Tuesday, November 26, 2013

நித்ரா - 7. கூட்டாளி


இதுவரை 
 ஸ்வேதா 'நித்ரா கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததா?' என்று ஏக்கத்துடன் கேட்க, அவளை தனியே ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவன் சேகரித்த தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினான். ஸ்வேதாவின் முகம் அதிர்ந்து இருந்தது. அவன் சொல்லி முடித்தவுடன் தன் கன்னத்தில் கை வைத்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்.  

"Oh my god. Is this possible?"    

இனி 

'இப்ப நீங்க நித்ராவுக்கு சிகிச்சை செய்ய சம்மதிக்கணும்' என்று ஸ்வேதாவிடம் கெஞ்சினான் பாஸ்கர். 

'என்ன சிகிச்சை கொடுக்கப் போறிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?' என்று அவள் கேட்டதற்கு பாஸ்கர் விளக்கிய முறை பின்வருமாறு. 

AIDS என்பது ஒரு நோய் இல்லை அது ஒரு    வகையான நோய்க் குறிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். HIV வைரஸ் நம் உடலின் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் WBCக்களை கொன்றுவிட்டு, அது சுரக்கும் Bone marrowவை செயலிழக்கச் செய்து நம் உடலை பலவீனமடையச் செய்கிறது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இல்லை என்றால், எந்த அந்நிய சக்தியும் எளிதில் ஊடுருவி, நம் நாட்டை சுலபமாக கைப்பற்ற முடியும். அது போலத்தான் நம் உடலின் போராளிகளான WBC இல்லாத நிலையில், மற்ற நோய் பரப்பும் கிருமிகள் அனைத்தும் நம் உடலை பதம் பார்த்து விடுகின்றன. HIV ஒரு மனிதனை இறக்கச் செய்வது இல்லை, மற்ற நோய்கள் மனிதனை கொல்ல உதவுகிறது. In short, HIV is like an accomplice to a cold blooded murder.       

ஆகையால் HIVயால் பாதிக்கப் பட்டு இருப்பவனுக்கு தேவை நோய் எதிர்ப்பு சக்தி. எவ்வளவு தான் மருந்துகள் கொடுத்தாலும், உடலின் இயற்க்கை வலுவின்றி எதுவும் உதவுவதில்லை. எனவே நாங்கள்,  ஆரோக்கியமான மற்றொரு குரங்கின் bone marrowவை பொருத்தி, HIV செயலிழக்கச் செய்த WBCக்களை இந்த குரங்கின் உடலினுள் மீண்டும் சுரக்கச் செய்தோம். WBC சுரந்தவுடன் தேவையான மருந்துகளையும் கொடுத்தோம், பராமரித்தோம். சற்று மெதுவாக சில வாரங்களில் அந்தக் குரங்கின் உடல் நிலை தேறியது. அந்தக் குரங்கு தான் இந்த கூண்டில் நீங்கள் பார்ப்பது. Bone marrow மாற்று உருப்பு பொருத்தி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, இன்று அதன் உடலில் HIV வைரஸ் ஒன்று கூட கிடையாது.        

இந்த முறையில் நித்ராவிற்கு சிகிச்சை கொடுத்து அவர் குனமடைந்தால், அவர் உலகில் AIDS நோயில் இருந்து குனமடைந்தவர் வரிசையில் நான்காவது இடம் பிடிப்பார். இதோ பாருங்கள் (இங்கு பாஸ்கர் காட்டிய பக்கம் கீழே இணைக்கப் பட்டுள்ளது), ஏற்கனவே இந்த மூவருக்கு இந்த முறையில் வெற்றி கிடைத்துள்ளது. நீங்க கேட்கலாம் 'அப்படின்னா என் எல்லாரையும் குணப்படுத்த முடியாது? என்று, அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 

நூற்றில் ஒருவருக்கு மற்றுமே இயற்கை ஒரு பரிசு கொடுத்துள்ளது. HIVயை எதிர்த்து வெல்லும் சக்திதான் அந்தப் பரிசு. அத்தகைய மரபணு கொண்ட ஒரு கொடையாளரின், bone marrow இருந்தால் தான் நோயாளியை காப்பாற்ற முடியும். நித்ராவை முதலில் சந்தித்த உடனே அவருக்கு உதவ முடிவு செய்தேன், அவர் அனுமதி கிடைக்க காத்திருந்தேன். ஆனால் என் வேலைகளை இரண்டாம் சந்திப்பிலேயே துவங்கி விட்டேன்.      

எல்லாவற்றையும் கேட்டு ஒரு வித குழப்பத்தில் இருந்த ஸ்வேதா, 'எப்படி?' என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். 

'இதோ தெரிகிறதா' என்று ஒரு மிக மிக சிறிய இயந்திர ஊசியை காட்டி, 'உங்களிடம் பேசி விட்டு நித்ராவை சந்திக்கச் சென்ற பொழுது, அவர் hand bagஐ அவர் அருகில் வைக்கும் பொழுது இந்த ஊசி கொண்டு அவரை குத்தி ரத்தம் எடுத்துக் கொண்டேன். அவருக்கு கொசு கடித்தது போல் தான் இருந்திருக்கும். ரத்தம் கிடைத்த உடனே உலகில் உள்ள எங்கள் research labகளுக்கு சாம்பிள் அனுப்பிவைத்து, சரியான donor கிடைக்க காத்திருந்தோம். எங்கள் முயற்சி வெற்றி பெற்றது. புனேவில் இருந்த ஒரு donor கிடைத்தார். அவர் ஒரு அதிசய மனிதர் என்று கூடச் சொல்லலாம். ஒரு விபத்தில் அவருக்கு HIV பாதிக்கப் பட்ட ரத்தம் தவறுதலாக கொடுக்கப் பட்டதாம். அவர் உடலுக்கு வந்த அனைத்து HIV வைரஸ்களையும் அவர் உடலே கொன்று விட்டதாம். அவரின் மரபணு நித்ராவுடன் ஒத்துப்போவது எங்களுக்கு கிடைத்த வரம் என்றே சொல்ல வேண்டும்' என்று அவன் சொல்லி முடித்து, சில காகிதங்களை எடுத்தான். 

'நித்ராவின் நலம் கருதி இந்த சிகிச்சைக்கு அவங்க சம்மதித்தது போல் நானே எழுதி அவரைப் போல் கையொப்பம் செய்து விட்டேன்' என்று அவளிடம் அதைக் கொடுத்தான். 

'எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, ரொம்ப குழப்பமா இருக்கு' என்று அவள் தன் அருகில் இருந்த நீரை அருந்தினாள்.

Image courtesy - Google

'பாஸ்கர் ,எல்லாம் தயாரா? அவங்க சம்மதத்தோட கையெழுத்து வாங்கியாச்சா?' என்று அந்த நிறுவனத்தின் தலைமை மருத்துவர் பாஸ்கரிடம் கேட்டார்.

'பக்கா டாக்டர்' என்று சொல்லி ஸ்வேதா முன் தலை குனிந்தான்.

'அப்ப தொடங்கலாம்' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார். 

வெள்ளை விளக்கு பிரகாசமாக எரிந்த அந்த அறைக்குள் நித்ரா கொண்டுவரப்பட்டாள். ஐந்து பேர் வெள்ளை ஆடையில் முகமூடியுடன் இருக்க, அவர்கள் ஆணா இல்லை பெண்ணா என்று கூட சரியாக சொல்ல முடியவில்லை. நித்ராவிற்கு சுவாச குழாய் பொறுத்த செல்கையில் அவளது கை வேகமாக அதை தட்டி விட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த அவள் 'பாஸ்கர், இதற்கு நான் ஒத்துக்கவே இல்லை' என்றாள். 

தன் முகமூடியை கிழற்றிய அந்த தலைமை மருத்துவர் ' பாஸ்கர் என்ன நடக்குது. அவங்க சம்மதம் இல்லாம எப்படி இங்க அழைத்து வந்திங்க.' என்று சீறினார்.  

தொடரும்....    
                       

3 comments:

  1. பயபுள்ள என்னமா சிந்திக்குது..

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்... அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க காத்திருக்கிறேன்!

    ReplyDelete