Monday, November 18, 2013

நித்ரா - 5.கேள்விக் குறி

முந்தைய பதிவுகளுக்கு 

இதுவரை 


பாஸ்கர் 'இப்பவே என் வேலைய ஆரம்பிக்கறேன். நான் உங்க கிட்ட சில கேள்விகள் கேட்பேன்,நீங்க நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்.'  தன் காபி கப்பை பார்த்துக் கொண்டே, 'எந்த விதத்திலயாவது யாருடனாவது ஏதேனும் ஒரு வகையில உங்கத் திருமணத்திற்கு பின் உடல் உறவு கொண்டிருக்கிங்களா? ' என்று தயக்கத்துடன் கேட்டான். எதுவும் பதில் வராததால் நிமிர்ந்து பார்த்தான். 

அங்கு அவள் இல்லை.  

இனி
அவன் கேள்வி பிடிக்காமல் கோபத்துடன் சென்றாளா என்ற ஒரு பயம் மனதை சூழ, சற்று நேரம் என்ன செய்வது என்று பாஸ்கருக்கு புரியவில்லை. அவள் நம்பருக்கு அழைக்கலாம் என்று அவன் கைபேசியை எடுத்து திரையைத் தடவினான். மறுமுனையில் அடிக்கும் ஓசை அவனுக்கு மிக அருகில் கேட்பது போல் இருந்தது. சில வினாடிகள் கடந்து கம்ப்யூட்டர் அம்மணியின் கரைத்த குரல் கேட்க, அழைப்பை துண்டித்தான். மீண்டும் அழைத்தான், இம்முறையும் அந்த ஓசை கேட்க, அவன் இருக்கையை விட்டு எழுந்தான். நித்ரா அமர்ந்த இருக்கையில் அவள் hand bagஉம், அதனுள்  கைபேசியும் இருந்தது தெரிந்து. 

இப்போழுது புது குழப்பம் தோன்றியது, 'பையை விட்டு விட்டு எங்கு சென்றாள். பல முறை தற்கொலை முயற்சி செய்தவளாச்சே' என்று ஒரு பக்க மூளை சிந்திக்க, 'அவள் இங்குதான் அருகில் எங்காவது இருக்க வேண்டும்' என்று மூளையின் மறுபுறம் ஆறுதால் சொல்ல, கழிவறையில் இருந்து நித்ரா வருவது தெரிந்தது. தொலைந்து போனது என்று எண்ணிய கடன் அட்டை வீட்டிலேயே  கிடைக்கும் பொழுது தோன்றுவது போன்ற மகிழ்ச்சி அவன் மனதில் தோன்றியது.      

நித்ரா அருகில் வந்து அவள் இருக்கையில் அமரும் பொழுது அவள் முகம் முன்பை விட இன்னும் சோர்ந்து இருப்பதைக் கண்ட பாஸ்கர் "any problem?' என்று வினவினான். 

Image Courtesy - Google

'No, to answer your previous question. I am straight and I have never had sex with anyone in the past seven months.' என்று அழுத்தமாகக் கூறினாள்.

சற்றும் யோசிக்காமல் பாஸ்கர் ' ஏதாவது விபத்து , blood transfer?' என்றான்.

Tissue பேப்பரால் தன் வாயைத் துடைத்துக் கொண்டு 'No' என்றாள்.

'நீங்க யாருக்காவது ரத்தம் கொடுத்திருக்கிங்களா?' என்ற கேள்விக்கு அவள் இல்லை என்று தலையாட்டினாள். 

சற்றுத் தயங்கி, 'உங்கள் அந்தரங்க ரோமங்களை shave செய்யறப் பழக்கம் உண்டா ?',என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

' No. I just wax' என்றாள். 

'எதாவது திரையரங்க இருக்கைகள் அல்லது பொது இடங்களில், குறிப்பாக பேருந்துகளில், ஊசி குத்துவது போல் உணர்ந்தது உண்டா. AIDS வைரஸ் இப்படி பரவுது அப்படின்னு ஒரு வதந்தியும் உண்டு. நல்லா யோசிச்சு சொல்லுங்க' , என்று தலையில் சொரிந்தான்.

கொஞ்ச நேரம் யோசித்து, ' அப்படி ஒரு அனுபவம் இருக்கற மாதிரி நியாபகம் இல்ல. நான் இதுவரைக்கும் பஸ்ல ஏறினது கிடையாது, என்னோட கார் தான். நான் கடைசியா தேட்டர்ல பார்த்த படம், Titanic' என்று சொல்லி சிரிக்க முயன்றாள், அவள் சிரிப்பு கூட அவளுக்கு வலி தரும் நிலையில் அவள் உடல் சத்தின்றி இருந்ததை பாஸ்கர் கண்டான். 

'நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் உங்கள அப்பறம் வந்து சந்திக்கறேன். எதாவது ஒரு ரத்தம் தொடர்பான சம்பவம் நடந்திருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க' என்று சொல்லி அவளை வழி அனுப்பினான்.    

வீடு திரும்பிய பாஸ்கருக்கு, குழப்பம் தீரவில்லை 'எப்படி?' என்ற கேள்வி அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் அலமாரியில் இருந்த அனைத்துப் புத்தகங்கள் சொல்வதும் அவனுக்கு அத்துப்படி, இருப்பினும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கூகுளிடம் பல கேள்விகளைக் கேட்டான் அது பல்லாயிரக் கணக்கான பதில்களை வழங்கிக் கொண்டிருந்தது. எதுவும் அவனுக்கு விடை தராத பொழுதும்  அவன் நம்பிக்கை இழக்கவில்லை. பல கோணங்களில் நித்ராவுக்கு என்று பல கேள்விகள் யோசித்து, தன் கைபேசியில் குறித்துக் கொண்டான்.  அவனையே அறியாமல் தூங்கிவிட்டான்.

பேய்க் கனவு கண்டவன் போல் திடீரென அதிர்ந்து எழுந்தான். சன்னல் வழியே சூரியன் சுட்டெரிக்க, அவன் கைபேசியை தேடினான். நித்ராவுக்கு அழைத்து, அவள் பேசுவதற்கு முன் 'நித்ரா உங்க friend ஸ்வேதா வீட்டுல, நீங்களும் அவங்களும் சேர்ந்து இருக்கற போட்டோ எப்ப எடுத்தது?' என்று கேட்க மறுமுனையில் அவள் 'என் திருமணதிற்கு ஒரு மாதம் முன்பு.ஏன் கேட்கறிங்க?' என்று ஆர்வத்துடன் கேட்டாள், 'நேரில் வந்து சொல்றேன்' என்று அழைப்பை துண்டித்தான். 

சவரம் செய்ய அவன் பயன் படுத்தும் கண்ணாடி முன் சென்று, நின்றான். எடிசன் மின் விளக்கு கண்டு பிடித்த பொழுது அவர் முகம் ஒரு வேளை இப்படித் தான் பிரகாசமாக மின்னியிருக்கும் என்று எண்ணும் அளவுக்கு அவன் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. கண்ணாடியில் தெரியும் அவன் முகத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு  கீழ் இருக்கும் வரியை, அவன் பிரதிபலிப்பிற்குச் சொன்னான்.

'பாஸ்கரா! you are a genius!' 

தொடரும்...   

3 comments:

  1. //எடிசன் மின் விளக்கு கண்டு பிடித்த பொழுது அவர் முகம் ஒரு வேளை இப்படித் தான் பிரகாசமாக மின்னியிருக்கும் //

    வாவ்.. ரூபக்கு யு ஆர் ஜீனியஸ்!

    ReplyDelete
  2. விறுவிறுப்பாக உள்ளது.அடுத்த பகுதியை விரைவில் வெளியிடவும்.

    ReplyDelete
  3. அடடா.... பாஸ்கர் ஜீனியஸ் என நினைத்துக் கொள்ள என்ன கண்டுபிடித்தார் எனத் தெரிந்து கொள்ள ஆர்வம்!

    தொடரட்டும் தொடர் கதை.....

    ReplyDelete