Wednesday, September 25, 2013

சாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி

பல நாட்களாக, உணவு வேட்டைக்கு செல்லாமல் அமைதியாக இருந்த ராமனுக்கு தான் சென்ற ஆண்டு டில்லியின் சாலைகளில் உண்ட ஆலு  டிக்கியின் சுவை சில நாட்களாக அவனை தூங்கவிடாமல் தவிக்கச் செய்தது. அவனும் பல இடங்களில் சென்னையில் அதை உண்டு, திருப்தி இல்லாமல் சோர்ந்து போய் இருந்த வேளையில், சௌகார்பேட்டையில் சுவையான ஆலு டிக்கி கிடைக்கும் தகவல் அறிந்து, துள்ளி குதித்து தயாரானான்.    

ப்ராட்வே பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் சௌகார்பேட்டைக்கு செல்ல ராமன் பீச் ரயில் ஏறி 'போர்ட்' (Fort)இல் இறங்கி, பேருந்து நிலையம் வழியே, உயர் நீதி மன்றத்தின் எதிர் திசையில் நடந்து, ஒரு காவல் துறை பூத்தை கடந்தால் அதைத் தொடர்ந்து வரும் வலது பக்க சந்து தான் 'மின்ட் ஸ்ட்ரீட்' (Mint Street). அந்த வீதியில் நுழைந்தவுடன் அவனுக்கு சென்னையில் தான் இருக்கிறோமா என்ற பெரும் சந்தேகம் தோன்றியது. பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல், குஜராத்தி ஆண்களும் பெண்களும் அந்தச் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.                  

தெரு எங்கும் சேலைக் கடைகள் தான், அதன் பின் தான் இந்தச் சாலையோர உணவுகள். இங்கு குஜராத்திய வகை சேலைகளை, ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி மலிவு விலையில் வாங்கலாம். இந்தத் தெருவில் உள்ள சீலைக் கடைகளின் சிறப்பு என்ன வென்றால், நம்மைத் தரையில்  மெத்தையின் மேல் அமரவைத்து தான் சேலையை விரித்து காண்பிப்பார்கள். புருஷர்கள், ஸ்திரீகள் (சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருக்கும் தாக்கம்)  சேலை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு குட்டி தூக்கம் போட்டு ஓய்வெடுக்கலாம். ரங்கநாதன் தெரு போல் கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுன்னு ஆரம்பிச்சிட்டு சேலைன்னு போய்ட்டனேன்னு நீங்க திட்டறது எனக்கு கேட்கறது, இதோ வந்துட்டேன்.           

அப்படியே சேலை பொம்மைகளை பார்த்துக் கொண்டு, அந்தக் சாலையில் நடக்கையில், இடது புறம் வரும் 'காக்காடா ராம்பிரசாத்' ஸ்வீட் கடை தான் நம் ராமன் தேடிச் சென்றது. இந்த கடை இனிப்பிற்கு பெயர் போனது என்றாலும், இங்கு கிடைக்கும் ஆலு டிக்கியின் சுவை அருமை என்ற செய்தி ராமனை வந்து சேர்ந்ததால், ஆலு டிக்கியும் பானி பூரியும் மட்டும் ஆர்டர் செய்தான். ஆலு டிக்கி ஐம்பது ரூபாய், பானி பூரி இருபத்து ஐந்து ரூபாய். விலை அதிகம் என்று உங்களைப் போலத்தான் ராமனும் முதலில் ஷாக் ஆனான்.   




ஆலு எண்ணையில் பொறிக்கப் படுகையிலே, பானி பூரி கொடுக்கப் பட்டது. கையில் ஒரு சிறிய தொன்னை கொடுத்து, முதலில் 'புதின்' என்று எழுதி, சிவப்பு துணியால் மூடப் பட்டிருந்த மண் பானையில், பூரியை நனைத்து கொடுத்தான். இரண்டாவது 'ஜல் ஜீரா' (புளி) என்று எழுதியிருந்த பானையில் இருந்தும், 'ஹிங்' (பெருங்காயம் என்று சுவையில் இருந்து யூகித்தேன்)  என்று எழுதியிருந்த பானையில் இருந்தும் இரண்டு இரண்டு பூரி,  மொத்தம் ஆறு பூரி. எப்பொழுதும் புதினா ரசத்திலேயே பானி பூரி சாப்பிட்டு பழகிய நாவிற்கு இது புது சுவையாக இருந்தது. ராமன் ஒரு பூரி சாப்பிட்டு முடித்த பின் தான், கடைக்காரன் அடுத்த பூரி தயார் செய்வதால் எந்த அவசரமும் இன்றி நிதானமாக சுவைக்க முடிகிறது.                   

இதற்கிடையில் பொறிக்கப் பட்ட ஆலு, பிட்சா போல் ஆறு துண்டாக வெட்டப் பட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் தயிர் ஊற்றி, சாட் மசாலா மற்றும் வேறு பெயர் தெரியாத வாசனைப் பொருட்கள் மழைச் சாரல் போல் தூவப் பட்டு, ஓமபொடி மற்றும் துருவிய காரெட், பீட்ரூட், கௌஸ் முதலிய காய்கறிகள் மேலே அலங்கரிக்கப் பட்டு, கிரீடத்தில் பன்னீர் துண்டு ஒன்று வைத்து கைக்கு வந்தது. புகைப்படம் எடுக்கும் வரை ராமனை கட்டுப் படுத்துவது, ஒரு குழந்தையை சாக்லேட் சாப்படாமல் தடுப்பதை விட பெரும் பாடானது.


அந்த ருசி நாவில் உள்ள சுவை அரும்புகளுக்கு, மாமல்லனைக் கண்ட சிவகாமி கொண்டது போல், புத்துணர்ச்சியும் குதூகளமும் கொடுத்தது. தாகம் தீர்க்க பாதாம் பால் என்பது ரூபாய் கொடுத்து வாங்கிய ராமன், பாதாம் பருப்பு சற்று அதிகமாக இருந்தது என்றே இறுதியில் முடிவுக்கு வந்தான். இங்கு கிடைக்கும் பாதாம் பாலும் சற்று பிரபலம் தான். வயிறும் மனமும் நிறைந்தது. விலை கூடுதலேனும், கிடைத்த சுவை திருப்தி அளித்தது. அருகில் ஒருவர் வாங்கிய பிரட் சான்ட்விச் பார்க்க வித்யாசமாக இருந்தது. மாதக் கடைசி என்பதால்,  மேலும் எதுவும் சுவைக்க முடியாமல், அடுத்த மாத முதல் வாரத்திலே மீண்டும் வர வேண்டும் என்ற சபதம் செய்து கொண்டு, சாலையோர பொம்மைகளை ரசித்த படியே வீடு திரும்பினான் ராமன்.

           

43 comments:

  1. பாதாம் பால் பார்க்கவே அருமையாக இருக்கிறது.. ராமன் அடுத்த ஐட்டத்துக்கும் ரெடி ஆயிட்டானா??

    ReplyDelete
    Replies
    1. ராமனுக்கு உணவே மருந்து , மருந்தே உணவு ....

      மின்னல் வேகத்தில் கமென்ட் செய்த ஆவி, சென்னைக்கு பறந்து வந்தால், கம்பெனி செலவில் ஒரு ஆலு டிக்கி

      Delete
  2. ஆஹா..... ஆஹா..... இப்பதான் பானிபூரி அண்ட் ரக்டா பற்றி எழுதி முடிச்சுட்டு இங்கே வந்தா.... ஆலு டிக்கி!

    அதென்ன ஹிந்த்? காயத்தை ஹிங்ன்னு சொல்லணும்:-)

    கடை விலாசம் நோட்டட். சென்னை வரும்போது நாம் போகலாம்(கம்பெனி செலவில்) ஓக்கே?

    ReplyDelete
    Replies
    1. //அதென்ன ஹிந்த்? காயத்தை ஹிங்ன்னு சொல்லணும்:-)// நமக்கு ஹிந்தி ரொம்ப தூரம் , திருத்திட்டேன் . நன்றி :)

      நிச்சயம் சென்னை வந்தா சொல்லுங்க, Mint Streetலையே சந்திக்கலாம் :)

      Delete
  3. எத்தனையோ தடவை அந்தப்பக்கம் போகும்போது இந்த ஹோட்டலை வேடிக்கை பாத்துட்டே போயிருக்கேன், உள்ளே போகணும்னு தோணியதில்லை... இப்போ கண்டிப்பா அங்க போகணும்னு முடிவு பண்ணிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை போகும் பொழுது என்னையும் அழைச்சிட்டு போங்க

      Delete
  4. பணம் எம்புட்டு குடுத்தாலும் பரவாயில்லை ஆனால் நாவும் மனசும் திருப்தி ஆனாலே போதும் இல்லையா ? சூப்பர்ப்...!

    ReplyDelete
    Replies
    1. என்றோ ஒரு நாள் சாப்பிடுவதில் பணத்தை பற்றி யோசிக்கக் கூடாது என்பது என் கொள்கை.

      Delete
  5. ராமன் தனியாகவே செல்வதை சங்கம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொல்கிறேன் மை லார்ட்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கோரிக்கையை கம்பெனி ஏற்றுக்கொண்டு, பரிந்துரை செய்யப்படும்

      Delete
    2. யோவ் சீனு ராமன் தனியா போனார்னு உமக்கு எப்படி தெரியும்? அவர் போனது யார் கூடவோ ? எப்படியோ கோத்து விட்டாச்சி இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் ...

      Delete
    3. ரூபக்கு ரகசியத்த அரசன் கண்டுபிடிச்சிட்டாப்ப்புல.

      Delete
  6. ஆஹா, அருமை :))

    ReplyDelete
  7. ஜால் ஜீரா அல்ல - ஜல் ஜீரா.... :)
    ஹீங்க் - துளசி டீச்சர் ஏற்கனவே சொல்லிட்டாங்க!

    பானி பூரியில் பல வகை உண்டு - பூரி செய்யும் மாவிலும் வித்தியாசம் உண்டு! இங்கே பல பெண்களின் மாலை நேர உணவே இது தான்...... வெளியே சென்றால் பானி பூரி சாப்பிடாது வரும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்......

    சரி சரி.... இன்னிக்கு பானிபூரி, ஆலு டிக்கி சாப்பிட வேண்டியது தான்!

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பண்றது எனக்கு ஹிந்தி சுட்டாலும் வர மாட்டேன்கிறது. திருத்திட்டேன் , நன்றி :)

      டெல்லியில் கிடைக்காத வகைகளா, சென்ற டிசம்பரில் ஒரு நாள் மாலையை என்னால் மறக்கவே முடியாது

      Delete
    2. சுட்டா போலிஸ் தான் வரும். ஹிந்தி வராது தம்பி!!

      Delete
  8. அடுத்து முறை வரும்போது செல்ல வேண்டும்... சரியா...?

    ReplyDelete
  9. அப்படியே சேலை பொம்மைகளை பார்த்துக் கொண்டு,
    >>
    இப்பவே சேலை டிசைனை பார்த்து வச்சுக்கோ ராம். அப்போதான் ராஜியக்காவுக்கு தீபாவளிக்கு நல்லதா எட்டு சேலை எடுத்து கொடுக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. தல, அக்கா சொல்றத எப்பவுமே நீங்க சீரியஸா எடுத்துக்க கூடாதுன்னு அவங்களே சொன்னதா ஸ்கூல் பையன் சொல்லிருக்காப்ள

      Delete
    2. ஆமா கடை பேக் டோர் எல்லாம் நல்லா பாத்து வச்சுக்கோ.. அக்கா சொன்னது கேட்டுச்சில்ல.. "எடுத்து தரனும்". வாங்கித் தந்தால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.. கரெக்ட் தானே அக்கா..

      Delete
  10. இப்படி தேடி போய் சாப்பிடும் அளவுக்கு அதில் என்ன சுவை என்று பார்க்கணும் ஒருமுறை சொல்லுங்க சங்கத்தோடு பிளான் பண்ணுவோம் ரூபக் ...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாரம் ஆவி சென்னைக்கு பறந்து வருது.. (ப்ளைட்டுலையா ன்னு கேக்கப்படாது)அப்ப போயிடுவோம்..

      Delete
    2. ப்ளான் பண்ணிடுவோம் :)

      Delete
  11. சாலையோர பொம்பைகளை ரசித்த படியே வீடு திரும்பினான் ராமன்.//

    இதை நம்ப ;சொல்றிங்களா தல ...

    ReplyDelete
    Replies
    1. //பொம்பைகளை//

      என்ன அரசன், நீரும் ஸ்கூல் பையன் கூட சேர்ந்து "ஸ்பெல்லி(ங்) டேன்ஸ்" கத்துக்கறீரா?

      Delete
    2. சாரி, அதை ரூபக் என்று திருத்திக் கொள்ளவும். நைட் அடிச்ச பாங்கு இன்னும் வேலை செய்யுது.. ஹிஹிஹி..

      Delete
    3. அடப்பாவிகளா! ஆக மொத்தம் அக்காவுக்கு தீபாவளி சீரா சேலை வாங்கி கொடுக்காம என்னென்ன பேசுறீங்க!?

      Delete
    4. திருத்தியாச்சு :) ... 'சீரா' அப்படின்னா என்ன அக்கா ?

      Delete
    5. //.. 'சீரா' அப்படின்னா என்ன அக்கா ?//

      ஜீரா வைத்தான் அப்பிடி சொல்ராங்கோ போல ... :-)

      Delete
  12. //கௌஸ்//

    அப்பிடின்னா ...?

    ReplyDelete
    Replies
    1. இந்த 'Cabbage'னு சொல்லுவாங்களே

      Delete
  13. அல்லோ ஸ்மார்ட்டீ ...! நீயும் மாசத்துக்கு நாலு சாப்பாட்டு பதிவு போடற ., ஆனா ஆள பாத்தா பத்துநாள் பட்டினி கிடந்தாப்புலைல இருக்குது ...! நம்புறமாதிரி இல்லையே ....! இன்னா மேன் நடக்குது ....!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா :) ஊர் கண்ணு உடம்ப கரைச்சிடுது

      Delete
  14. டிக்கி மட்டும் இல்ல ...மாலையில் இங்கே சுட சுட கிடைக்கும் ஜிலேபியும் அருமையாக இருக்கும் ...சிறு வயது முதல் சாபிட்ட கடை ...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை ஜிலேபியும் சுவைத்திடுவோம்

      Delete
  15. நாராயண முதலி தெருவில் இருக்கும் Agarwal Sweets கடைக்கும் சென்று பாருங்கள் ...எனக்கு 10 வயது இருக்கும் பொது தான் முதலில் அங்கே சென்று சமோசா சாப்டோம் ...இன்றும் (22 வருடங்களக்கு) பிறகும் கூட அதே சுவை ...lassi, basundi,kulfi,dhokla,malai lassi ஆகியன இந்த கடையின் சிறப்பு ...சுவைத்து பார்த்து விட்டு எழுதுங்கள் ...ஆர்வமுடன் காத்து இருக்கிறோம் ...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக விரைவில் செல்கிறேன் :) தகவலுக்கு மிக்க நன்றி :)

      Delete