களை மேசைப்பணியாளர் உள்ளே அழைத்து அமர வைத்தார். அந்த செயற்கை குகையினுள் அவர் மின் விளக்கை உயிர்பிக்கும் பொழுது மணி நான்கு. </div>
<div style="margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாக இந்த நேரத்தில் பெரும்பாலான உணவகங்கள் மதிய உணவை நிறுத்தும் நேரத்தில் கடைசி ஆட்களாக உள்ளே சென்று விட்டோம். சாப்பாடு மற்றும் பரோட்டா மட்டும் தான் உள்ளது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என்று தெளிவாக சொல்லிய பின்னே ஆர்டர் எடுக்கத் தொடங்கினர். பிரியாணி இல்லாதது ராமனுக்கு ஏமாற்றம் என்றாலும் பரோட்டா இருந்தது அவனுக்கு மனம் ஆறுதல் தந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரோட்டா வர காத்திருந்த சமயம் சீனுவின் இலையில் இருந்து சுவைத்த மீன் குழம்பின் சுவையானது, பரோட்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பாடு வாங்க ஆவியைத் தூண்டியது. .பரோட்டா வர காத்திருக்க பொறுக்காமல், சைட் டிஷ் ஆர்டர் செய்யலாம் என்று அழைத்த பொழுது மேசைப்பணியாளர் சட்டென்று வெளியே சென்று விட்டார். ஒரு வேலை என்னென்ன வகைகள் காலியாகாமல் இருக்கின்றன என்று பார்க்கச் சென்றாரோ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு காத்திருந்தான் ராமன். <br />
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKFDDkzeLS2CUm4FdhqxQ8XNX8YQkbJvlkGIC_Rq8DpnB1E4hEMetjxyMPM6eCefAto3_pQn2Zw5Lpnz83bja95fyJ_27b7NYQ81B-I5K3IsWetYYGrjcRapIYVHfh2_lRRNGMxuOQWg4/s1600/20140208_155032.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKFDDkzeLS2CUm4FdhqxQ8XNX8YQkbJvlkGIC_Rq8DpnB1E4hEMetjxyMPM6eCefAto3_pQn2Zw5Lpnz83bja95fyJ_27b7NYQ81B-I5K3IsWetYYGrjcRapIYVHfh2_lRRNGMxuOQWg4/s1600/20140208_155032.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
குகைக்குள் திரும்ப வந்த மேசைப்பணியாளர், தன கையில் ஒரு பெரிய செவ்வக வடிவ தட்டை ஏந்தி ராமனின் அருகில் வந்தார். அந்தத் தட்டில் பல வகை உயிரினங்கள் மசாலாக் கலைவையுடன் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்தன. இரால், மீன், கோழி, காடை என எந்த ஒரு ஜீவனுக்கும் பங்கம் வராத விதத்தில், அனைத்து வகைகளிலும் ஒவ்வொரு சைட் டிஷ் ஆர்டர் செய்தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXyI87crg82vVeEbALukxpLVzcbC_N6EFG4SYa_qNS67JmAm-G37OtL-ViF4MbZAAIAslUKoSPimjpEuNABubwIjm5VpXpN9k06v01iAReD2ZwI8IsFxzRe4LwI_sCX36fcegeh57WpSY/s1600/20140208_155122.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXyI87crg82vVeEbALukxpLVzcbC_N6EFG4SYa_qNS67JmAm-G37OtL-ViF4MbZAAIAslUKoSPimjpEuNABubwIjm5VpXpN9k06v01iAReD2ZwI8IsFxzRe4LwI_sCX36fcegeh57WpSY/s1600/20140208_155122.jpg" height="240" width="320" /></a></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரோட்டா சாதாரணமாக இருந்தாலும், அந்த பசியில் அது கிடைத்தால் போதும் என்று உண்டுகொண்டிருந்த ராமனுக்கு ஜீவன் தந்தது முதலில் வந்த துண்டு மீன் வறுவல். அந்தச் சிறிய துண்டு மீன் வறுவல் ராமன் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை தந்ததால் அவன் அதை மேலும் ஒரு ப்ளேட் வாங்கிக்கொண்டான். அடுத்து வந்த கோழியும் காடையும் செட்டிநாடு பாணியில் சுவையாக இருந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கு சுவையில் முதல் இடத்தை பிடித்தது இரால் வறுவல் தான். மோறுமொறுவென சரியான மசாலாக் கலவையுடன் சுவை அரும்புகளுக்கு விருந்தாக அமைந்தது. வழக்கம் போல் ஒரு ஹால்ப் பாயிலை அப்படியே முழுசாகத் தன் உணவுக் குழாய் வழியாக வயிரினுள் இறக்கி தன் மத்திய உணவை ராமன் முடித்துக்கொண்டான். ஐவர் மனதார உண்டதற்கு பில் தொகை 834 ரூபாய் தான். <br />
<br />
<div style="background-color: white; text-align: justify;">
<span style="font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: x-small;"><span style="font-size: 16px;"><b>சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்தது</b></span></span></div>
<div style="background-color: white; text-align: justify;">
<span style="font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: x-small;"><span style="font-size: 16px;"><b><br /></b></span></span></div>
<div style="background-color: white; text-align: justify;">
அஞ்சப்பர் உணவகம் எனக்கு முதன் முறை அறிமுகமானது பாண்டி பஜார் சென்றபொழுதுதான். அங்கு அவர்களின் சேவையும் உணவின் சுவையும் செட்டிநாடு பாணியில் அருமையாக இருக்க என் மனதில் நன் மதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அசோக் நகரில் ஒரு நிகழிச்சியில் பங்குபெற்று வீடு திரும்பும் பொழுது உணவு உண்ண உணவகம் தேடினோம். அசோக் நகர் வட்டாரத்தில் இருக்கும் பிரதான உணவகங்கள் சரவண பவன், கே.எப்.சி. , மெக்.டொனால்ட்ஸ், அஞ்சப்பர், திண்டுக்கல் தலப்பாகட்டி. </div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
அஞ்சப்பரில் உன்பது என்று ஒரு மனதாக முடிவு செய்து அந்த உணவாக வாசலை அடையும் பொழுது மணி 9:35. கீழ் தளத்தில் கூட்டம் மிகுதியாக இருந்ததால், முதல் மாடிக்கு சென்று அமர்ந்தோம். மேசைப் பணியாளர் மற்ற மேசைகளை கவனித்துக் கொண்டிருக்க, என்ன உணவு ஆர்டர் செய்வது என்று முடிவு செய்துகொண்டோம். எங்கள் மேசைக்கு அவர் வரும் பொழுது மணி 9 : 45. இருவர் மட்டும் தவிர்த்து மற்றவர் அனைவரும் பிரியாணி<span style="font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: x-small;"><span style="font-size: 16px;">யு</span></span><span style="font-family: Calibri,Arial,Helvetica,sans-serif; font-size: x-small;"><span style="font-size: 16px;">ம்</span></span>தந்தூரியும் ஆர்டர் செய்தோம். இருவர் தோசை மற்றும் நான் ஆர்டர் செய்தனர். </div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
9:52க்கு மேசைப் பணியாளர் மீண்டும் திரும்பி வந்து பிரியாணி தீர்ந்து விட்டதாகவும், ப்ரைட் ரைஸ் மட்டும் தான் இருப்பதாக கூறினார். நண்பர் ஒருவர் கோபம் கொண்டு 'ஆர்டர் எடுக்கும் முன்னாடி எது இருக்கு இல்லை என்று பார்க்க மாட்டிங்களா?' என்று சினங்கொள்ள , மேசைப் பணியாளர் 'நான் ஆர்டர் எடுக்கும் போது இருந்தது, அதற்குள்ளேயும் வேறு டேபிள்கு போயிடுச்சு' என்றார். வேறு வழியின்றி மீண்டும் ஆர்டர் கொடுத்தோம். </div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
மணி 10:01. மீண்டும் அவர் திரும்பி வந்து 'பரோட்டா, இடியாப்பம், நான் மட்டும் தான் இருக்கிறது' என்றார். மெனு கார்டில் இருக்கும் ஒரு உணவு வகை ஆர்டர் கொடுத்த பின் இல்லை என்று மறுமொழி சொல்லியதில் அவருக்கு துளியும் வருத்தம் இல்லை. ஒரு மக்கள் சேவை வேலையில் இருப்பவருக்கு, மக்கள் நோகாமல் பணிவாக பதில் சொல்லவும் தெரியவில்லை. 'அது இல்ல. இதுதான் இருக்கு. என்ன வேணும்?' இது போலத் தான் இருந்தது அவர் கொடுத்த பதில்கள். எங்கள் கோபம் பசியுடன் போட்டியிட்டு, இந்நேரத்தில் வேறு உணவகம் தேடிச் செல்ல முடியாததால் இறுதியில் பசியே வென்று, பரோட்டா, இடியாப்பம், நான் வகைகளை மீண்டும் ஆர்டர் செய்தோம். </div>
<div style="background-color: white; margin-bottom: 0px; margin-top: 0px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; text-align: justify;">
முதலில் ஆர்டர் செய்த தோசையும், ஒரு நானும், இரு தந்தூரிகளில் ஒன்று மட்டும் முதலில் 10 15க்கு வந்தது. அடுத்து இடியாப்பமும் பரோட்டாவும் 10:20 க்கு வந்தது. இருவர் மட்டும் இடியாப்பம் பரோட்டா ஆர்டர் செய்தோம், மற்றவர்கள் நான் தான் ஆர்டர் செய்தனர். அனைவரின் பசியும் அடங்கத் தொடங்கிய 10:27 க்கு நான் வந்தது. நான் வந்து பத்து நிமிடங்கள் கடந்தே இரண்டாவது தந்தூரி வந்தது. </div>
<div style="background-color: white; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; text-align: justify;">
உணவு தாமதமாக வந்தாலும், அதன் சுவை படு கேவலமாக இருந்தது. அந்த நான்கள் சைக்கிள் சக்கரம் செய்யும் ரப்பரின் பதத்தில் இருந்தன. அஞ்சப்பரில் நான் இதவரை இவ்வளவு மோசமான சுவையும் சேவையும் கண்டதில்லை. அசோக் நகரில் இருக்கும் அஞ்சப்பர் செல்லும் நண்பர்கள் தங்கள் பொறுமையை சோதனை செய்ய நல்ல உணவகமாக இருக்கும் என்பது ராமனின் எண்ணம். <br />
<br />
---------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<br />
நான் வாசகர் கூடத்தில் எழுதிய பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும் :<br />
<br />
<h3 class="post-title entry-title" style="font-family: Arial, Verdana, Tahoma, sans-serif; font-size: 19.2px; line-height: 1em; margin: 0px; padding: 0px; text-align: start;">
<span style="color: blue; margin: 0px; padding: 0px; text-decoration: none;"><a href="http://vasagarkoodam.blogspot.com/2014/03/blog-post.html" style="margin: 0px; padding: 0px; text-decoration: none;" target="_blank">முகில் கண்ணா அசத்திட்டடா நீ!</a></span></h3>
<h3 class="post-title entry-title" style="font-family: Arial, Verdana, Tahoma, sans-serif; font-size: 19.2px; line-height: 1em; margin: 0px; padding: 0px; text-align: start;">
<br /></h3>
</div>
</div>
</div>
</div>
</div>
ரூபக் ராம்http://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.com11