பதிவுலகின் 'காதல் மன்னன்', 'மேடவாக்கம் மாஸ்ட்ரோ', 'கிரைம் பதிவர்' என்றெல்லாம் அழைக்கப் படும் ஒரு பிரபல பதிவர், ஒரு நாள் மதியம் தன் புதிய ஆண்டிராய்ட் போனுக்கு உயிர் ஊட்ட சார்ஜர் தேடி அலைந்து கொண்டு இருந்த போது, என்னுள் தோன்றிய கேள்வி இது. ஸ்மார்ட் போன் அவசியமா?
பல நாள் தன்னிடம் இருந்த நோக்கியா w101 மாடலை வைத்து கொண்டு மாருதட்டிக்கொண்டிருந்தவர் ஆண்டிராய்ட் போன் வசம் திரும்ப காரணங்கள் என்னவாக இருக்கலாம்?
ஆண்டிராய்ட் போன்களுக்கு தேவையான ஆப்ஸ் பற்றி பதிவு போடும் போது அதில் சென்று கிண்டல் செய்து கொண்டிருந்த அவர் இன்று அதே ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்வது ஏன்?
எவ்வளவு மழை வந்தாலும் அசராது தன் ஸ்பிளென்டரில் சிங்கம் போல் சீறிப் பாய்ந்தவர், இன்று தன் போனை காக்க மழைக்கு ஒதுங்குவது ஏன்?
எத்தனையோ ஆயிரம் ரூபாய் காசு கொடுத்து கைபேசி வாங்கினாலும் அதில் ஒரு பொத்தான் கூட இல்லையே.
முன்பெல்லாம் ஆடை தான் மரியாதை சின்னம்மாக இருந்தது, ஆனால் இன்றோ நம் கையில் இருக்கும் கைபேசி எவ்வளோ மதிப்போ அதுதான் நம் மதிப்பு என்று காலம் மாறிவிட்டது.
சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றிக்கு வரும் குறுந்தகவலை உரியவரிடம் காட்டும் பொழுது என்னை மேலும் கீழும் பார்க்கின்றனர். நான் தட்டிய குறுந்தகவல்களால் கீபேட் சேதமானது என் தவறா?
பலரும் என் கைபேசியைக் கண்டு, துப்பாத குறையாக, திட்டிவிட்டனர். ஊரோடு ஒத்து வாழாமல் நான் மட்டும் எதிர்த்து தனியாக கொடிபிடிக்க முடியாமல், நானும் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளேன், என்று சோகத்துடன் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
பல மாதங்களுக்கு முன்னரே ஸ்மார்ட் போன் வாங்கி, அசத்திக் கொண்டிருக்கும் அண்ணன்மார்களே! அக்காமார்களே! , இந்தச் சிறுவனுக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட் போனை பரிந்துரை செய்யுங்களேன்.
பின் குறிப்பு: iPhone 5S மற்றும் 5C வெளியாக உள்ள நிலையில், iPhone 4Sஇன் விலை குறைய வாய்ப்புகள் இருப்பதால், மனதில் ஒரு சின்ன மூலையில் iPhone மீது ஆசை தோன்றியுள்ளது.
| Tweet | ||

